Sevvanthi Pooveduthaen
அத்தியாயம் – 18
ஆயிற்று இன்றோடு ஐந்து நாட்கள் ஓடிவிட்டது செவ்வந்தி தாமரையிடம் பேசி.
அன்று தாமரை சிதறவிட்ட வார்த்தைகளின் வலி இன்னமும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாய் தானிருந்தது.
அன்றைய நாள் மீண்டும் நினைவிற்கு வந்து போனது. தாமரை பேசியதும் பதிலுக்கு தான் பேசியதும் நினைவிற்கு வந்தது.
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்று தாமரை சொல்லவும்...
அத்தியாயம் – 28
பத்து நாட்களாய் இருந்த அலைச்சல் எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போனதாக உணர்ந்தான் வீரா.
மனைவியின் ஒற்றைச்சொல் செய்த மாயம் அவன் களைப்பை விரட்டி சுறுசுறுப்பாக்கி இருந்தது. அவன் பார்வை முழுதும் மனைவியையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது.
அது தெரிந்தும் தெரியாதது போல அவளும் சுற்றிக்கொண்டிருந்தாள். அன்று எல்லாம் முடிந்து அவர்கள் வீடு...
அத்தியாயம் – 7
“சொல்லுங்கத்தை” என்றாவாறே மனோரஞ்சிதத்தின் முன்னே நின்றிருந்தாள் செவ்வந்தி.
“கோவிலுக்கு கிளம்பச் சொன்னேனேம்மா, அவன்கிட்ட சொல்லிட்டியா கிளம்பி போய்ட்டு வந்திடுங்க” என்றார் அவர்.
“அவர்கிட்ட இப்போ தான் இறங்கி வரும் போது சொல்லிட்டு வந்தேன் அத்தை. நான் ரெடியா தான் இருக்கேன், அவர் வந்ததும் கிளம்பிடுறோம்” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தார் அவர்.
“என்ன அத்தை??” என்றாள்...
அத்தியாயம் – 32
இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை தோட்டத்தை விட்டு வெளியில் வந்திருந்தனர். பத்தடி தூரம் நடந்திருப்பர் அருகில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
வீரா மெதுவாய் திரும்பி பார்க்க அதிலிருந்து பாரியும் முல்லையும் இறங்கினர்.
செவ்வந்தி அவர்களை கண்டதும் முகத்தை திருப்பிக்கொள்ள வீரா தான் அவர்களை வரவேற்கும் விதமாய் தலையசைத்தான்.
“என்னாச்சு அண்ணா நடந்து போறீங்க!!...
அத்தியாயம் – 9
“எதுக்கும்மா அழற??” என்ற ரஞ்சிதத்தின் குரலில் அவளுக்கு இன்னும் அழுகை கூடியது.
“எதுக்குலே அழுதுக்கிட்டு விடும்மா...” என்றார் அவள் கையை பிடித்தவாறே.
“ஏம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா” என்ற சக்திவேலை அழுகையினூடே நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன பேசப் போறீங்க, அவளே அழுதுகிட்டு கிடக்கா, அவ அப்பா பேச்சை ஆரம்பிச்சு அழ வைச்சுட்டீங்க இன்னும் என்ன”...
அத்தியாயம் – 26
“அக்கா... அக்கா... அக்கா...” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தாள் முல்லை.
“வாடி வரும் போதே எதுக்கு குரல் கொடுத்திக்கிட்டே வர்றே” என்று தங்கையை முறைத்தாள் செவ்வந்தி.
“ஹ்ம்ம் ஒரு வேளை நீயும் மாமாவும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும் போது நான் கரடி மாதிரி உள்ளே நுழைஞ்சிட்டேன்னா!! அதுக்கு தான் ஒரு சவுண்டு...
அத்தியாயம் – 24
வீரா குலையன்கரிசலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடிவிட்டது. மதுரைக்கு சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவன் மீண்டும் ஒரு இறுக்கத்துடனே சுற்றி வந்தான்.
தகப்பனுக்கு மனைவியின் இழப்பை விட மக்களின் கவலையே பெரிதாகிப் போனது. ஒரு புறம் தாமரை மறுபுறம் மகன் என்று இருவருக்கும் இடையில் சிக்கி அவருக்கு மூச்சு முட்டியது...
அத்தியாயம் – 11
“இவ்வளவு நேரமா நீங்க வர்றதுக்கு” என்று கும்பலாய் சேர்ந்து அனைவரும் கேட்டு அவர்களே சிரித்துக்கொண்டனர் தங்களுக்குள் ஏதோ பேசி.
செவ்வந்திக்கு சற்றே எரிச்சலாக வந்தது. ‘என்ன நினைத்து சிரித்திருப்பர்’ என்று உணர முடிந்தது அவளால். வீரா ஏதோ சொல்லி அவர்களை சமாளிப்பது புரிந்தது.
அங்கிருந்தவர்கள் அனைவருமே செவ்வந்தியைவிட வயது கூடியவர்களாகவே இருந்தனர். அவளுக்கு தான்...
அத்தியாயம் – 5
கழுத்தில் விழுந்திருந்த தாலியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.
ஒரே நாளில் எல்லாமே தலைகீழ் என்ற நிலை தான் இப்போது என்று எண்ணிக்கொண்டாள்.
இருவருமாக சேர்ந்து மணவறை சுற்றி வந்ததோ அவன் அவள் கைப்பிடித்ததோ எதுவும் அவள் நினைவில் இல்லை. பார்வை முழுதும் கழுத்தில் புதிதாய் விழுந்ததிலேயே இருந்தது.
ஏதோவொரு கனம் கூடியது போல் ஒரு...