Saththamillaamal Oru Yuththam
அத்தியாயம் பதினேழு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
நனவில் நடக்கும் யுத்தம்
என் கனவிழும், இப்பொழுது.
அதில் வரும் நீ………….
விழிதிறந்து நான் காணும் கனவு
விழிமூடினாலும் மறைவதில்லை.
கனவிலும் நனவிழும் வரும் நீ……….
நானாக வருவாயா ??
சிறிது நேரம் தான் அபி யை பார்க்க முடிந்தது. அதன் பிறகு பார்த்திபனுக்கு மாமனார் வீட்டிற்கு வந்தது...
அத்தியாயம் பதினாறு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உன்னுள் நடக்கும் யுத்தம்
எனக்கு தெரியும்!
முடிக்க முயற்சிகள் எடுத்துவிட்டேன்!
என்னுள் நடக்கும் யுத்தம்
உனக்கு தெரியுமா?
முடித்து வைப்பாயா.?
புது இடம் என்பதாலோ என்னவோ அதிகமாக உறக்கம் வராமல் விடியற்காலையிலேயே விழித்துவிட்டாள் அபிராமி. எப்படி இரவு பார்த்திபன் படுத்தானோ அப்படியே படுத்துகொண்டிருந்தான், சற்றும் கலையாமல் இருந்தது அவன்...
அத்தியாயம் பதினைந்து:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் உங்களுக்கும் எனக்கும்
என்று தெரியும்
ஆனால் அது நீங்கள் தான் என்று தெரியாது
தெரியும் முன் வெற்றி பெறவேண்டும்
என்று நினைத்தேன்
தெரிந்த பிறகு தோற்றால் என்ன
தோன்றுகிறது !
மண்டபத்தில் நெருங்கிய உறவுகள் மட்டுமே இருந்தனர். பார்த்திபனை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தாள் அபிராமி. அவன் முகபாவனைகளில்...
அத்தியாயம் பதினான்கு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
நான் உன் மீது கொண்ட
காதலினால் வந்தது.
உன்னோடு இருந்தபோது
அறிந்தேன் நான்.
என் காதலுக்கு தண்டிக்க தான் தெரியும்
என்னை.!
மன்னிக்க தெரியாது
உன்னை.!
உன்னை பிரிந்த பிறகு.
இதையும் அறிந்தேன்.
யாரும் எதிர்ப்பார்க்காமல் தவறாகி போன அந்த தவறு சுதா.
பாஸ்கரனின் வாழ்க்கையில் திருமணதிற்க்கும் முன் இனிய தென்றலாக இருந்தவள்....
அத்தியாயம் பதிமூன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தை நான் மற்றவர்களுக்கு
தெரியாமல் நடத்தி நடத்தி ஓய்ந்து விட்டேன்
நான் ஓயும்போது தான் இது ஓயுமோ
தெரியவில்லை. வாழ்க்கை எனக்கு
என்ன வைத்திருக்கிறது என்று.???
ஜெயாம்மா நடந்ததை எல்லாம் ராமகிருஷ்ணன் தாத்தாவிடம் சென்று சொல்லி கொண்டிருந்தார்.
“ஏதோ அவன் இனிமேலாவது சந்தோஷமா இருந்தா சரி. நாம எவ்வளவு தான் நல்லா...
அத்தியாயம் பன்னிரெண்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
ஏன் எனக்குள் இந்த யுத்தம் யோசிக்கறேன்
யாரோடு என்றும் யோசிக்கிறேன்
முடிவில்லா யுத்தமாகி போகுமோ என்று பயம்
உன்னை பார்த்த பின்பு நீ முடித்துவிடுவாய்
என்று தோன்றுகிறது
செய்வாயா பெண்ணே. நீ.??
“வாங்க உட்காருங்க!”, என்றார் பாஸ்கர்.
“வணக்கம் தம்பி!”, என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டவர்கள், தாங்கள் அவரின் மகனின் திருமணத்தை தெரியப்படுத்தி அழைக்க வந்திருப்பதாக கூறினர்.
மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார்...
அத்தியாயம் பதினொன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தில் நான் என்னுடன்
போராடும்பொழுது என்
நிழலை பிடித்ததாய் நினைத்தேன்,
அதுவும் என் கையினில் தான் இருந்தது,
பிடித்ததாய் நினைத்தது,
பிடிக்க முடியாததாய் இருந்தது,
நான் பிடிக்க முயற்சிக்கும் போதும்
எனக்கு தெரியவில்லை,
நான் பிடித்த பிறகு தெரிந்தது,
நான் என்னை பிடிக்க முடியாதது,
நான் பிடிக்கமுடியவில்லை, தோற்றேன்.
என்னை பிடிக்க முடியவில்லை, வென்றேன்.
கட்டுபடித்தியும் முடியாமல் கண்களில் கண்ணீர் துருத்தி வழிய ஆரம்பித்தது
திருநீறு உறுத்துவது...
அத்தியாயம் பத்து:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் நடப்பது
எனக்கு உன்னுடனா இல்லை
எனக்கு என்னுடனா
இதுவும் எனக்கு நானே கேட்கும் கேள்வி
கேள்விகளை எனக்கு நானே கேட்கிறேன்
விடை தருவாயா பெண்ணே ??. நீ.
அபியை தேடி. பார்த்திபனின் கண்கள் தான் களைத்து போயின. ஆனால் அவள் கண்களில் படவில்லை.
வேணுகோபாலன் இதற்கிடையில் ராமகிருஷ்ணனையும் ஜெயாம்மாவையும்...
அத்தியாயம் ஒன்பது:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் விரோதத்தினால்
மட்டுமல்ல அன்பினாலும் வரும்
நேற்று உனக்கு என் அன்பு புரியவில்லையே
என்று வருத்தப்பட்டேன்
இன்று உனக்கு புரியவைக்க முடியவில்லையே
என்று வருத்தபடுகிறேன்
அன்பு செலுத்துபவர்களிடம்
அந்த அன்பை புரியவைக்காவிட்டால்
அந்த அன்பை செலுத்துவதில் என்ன பயன் ??
எனக்கு நானே கேட்கிறேன்.??
தாத்தாவிற்கு பேத்தியிடம் பேசிய பிறகு என்ன முடிவு எடுப்பதென்பதே தெரியவில்லை. இது வயதின் கோளாறு என்பதா? இல்லை...
அத்தியாயம் எட்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் என்னுள் தொடங்கிய நாள்
நான் உன்னை என்னுள் உணர்ந்த நாள்
அந்த நாளில் இருந்து நான் நானாக இல்லை
யாருக்கும் என்னை பிடிக்கவில்லை
உனக்கும் என்னை பிடிக்கவில்லை
பைத்தியமானேனா, உன்னால் ஆக்கப்பட்டேனா.
ஆகும் என்பார் ஆகாது, ஆகாதென்பார் ஆகும்.
உன்னை நினைத்து நினைத்து நித்தம்
என்னுள் நடக்கும் யுத்தம் இதுமாதிரிதான்.
கீறியது தான் தெரியும், அது ஆழமாக இறங்கிவிட்டது....
அத்தியாயம் ஏழு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
எனக்குள் நடக்கும் இந்த யுத்தம்
உன் ஒரு பார்வையில் வெளியே தெரிந்துவிடுகிறது
மறைத்தாலும் மறைவதில்லை
எனக்கு புரிந்தாலும் உனக்கு புரிவதில்லை
உனக்கு புரிய வைக்க முடியுமா
எனக்கு தெரியவில்லை?
அபி உள்ளே நுழைந்தவுடனே பார்த்துவிட்டான் பார்த்திபன்.
“அந்த போனை எடுத்து அவ கிட்ட கொடுத்து அனுப்பு”, என்றான் செந்திலை பார்த்து.
அபி, செந்திலை விடுத்து அவனிடத்தில் வந்தவள். “நான் உங்களை பார்க்க...
அத்தியாயம் ஆறு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் எனக்குள்ளும் உனக்குள்ளும்
நீ வென்றால் நான் வென்றேனா தெரியாது?
நான் வென்றால் நீயே வென்றாய்!
விதி என்ன வைத்திருந்தாலும்
நான் உன்னை வெற்றி பெற வைப்பேன்
ஜெயந்தியிடம் பேசிவிட்டாலும், அபிக்கு என்ன செய்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது? தெரியவில்லை. அவளுக்கு யாரும் பிரச்சனையில்லை, யார் வந்தாலும் எதிர்த்து நிற்பாள். இரண்டு பேரை...
அத்தியாயம் ஐந்து:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி
உலகம் அறியாது
நம் மனதிற்குள்ளும் நடக்கும்
மற்ற மனங்களுக்கிடையிலும் நடக்கும்
இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி
நடக்கும் மனங்களுக்கு மட்டுமே தெரியும்
நினைத்தால் உடனே செய்யும் ரகம் பார்த்திபன், இரவு நேரமாகி விட்டதென்றும் பாராமல் அவன் திருமணத்திற்கு பார்த்து வந்திருந்த பெண் ரேகாவை...
அத்தியாயம் நான்கு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
போர்க்களத்தில் நடக்கும் யுத்தத்தில் ரத்தமுண்டு
இந்த மனக்களத்தில் நடக்கும் யுத்தத்தில் கண்ணீர் உண்டு
அந்த ரத்தம் துடைத்தாலும் துடைக்காவிட்டாலும்
நின்றுவிடும் உறைந்துவிடும்
இந்த கண்ணீர் வற்றாத நதி போல
என்றும் நிற்காது வந்து கொண்டே இருக்கும்
யுத்தம் ஓய்ந்தாலும் இது ஓயாது
“என்ன?????????? நித்யா ஆன்டியோட மகனா பார்த்திபன்!” என்று அபிராமி கத்தியதை கேட்ட. சத்தியமூர்த்தி, “கத்தாதீங்க அபிம்மா”, என்று...
அத்தியாயம் மூன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்,
இதன் யுத்தகளம் நம் மனம்,
பூமியின் பரப்பளவை அறிந்த மாந்தர்,
இதன் பரப்பளவை கையளவு என்றனர்,
இதன் கொள்ளளவு ?
அதை அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர்,
எவர் ?????????????
பூமியின் கொள்ளளவை விட
இதன் கொள்ளளவு மிக மிக அதிகம்,
அளக்க முடியாதது, அளவிட முடியாதது.
“என்ன கலா, பொண்ணு முன்னாடி இப்படி பேசற!”, என்று சத்தியமூர்த்தி கடிந்து கொள்ள………….
“பொண்ணு வளர்ந்துட்டா...
அத்தியாயம் இரண்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தின் மிகச்சிறந்த ஆயுதம் மெளனம்,
யுத்தத்தை சுமூகமாக முடிக்கும் மிகச்சிறந்த ஆயுதம்,
நமக்குள் நாமே போராடினாலும் வெளியே
வார்த்தைகள் வந்து விடும்,
நாம் அடுத்தவரிடம் போராடினாலும்
வார்த்தை வந்துவிடும்,
அதை தடுக்கவல்ல சிறந்த ஆயுதம் மெளனம்,
அதை விட கூர்மையான
எதிராளியை பதம் பார்க்கும்
சிறந்த ஆயுதமும் வேறு இல்லை.
அவர்கள் மெயின்...
அத்தியாயம் ஒன்று:
புலர்கின்ற பொழுது, புலராத ஜனங்கள்,
புலர்ந்த ஜனனம். புலர வேண்டாம் என்று நினைக்கின்ற மரணம்,
பொழுது புலரும் வேளையில் நான் இருக்கிறேன்
என்று வரும் உதயன், அவனுடன் உதிக்கும் பொழுது
புலர்ந்தும் புலராத மனித மனம்,
அதில் தினம் உதிக்கும் ஆயிரம் யுத்தம்,
இந்த யுத்தம், இதன் சத்தம்,
யாருக்கு கேட்க்கும், அது அவனுக்கு மட்டுமே...