Oviyanin Thoorigaiyaai
தூரிகை 17:
அன்று இரவு தேவா... கீர்த்தனா இருந்த அறை பக்கம் வரவேயில்லை.அவன் வரவில்லை என்பது ஒரு புறம் மகிழ்வைக் கொடுத்தாலும்,மறுபுறம் சற்று வேதனையையும் கொடுத்தது அவளுக்கு.
கீர்த்தனாவிற்கு யாரையும் எடுத்தெறிந்து பேசும் பழக்கம் சிறுவயது முதலே இருந்ததில்லை.ஆனால் இன்று ஏன் அவனை அவ்வாறு பேசினாள் என்பது அவளுக்கு விளங்கவில்லை.
“யாரு.... நீ....? அவன் உன்னைப் பொண்ணுப் பார்க்க...
தூரிகை 16 :
அதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் மாறனும்,சண்முகமும். கல்லூரியில் தன்னுடைய பொறுப்பு கைவிட்டுப் போனதை நினைத்து மறுகிக் கொண்டிருந்தார் மாறன்.தேவா கோபக்காரன் என்று அவருக்கு தெரியும்.. ஆனால் இந்த அளவு கோபம் அவர் எதிர்பாராதது.
“இப்ப என்ன நடந்து போய்டுச்சுன்னு இப்படி இருக்கீங்க...! இத்தனை வருஷம் இந்த எல்லா சொத்தையும் கட்டிக் காத்தவர் நீங்க...?...
தூரிகை 15 :
மொபைலில் அவளுடைய போட்டோவை அவன் ரசித்துக் கொண்டிருப்பதை அறியாத கீர்த்தனா...பத்ரகாளியாய் அவன் முன் ஆஜரானாள்.அவள் வந்தது தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு,தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான் தேவா.
அதைப் பார்த்த பின் அவளது கோபம் பன்மடங்கு பெருக...அவனின் செல்லைப் பிடுங்கி தூர எரிந்தாள்.எறிந்த வேகத்தில் அங்கிருந்த சோபாவில் விழுந்ததால் செல்...
தூரிகை 14 :
இரவு மாறன் கடும்கோபத்துடன் வீடு திரும்பினார்.எல்லாவற்றிலும் தோற்றது போல் ஒரு உணர்வு அவருக்கு.அவரது முகத்தை வைத்தே நடந்ததை ஓரளவு ஊகித்துக் கொண்டார் பத்மா.
எதுவும் பேசாமல்....அமைதியாக மாறனை சாப்பிட அழைக்க...”இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல்...எல்லா வினையும் உன்னால் தான் வந்தது...”என்று எரிந்து விழுந்தார்.
“இப்ப என்ன நடந்தது....? அப்படி நான் என்னதான் செஞ்சுட்டேன்...” என்றார்...
தூரிகை :13
கல்லூரி வாசலில் இறங்கிய கீர்த்தனாவிற்கு என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு மனதில் பாரம் கூடிக் கொண்டே போனது.சுற்றம் மறந்து அவள் நடக்க...அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
“என்ன கீர்த்தி மேம்..? ஏன் என்னமோ மாதிரி இருக்கீங்க...? உடம்பு ஏதும் சரி இல்லையா...?” என்று சக ஆசிரியை ஒருவர் கேட்க...சிறு புன்னகையை மட்டுமே பதிலளித்து...
தூரிகை 12 :
மறுநாள் விடியல் எந்த வித ஆரவாரமும் இல்லாமல் விடிய....தேவாவின் விடியல் மட்டும் அவஸ்தை நிறைந்த ஒன்றாக அமைந்தது.
தூரிகாவை சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும்,படபடப்பும் ஒரு புறம் இருந்தாலும்....அவளின் பதில் என்னவாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் தேவாவிடம் மேலோங்கி இருந்தது.அனைத்தையும் ஓரங்கட்டியவன் கிளம்புவதில் ஆயத்தமானான்.
கிளம்பி வேகமாய் கீழே வந்தவன்....அங்கு பத்மா அமர்ந்திருப்பதைப்...
தூரிகை 11 :
தேர்வுகள் முடிந்த நிலையில்.... ஊருக்கு செல்வதற்காக தனது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தூரிகா.
கடைசி வரையில் அந்த ஓவியன் யார் என்று தெரியாமல் போனதில் அவளுக்கு மிகுந்த வருத்தம்.
“நாம் இத்தனை கடிதம் எழுதியும் ஒரு பதிலும் வரவில்லையே.சரியான திமிர் பிடித்தவராய் இருப்பாரோ....? ஆனால் அவரது ஓவியங்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே...? ரசனை...
தூரிகை 10:
“சிந்து பிளீஸ்....நான் சொல்றதைக் கொஞ்சம் காது குடுத்து கேளு...ப்ளீஸ்...!” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அஸ்வின்.
“இதோ பார் அஸ்வின்...! எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை...நீ சொல்ற அந்த காதல், கருமாந்திரம் இப்படி எதுவுமே எனக்கு உன் மேல வரலை...என்னை மறுமடி மறுபடியும் தொந்தரவு பண்ணாத...!” என்று எரிந்து விழுந்தாள் சிந்து.
“சிந்து நான் சொல்றதைக் கேளு..!”...
தூரிகை 9:
மாலை மங்கிய வேளையில் அந்த அரங்கமே கூட்டத்தால் குழுமியிருந்தது. பிரபல ஓவிய கண்காட்சி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.பல பிரபல ஓவியர்களின் ஓவியங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றாய் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா. தன்னுடைய ஓவியங்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதையோ....அதை அனைவரும் ரசிப்பதையோ அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மற்ற ஓவியங்களை அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.அதன் மூலம் அவன்...
தூரிகை 8 :
நான்கு வருடங்களுக்கு முன்பு........
பசுமையை ஆடையாய் போர்த்திய மரங்களும்....நவீனயுக கட்டிடங்களுமாய்.... கம்பீரமாய் இருந்தது அந்த கல்லூரி.கோயம்பத்தூரின் புகழ் பெற்ற அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு தொழிலில் உள்ள ஏற்ற இறக்கங்களைப் பற்றியும்,அதில் உள்ள நுணுக்கங்கள் பற்றியும்,அணுகு முறைகள் பற்றியும் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.
அவரின் பேச்சை ஒரு...
தூரிகை 7 :
வீட்டின் முன் காரை நிறுத்திய தேவா....வேகமாய் இறங்கி வீட்டினுள் சென்றான்.
இவன் பேசாம கார்ல கூட்டிட்டு வந்தான்...இப்ப என்னடான்னா அவன் பேசாம போறான்...!” என்று மனதில் நினைத்த கீர்த்தனா...அதைப் பற்றி பெரிதும் எண்ணாமல் உள்ளே சென்றாள்.
இவளைக் கண்டவுடன்...“மகாராணி வந்துட்டாங்க...!”” என்றாள் கார்த்திகா.
அவளை அமைதியாய் பார்த்த கீர்த்தனா...” “சொன்னாலும் சொல்லாவிட்டாலும்..... என்னோட அம்மா அப்பாவுக்கு...
தூரிகை 6 :
கீர்த்தனாவிற்கு ஒரு நிமிடம் நடப்பது என்னவென்று புரியவில்லை.தேவா மயங்கி விழுந்திருப்பதைக் கண்கள் கண்டாலும், உடனே அவளால் எதுவும் செய்ய இயலவில்லை.ஒரு நிமிடம் மூளை அவளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரமை பிடித்தது போல் இருந்தது.
அவள் சுயத்திற்கு வர சில மணித்துளிகள் ஆகியது.வேகமாய் தேவாவின் அருகில் குனிந்தவள்...” “ஏங்க...?” என்று அவனை பட்டும் படாமல்...
தூரிகை 5 :
கலையரசியும் செழியனும் தங்கள் ஒரே மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனித்தனர்.மகன் இல்லாத குறையை...தேவாவிற்கு செய்து தங்கள் குறையை பூர்த்தி செய்து கொண்டனர்.
இதில் கீர்த்தனாவிற்கு ஏகத்திற்கும் எரிச்சல் கிளம்பியது.”பெத்த பொண்ணு குத்துக் கல்லாட்டம் இங்க இருக்குறேன்....ஆனா கவனிப்பு என்னமோ அவனுக்கு தான் நடக்குது...! இந்த அம்மாவுக்கு என்னாச்சு...? அவனுக்கு என்ன ரெண்டு கொம்பா...
தூரிகை 4 :
தேவா கண் விழித்த போது....ஒன்றும் புரியவில்லை....சுற்றி இருள் சூழ்ந்திருந்தது.”என்னாச்சு....? ஒரே இருட்டா இருக்கு...!” என்று யோசித்தபடி நேரத்தைப் பார்க்க...அது இரவு 11 மணியைக் காட்டிக் கொண்டிருந்தது.
“அடக்கடவுளே...?” என்று தலையில் கை வைத்தவன்....”எவ்வளவு நேரமா தூங்கியிருக்கேன்...ஐயோ...! இங்க எல்லாரும் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க...?” என்று தனது மடத்தனத்தை எண்ணி தானே நொந்து...
தூரிகை 3 :
அந்த வீட்டில் அனைத்துமே கீர்த்தனாவிற்கு புதியதாய் இருந்தது. பழக்கமில்லாத மனிதர்கள்....முன் பின் அறியாத சூழல் இப்படி அனைத்தும் கலந்து அவளை சோர்வு கொள்ளச் செய்தது.
“இங்க வாம்மா கீர்த்தனா...!” என்று அன்பாய் அழைத்தார் பத்மா.
இப்ப தான் இவங்களுக்கு பேசனும்ன்னு தோணிச்சா....!”” என்று மனதில் நினைத்தவள் அமைதியாக அவரின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“சாரிம்மா....கல்யாண டென்சன்...அது...
தூரிகை 2:
யோசனையுடன் காரை ஒட்டிக் கொண்டிருந்தான் தேவா.அருவியில் கீர்த்தனாவைப் பார்த்ததிலிருந்து அவன் மனம் நிலையில்லாமல் தவித்தது.
“எனக்கு என்னாச்சு....? எதற்காக இப்படி என் மனம் குழம்பித் தவிக்கிறது...? எனக்கு கீர்த்தனாவைப் பிடிக்கிறது....? ஆனால் என் ஆழ் மனம் இதை ஏற்க மறுக்கிறது....! ஏதோ ஒன்று என்னைத் தடுக்கிறது.மூளை சரியென்று ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயத்தை மனம் ஏன்...
தூரிகை 1 :
“கணபதி இருக்கும் வரை கவலையில்லை-என்றும்
கைகட்டி பதில் சொல்லும் நிலையுமில்லை...
எனக்கொரு இசை தெய்வம் அவன்தானய்யா...
அவன் புகழ் தினம் சொல்வோன் இவன் தானய்யா...
கணபதி என்றிட கலங்கும் வல்வினை...
கணபதி என்றிட காலன் கைதொழும்....
கணபதி என்றிட கருமம் ஆதலால்...
கணபதி என்றிட கவலை தீருமே....”
என்ற பாடல் வரிகள் மலைக் கோவிலின் உச்சியில் இருந்து.... காற்றினில் தவழ்ந்து...