Thursday, March 28, 2024

    Nenjukkul Peithidum Maa Mazhai

    அத்தியாயம் இருபது:  காலை எப்பொழுதும் போல வெற்றிக்கு விடிய, அவன் உடற்பயிற்சி வகுப்பு எடுக்க சென்றுவிட்டான். சந்தியா எழும்போது அவன் இல்லை..... “கடமை கண்ணாயிரம், ஒரு நாள் போகலைன்னா குறைஞ்சா போயிடும், யாரு என்ன நினைப்பாங்கன்னு அறிவே இல்லை”, என்று வாய் விட்டே முணுமுணுத்தாள்.  சந்தியாவிற்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுந்து குளித்து  முடித்து மேலே...
    அத்தியாயம் பத்தொன்பது: திருமணம் முடிந்ததும் மதியத்திற்கு முன் மணமக்கள் வெற்றியின் வீட்டிற்கு வந்துவிட்டனர். சந்தியா வீட்டினருக்கு வெற்றியுடனான சந்தியாவின் திருமணத்தில் அவ்வளவு சந்தோசம் இருப்பதாக தெரியவில்லை. நண்பர்கள் என்ற முறையில் பழகுவது வேறு.... உதவி பெற்றுக் கொள்வது வேறு.... வீட்டில் குடியிருப்பது வேறு. ஆனால் உறவு முறை ஏற்படுத்திக் கொள்வது வேறு அல்லவா..... எல்லோரும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில்...
    அத்தியாயம் பதினெட்டு: விரைவாக அந்த இடத்தை விட்டுப் போகப் போன வெற்றியை ஒரு புன்னகையோடு ரமணன் சில நொடிகள் பார்த்திருந்தவன்....... ஏறக்குறைய ஓடிச்சென்று வெற்றியின் கையை பற்றி நிறுத்தினான்.. “என்னப்பா நீ இவ்வளவு ரோஷக்காரனா இருக்கியே”, என்று அவனிடம் சத்தமாக சொன்னவன், “எனக்கும் மிச்சமா இருப்பான் போல”, என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான். “உன்னை இங்க அனுப்பணும்னா ஏதாவது...
    அத்தியாயம் பதினேழு: காலமும் நேரமும் யாருக்காகவும் நிற்பதில்லை.... சந்தியா வீட்டை விட்டு போய் எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. ரமணனிடம் போய் சந்தியா வீட்டை விட்டு போன அன்றே வெற்றி விவரம் சொல்ல....... “தொலைஞ்சு போயிருந்தா தேடலாம். தானா போனவளை என்ன செய்ய முடியும்.... சந்தியாவா தொடர்பு கொள்றாளா பார்க்கலாம். இல்லைன்னா தேடலாம்..... தைரியமான பொண்ணு வெற்றி... நீ பயப்பட...
    அத்தியாயம் பதினாறு: சந்தியா பார்த்த பார்வை என்னவோ அவன் தப்பு செய்வது போன்ற எண்ணத்தை கொடுத்தது... “நான் என்ன ஆசை வார்த்தை காட்டி மோசம் செஞ்சது போல ஒரு பார்வை இந்த பொண்ணு பார்க்குது... நான் இது நல்லதுக்கும் தானே சொல்றேன்......”, என்ற எண்ணம் மனதில் எழ, அதை வெற்றியின் முகமும் பிரதிபலித்தது. அதை சந்தியாவின் மனம் உணர்ந்ததோ...
    அத்தியாயம் பதினைந்து: “என்ன சொல்ற? திரும்ப சொல்லு!”, என்றான் தன் காதுகள் கேட்டதை நம்ப முடியாமல்.... நின்று அவன் முகத்தை பார்த்து நிறுத்தி நிதானமாக, “என்னை கல்யாணம் பண்ணிக்கறிங்களா”, என்றாள். “என்ன உளர்ற.......”, ஒரு வித அதிர்ச்சியோடு. “என்ன உளர்றேன்.....”, “பின்ன நீ சொன்னது உளறல் இல்லாம என்ன?”, “என்னை கல்யாணம் பண்ணிக்கறிங்களா? இல்லையா?”,   “மாட்டேன்!”, என்றான் ஸ்திரமாக.   “ஆனா எனக்கு உங்களை...
    அத்தியாயம் பதினான்கு: கோபம் மனதில் கொந்தளித்தாலும் செய்யும் வகை தெரியாது அமைதி காத்தான் ஞானவேல்..... அன்று மாலை சந்தியா டியுஷன் எடுத்து முடித்து வீடு செல்ல கிளம்பிய சமயம் வெற்றி அவளை மாடியில் சென்று பார்த்தான். கீர்த்தனாவிற்கு படிக்க வேண்டி இருந்ததால் அவர்கள் பேசட்டும் என்று  சென்று படியில் அமர்ந்து கொண்டாள். “ஏன் சந்தியா?.... உன் தங்கச்சி வீட்டுக்காரர் அவரோட...
    அத்தியாயம் பதிமூன்று: காலையில் ஹோம் செக்ரடரி வீட்டில் டியுஷன் எடுப்பது..... மாலையில் பள்ளி குழந்தைகளுக்கு டியுஷன் எடுப்பது என்ற இந்த இரு வேலை மட்டுமே செய்தாள் சந்தியா. காலையில் செல்வதற்கு வேலையும் கிடையாது...... புதிதாக வேலை தேடும் ஆர்வமும் அவளிடத்தில் இல்லை. அகல்யா இப்போது மாதம் மாதம் அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்புவதால் சந்தியா வேலைக்கு போயே...
    அத்தியாயம் பன்னிரெண்டு: வெற்றியின் முகத்தை பார்த்து அருகில் வந்த ஞானவேல், “என்ன வெற்றி”, என்க..... “செத்துட்டான்டா”, என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு வெற்றி பதில் உரைக்கவும், ஞானவேல் அவனின் அண்ணனைவிட கல்லாய் சமைந்து நின்றான். அருகில் நின்ற அவனின் மாணவர்களை, “ரொம்ப பக்கத்துல நிக்காதீங்க இவனுங்க ஓடாம பார்த்துகோங்க......”, என்றவன் ரமணனை அழைத்தான்...... “சார்......”, என்று விவரம் சொல்லவும்.... “என்ன...
    அத்தியாயம் பதினொன்று: கொண்ட கட்லாவின் யோசனைகள் சந்தியாவை தூக்கி விடலாமா என்று யோசிக்கும் போதே... சந்தியா வெளியே போகப் போக..... “நான் சொன்னது எல்லாம் செஞ்சிடுவேன்.... உன் கூட இருக்குறவன் உன்னை காப்பாத்துவான் மட்டும் நினைக்காத...... அவன் அப்புறம் உயிரோடவே இருக்க மாட்டான்”, என்று மீண்டும் டைலாக் பேச..... “நீ ஒரு அபாயகரமான பிறவி தான்.... எல்லோரையும் இதுவரைக்கும் நீ...
    அத்தியாயம் பத்து: வீட்டிற்கு வந்ததும், அம்மா என்ன விஷயம் என்று கேட்க..... மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். வீடே ஸ்தம்பித்து விட்டது... யாருக்கும் என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை... பயந்து விட்டார்கள்... பணக் கஷ்டம் என்றால் பார்த்து பார்த்து பழக்க பட்டவர்கள்.... ஆனால் திருட்டு பட்டம் அதுவும் பெண்பிள்ளை... வீடே சோகத்தில் மூழ்கியது.. தாத்தா நேரே போய் வெற்றியின் கைகளை பிடித்துக்...
    அத்தியாயம் ஒன்பது: வெற்றியின் இந்த அதீத கோபமும் ஆவேசமும் சந்தியாவிற்கே பயம் கொடுத்தது. அவன் விட்ட உதையில் அந்த மேனேஜர் சுவரில் மோதி அந்த லேடி கான்ஸ்டபிள் மேல் விழ.......     இருவரும் கீழே விழுந்தனர்.... அவசரமாக வெற்றிக்கு தெரிந்த கான்ஸ்டபிள் வந்து அந்த மேனேஜரை இழுத்து கீழே போட்டு தன் சக ஊழியரை தூக்கி விட்டவர்....... அவருக்கு ஏதாவது...
    அத்தியாயம் எட்டு: வெற்றிக்கு பெண் பார்க்கும் வேலையில் மீனாட்சி முழு மூச்சாக இறங்கினார்..... இரண்டே இரண்டு தான் எதிர்பார்ப்பு, பெண் படித்திருக்க வேண்டும்...... பார்க்க மிகவும் அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமாராக இருக்க வேண்டும். நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லை கண்டால் நாயைக் காணோம் என்பதாக  பெண் அழகாக இருந்து படித்து இருந்தால், வெற்றியை...
    அத்தியாயம் ஏழு: சந்தியா பஸ்ஸிற்காக அலைச்சல் படுவதை இரண்டு மாதமாக பார்த்தவன்....  மீனாட்சி மூலமாக சந்தியாவின் அம்மாவிடம், “டூ வீலர் வாங்கிக்கொள்ள பண உதவி செய்கிறேன், மெதுவாக திரும்ப கொடுத்தால் போதும்”, என்று சொல்ல வைத்தான் வெற்றி. சந்தியா ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று தோன்றியதால் தான் அவளின் அம்மாவிடம் மீனாட்சியை பேச சொன்னான். சந்தியாவின் அம்மா ராஜம், “சரி”,...
    அத்தியாயம் ஆறு: வெற்றி வாரத்தில் சில நாட்கள் முக்கிய பிரமுகர்கள் சிலர் வீட்டிற்கு களரியும்  சிலம்பமும் பயிற்சி கொடுக்க போவான்...... அதே மாதிரி காவலர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் போது.... சிறப்பு வகுப்பாக சில சமயம் இந்த மாதிரி தற்காப்பு கலை வகுப்புகள் எடுக்கப்படும் போது அதற்கு எப்போதும் பயிற்சியளிப்பவன் வெற்றி. அந்த மாதிரி தான் அவனுக்கு காவலர்களை...
    அத்தியாயம் ஐந்து: ரேஷன் கடையில், பில் போடுகிறவன் பேசுவது கேட்கும் தூரத்தில் பக்கத்தில் தான் வெற்றியும் தங்கபாண்டியும் நின்றனர். பில் போடுபவனுக்கு வெற்றியை தெரியவில்லை..... சாமான் போடுபவனுக்கு நன்கு தெரிந்தது..... அங்கிருந்தே வெற்றிக்கு ஒரு வணக்கத்தை வைக்க முற்பட..... “வேண்டாம்”, என்று வெற்றி செய்த சமிக்கையில் ஏதோ பிரச்சனை என்று அனுமானித்தான்.. அருகில் வர முற்பட்டவனை, “அங்கேயே இரு”,...
    அத்தியாயம் நான்கு: வெற்றிக்கு பக்கத்தில் இருந்து பார்த்திருந்தால் சந்தியாவின் கண்களில் தோன்றிய பயம் புரிந்திருக்கும்...... அதை பார்த்திருந்தால் வெற்றியின் கோபமும் சற்று மட்டுப்பட்டிருக்குமோ என்னவோ.... வெற்றி இயல்பில் மிகவும் நல்லவன்... எல்லோருக்கும் உதவுகள் புரிபவன். அக்கம் பக்கம் பிரச்சனை என்றாலும் முன் நிற்பவன். ஆனால் யாரும் தங்களை ஏய்த்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பவன். அந்த...
    அத்தியாயம் மூன்று: ஒரு பயமுமின்றி நேர்கொண்ட பார்வையோடு அந்த பெண் தன்னை பார்த்தது வெற்றியின் கோபத்தை கிளறி விட்டது. இன்னும் அந்த பெண்ணின் பெயர் கூட தெரியாதே..... “ஏன் செடி வைத்தால் என்ன? அதற்கு எதற்கு இவ்வளவு கோபம்”, என்பதே சந்தியாவின் எண்ணமாக இருக்க மீண்டும் விளக்கம் கொடுக்க முற்பட்டாள்...... “இல்லைங்க, உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு தான் வைக்கிறேன்......
    அத்தியாயம் இரண்டு : வீடு புக சம்மதம் கொடுத்தது தான் போதும்.... தீனாவும் நாராயணனும் சேர்ந்து மளமளவென்று சாமான்களை இறக்கினர்..... தீனா, வெற்றிக்கு பயந்து யாரையும் உதவிக்கு கூப்பிடவில்லை...  பெரியவர்களை வேலை செய்ய விடவில்லை...... கீர்த்தனாவும் சந்தியாவும் கூட நிறைய சாமான்களை இறக்கி வைத்தனர். லேட் செய்தால் எங்கே சாமானத்தை கட்ட சொல்லிவிடுவார்களோ என்று பயந்து அரை மணி...
                                                 கணபதியே அருள்வாய்           நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை அத்தியாயம் ஒன்று : விடிந்தும் விடியாத காலை பொழுது..... ஜனசந்தடி மிகுந்த சென்னையின் ஒரு பகுதி.....  அப்போது ஜனங்கள் அதிகமில்லாமல்...... நேற்றைய சந்தடிகள் எல்லாம் ஓய்ந்து...... அதிகாலை பொழுது கொடுத்த அதிக ஜனங்களற்ற அமைதியை....  அந்த தெரு அதற்கு அதுவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆம்! நாமிருப்போமா இல்லையோ........ உயிரற்று...
    error: Content is protected !!