Thursday, March 28, 2024

    Aasaiaya Kaaththula Thoothu Vittu

    அத்தியாயம் – 21 “என்ன பேசப்போறேன்னு உனக்கு கேட்க விருப்பமில்லையா மிதிலா” என்றார் வேணுகோபால் அமைதியை உடைத்து. “பேசணும்ன்னு சொன்னது நீங்க தானே. அப்போ நீங்களே சொல்லட்டும்ன்னு தான் பேசாம இருக்கேன்” என்றார் அவர் பதிலாய். “மனசே சரியில்லை மிதிலா. நான் செஞ்சது செய்யறது எல்லாம் சரியா தப்பான்னு மனசு கிடந்து அடிச்சுக்குது” “என்னாச்சு தனுஷ் கல்யாணத்தை பத்தி ஏதோ...
    அத்தியாயம் – 20 தனுஷ் வெளியே கிளம்பிச் சென்றதும் பாலாஜி குழப்பம் தீராதவனாய் சுற்றிக் கொண்டிருந்தான். ‘நமக்கு ஏன் இது முன்னமே தோன்றாமல் போய்விட்டது. பேசாம அக்காகிட்டவே கேட்போம்’ என்று எண்ணி அவளை தனியே அழைத்தான். “என்னடா ஒழுங்கா படிக்கறியா??” “ஹ்ம்ம் அதெல்லாம் படிக்கறேன்” “என்ன காரியம் ஆகணும் உனக்கு என்கிட்ட” “எதுக்கு அப்படி கேட்குறே??” “அந்த மாதிரி நேரத்துல தானே நீ...
    அத்தியாயம் – 19 ‘வேண்டுதலா?? எதுக்கு?? யாருக்காக??’ என்ற கேள்வி அடுத்தடுத்து அவளுக்குள் எழுந்ததை உள்ளேயே விழுங்கினாள். ஏனெனில் இன்னமும் அவர்களின் உறவில் பெரிதாய் எந்த மாற்றமும் வந்திருக்கவில்லை. அன்று அவள் மாறனின் வரவைப் பற்றியும் அதன் பின் நடந்ததை சொல்லி முடித்த பின் ஆளுக்கொரு யோசனையாய் அவர்கள் கலைந்து சென்றனர். தனுஷ் மீண்டும் எங்கோ கிளம்பிச் சென்றுவிட்டான்...
    அத்தியாயம் – 18   தான் அன்று ஹோட்டலுக்கு வரமுடியாது என்றுவிட்டு யாகாஷின் பொறுப்பில் அதைவிட்டு அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து எங்கோ கிளம்பிச் சென்றிருந்த தனுஷ் நேரம் பத்தாகியும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.   எங்கே செல்கிறோம் எதற்கு என்று யாரிடமும் சொல்லியிருக்கவில்லை அவன். புவனாவிற்கே அவள் காலை ஆறரை மணி அளவில் எழும் போது தான் தெரியும்.   அப்போதும்...
    அத்தியாயம் – 17   அவள் முகம் இருண்டதை கண்டவர் “என்னாச்சும்மா??” என்று அவளை லேசாய் உலுக்க தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாள் அவள்.   “ஒண்ணும்... ஒண்ணுமில்லை ஆன்ட்டி”   “அப்போ என்னவோ இருக்கு??”   “அதெல்லாம் இல்லை... என்னைப் பத்தியே கேட்டுட்டு இருக்கீங்க... உங்களைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே...” என்று பேச்சை மாற்றினாள் அவள்.   “என்னைப்பத்தி சொல்ல எதுவுமில்லைம்மா... கூட பிறந்தவர் ஒருத்தர் இருக்காரு, அம்மா...
    அத்தியாயம் – 16   தனுஷ் அவளை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு கோவை சென்றுக் கொண்டிருந்தான் அவளை அலுவலகத்தில் விடுவதற்காய்... அவன் தினசரிகளில் அதுவும் ஒன்றென ஆக்கி வைத்திருந்தாள் அவன் மனையாள்.   முடியாது என்று அன்று சொன்னவன் தானே கூட்டிச் செல்கிறேன் என்று சொல்ல வைத்த அவளின் மீது அவனுக்கு இன்னமும் கோபம் இருந்தது.   அன்று அவ்வளவு சீன் கிரியேட்...
    அத்தியாயம் – 15   தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம் அதற்கு பதில் சொல்லாமல் இவன் என்ன செய்கிறான் என்று திரும்பி பார்த்தார் வேணுகோபால்.   “மாமா...” என்று சரியாய் அந்நேரம் அவள் அழைக்கவும் ஆச்சரியம் அவருக்கு.   “நீ என்னம்மா இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்கறே??” என்று ஆச்சரியம் கலந்த முகத்துடன் கேட்டவர், “முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல நான் இவனை அனுப்பி இருப்பேன்ல......
    அத்தியாயம் – 14   வேணுகோபால் தனுஷுடன் வந்த பெண்ணை கண்டு அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.   “தேவா நீ மிதிலாவை எங்கே?? எப்போ?? எப்படி பார்த்தே?? ஏன் மிதிலா எவ்வளோ வருஷம் ஆச்சுல நாம பார்த்து...” என்று தேவாவில் ஆரம்பித்து மிதிலாவில் முடித்தார் அவர்.   “அப்பா அப்பா ரிலாக்ஸ்... நான் இவங்களை ஊட்டில தான் பார்த்தேன்... நான் ஹோட்டல்க்கு இடம்...
    அத்தியாயம் – 13   “கொஞ்சம் நில்லுங்க...” என்ற அவளின் குரலில் சென்றவன் திரும்பி நின்றான் அவளை நோக்கியவாறே.   புவனா அவனிடம் பேச வேண்டும் என்று சொன்னதுமே யோசனை இழையோட என்னவாம் என்ற எண்ணத்தோடே அவளுக்கு எதிரில் வந்து நின்றான்.   “ஏன் என்கிட்ட நீங்க சரியாவே பேச மாட்டேங்குறீங்க??” என்ற அவளின் கேள்விக்கு ‘அப்படியா’ என்ற ரீதியில் புரியாத ஒரு...
    அத்தியாயம் – 12   “என்ன யாகாஷ் சொல்றே?? அந்த மாப்பிள்ளை எதுக்கு ஓடினான்னு உனக்கும் தெரியாதா??”   “நீ என்னடா நான் தான் அவனை ஓட வைச்சேன் அப்படிங்குற மாதிரி கேட்கறே...”   “எனக்கு இப்போவரை புரியலைடா எப்படி கல்யாணம் நடந்துச்சுன்னு...”   “அவளுக்கு கல்யாணம் நடக்க போகுதுன்னு உனக்கு முன்னமே தெரியுமா... நீ தெரிஞ்சு தான் அங்க போனியா??”   “அடேய்!! அடேய்!! ஏன்டா!! அங்க...
    அத்தியாயம் – 11   புடவை எடுத்து வந்த மறுநாள் இரு குடும்பமும் கல்யாண பத்திரிகை எடுத்துக்கொண்டு மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றனர் வழிபாடு செய்ய...   இருவீட்டின் சார்பாய் கடவுளுக்கு முதல் பத்திரிகை வைத்து வழிபாடும் முடிந்தது. இரு குடும்பமும் ஒரே வரிசையில் நின்றிருக்க மாறன் அவளருகில் வந்து நெருக்கமாய் நின்றுக்கொண்டான்.   பார்ப்போருக்கு அது இயல்பான ஒன்றாய் தோன்றினாலும் அவளால்...
    அத்தியாயம் – 10   வாயிலிலேயே முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்தார் வேணுகோபால் உடன் யாகாஷும். கையில் ஆரத்தி தட்டுடன் அவர்கள் ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணொருவர்.   தனுஷின் பார்வையில் தந்தை குறித்தான பெருமிதம் அவரின் உற்சாகம் அவனையும் தொற்றிக்கொண்டது. தன்னையுமறியாமல் அவன் பார்வை பின்னால் சென்றது பார்த்தீர்களா என்பது போல்.   மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்....
    அத்தியாயம் – 9   “உள்ள வாங்க மாப்பிள்ளை... உள்ள வா புவி...” என்று மணமக்களை உள்ளே அழைத்தார் கனியமுது.   “பால், பழம் கொடுங்க பொண்ணு மாப்பிள்ளைக்கு...” என்று நெருங்கிய உறவினரொருவர் சொல்ல மணமக்கள் இருவரும் நடந்து முடிந்த நிகழ்வுகளில் இருந்து இன்னமும் வெளி வந்திருக்கவில்லை.   அதற்குள் அடுத்தடுத்த நிகழ்வுகள் தன் போக்கில் நடக்க எதையும் சிந்திக்க நேரமில்லாமல் வேடிக்கை...
    அத்தியாயம் – 8   அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் அவள் நினைத்திருக்க அவளின் அன்னை கனியமுது அழைத்துவிட்டார் அவளுக்கு.   “சொல்லுங்கம்மா...”   “யாரு புவனா அது??”   “எதைப்பத்திம்மா கேட்கறீங்க??” என்று அவர் என்ன கேட்க வருகிறார் என்பது தெரிந்தே தெரியாதது போல் கேட்டாள்.   “எவனோ இன்னைக்கு உன்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்னானே... நல்ல வேளை இன்னைக்கு உங்கப்பா...
    அத்தியாயம் – 7   “புவனா எப்படிம்மா இருக்கே??” என்றார் கனியமுது தன் மகளிடம் போனில்.   இப்புறம் அவளோ “நல்லாயிருக்கேம்மா... நீங்க அப்பா பாலாஜி எல்லாம் எப்படி இருக்கீங்க??”   “எல்லாரும் நல்லாயிருக்கோம் புவி... சரிம்மா நீ நாளைக்கே ஊருக்கு புறப்பட்டு வாம்மா...”   “என்னம்மா எதுக்கு உடனே வரச்சொல்றீங்க??”   “உனக்கும் மாறனுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருக்கோம்மா... ஏற்கனவே பேசி வைச்சது தானே, மாறன் ஊர்ல...
    அத்தியாயம் – 6   எங்கிருந்தோ“தேவா” என்ற அழைப்பு அவனின் நினைவு சங்கிலியை அறுக்க அது தடைபடுவது விரும்பாதவன் போன்று அவன் கட்டிலில் திரும்பி படுத்தான். அவனருகே யாகாஷ் படுத்திருந்தான்.   யாகாஷ் சில மாதங்களாக அவர்களுடனே வசிக்கிறான்.சில மாதங்களுக்கு முன் அவன் தந்தையும் தாயும் ஒரு சாலை விபத்தில் பலியாகியிருக்க யாருமற்று தனித்திருந்த அவன் நிலைக்கண்டு தந்தையும் மகனும்...
    அத்தியாயம் – 5   தனுஷின்சிறு வயதிலேயே அவன் தாய் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார். தந்தையும் வேறு திருமணம் என்ற ஒன்றை நினையாமல் மகனுக்கு தாயுமானவராகிப் போயிருந்தார்.   அவர் வேலைக்கு சென்று விடும் சமயங்களில் அவன் பாட்டியிடம் தான் வளர்ந்தான். அதுவும் அதிக நாட்கள் நிலைக்கவில்லை. பாட்டியும் அவன் நான்காம் வகுப்பு படிக்கும் போதே இறந்து போனார் மூப்பின்...
    அத்தியாயம் – 4   அழுத அவள் முகம் அவனை ஏதோ செய்ய அவளை நோக்கி எட்டி நடைப்போட்டான். கேட்கலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பத்தை புறந்தள்ளி “என்னாச்சு??” என்றிருந்தான் அவளிடம்.   அவனை பார்த்ததும் ஏனோ அழுகை அதிகமாய் பொங்க அப்போது தான் அழுது முடித்து அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் எட்டிப்பார்த்து கண்ணில் நீர் துளிர்த்தது அவளுக்கு.   “என்ன ப்ராப்ளம்??”   அதற்கு...
    அத்தியாயம் – 3   புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்   புவனா இளையராஜாவின் இசைமழையில் நனைந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எப்போதும் எப்எம் கேட்பது தான் வேலையே.   காலையிலேயே அவளுக்கு மிகப்பிடித்த பாடலை கேட்டதில் மனம் மகிழ்ச்சியில் ததும்பிக் கொண்டிருந்தது. வெகு நேரமாக அன்னை அழைக்கும் குரல் கேட்டும் அவருக்கு பதில் கொடுக்காமல் பாடலிலேயே முழ்கி...
    அத்தியாயம் – 2   அவன் பாடலை பாடி முடித்த பின்பு அவளிடத்தில் அசாத்திய அமைதி மட்டுமே. “மேடம் அப்படியே உறைஞ்சு போயிட்டீங்களா என்ன என் பாட்டை கேட்டு??”   “மன்னிக்கணும் டிடி!! உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு, நீங்க ரொம்ப வருஷமா பாட்டு கத்துக்கிட்டு இருக்கீங்களா??”   “இல்லை கேள்வி ஞானம் தான் பீ.எஸ்”   “ஓ!! சூப்பர் டிடி, நீங்க ஏன் இந்த...
    error: Content is protected !!