Nishaptha Paashaigal
“ஓ... ரியல்லி... கேள்க்கவே ரெம்ப சந்தோஷமாயிட்டுண்டு ஆன்ட்டி... நானும் சீக்கிரம் தமிழ் கத்த போறேன்...” அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவர், “கத்தறது இல்ல, கத்துக்கப் போறேன்னு சொல்லு...” என்று திருத்தினார்.
“ஹாஹா... ம்ம்... கத்துக்க போறேன்...” என்றாள் நிதானமாக.
“உங்களுக்கு தமிழ் ரொம்ப இஷ்டமா ஆன்ட்டி...”
“பின்னே... நான் தமிழ்ல எம்ஏ ஆக்கும்... அவ்ளோ விருப்பமா தமிழைப் படிப்பேன்......
அத்தியாயம் – 18
“அண்ணா, இன்னைக்கு நீங்க என்னை ஸ்கூல்ல விடறீங்களா...” குந்தவை ஆவலுடன் ஆதித்யனிடம் கேட்க லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.
இரட்டைப் பின்னலுடன் யூனிபார்மில் குழந்தை முகம் மாறாமல் நின்ற தங்கையைக் கண்டவன், “ஓகே...” என்று லாப்டாப்பை மூடி வைக்க சகுந்தலா மகளிடம் கேட்டார்.
“அவனை எதுக்குடி டிஸ்டர்ப் பண்ணற... பாவம் என் புள்ள......
குனிந்தபடி தட்டில் பரிமாறியவளின் சோர்ந்த முகத்தைக் கண்ட அருள், “என்ன வானதி... உடம்புக்கு எதுவும் சரியில்லையா... சோர்வா இருக்க...” கேட்டபடி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க பதறியவள் சட்டென்று கையைத் தட்டி விட அவன் அதிர்ந்து போனான்.
“உனக்கு என்னாச்சு வானதி... பீவர் இருக்கான்னு தானே பார்த்தேன்... எதுக்கு இவ்ளோ கோபம்...” அவன் கேட்க...
“நான் இங்கே வந்த காரணம் என்ன... இப்ப சந்தோஷப்படற விஷயம் என்ன... இந்த சில நாள்ல எதுவும் மாறலியே... என் குடும்ப கஷ்டம் எல்லாம் அப்படியே தானே இருக்கு... ஆனா என் மனசுல எப்படி இந்த மாற்றம் வந்துச்சு... வேலைக்கு வந்த இடத்துல காதலைப் பத்தி யோசிக்க எனக்கு எப்படி தைரியம் வந்துச்சு... அதுவும்...
வாசலிலேயே பரிதவிப்புடன் காத்திருந்த சகுந்தலா, அவளைக் கண்டதும், “அம்மாடி, வந்துட்டியா... எத்தனை தடவ உன் மொபைலுக்கு கூப்பிட்டேன்... சுவிட்ச் ஆப் னு வந்துச்சு... மழைல எப்படிமா வந்த... முதல்ல தலையைத் துவட்டு...” என்று டவலை நீட்டினார்.
அந்த அன்னையின் உண்மையான நேசத்தில் மனம் கலங்கியது அவளுக்கு. “மொபைல் சார்ஜ் இல்லாதே ஆப் ஆகி ஆன்ட்டி... ஆட்டோவில்...
அத்தியாயம் – 28
நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்க ஜெயந்தியின் கிளினிக்கிற்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் வானதி. அதபால் அருள், வானதியின் சந்திப்பு அவ்வப்போது வெளியே தொடர்ந்து கொண்டிருந்தது.
குந்தவை கல்லூரிப் பாடத்தோடு, தேவ் அவ்வப்போது அவளை சந்திக்கையில் சொல்லிக் கொடுக்கும் காதல் பாடங்களையும் கற்றுத் தேர்ந்து கொண்டிருந்தாள்.
மகளின் கல்யாணத்தோடு, மூத்த மகன் வரப் போகும்...
“இல்லண்ணே... யாரையோ பார்க்கணும்னு வெளிய போயிருக்கான்... ஜூஸ் கொண்டு வரட்டுமா...” எனக் கேட்க, “இல்லம்மா, இப்பதானே சாப்பிட்டு வந்தேன்... கொஞ்சம் கழிச்சு தண்ணி மட்டும் போதும்...” என்றார்.
“ம்ம்... பிள்ளைகளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிருச்சு... சகுந்தலாவைக் கூட ஒரு கல்யாண பங்க்ஷன்ல பார்த்தது... அவங்களையும் அப்பப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்ல...” என்ற தேவிகாவிடம், “எங்கேம்மா...
அத்தியாயம் – 33
“உறவுகளை மன்னிக்கறது, விட்டுக் குடுக்கறதுல இத்தனை சந்தோசம் இருக்கும்னு எனக்கு இவ்ளோ நாளா தெரியலை சகு... மனசுக்கு ரொம்ப நிம்மதியாருக்கு...” அறையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த சகு, கணவனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளில் மிகவும் சந்தோஷப்பட்டார்.
“ஆமாங்க, விட்டுக் குடுக்கறவங்க எப்பவும் தாழ்ந்தவங்க இல்லை... மனசால உயர்ந்தவங்க... உங்களை நினைச்சு எனக்கும் சந்தோஷமா இருக்குங்க...”
“ம்ம்......
அத்தியாயம் – 19
“அம்மா, அண்ணா ஊருக்கு கிளம்பிட்டு இருக்கு...” குந்தவை அன்னையிடம் சொல்லிக் கொண்டே அருகில் அமர்ந்தாள்.
“ம்ம்... இங்க ஒரு பூகம்பத்தையே கிளப்பி விட்டுட்டு அவன் பாட்டுக்குக் கிளம்பறான்... உன் அப்பாவை நான் எப்படி சமாளிக்கப் போறேன் தெரியலை... இவங்க ரெண்டு பேர் பிடிவாதத்துக்கும் நடுவுல மாட்டிட்டு எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போலருக்கு...” புலம்பிக்...
“இல்லமா, எனக்கு அதுல விருப்பமில்ல... MBA முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பெனில பெரிய போஸ்ட்ல வேலைக்கு சேரணும்னு தான் என்னோட லட்சியமே... தயவுசெய்து என்னை என் வழில போக விடுங்க...” பிடிவாதமாய் சொன்ன மகனை என்ன சொல்லி மாற்றுவது என்று அவருக்குப் புரியவில்லை.
ஆதித்யா எப்போதும் அப்படித்தான்... அவனது விருப்பங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத சுபாவம்......
அத்தியாயம் – 22
ஆதி சொன்னதைக் கேட்டதும் சகுந்தலா, “ஐயோ, என்னடா சொல்லற...” என்று அலற சுந்தரம் அதிர்ச்சியும் கோபமுமாய் மகனைப் பார்த்து நின்றார்.
“ஆமாம் மா, நந்தினிக்கு போன் பண்ணி மிரட்டி இருக்காரு... அவரை மீறி நாங்க கல்யாணம் பண்ணிகிட்டா இந்த குடும்பத்தை விட்டே என்னை விலக்கி வச்சிருவேன்னு சொல்லி இருக்காரு... அவளும் உங்க குடும்பம்...
“நம்மளை நம்பி அல்லே ஆன்ட்டி தனியே விட்டு போயது... இங்கனே ஒக்கே செய்யான் பாடில்லா...”
“ஏன் என்ன தப்பு... முதல்ல கூட நம்ம காதல் என்னாகுமோன்னு பயம் இருந்துச்சு... இப்பதான் அப்பாவே அண்ணன் காதலை ஏத்துகிட்டாரே... அப்ப நம்ம காதலுக்கும் பச்சைக் கொடிதான்...” என்றான் சந்தோஷத்துடன்.
“ம்ம்... அதினு... இப்ப எந்து வேணம்...” கண்களில் ஆயிரம் அபிநயத்துடன்...
அத்தியாயம் – 31
ஒரு வாரம் கழிந்திருந்தது. சகுந்தலா தேறியிருந்தார்.
தந்தை இல்லாத நேரத்தில் குந்தவை அன்னையிடம், வானதி, நந்தினியின் தங்கை என்பதைக் கூற, “எனக்குத் தான் தெரியுமே...” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும் இளையவர் மூவரும் திகைத்துப் போயினர்.
“எங்களுக்கே கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்... உங்களுக்கு எப்படிமா தெரியும்...” என்று அவரைத் துளைக்க,...
அத்தியாயம் – 14
கிளினிக் முன்னில் இருந்த டீக்கடையில் பைக்கை நிறுத்திய அருள் மொபைலை நோண்டியபடி வானதி வருகிறாளா எனப் பார்த்துக் கொண்டிருக்க முழுதாய் பத்து நிமிடம் கரைந்தபின் அவளது உருவம் பிரசன்னமானது.
கைகடிகாரத்தைப் பார்த்தவள் பரபரப்புடன் தோளில் மாட்டிய பாகுடன் வேகமாய் சாலைக்கு வந்தாள். பருவநிலை மாற்றத்தால் மழையும், காற்றும் வெப்பநிலையை குளிர்மையாய் வைத்திருக்க நிலாவைத்...
அத்தியாயம் – 21
நாட்கள் நகர்ந்திருக்க அன்று வெள்ளிக் கிழமை.
தினமும் ஆதித்யன் நந்தினியை அலுவலகத்தில் கண்டாலும், இரண்டு நாளாய் அவளிடம் ஒரு விலகல் தெரிந்தது. அதை கவனித்த ஆதி மாலையில் அவளுடன் பேசுவதற்காய் அலுவலகம் முடிந்து காத்திருந்தான். HR டிபார்ட்மென்டில் பணிபுரியும் பாஸ்கர் இவனைக் கண்டதும் நின்றான்.
“ஹலோ பாஸ்... கிளம்பலயா, ஓ... நந்தினிக்கு வெயிட்டிங்கா இருக்கும்...”...
அத்தியாயம் – 25
அன்னை சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கி வந்த அருள் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டே அடுக்களைக்கு செல்ல பரணில் இருந்த தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு இறங்கிய வானதியின் மேல் இடித்துக் கொண்டான்.
“ஆ...” வலியில் முகத்தை சுளித்துக் கொண்டே கீழே சரிந்தவளைப் பிடித்துக் கொண்டவன் விழிகள் ஆவலுடன் நோக்க கண்களுக்குள் தொலையத் துடிக்கும்...
அத்தியாயம் – 30
ரிசப்ஷன் முடிந்து வீடு திரும்பிய சுந்தரம் கட்டிலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்க சகுந்தலா பாத்ரூமில் இருந்தார்.
“ஆன்ட்டி...” சாத்தியிருந்த கதவின் வெளியே வானதியின் குரலைத் தொடர்ந்து மெதுவாய் கதவு தட்டப்பட்டது.
“சும்மா தான் சாத்திருக்கு... உள்ள வாம்மா...” என்றார்.
“சாரி அங்கிள்... இந்த சமயத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... இந்த ஜுவல்ஸ் ஹால் போன் ஸ்டாண்ட்ல இருந்தது......
அத்தியாயம் – 23
வாழ வேண்டிய வயதில் பெண் இப்படிக் கால் இழந்து முடங்கிப் போனால் அவளது எதிர்காலம் என்னாகும் என்ற பயம் நந்தினியின் அன்னை ஷீலாவின் மனதைக் கலங்க வைத்தது. நந்தினிக்கு விபத்து என்றதும் காண வருகிறோம் என்ற அண்ணன் குடும்பம் அவளுக்கு கால் போன விஷயம் தெரிந்ததும் வராமல் அப்படியே பதுங்கிக் கொண்டது.
ஷீலாவின்...
“அம்மா, உங்களுக்கு என்னைப் பத்தி தெரியாதா... என் வாழ்க்கைல நடக்கற எதுவும் என் சுய விருப்பத்தோட நானே எடுக்கிற முடிவா இருக்கணும்னு நினைக்கறவன்... என் நம்பிக்கை இது வரைக்கும் எந்த விஷயத்திலும் பொய்த்துப் போனதில்லை... இந்தப் பொண்ணைத் தேர்வு பண்ண விஷயமும் அப்படித்தான்... அப்பாவோட வறட்டு பிடிவாதத்துக்கும், வீண் உருட்டல் மிரட்டலுக்கும் எல்லாம் அருள்...
அத்தியாயம் – 27
காலையில் உற்சாகத்துடன் கல்லூரிக்குக் கிளம்பிய குந்தவை சாப்பிட அமரவும் அன்னை ஏதோ யோசனையாய் இருப்பதைக் கண்டு விசாரித்தாள்.
“அம்மா, காலைலயே ரொம்ப யோசனைல இருக்கற போல இருக்கு... நைட்டு படிச்ச கதை எதையும் யோசிச்சிட்டு இருக்கீங்களா என்ன...” கேட்டுக் கொண்டே அன்னை செய்திருந்த கிச்சடியை சட்னியுடன் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.
“போடி, உனக்கு எப்பவும்...