Saturday, April 27, 2024

    Oomai Nenjin Sontham

    Oomai Nenjin Sontham 25

    அத்தியாயம் இருபத்தி ஐந்து: சிபி, “சாரி!”, என்றதும்... “அதைப் பத்தி பேசவேண்டாம்! விட்டுடுவோம்!”, என்றவள்.. “நடந்து முடிஞ்சதை, நான் எப்பவுமே பிடிச்சு வைக்கறது இல்லை..”, என்றாள். இப்போது திக்குவது தெரியாமல், நிறுத்தி நிதானமாக பேசுவது போல வார்த்தைகள் பேசினாள். அதாவது வார்த்தைகள் வராமல் திக்குவது அவளுக்கு தெரியும். ஆனால் எதிரில் இருப்பவர் ஏதோ மொழிதெரியாமல் புதிதாக பேசுவது போலவோ...

    Oomai Nenjin Sontham 24

    அத்தியாயம் இருபத்தி நான்கு: அன்று இரவு வரையிலும் அந்த வயல் வரப்பில் இருந்தான்.. “ஏன்பா இப்படி விட்டீங்க”, என்று அவரிடம் சண்டையிட்டான்... இப்படிப் பலப் பல... பிறகு அது என்ன பருவகாலம் என்பதைப் பார்த்து, அதில் என்ன பயிரிடலாம் என்று விவாதித்தான்... பின்பு தேக்கு மரங்களைப் பார்வையிட்டான், அதை சீர் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். அதற்கும்...

    Oomai Nenjin Sontham 23

    அத்தியாயம் இருபத்தி மூன்று:   என்ன செய்வது என்று தெரியாமல் அவள் செல்லும் வழிப் பார்த்து நின்றவனுக்கு.. இப்போது அவன் வளர்ந்து, வாழ்ந்த நிலத்தைப் பார்க்க வேண்டும் என்று இடைவிடாத உந்துதல்.. அவன் குழம்பும் போது தஞ்சமடையும் இடம் அதுதானே! அங்கே சென்றாலாவது மனதிற்கு அமைதி வருகிறதா என்று பார்ப்போம்! அதையும் ஒரு பார்வை பார்த்து விடுவோம்...

    Oomai Nenjin Sontham 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு: சிபி அவளைப் பிரமிப்போடு பார்த்து, “பெரிய வேலை, அந்தச் சின்ன வயசுல.. எல்லோருக்கும் இந்த தைரியம் வராது... தீயைப் பார்த்தா முதல்ல இறங்கி ஓடத் தான் தோணும்”, என்று புன்னகையோடு பாராட்டியவன்.. “எப்படியும் ஒரு நாலஞ்சு வருஷம் முன்ன தானே.. எப்படி இத்தனைப் பேரைக் காப்பாத்தினது வெளில அதிகம் தெரியலை... கல்யாணத்தப்ப கூட...

    Oomai Nenjin Sontham 21

    அத்தியாயம் இருபத்தி ஒன்று: ஜெயஸ்ரீயின் சிரிப்பை சிறிது நேரம் ஒரு புன்னகையோடு சிபி பார்த்திருக்கவும்.. அதற்குள் அவர்கள் இறங்கும் இடம் வரப் போக... “இறங்கணும்”, என்று எழ முற்பட்ட ஜெயஸ்ரீயை, “இரு காந்திபுரம் பஸ் ஸ்டான்ட் போகலாம்”, என்றான். “என் கிளாஸ் இங்க தான்!”, “பரவாயில்லை ஒரு நாள் போகலைன்னா...!”, “பஸ் ஸ்டாண்ட் போய்.....”, என்று கேள்வி எழுப்ப...  “எங்கயாவது போகலாம், சாயந்தரம்...

    Oomai Nenjin Sontham 20

    அத்தியாயம் இருபது: இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, சிபி ஜெயஸ்ரீயின் வீட்டிற்கு வந்து சென்று. என்னே ஒரு விந்தை! இரண்டு வருடங்கள் கடந்தது தெரியவில்லை! ஆனால் இரண்டு நாட்கள் ஜெயஸ்ரீயிற்கு நகரவேயில்லை. “நான் வரவில்லை என்று சொன்னால், அவ்வளவு தானா! போய்விட்டாரா!”, நினைவு முழுவதும் அவனே... அன்று கிளாஸ் போகக் கூட ஆர்வமில்லை... அப்படியே அமர்ந்திருந்தாள் தயாராகாமல். காலையில் அவள் கிளம்பிவிட்டாளா...

    Oomai Nenjin Sontham 19

    அத்தியாயம் பத்தொன்பது: “விடு, விடு”, என்று வார்த்தையால் சொல்லவில்லை ஜெயஸ்ரீ, ஆனால் அவனின் கைகளை விலக்கி இறங்க முற்பட.. “இரு, இரு, இறக்கி விடறேன். என்னையும் சேர்த்து தள்ளி விட்டுடாத”, என்று சிபி அவனின் இயல்பாக அதட்டவும் தான் அமைதியானாள். அதற்குள் அந்தப் பெண்மணி, “பூட்ஸ் காலோட வயல்ல இறங்கினது பெரிய தப்பு. அதுக்காகப் பொட்டப் புள்ளைங்களைத் தூக்கக்...

    Oomai Nenjin Sontham 18

    அத்தியாயம் பதினெட்டு: இரண்டு வருடங்களுக்கு பிறகு... “எங்கத் தப்பு நடந்துச்சுன்னு தெரியலை, இல்லை என்னோட வாழ்க்கையேத் தப்பான்னு தெரியலை... என்னோட உங்க பொண்ணு சந்தோஷமா இருக்க மாட்டான்னு உங்களுக்கு தோனிடிச்சு, அதான் இந்த கம்ப்ளையின்ட் எல்லாம்...”, “இதை வாபஸ் வாங்கினதுக்கு ரொம்ப நன்றி.. உங்களுக்கு என்ன சரின்னு படுதோ செய்ங்க... எங்க கேட்டாலும் நான் கையெழுத்துப் போடறேன்...”, “உங்கப் பொண்ணை...

    Oomai Nenjin Sontham 17

    அத்தியாயம் பதினேழு: அன்று இரவு உணவு உண்ண அழைத்த போது ஜெயஸ்ரீ, “கண்டிப்பாகத் தன்னால் சாப்பிட முடியாது...”, என்பதைத் திக்கித் திக்கி கூட சொல்லவில்லை, சைகையால் தான் கூறினாள். அப்படி ஒரு வேதனை அவளின் முகத்தில், அழுகையெல்லாம் இல்லை. “அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்கறேன்..... முகத்துக்கு நேரா அந்த வார்த்தைகளைச் சொல்லக் கூடாதுன்ற அறிவு கூட அவனுக்கு இல்லை”,...

    Oomai Nenjin Sontham 16

    அத்தியாயம் பதினாறு: இருவரும் அப்படியே தான் இருந்தனர், சிபி படுத்து, ஜெயஸ்ரீ அமர்ந்து, அதுவும் காலில் ஷூ இருந்ததினால் அந்தக் காலை மடக்க முடியாது, ஷூ அணிந்த கால் நீட்டி இருந்தது, இன்னொரு கால் மடக்கி இருந்தது.  நேரம் மதிய உணவு நேரத்தைக் கடந்து இருக்க, இருவரும் வெளியே வருவதாக காணோம், ஜெயஸ்ரீ அவளிடம் கொடுத்த பணப்...

    Oomai Nenjin Sontham 15

    அத்தியாயம் பதினைந்து: வஜ்ரவேல் சென்றதும், நடராஜன் மனைவியை கடிந்து கொண்டார், “ஏன் தேவி இப்படி ஒரு விருந்து?, நீ இப்படிசெய்வன்னு நான் நினைக்கலை, எப்படி கவனிச்சிக்கிட்டாங்க தெரியுமா அவர் வீட்ல, நான் போய் மூக்கு பிடிக்க சாப்பிட்டிட்டு தான வந்தேன்..... அவர் என் வீட்டுக்கு வரும் போது இப்படி ஒரு சாப்பாடு தான் நான் போடுவானா?”, “அடுத்தவங்களுக்கு...

    Oomai Nenjin Sontham 14

    அத்தியாயம் பதினான்கு: அடுத்த நாள் வஜ்ரவேலின் வயல் வரப்பை ஒட்டி உள்ள அவர்களின் தோட்டத்திலேயே கிடா விருந்து. உறவுகள் எல்லோரும் வந்துவிட்டப் பிறகு கடைசியாகத் தான் சிபியின் வீட்டினர் வந்தனர். அதுவும் எல்லோரும் வரவில்லை, பெரியவர்கள் ஈஸ்வரரும் சுலோச்சனாவும், கூட நடராஜன், அருள்மொழி, மாமல்ல வர்மன் மட்டுமே வந்திருந்தனர். வேறு பெண்கள் சிபியின் அம்மா தேவி, அத்தை ராஜலக்ஷ்மி...

    Oomai Nenjin Sontham 13

    அத்தியாயம் பதிமூன்று: ஜெயஸ்ரீயின் முகம் நொடியில் சுருங்கி விட அப்படியே நின்றுவிட்டாள். பிறகு மனதிற்குள் அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொண்டாள், இது அவனின் இயல்பு என்பதாக. உண்மையில் சிபியின் இயல்பு அது இல்லை. எப்போதும் சற்று அதட்டலாக கறாராக பேசுவான் தான். ஆனால் இப்போது ராதாவுடனான திருமணம் நின்றதில் இருந்து தான் மிகவும் அதிகமாகி விட்டது.   ஜெயஸ்ரீ அவன்...

    Oomai Nenjin Sontham 12

    அத்தியாயம் பன்னிரண்டு: “கண்டுபிடியேன் நல்லவனா கெட்டவனானு”, என்று சொல்லி ஜெயஸ்ரீயை பார்த்தான். ஜெயஸ்ரீயின் முகத்தில் அவ்வளவு கலக்கம்.... பேச முயன்றும் வார்த்தைகள் வரவில்லை. கூடவே பயம் கூட....... “ரொம்ப களைப்பா தெரியற, தூங்கு!”, என்று சிபி அமர்ந்திருந்தவன் கட்டிலை விட்டு இறங்கினான். பின்பு பாலை எடுத்து ஜெயஸ்ரீயிடம் நீட்டியவன்........ “நீ குடிச்சிட்டு குடு!”, என்றான். ஜெயஸ்ரீ கொஞ்சம் குடித்து கொடுக்க...... அதை...
    அத்தியாயம் பதினொன்று: உடல் மனம் எல்லாம் சோர்ந்து இருந்த போதும், “தூங்காவிட்டாலும் பரவாயில்லை, படுத்தாவது இருடா!”, என்று உடல் கெஞ்சிய போதும் பிடிவாதமாக ஜெயஸ்ரீயைப் பற்றி தெரிந்து கொள்ள அமர்ந்திருந்தான். திருமணம் நன்றாக அன்று நடந்த போதும், அதற்கு முன்பு  மணப்பெண்ணின் குறையை முன்னிட்டு அவளைப் பற்றி அதிகம் வீட்டில் யாரும் பேசிக்கொண்டதில்லை. அதனால் அவளின் விவரங்கள்...
    அத்தியாயம் பத்து: டீ வீ பார்க்கும் மனநிலை இருவரிடத்திலும் இல்லை... சடங்கு சம்ப்ரதாயம் என்ற எந்த ஏற்பாடும் வீட்டில் செய்யவில்லை. ஏனென்றால் வஜ்ரவேலுக்கு மணமக்களை வீட்டிற்குக் கூட்டி வரும் எண்ணமில்லை. ஆனால் திருமணம் முன்பே கோவிலில் சில நிகழ்வுகளால் வருத்தம், அதன் பிறகு ஜெயஸ்ரீ சொல் பேச்சுக் கேட்டாலும் முகம் சரியில்லாத மாதிரி தான் அவருக்கு தோன்றியது. சிபியின்...
    அத்தியாயம் ஒன்பது: பல முறை சிபி ஜெயஸ்ரீயின் பார்வையை சந்திக்க முற்பட்டான்... ஆனால் முடியவேயில்லை. கவனமாக ஜெயஸ்ரீ தன் பார்வையை தவிர்க்கிறாள் என்று மிகவும் தாமதமாகத்தான் சிபிக்கு புரிந்தது. அதன் பிறகு அவனும் முயலவில்லை.... “என்னைப் பார்க்காமல் எங்கே போவாள்”, என்று தான் மனதில் அந்த நேரம் தோன்றியது.. அதே சமயம், “என்ன இது? நம்மை விட...
    அத்தியாயம் எட்டு: ஒரே மகள் வசதி வாய்ப்பும் உள்ளதால் வஜ்ரவேல் தன் மகளுக்குச் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்ய விரும்பினார்... நிறைய செலவுகள் ஏற்கனவே திருமணம் கேஸ் ஜாமீன் என்று. நடராஜன் வீட்டினரால் மீண்டும் ஒரு செலவு உடனே செய்ய முடியாத சூழ்நிலை. ஆனால் எப்படி அதை பெண் வீட்டினரிடம் சொல்வது... அது மட்டுமன்றி சிபியும் விமரிசையாக மீண்டும்...
    அத்தியாயம் ஏழு: “ஜெயஸ்ரீ வந்து வணக்கம் சொல்லு”, என்று தந்தை வஜ்ரவேல் சொல்ல... மெதுவாக அவளின் ஸ்டிக்கை பிடித்தபடி நடந்து வந்து, “வணக்கம்”, என்கிற மாதிரி கை குவித்தாள், வாயைத் திறந்து உச்சரிக்கவில்லை. ஒரு கனமான அமைதி அங்கே... பாவாடை தாவணியில் இருந்தாள் ஜெயஸ்ரீ... வெளியே பாதம் மட்டுமே தெரிய... அதில் ஒரு காலில் தெரிந்த ஷூ....
    அத்தியாயம் ஆறு: “ஏண்டா, நான் ஊருல இல்லாத நேரமா பார்த்து கல்யாணத்தைச் செஞ்சிகிட்டு போயிட்டியா? என்ன ஜென்மம்டா நீ? உங்கப்பனை விட இன்னும் பெரிய ஃபிராடுப் பயலா இருப்ப போல”, என்று கண்ணனைப் பார்த்து சொல்ல..... அவன் முகம் அவமானத்தில் சிறுத்தது. யாரிடம் போய் என்ன விளக்கம் சொல்ல முடியும். எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே. “உங்கப்பனா உன்னை படிக்க...
    error: Content is protected !!