Tamil Novels
அத்தியாயம் 20
கிருஷ்ணாவை அறையில் வைத்து தலையணையால் மொத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் கோதை.
"ஏன்டா எவளையோ கல்யாணம் பண்ணுறவரைக்கும் போய் இருக்க இதுல என்ன காதலிக்கிறதா சொல்லி என் கழுத்துல தாலி கட்டி இருக்க. இதுல எதுடா உண்ம?"
"ரெண்டும்தான்" என்று மீண்டும் சில அடிகளை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டான் கிருஷ்ணா.
"கோதை இல்லனா ஒரு ராதை. ராதை...
மயங்கினேன்.! கிறங்கினேன்.!
அத்தியாயம் ஆறு
தாயும் தந்தையும் ஊருக்கு சென்றதும் மனம் சோர்ந்து போனது அவனுக்கு.
ஒரு பெண்ணின் வாழ்வை கேள்விக் குறியாக்குகிறோம் என்று தெரியாமலே , அவனின் வாழ்வை பற்றி மட்டுமே சிந்திக்கலானான் வெற்றிமாறன்.
அவனுக்கு எப்படியாவது இசையோடு சேரவேண்டும் என்பது மட்டுமே சிந்தனையாக இருக்க , அவளுக்கான கடிதத்தை எழுத தொடங்கினான்.
அதில் அவன் தெரிவித்திருவந்தது என்னவோ ,'...
மயிலிறகு பெட்டகம் 11
ஊருக்குப் போய் சேர்ந்ததும் முரளிக்கு அழைத்து விஷயம் தெரிவித்தவள் தான்! அப்பொழுதும் ,
“ எல்லார்கிட்டையும் நான் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்னு சொல்லிடுங்க மாமா, இனி வேலையில்லாத நேரம் நானே கூப்பிடுறேன்...” என்றுவிட்டாள். அதன்பின்னும் வாரம் ஒருமுறை ஜெகன், முரளி இருவரில் ஒருவருக்கு அழைத்து தன் நலம் கூறிவிட்டு...
ஒருவழியாக சில சண்டைகளுக்குப் பிறகு உலகின் மிதக்கும் நகரமான வெனிஸை வந்தடைந்தனர் உதயனும் தர்னிகாவும்.
வெகு நாட்களாக ஆசையோடு காத்திருந்த இடத்தைப் பார்த்ததும் தர்னிகாவிற்கு பேச்சே வரவில்லை. அதுவும் தண்ணீரில் தான் போக்குவரத்து எனும் போது அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இத்தாலி நாட்டின் உள்ள தீவு தான் வெனிஸ். 120 குட்டி தீவுகள் இணைந்த நகரமே...
முகூர்த்தம் 24
வானதிக்கு இன்னும் பதற்றம் குறையவேயில்லை. வருடங்கள் பல கடந்திருந்த போதிலும் இரவின் பொழுதுகள் அவளை நிம்மதியாக உறங்க விடுவதேயில்லை.
ஸ்வாதியை எப்பொழுது அப்படி ஒரு நிலையில் கண்டாளோ அதன்பின் என்ன முயன்றும் கண்களை மூடுகையில் ஸ்வாதியின் கோலம் கண்முன் வந்து போவதை அவளால் தடுக்க முடியவில்லை.
ஸ்வாதிக்கும் வானதிக்கும் இடையில் உயிருக்கு உயிரான நட்பு இல்லையென்றாலும்,...
அத்தியாயம் - 48
குதிரைகுட்டியின் வலி நிறைந்த கனைப்பு நின்றதும், வாசிக்கும் புல்லாங் குழலை நிறுத்திவிட்டு நிமிர்ந்து குதிரை இருந்த இடத்தைப் பார்த்தாள் வன்னி. குதிரையை மீண்டும் அந்த மனித யாளிகள் அடிக்க வராமல் இருக்க அந்தப் பாதுகாக்கும் சக்கரத்தை அவள் நீக்கவில்லை.
குதிரையை நோக்கித் துள்ளி குதித்து நடந்தவண்ணம், அந்தக் குதிரையிலிருந்து சற்று தள்ளி நான்குபுரம் விழுந்து எழுந்துக் கொண்டிருந்த நான்கு மனிதயாளிகளை பார்த்தாள். மதி வன்னியின் செய்கையில்...
அத்தியாயம் 19
கிருஷ்ணாவுக்கு என்றுமே அரசியலில் ஈடுபாடு இருந்தது கிடையாது. அதற்கு முக்கிய காரணமும் கனகவேல் ராஜாதான்.
அன்னை சதா அழுது கொண்டிருக்க, தந்தை வீட்டில் இருக்காமல் எப்பொழுதும் கட்ச்சி, மீட்டிங் என்று கிளம்பி விடுவதும், நாட்டுக்காக தன் உயிரையே கொடுப்பது போல் பேசுபவர் வீட்டில் கண்ணீர் வடிக்கும் மனைவியை கண்டுகொள்வதில்லை என்ற கோபம் கிருஷ்ணாவின் மனதில்...
" உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா தம்பி.?" என ஆராய்ச்சி செய்யும் பார்வை பார்க்க
"ப்பா.." என்றவன் தலை கவிழ்ந்து நின்றான்.
" சொல்லு டா..?"
" எனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு பா..."என்ற நொடி அவன் கண்ணத்தில் பரமசிவத்தை கை பதிந்தது.
" ப்பா..."
" என்னடா அப்பா , கேக்குறேன் என்ன அப்பா.. உனக்கு விருப்பம்...
அத்தியாயம் 18
அருள்வேல் தன்னிடம் அலைபேசியில் கத்தியதும் யோசனையில் ஆழ்ந்திருந்தார் கனகவேல்.
அருள்வேலுக்கு அரசாளும் யோகம் இருந்தாலும் அரியணை ஏறும் ஜாதகமில்லை என்று தான் கனகவேல் ராஜா கிருஷ்ணாவை முதலமைச்சர் அரியணையில் அமர்வித்து பார்க்க ஆசை கொண்டார்.
கிருஷ்ணாவின் ஜாதகத்துக்கு பொருத்தமான ஜாதகம் என்பதனால் கோதாண்டத்தின் ஒரே மகளான மாலினியை திருமணம் செய்து வைக்க முயன்று தோற்றவர் அமைதியாக...
மயங்கினேன்.! கிறங்கினேன்.!
அத்தியாயம் 05
இனியா , அவன் ஏதாவது தன்னிடம் அவனின் காதல் கதையை பற்றி சொல்லுவானா மாட்டானா என்பது போல் ஓரப்பார்வையால் அவனை பார்ப்பதும் முகத்தை திருப்புவதுமாக இருக்க , பார்த்து பார்த்தே சோர்ந்து போய் விட்டாள் பெண்ணவள்.
" மிஸ்டர் .தடியன் சார் "
"தடியன் சார்ர்ர்ர்.."
" சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... "
" நான் பாவம் சார் ,...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 27
செல்வா உள்ளே இருந்து கதவை இழுக்கவும் அதே நேரத்தில் வெளியே இருந்து ஒரு பெண் உள் பக்கமாக கதவை இழுக்க முயற்சி செய்ய செல்வாவின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாததால் அவள் அவன் மீதே விழ போனாள்...
விழுந்தவளை தாங்கி பிடித்த செல்வா..,,அவளை கீழே விழாமல் நேரே நிற்க வைத்தவன் அவளை காணாது...
உறவுப் பூக்கள்.
அத்தியாயம் 07.
"என்னுடைய இப்போதைய நிலைமைக்கு உங்களுடைய கவனக்குறைவு தான் காரணம்" என்ற மகளின் நேரடிக் குற்றச்சாட்டில் உள்ளும், புறமும் அதிர்ந்து போயிருந்த இராஜசேகரன்,
"நான், நம்ம ப்ரபாவதியைத் தான் கல்யாணம் செய்யப் போறேன்" என்ற மகனின் வார்த்தையில்,"நம்ம ப்ரபாவதியா! அது யாருடா? சட்டென்று இப்படித்தான் கேட்டிருந்தார்.
"வாவ்! சூப்ப்பர்... இதுலயிருந்தே நீங்க குடும்பத்து மேல வச்சிருக்குற...
அத்தியாயம் பத்து :
அந்த இடத்தை விட்டு ஆதவன் எழ முற்பட.. ஆதவனின் கோபம் அவனோடே வளர்ந்த குழலி அறியாததா.. அதுவும் சுகன்யாவின் பால் அவனின் காதல் எல்லோரும் அறிந்ததே...
அவனருகில் வந்த குழலி அவனின் தோள் அழுத்தி “உட்காருங்க அண்ணா..” என்றாள்.
“செத்தவனுக்கு தான் சொர்கமும் நரகமும் தெரியும் அதுமாதிரி.. சுகன்யா இல்லாததால சாவைப் பத்தி உங்களுக்குத்...
14
அந்த நாட்கள் கடந்துவிட்டிருந்த பொழுதும் இன்றளவிலும் அது அவனுக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அஞ்சனா ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும் போதும் அவனை சீண்டி இன்னமும் வெறுப்பேற்றுவாள்.
எங்கே தன் மீது பழி எதுவும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும் அவனால் இயலாது என்ற எண்ணமும் அவள் மனதில் பதிந்து போயிருந்தது. அதுவே அவளை...
அவினாஷ், இந்த மூன்று மாதம் என்ன முயன்றும் அவனின் குருவை சந்திக்க முடிவில்லை.. அம்முவை விடுத்து வேறு வழி இருக்கிறதா என பார்த்தான்.. ஒன்றும் இல்லை இப்போது காமெரா பற்றி படித்துக் கொண்டிருக்கிறான். முற்றிலும் வேலை வெட்டி இல்லாமல்தான் இருக்கிறான்.
ஆதி அழைக்கவும் எடுத்தவன் “சொல்லு ப்பா” என்றான் அவினாஷ்.
ஆதி தனக்கான தேவையை சொல்லவும்... அவினாஷ்...
நிழல் தரும் இவள் பார்வை...
8
நடுநிசியில் கோத்தகிரி சென்று சேர்ந்தார், நந்தன். அழகான மலைப்பாங்கான இடத்தில், அமைதியான சூழலில் வீடு.. சிறிதான கேட்.. அதை தாண்டி பெரிய முன்பக்க தோட்டம்.. உள்ளே அளவான வீடு. சென்னையின் பரபரப்பை இங்கே தொலைக்கலாம்.. நிர்மலமான மனம், தன்போல வந்து ஒட்டிக் கொள்ளும் போல அந்த இடத்தின் தன்மையில்.
வேலை செய்வபவர்கள்...
அத்தியாயம் 4
காலை தினசரி அலுவலக வேலைகள் அடுத்தடுத்து வந்து ஷானு + சூர்யாவை பிழிந்தெடுத்தன. அன்று மட்டுமே ஒரு கொலை இரண்டு தற்கொலை கேஸ்களின் அறிக்கைகளை முடிக்க வேண்டி இருந்தது. இறந்தவர்கள் என்ன மருந்து எடுத்துக் கொண்டனர்?, அதன் வீர்யம் என்ன? எப்படி எடுத்துக் கொண்டார்கள் ஊசி மூலமா, வாய் வழியா, அதன் விளைவுகள்...
அத்தியாயம் 17
அருள் குளித்து விட்டு வரும் பொழுது அன்பழகி அவனுக்கு உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
தலையை துவட்டியவாறே! "சாப்பிடலையா? மேடம்" என்று கேட்க
"என் புருஷன் கூடத்தான் இனி சாப்பிடுவேன்" என்றாள் இவளும் அவன் முகம் பாராமல்.
துண்டோடு வந்து நின்றவனை பார்க்க கூச தலையை தாழ்த்தியவாறுதான் பதில் சொன்னாள் அன்பழகி.
"வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல குளிச்சிட்டு...
பகுதி - 16
பரந்துவிரிந்த பெரிய தோட்டத்தில் மூங்கில் நாற்காலில் அமர்ந்திருந்தான், பிரியன். தோட்டத்தை தொடர்ந்து பிரம்மாண்டமாய் வெள்ளை நிறத்தில் நிமிர்ந்து நின்ற வீட்டின் பால்கனியில் நின்றபடி அமர்ந்திருந்த பிரியனை கவலை தோய்ந்த கண்களுடன் பார்த்திருந்தார் சிவகாமி!
"என்ன சிவகாமி இங்கன என்ன பண்ற?" என்ற கேள்வியுடன் சிவகாமியின் பின்னோடு வந்து நின்றார், சத்திய மூர்த்தி.
சிவகாமியின் கணவர்...
அத்தியாயம் - 47
வன்னி கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போக, காவலர்கள் பயந்து அவளை தேட ஆரம்பித்தனர்.
ஒரு கடையின் பின்னே சுவர் மறைவிலிருந்து அவளது பாதுகாவலர்கள் திண்டாடித் தேடுவதை பார்த்து வன்னி மீண்டும் கிளுக்கி சிரித்தாள். ‘முகிலனை மட்டும் எப்படியாவது உடன் அழைத்துக் கொள்ளலாம். அவன் என்னை பார்க்கிறானா?’ என நோட்டமிட்டாள்.
ஆனால் அவன் அந்தக்...