Tamil Novels
NVNN-8
அத்தியாயம் 8
ஆதி தன்னுடைய நண்பன் முரளியிடம் நங்கையின் வேலை சம்பந்தமாக பேச, நங்கை ஏற்கனவே ஆசிரியர் வேலை பார்த்திருந்ததால், தன் தந்தையிடம் சிபாரிசு பெற்று, அருகிலுள்ள பள்ளி ஒன்றிலேயே வேலை பெற்று விடலாம் என்று நம்பிக்கை அளித்தான்.
மதியத்திற்கு தக்காளி சாதம் உருளைக்கிழங்கு வறுவல் என்று எளிமையாக நங்கை சமைக்க, ஆதிக்கு என்னவோ தேவாமிர்தமாகத்தான் இருந்தது.
முரளியின்...
NVNN-7
அத்தியாயம் 7
தமிழ்நங்கையின் அன்னை பிரேமா கைப்பேசியில் அழைக்க, யோசனையோடு தன் கைபேசியை பார்த்தாள் நங்கை.
“எடுத்துப் பேசுங்க” என்றான் ஆதி.
நங்கையும் அழைப்பை ஏற்க, “எத்தனை தடவை போன் பண்றது? ஏம்மா எடுக்கலை?” என்று சற்று பதட்டத்துடனே கேட்டார் பிரேமா.
தன் அன்னையிடம் பழனிவேல் பேசியதையும், தாங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்ததையும், இப்போது ஆதியின் நண்பன்...
அத்தியாயம் 9
கௌஷி தனது ஸ்கூட்டியில் முன் நின்று முழித்துக் கொண்டிருந்தாள்.
ஸ்கூட்டியில் முன் டயர் பஞ்சராகி இருக்க, வண்டியை எப்படி எடுப்பது? என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை.
"காலையில் வந்து நிறுத்தும் பொழுது கூட நன்றாகத்தானே இருந்தது. அட தினமும் நிறுத்தும் இடம் தானே. இன்னைக்கி மட்டும் எப்படி இப்படி...
பெண் என்பவள் பூவைப்போல.. பெண் என்பவள் அக்னி சிறகு.. பெண்கள் நாட்டின் கண்கள்.. என்று இஷ்டத்துக்கு தூய தமிழில் பெண்களைப் பற்றி எழுதினாலும் அங்காங்கே பெண்கள் வதைக்கப்படுகிறார்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் ஏன் ஒரு பெண்ணே ஒரு பெண்ணுக்கு செய்யக்கூடாத செயல்களை செய்து கொண்டிருக்கிறாள்.. என்னுடைய கதை நவீன காலத்திற்கு ஏற்ப ஒரு பெண் அவள்...
NVNN-6
அத்தியாயம் 6
செல்வி தமிழ்நங்கை திருமதி ஆதித்தியவேந்தனாக சற்று நேரத்திற்கு முன்னர்தான் மாறிப்போயிருந்தாள். மாப்பிள்ளை மாறிப் போனதால் ஆளுக்கொன்று பேசினாலும், திருமணம் நிற்காமல் நடக்கிறது என்று சிலர் மகிழ்ச்சி அடையவும் செய்தனர்.
திருமண மண்டபத்தில் இருந்து பெண் வீட்டிற்கு சென்றனர். நங்கையின் வீட்டில் அனைவரும் நங்கையின் திருமணம் நிற்காமல் நடந்ததில் மகிழ்ந்தாலும், பிரேமாவுக்கும் அசோக்கிற்கும் ஆதியை பிடிக்காததால்...
NVNN-5
அத்தியாயம் 5
தமிழ் தங்கையை அழைத்துக்கொண்டு அனைவரும் மண்டபத்திற்குள் சென்றனர். ஆதி மட்டும் வெளியிலேயே நின்று கொண்டான்.
ஆதிக்கு டாலியின் நினைவு வர, தன் அன்னைக்கு கைப்பேசியில் அழைத்தான். சந்திரா நங்கையை பார்க்கவென்று அவளது அறைக்குதான் சென்றிருந்தார்.
“அம்மா டாலி எங்கே?”
“உன் டாலிய மண்டபத்துக்கும் கூட்டிட்டு வரணுமாடா? வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன்” என்றார் சந்திரா.
“சாப்பாடு கொடுத்தியா?”
“டேய் ரொம்ப பண்ணாத,...
NVNN-4
அத்தியாயம் 4
கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற அந்த கலைக்கல்லூரியில், கலை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் அந்த கலை விழாவிற்காக தமிழகத்தின் பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர்.
இளநிலை கணிதம் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆதித்யவேந்தனுக்கு நண்பர்களுடன் வந்து உற்சாகமாக பொழுதை கழிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் எதிலாவது பெயர் கொடுக்க...
NVNN-3
அத்தியாயம் 3
“அக்கா இப்படி வெயிலில் நின்னீனா கறுத்து போயிடுவ. கல்யாணத்தன்னைக்கு பிரைட்டா இருக்க வேண்டாமா?” என்று மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த தமிழ்நங்கையிடம் கேட்டாள் அவளது தங்கை தமிழ்வெண்பா.
“ரெண்டு நிமிஷம் இப்படி நின்னு துணியை எடுத்தா நான் ஒன்னும் கறுத்திட மாட்டேன். வெயில்ல துணி கிடந்தா, துணிதான் வெளுத்துப் போகும்” என...
NVNN-2
அத்தியாயம்-2
பழனிவேல் காலை உணவு அருந்தி கொண்டிருக்க, விஜய்யும் சாப்பிட அமர்ந்தான்.
“ ஏண்டா விஜய் அந்த தறுதலைய இந்த வருஷமாவது அரியர்ஸ எழுதி பாஸ் பண்ண சொல்லேண்டா. அவன் என்னதான் மனசுல நினைச்சுகிட்டு இருக்கான்? இப்படியே ஊர் சுத்திக்கிட்டு இருக்கலாம்னா?” என்றார் பழனிவேல்.
“சொல்றேன் பா” என்றான் விஜய்.
“உன்னை வளர்த்த மாதிரிதானடா அவனையும் வளர்த்தேன். நீ எப்படி...
NVNN-1
அத்தியாயம் 1
திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பழனிவேல் பாத்திரக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கல்லாப் பெட்டியில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார் அந்தக் கடையின் முதலாளி பழனிவேல். பெரிய மீசையுடனும், கண்டிப்பான முகத்துடனும் இருந்தார்.
சிறிய கடையாக இருந்தாலும் தரமான பாத்திரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு பெயர் பெற்றது பழனிவேல் பாத்திரக்கடை. நான்கு பேர் வேலைக்கு இருந்தனர்....
நிழல் 12
அவள் வீட்டிலிருந்து கிளம்பும் வரை இருந்த உற்சாகம் பரவசம் எல்லாமே காற்றில் கரைந்துவிட்ட பனியைப் போல் காணாமல் போயிருந்தது கௌதமிற்கு.
காரைக் கிளப்பியது முதல் இந்த ஒருமணிநேரமும் மாயா திரும்பத் திரும்ப அதே கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.
எத்தணை முறை பதில் சொன்னாலும் அதனை அவள் ஏற்பதாக இல்லை.
“யாரக்கேட்டு என்னைக் கல்யாணம் பண்ணீங்க…? நான் சொன்னேனா...
ஷான் வீட்டிற்கு வரவும்,யோகா இரயில் ஏறவும் சரியாக இருந்தது,ஷான் வீட்டிற்கு வந்து விழிஷா ....விழிஷா....என்று தேடினான்,அவள் கிடைக்காததால்...அம்மா....அம்மா....என்று சத்தமாக அழைத்தான்.
என்ன ஷான் இப்படி கத்துகிறாய்,"அவள் வீட்டைவிட்டு வெளியை சென்றாள் ,"என்றாா்.
அப்படி செல்ல மாட்டாளே,என்ன நடந்தது என்று இப்போது சொல்லூவிற்களா... இல்லை நானே கண்டு பிடிக்கவா.... "என்று கேட்டான்.
இதை கேட்டதும்,அவன் அம்மாவிற்கு பயம் தொற்றி கொண்டது,எங்கே...
மயிலிறகு பெட்டகம் 19
வந்தவன் அவளருகே ஊஞ்சலில் அமர்ந்து அவளையே பார்ப்பது புரிந்தும் அவளால் கண்களை திறக்க முடியவில்லை. அழுகை வரும் போல் இருந்தது. வேகமான மூச்சிழுத்து கண்ணீரையும் உள்ளே இழுத்தவள் கண்ணை திறவாமலேயே, “எப்படித் தெரியும்....” என்றாள் கரகரத்த குரலில்,
ஓரிரு மணித்துளிகள் கரைந்த பின்னும் பதில் வராததால் கேள்வியுடன் மெல்ல விழி...
நிழல் 11
”என்ன மாயா பயம் போயிடுச்சா, உன்னால தான் என் வாழ்க்கை போச்சு, இப்படி ஆவியா அலையுறேன் அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாம, என் முன்னாடியே தைரியமா வந்து நிக்கிற…” என்ற நேகாவின் குரூர குரல் மாயாவை சற்றும் அச்சுறுத்தவில்லை என்பதே நேகாவின் மிகப்பெரிய ஏமாற்றமாய் இருந்தது.
சிலரின் பலம் என்பது எதிரில் இருப்பவரின்...
அத்தியாயம் 8
விடிய விடிய தூக்கத்தை தொலைத்து நன்கு யோசித்த கௌஷி இறுதியில் எடுத்த முடிவு சக்தியை எந்த கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்வது என்றுதான்.
சக்தியிடம் கேட்க ஏராளம் கேள்விகள் மனதில் முட்டி மோதினாலும் கண்டிப்பாக அவற்றுக்கு அவன் பதில் சொல்லப்போவதில்லை என்ற எண்ணம் கௌஷியின் மனதில் உதிக்க, "கேட்டு பிரயோஜனம் இல்லை. அப்படியே கேட்டாலும் எல்லா கேள்விக்கும்...
நிழல் 10
குளிருக்கு இதமாக கம்பளியை தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு அருகே இருந்து நாய்குட்டி பொம்மையைக் கட்டியபடி வாகாய் படுத்திருந்த மாயாவின் கால்களை யாரோ சுரண்டுவது போல் இருந்தது.
காலை உதறியவள் மீண்டும் உள்ளிழுத்துக் கொண்டு தூங்கத் துவங்கியிருந்தாள் இம்முறை பலமாக கால்கள் எதைக் கொண்டோ கீறப்பட்டது. சட்டென போர்வையோடு எழுந்தமர்ந்தவளின் கன்னத்தில்...
நிலா – 12
சென்னை மத்திய புழல் சிறைச்சாலை.
இரவு நேரம். சுவரில் ஒட்டிக் கொண்டிருந்த பழைய கடிகாரத்தில் சிறிய முள் பெரிய முள்ளை ஒன்பதில் எட்டிப் பிடித்திருக்க, அதன் பெண்டுலம் ஒன்பது முறை இசைத்து ஓய்ந்தது. அது, நான் யாருக்கும் அடிபணியாமல் ஓடிக் கொண்டே இருப்பேன் எனக் காலம் கர்வத்துடன் கூறுவது போலத் தோன்றியது.
எங்கேயோ விடாமல்...
அத்தியாயம் - 54
வன்னி அவளை அறிமுகம் செய்துக் கொள்ளும் முன்னே பேரரசர் பேச ஆரம்பித்தார். “பரி அரசின் இராஜகுரு சந்திரர் ஏன் வரவில்லை? ” என்று முகவாயில் கையை வைத்து கேட்டார்.
கௌரி சந்திரரை பற்றி கேட்டதும், “பேரரசே! பரி அரசின் இராஜகுரு சந்திரர் பேரரசருக்கென்று பரிசளிக்க ஒரு விஷேஷமான மூலிகையை தயாரித்துக் கொண்டிருந்தார்....
அத்தியாயம் 8
அலைபேசியில் சூர்யாவின் குரலைக் கேட்டதும் ஷானுவிற்கு என்ன விஷயம் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் மேலோங்கியது. கூடவே இப்போது அவளோடு அதைப்பற்றி விளக்கமாக பேச ஆரம்பித்தால், நிறுத்த முடியாது நீளும். ஆனால் ஷானுவிற்கோ பேசமுடியாதபடி சூழ்நிலை.
காரணம் அப்போதுதான் பரத் தூக்கம் விழித்து எழுந்து இருந்தான். நேற்றைய இரவும் மகனோடு இல்லாமல் நண்பர்கள் கெட்-டு-கெதர் என்று...
அத்தியாயம் 7
ஷக்தி பிறந்ததிலிருந்தே பிடிவாதக் குணமுடியவன். தான் நினைத்தத்தை எவ்வழியிலும் நிறைவேற்றிக்கொள்ளும் சாமர்த்திய சாலியும் கூட.
சாம்பாவியும் அப்படித்தான் பலவருடங்கள் கடந்து பிறந்ததினால் மகாதேவன் ரொம்ப செல்லம் கொடுத்ததினாலும் அழுதே சாதிப்பாள்.
அன்னையின் மொத்த குணத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு பிறந்தவன்தான் ஷக்தி.
சின்ன வயதில் அழுது சாதிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் ஷக்தி வித்தியாசமாக இருந்தான். அவன் கேட்பது கிடைக்கவில்லையாயின்...