Sevvanthi Pooveduthaen
அத்தியாயம் – 34
வண்டி மூணாரை நோக்கி பயணம் செய்ய வீராவின் மனமோ பின்னோக்கி பயணம் செய்தது. அன்றைய நிகழ்வுகளையும் அவன் மனம் அசைப்போட்டது.
____________________
“இங்க வா” என்றவன் கட்டிலில் அமர்ந்துக்கொண்டு அவளை நோக்கி கையை நீட்டினான்.
அவன் கைக்குள் தன் கையை அடைக்கலமாய் கொடுத்தவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
“சில விஷயங்களை நான் உனக்கு தெளிவுப்படுத்தணும்” என்றான்.
என்னவென்பது போல்...
அத்தியாயம் – 32
இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை தோட்டத்தை விட்டு வெளியில் வந்திருந்தனர். பத்தடி தூரம் நடந்திருப்பர் அருகில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
வீரா மெதுவாய் திரும்பி பார்க்க அதிலிருந்து பாரியும் முல்லையும் இறங்கினர்.
செவ்வந்தி அவர்களை கண்டதும் முகத்தை திருப்பிக்கொள்ள வீரா தான் அவர்களை வரவேற்கும் விதமாய் தலையசைத்தான்.
“என்னாச்சு அண்ணா நடந்து போறீங்க!!...
அத்தியாயம் – 31
வீரா கிளம்பிச் சென்ற பின்னே ஒருவாறு சுயவுணர்விற்கு வந்த அய்யாத்துரை மெதுவாய் நடந்து அவர் அறைக்கு வந்து சேர்ந்திருந்தார்.
அங்கு சூசையும் இன்னும் ஒருவரும் அவருடன் இருந்தனர். அய்யாத்துரை தெளிவில்லாமல் நடந்து வருவதை கண்டுவிட்டிருந்தனர்.
மற்றவர்களுக்கு எப்படியோ சூசைக்கு அய்யாத்துரை பற்றி அரசல்புரசலாய் தெரியும். அவர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி தான் இருப்பார்...
அத்தியாயம் – 11
“இவ்வளவு நேரமா நீங்க வர்றதுக்கு” என்று கும்பலாய் சேர்ந்து அனைவரும் கேட்டு அவர்களே சிரித்துக்கொண்டனர் தங்களுக்குள் ஏதோ பேசி.
செவ்வந்திக்கு சற்றே எரிச்சலாக வந்தது. ‘என்ன நினைத்து சிரித்திருப்பர்’ என்று உணர முடிந்தது அவளால். வீரா ஏதோ சொல்லி அவர்களை சமாளிப்பது புரிந்தது.
அங்கிருந்தவர்கள் அனைவருமே செவ்வந்தியைவிட வயது கூடியவர்களாகவே இருந்தனர். அவளுக்கு தான்...
அத்தியாயம் – 1
அந்தி வானம் சூரியனின் கிரணங்களால் சிவந்து தன் வெட்க ஆடை போர்த்துக் கொண்டிருந்தது.
லேசாய் வீசிய தென்றல் காற்றில் தோட்டத்தில் இருந்து மல்லியும் ஜாதியும் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.
“அம்மா பூ பறிச்சு கட்டி வைச்சுட்டேன். மணி ஆறாக போகுதும்மா நாம கிளம்ப வேணாமா” என்று வந்து நின்றாள் அந்த வீட்டின் இளவரசி...
அத்தியாயம் – 17
சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.
செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன என்ற பாவத்தில் அன்று இருந்தவளுக்கு இன்று அவன் கிளம்பிச் செல்வது பெரும் சுமையொன்று மனதிற்குள் கூடியதாய் இருந்தது.
இப்போதே செல்ல வேண்டுமா!!...
அத்தியாயம் – 29
“ஹேய் என்ன சர்ப்ரைஸ்?? நீ இங்க எப்படி வந்தே??” என்று இயல்பாய் கேட்டான் வீரா.
அவள் முகமே சொன்னது ஏதோ பெரிதாய் கேட்க போகிறாள் என்று, தன்னையும் இலகுவாக்கி அவளையும் இலகுவாக்கவே (?) அப்படி கேட்டு வைத்தான்.
அவன் கேள்விக்கு அவள் முறைத்த முறைப்பில் இருந்த அனல் அத்தோட்டத்தில் உள்ள பூக்களை எல்லாம் கருக்கச்...
அத்தியாயம் – 33
காலையில் வீரா அவர்கள் அறையில் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான். செவ்வந்தி உள்ளே வந்தவள் அவனை அவசரமாய் எழுப்ப அவனோ அவள் கைப்பிடித்திழுத்து தன் மேல் சாய்ந்திருந்தான்.
கட்டிலில் இசகுபிசகாய் விழுந்தவளின் அருகில் படுத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவளை பேசவிடாமல் தன் வேலையை தொடங்கியிருந்தான்.
பேச வந்த அவள் அதரங்களை மூடியவன் சில...
அத்தியாயம் – 18
ஆயிற்று இன்றோடு ஐந்து நாட்கள் ஓடிவிட்டது செவ்வந்தி தாமரையிடம் பேசி.
அன்று தாமரை சிதறவிட்ட வார்த்தைகளின் வலி இன்னமும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாய் தானிருந்தது.
அன்றைய நாள் மீண்டும் நினைவிற்கு வந்து போனது. தாமரை பேசியதும் பதிலுக்கு தான் பேசியதும் நினைவிற்கு வந்தது.
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்று தாமரை சொல்லவும்...
அத்தியாயம் – 25
மனைவியின் கைப்பிடித்து அவன் நெஞ்சை நீவிக்கொண்டிருந்தான் இன்னமும்.
“கையை விடுங்க” என்றாள் செவ்வந்தி.
“மருந்து போடுங்க” என்றான் அழிசாட்டியமாய்.
“என்ன வம்பு பண்ணுறதுக்கு தான் இங்க வந்தீங்களா??” என்ற அவளின் பேச்சு அவனை உசுப்பிவிட்டது.
அப்போது தான் அவன் வந்த வேலை நினைவிற்கு வர தலையை சிலுப்பி நிகழ்வுக்கு வந்தான்.
“நான் எதுக்குங்க டாக்டர் உங்ககிட்ட வம்பு பண்ணப்...
அத்தியாயம் – 8
வீட்டிற்கு வந்த செவ்வந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா இரவு வரும் எப்போதடா அவனிடம் பேசுவோம் என்றிருந்தது.
அவளின் பரபரப்பு பார்ப்பவருக்கு ஆசையாய் கணவனிடம் பேச காத்திருப்பவள் போன்றே தோன்றும். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
இரவு மூவருமாக உணவு உண்டு முடிக்கவும் சக்திவேல் அவர் எண்ணில் இருந்து மகனுக்கு...
அத்தியாயம் – 10
“மதினி... மதினி...” என்ற தாமரையின் குரல் வெளியில் கேட்க வீரா எழுந்து வந்து கதவை திறந்தான்.
“என்ன தாமரை??” என்றான் வெளியில் நின்றவளை பார்த்து.
“மதினி...” என்று அவள் இழுக்க “பாத்ரூம்ல இருக்கா??” என்றான்.
“சாரி அண்ணா... அத்தை அப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கலை. மதினி வருத்தப்பட்டிருப்பாங்க சாரி அண்ணா...” என்றவளை புரியாமல் பார்த்தான் அவன்.
“என்ன...
அத்தியாயம் – 12
அவள் தோழி மயிலிடம் பேசி வைக்கவும் அவளுடன் பயிலும் கிரேசி போன் செய்தாள் அவளுக்கு. “ஹேய் எப்படிடி இருக்க புதுப்பொண்ணு!!” என்று கிண்டல் செய்தாள் அவள்.
“என்னடி கொழுப்பா உனக்கு!!”
“யாருக்கு கொழுப்பு எங்களுக்கா!!”
“ஆமா உனக்கு தான் வேற யாருக்கு!!”
“ஏன்டி சொல்ல மாட்டே!! நானா கல்யாணம் ஆனதை மறைச்சேன்” என்றாள் அவள்.
“கிரேஸ் உண்மையை சொல்லு...
அத்தியாயம் – 21
“உள்ள வாப்பா??” என்றவருக்கு மகன் வந்துவிட்டான் என்று ஒரு புறம் சந்தோசம் இருந்தாலும் அவன் வேலையை விட்டு வந்துவிட்டானே என்று ஓரமாய் ஒரு வருத்தம் இருந்தது.
வந்ததும் கேட்க வேண்டாம் என்று அமைதியானார் அவர். வீராவும் எதுவும் சொல்லவில்லை, அவன் அறைக்கு சென்று குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவன் கட்டிலில் வந்து...
அத்தியாயம் – 26
“அக்கா... அக்கா... அக்கா...” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தாள் முல்லை.
“வாடி வரும் போதே எதுக்கு குரல் கொடுத்திக்கிட்டே வர்றே” என்று தங்கையை முறைத்தாள் செவ்வந்தி.
“ஹ்ம்ம் ஒரு வேளை நீயும் மாமாவும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும் போது நான் கரடி மாதிரி உள்ளே நுழைஞ்சிட்டேன்னா!! அதுக்கு தான் ஒரு சவுண்டு...
அத்தியாயம் – 23
சக்திவேல் மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவள் தன் வீட்டுக்கு வாராமல் போன அண்ணனை நேரில் பார்த்து கேட்டுவிடுவதென தந்தையுடன் கிளம்பி வந்திருந்தாள் அவள்.
அவளிடம் பேச்சு கொடுக்கக் கூடாதென முடிவு செய்திருந்த அவளின் மாமியார் கூட வாயை திறந்து சொல்லிவிட்டார் போகாதே என்று ஆனால் அவளுக்கு தான் ஏதோ பிடித்து ஆட்டுக்கிறதே...
அத்தியாயம் – 30
படியேறி வந்திருந்தவள் அந்த அறைக்கதவில் சாய்ந்து நின்றவாறே மதுராம்பாளை பார்த்தாள். அவள் வந்து நின்றது கூட தெரியாமல் அவர் சிந்தனை முழுதும் எங்கோ இருந்தது.
இதுநாள் வரை அவரிடம் எப்போதும் குடிக்கொண்டிருக்கும் அந்த கம்பீரம் தொலைந்திருந்தது அவரிடத்தில்.
அவருக்கு வயது ஏறிக் கொண்டிருக்கிறது என்பதை இதுநாள் வரை உணர்ந்ததேயில்லை அவள். தேனீ போன்ற சுறுசுறுப்பு...
அத்தியாயம் – 28
பத்து நாட்களாய் இருந்த அலைச்சல் எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போனதாக உணர்ந்தான் வீரா.
மனைவியின் ஒற்றைச்சொல் செய்த மாயம் அவன் களைப்பை விரட்டி சுறுசுறுப்பாக்கி இருந்தது. அவன் பார்வை முழுதும் மனைவியையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது.
அது தெரிந்தும் தெரியாதது போல அவளும் சுற்றிக்கொண்டிருந்தாள். அன்று எல்லாம் முடிந்து அவர்கள் வீடு...
அத்தியாயம் – 15
செவ்வந்தியிடம் பேசியதில் மனம் சற்று ஆசுவாசப்பட்டிருந்தது வீராவுக்கு. மெதுவாய் கீழிறங்கி சென்றிருந்தவன் மனோரஞ்சித செடியருகே சென்று நின்றுக்கொண்டான்.
அவன் கீழே வரவும் செவ்வந்தி உள்ளே சென்றிருக்கவும் சரியாக இருந்தது அவனும் கவனிக்கவில்லை அவளும் உள்ளே சென்றிருந்தாள்.
அந்த செடியை மெதுவாய் வருடிக் கொண்டிருந்தவனுக்கு இதே இடத்தில் நின்று அவன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவிற்கு...
அத்தியாயம் – 27
செவ்வந்திக்கு இன்னமும் நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. முல்லையின் கழுத்தில் தாலி ஏறியதை கண்ணிமைக்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
எதற்கு இந்த அவசரம்?? ஏனிந்த பரபரப்பு?? என்று அவளுக்கு சுத்தமாய் விளங்கவேயில்லை.
பெண் பார்க்க வந்த நடந்த நிகழ்வுகள் அவள் கண்முன் வந்து போனது.
முல்லையை பெண் பார்க்க வந்தது வேறு யாருமல்ல சிவகாமியின்...