Sevvanthi Pooveduthaen
அத்தியாயம் – 29
“ஹேய் என்ன சர்ப்ரைஸ்?? நீ இங்க எப்படி வந்தே??” என்று இயல்பாய் கேட்டான் வீரா.
அவள் முகமே சொன்னது ஏதோ பெரிதாய் கேட்க போகிறாள் என்று, தன்னையும் இலகுவாக்கி அவளையும் இலகுவாக்கவே (?) அப்படி கேட்டு வைத்தான்.
அவன் கேள்விக்கு அவள் முறைத்த முறைப்பில் இருந்த அனல் அத்தோட்டத்தில் உள்ள பூக்களை எல்லாம் கருக்கச்...
அத்தியாயம் – 28
பத்து நாட்களாய் இருந்த அலைச்சல் எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போனதாக உணர்ந்தான் வீரா.
மனைவியின் ஒற்றைச்சொல் செய்த மாயம் அவன் களைப்பை விரட்டி சுறுசுறுப்பாக்கி இருந்தது. அவன் பார்வை முழுதும் மனைவியையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது.
அது தெரிந்தும் தெரியாதது போல அவளும் சுற்றிக்கொண்டிருந்தாள். அன்று எல்லாம் முடிந்து அவர்கள் வீடு...
அத்தியாயம் – 27
செவ்வந்திக்கு இன்னமும் நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. முல்லையின் கழுத்தில் தாலி ஏறியதை கண்ணிமைக்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
எதற்கு இந்த அவசரம்?? ஏனிந்த பரபரப்பு?? என்று அவளுக்கு சுத்தமாய் விளங்கவேயில்லை.
பெண் பார்க்க வந்த நடந்த நிகழ்வுகள் அவள் கண்முன் வந்து போனது.
முல்லையை பெண் பார்க்க வந்தது வேறு யாருமல்ல சிவகாமியின்...
அத்தியாயம் – 26
“அக்கா... அக்கா... அக்கா...” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தாள் முல்லை.
“வாடி வரும் போதே எதுக்கு குரல் கொடுத்திக்கிட்டே வர்றே” என்று தங்கையை முறைத்தாள் செவ்வந்தி.
“ஹ்ம்ம் ஒரு வேளை நீயும் மாமாவும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும் போது நான் கரடி மாதிரி உள்ளே நுழைஞ்சிட்டேன்னா!! அதுக்கு தான் ஒரு சவுண்டு...
அத்தியாயம் – 25
மனைவியின் கைப்பிடித்து அவன் நெஞ்சை நீவிக்கொண்டிருந்தான் இன்னமும்.
“கையை விடுங்க” என்றாள் செவ்வந்தி.
“மருந்து போடுங்க” என்றான் அழிசாட்டியமாய்.
“என்ன வம்பு பண்ணுறதுக்கு தான் இங்க வந்தீங்களா??” என்ற அவளின் பேச்சு அவனை உசுப்பிவிட்டது.
அப்போது தான் அவன் வந்த வேலை நினைவிற்கு வர தலையை சிலுப்பி நிகழ்வுக்கு வந்தான்.
“நான் எதுக்குங்க டாக்டர் உங்ககிட்ட வம்பு பண்ணப்...
அத்தியாயம் – 24
வீரா குலையன்கரிசலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடிவிட்டது. மதுரைக்கு சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவன் மீண்டும் ஒரு இறுக்கத்துடனே சுற்றி வந்தான்.
தகப்பனுக்கு மனைவியின் இழப்பை விட மக்களின் கவலையே பெரிதாகிப் போனது. ஒரு புறம் தாமரை மறுபுறம் மகன் என்று இருவருக்கும் இடையில் சிக்கி அவருக்கு மூச்சு முட்டியது...
அத்தியாயம் – 23
சக்திவேல் மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவள் தன் வீட்டுக்கு வாராமல் போன அண்ணனை நேரில் பார்த்து கேட்டுவிடுவதென தந்தையுடன் கிளம்பி வந்திருந்தாள் அவள்.
அவளிடம் பேச்சு கொடுக்கக் கூடாதென முடிவு செய்திருந்த அவளின் மாமியார் கூட வாயை திறந்து சொல்லிவிட்டார் போகாதே என்று ஆனால் அவளுக்கு தான் ஏதோ பிடித்து ஆட்டுக்கிறதே...
அத்தியாயம் – 22
வீராவுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை செவ்வந்தி தங்களுடன் வந்ததை. பின்னே அவளை சம்மதிக்க வைப்பதற்குள் பெரும்பாடாகியிருந்தது.
“அப்பா நீங்க சொல்லுங்க” என்று தந்தையின் பொறுப்பில் விட்டதுமே அவர் மருமகளிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.
“ஏம்மா வீரா சொல்றதும் சரி தானே!! உன்னை பார்க்க தான் அவன் இங்க வந்திருக்கான். நீ ஹாஸ்டல்ல அவன் ஹோட்டல்ன்னு ஏன்...
அத்தியாயம் – 21
“உள்ள வாப்பா??” என்றவருக்கு மகன் வந்துவிட்டான் என்று ஒரு புறம் சந்தோசம் இருந்தாலும் அவன் வேலையை விட்டு வந்துவிட்டானே என்று ஓரமாய் ஒரு வருத்தம் இருந்தது.
வந்ததும் கேட்க வேண்டாம் என்று அமைதியானார் அவர். வீராவும் எதுவும் சொல்லவில்லை, அவன் அறைக்கு சென்று குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவன் கட்டிலில் வந்து...
அத்தியாயம் – 20
போன் பேசிவிட்டு வந்தவர் மருமகளை நோக்கி “செவ்வந்தி நீயும் உங்கம்மா வீட்டுக்கு போம்மா, வீரா வந்த பிறகு இங்க வந்தா போதும்”
“என்ன மாமா சொல்றீங்க?? நான் எதுக்கு மாமா அங்க போகணும். அதெல்லாம் வேண்டாம் மாமா”
“நீ இங்க தனியா இருக்க வேண்டாம்மா, நீ அங்க இருக்கறது தான் சரி. வீரா வர்ற...
அத்தியாயம் – 19
செவ்வந்தி கையில் இருவருக்குமான உணவை சுமந்துக் கொண்டு பின் வீட்டிற்கு வர வீராவோ கீழே இருந்த ஹாலில் இருந்த சோபாவில் ஹாயாக வாசலை நோக்கி படுத்துக் கொண்டு இவள் வரவை எதிர்பார்த்திருந்தான்.
அவள் உள்ளே வரவும் எழுந்து வந்து அவளிடத்தில் இருந்ததை வாங்கி அங்கிருந்த டிபாயின் மேல் வைத்தான்.
“எவ்வளவு நேரமா உனக்காக வெயிட்...
அத்தியாயம் – 18
ஆயிற்று இன்றோடு ஐந்து நாட்கள் ஓடிவிட்டது செவ்வந்தி தாமரையிடம் பேசி.
அன்று தாமரை சிதறவிட்ட வார்த்தைகளின் வலி இன்னமும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாய் தானிருந்தது.
அன்றைய நாள் மீண்டும் நினைவிற்கு வந்து போனது. தாமரை பேசியதும் பதிலுக்கு தான் பேசியதும் நினைவிற்கு வந்தது.
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்று தாமரை சொல்லவும்...
அத்தியாயம் – 17
சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.
செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன என்ற பாவத்தில் அன்று இருந்தவளுக்கு இன்று அவன் கிளம்பிச் செல்வது பெரும் சுமையொன்று மனதிற்குள் கூடியதாய் இருந்தது.
இப்போதே செல்ல வேண்டுமா!!...
அத்தியாயம் – 16
கார்த்திக் கல்லூரியில் செவ்வந்திக்கு சீனியர். கார்த்திக்கிற்கு தூத்துக்குடி தான் சொந்த ஊர். அவன் தந்தையும் தாயும் மருத்துவர்களே.
செவ்வந்தி கார்த்திக்கிற்கு அழைத்ததுமே அவன் அன்னைக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்திருந்தான்.
தாமரையை உள்ளே அழைத்து வரும் போதே அவளின் வலியின் அளவு அதிகரித்திருந்தது. கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு செவ்வந்தியும் பிரசவ அறைக்குள்...
அத்தியாயம் – 15
செவ்வந்தியிடம் பேசியதில் மனம் சற்று ஆசுவாசப்பட்டிருந்தது வீராவுக்கு. மெதுவாய் கீழிறங்கி சென்றிருந்தவன் மனோரஞ்சித செடியருகே சென்று நின்றுக்கொண்டான்.
அவன் கீழே வரவும் செவ்வந்தி உள்ளே சென்றிருக்கவும் சரியாக இருந்தது அவனும் கவனிக்கவில்லை அவளும் உள்ளே சென்றிருந்தாள்.
அந்த செடியை மெதுவாய் வருடிக் கொண்டிருந்தவனுக்கு இதே இடத்தில் நின்று அவன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவிற்கு...
அத்தியாயம் – 14
ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொண்டனர் அவள் பேசியதை கண்டு.
தாமரையின் மாமியார் இன்னமும் சமாதானமடையவில்லை அவள் பேச்சில். “என்ன தாமரை உன் மதினி இப்படி சொல்லுது”
“உனக்காச்சும் புரியுதா இல்லையா எடுத்து சொல்லு உம் மதினிக்கு” என்று மருமகளை இழுத்தார் அவர்.
தாமரை ஒன்றும் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தவள் மாமியார் சொல்லவும் செவ்வந்தியை நிமிர்ந்து பார்த்தாள்.
“வேணாம் அண்ணி...
அத்தியாயம் – 13
வீடு முழுவதும் உறவினர்கள் கூட்டம் கூடியிருந்தது. ஓரிரு நாளுக்கு முன்னர் தான் நல்லதிற்காய் கூடியிருந்த கூட்டம் இப்படி ஒரு நிகழ்விற்கு வருவோம் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டர்!!
ஆங்காங்கே கேட்ட அழுகுரலும் ஓலமிடும் சத்தங்களும் மனதை உருக்கி உடைத்துப் போடுவதாய் தானிருந்தது.
பாட்டோடு சேர்ந்த ராகத்தோடு ஒப்பாரியை வைத்துக்கொண்டு தாமரையை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தது...
அத்தியாயம் – 12
அவள் தோழி மயிலிடம் பேசி வைக்கவும் அவளுடன் பயிலும் கிரேசி போன் செய்தாள் அவளுக்கு. “ஹேய் எப்படிடி இருக்க புதுப்பொண்ணு!!” என்று கிண்டல் செய்தாள் அவள்.
“என்னடி கொழுப்பா உனக்கு!!”
“யாருக்கு கொழுப்பு எங்களுக்கா!!”
“ஆமா உனக்கு தான் வேற யாருக்கு!!”
“ஏன்டி சொல்ல மாட்டே!! நானா கல்யாணம் ஆனதை மறைச்சேன்” என்றாள் அவள்.
“கிரேஸ் உண்மையை சொல்லு...
அத்தியாயம் – 11
“இவ்வளவு நேரமா நீங்க வர்றதுக்கு” என்று கும்பலாய் சேர்ந்து அனைவரும் கேட்டு அவர்களே சிரித்துக்கொண்டனர் தங்களுக்குள் ஏதோ பேசி.
செவ்வந்திக்கு சற்றே எரிச்சலாக வந்தது. ‘என்ன நினைத்து சிரித்திருப்பர்’ என்று உணர முடிந்தது அவளால். வீரா ஏதோ சொல்லி அவர்களை சமாளிப்பது புரிந்தது.
அங்கிருந்தவர்கள் அனைவருமே செவ்வந்தியைவிட வயது கூடியவர்களாகவே இருந்தனர். அவளுக்கு தான்...
அத்தியாயம் – 10
“மதினி... மதினி...” என்ற தாமரையின் குரல் வெளியில் கேட்க வீரா எழுந்து வந்து கதவை திறந்தான்.
“என்ன தாமரை??” என்றான் வெளியில் நின்றவளை பார்த்து.
“மதினி...” என்று அவள் இழுக்க “பாத்ரூம்ல இருக்கா??” என்றான்.
“சாரி அண்ணா... அத்தை அப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கலை. மதினி வருத்தப்பட்டிருப்பாங்க சாரி அண்ணா...” என்றவளை புரியாமல் பார்த்தான் அவன்.
“என்ன...