Saturday, April 20, 2024

    Kaathlaenum Theevinilae Kaal Pathitha Mayiliragae

    மயிலிறகு – 22   எத்தனை குழப்பங்கள், வேதனைகள், சோதனைகள், எதிர்காலம் பற்றிய பயம் என்று அனைத்தும் வந்தாலும்.... அந்த குழப்ப நேரங்களில், நாம் உயிராய் நினைப்பவர்கள் அல்லது நம்மை உயிராய் நினைப்பவர்கள் லேசாக ஓரிரு வார்த்தைகள் ஆறுதலாக சொன்னால் கூட அது நமக்கு யானை பலத்தை தருமாம்....அந்த பலம் தான் இப்போது இழையினியின் நெஞ்சம் பெற்றுள்ளது....   இழையினி...
    மயிலிறகு – 21   "ஆரி டியர் .. எனக்கு என்ன இப்ப... நான் ஆதவன் சார் கிட்ட.. இல்ல இல்ல.. இனி சார் இல்ல... ஆதவன் மாமா கிட்ட, ஸ்விமிங் கத்துக்க தானே போனேன்... அதுல என்ன ஆகபோகுது.. ஓவரா சீன் கிரியேட் பண்ணாத மேன்... " என்று அவளுடைய கொஞ்சும் குரலில் கூற, ஆரியனுக்கு,...
    மயிலிறகு - 20   கோழி கூவிய பிறகும் கூட, மேக  பஞ்சணையில் இருந்து எழுந்துக்கொள்ளலாமா, வேண்டாமா... என்ற சிந்தனையோடு தயங்கி தயங்கி தனது கதிர்களை பரப்ப தொடங்கி இருந்தான், காலை கதிரவன்.   கதிரவன் வெளிவராது இருக்கவே, மேக கூட்டங்கள் மட்டும், தங்களது விருப்பத்துக்கு, அங்கும் இங்கும் சூழ்ந்துக்கொண்டு, அந்த காலை வேலையை மந்தமாக அடித்துக் கொண்டு...
    மயிலிறகு - 19   "வா ஆரியன், நீங்க இங்க எப்படி அவனிக்கா? , இளா, வந்தவங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாங்களா? நீ எப்போ வந்த.. ? உன் ட்ரிப் எப்படி போச்சு..." என்று சரமாரியாக, ஆதவன் தனது பேன்ட் பாக்கட்டிற்குள் ஒரு கையை விட்டப்படி, மறு கை கொண்டு அவனது தலை முடியை கோதியப்படி கேட்டுக்கொண்டு...
    மயிலிறகு - 18 இருள் சூழ்ந்துக்கொண்டிருக்கும் நேரம், மனம் முழுவதும் பரவிய வெளிச்சத்துடன் ஆதவன் மகிழனை தேடிப்போக, தோட்டத்தில் மகிழன் இல்லாது போகவே, மறுபடியும் வந்த வழியே ஆதவன் திரும்பி வர நேர்ந்தது.... ஆதவன் மகிழனை தேடிச்சென்றதையும், மகிழன் தோட்டத்தில் இருந்து கடை தெருக்கள் பக்கம் சென்றதையும் அறிந்திருந்த பாக்கியம், ஆதவனின் வருகைக்காக அவன் வரும் பாதைக்கு...
    மயிலிறகு – 17   "அம்மா...என்னமா இது, கல்யாணத்துல நிம்மதி இல்லாம இருக்க, கலாட்டா செஞ்சேன்.... அதோட அந்த முதல் மாப்பிள்ளை ஓடிட்டான்.. இரெண்டாவதா வந்தவன் எப்படின்னு தெரியல, கடைசி நேர மாற்றத்துனால, நிச்சயம் அந்த இழையினி சந்தோசம் இல்லாம குழப்பத்துல இருப்பா.... நிச்சயம் அப்படியே அவ வாழ்க்கைய கெடுக்கலாம் னு சொல்லி ஆசை காமிச்சு கூப்பிட்டு...
      கருவறைக் குரல்   "பாண்டிய தளபதி வானவன் வாழ்க வாழ்க" என்ற கோஷங்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்க, கம்பீரமாய்த் தனது புரவியில் மதுரைமாநகர் கோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் பாண்டியதேசத்து சேணாசமுத்திரத்தின் தளபதி வானவன்.   வானவன் வருவதற்கு முன்னே அவனின் புகழ் பாடும் கோஷங்கள் மதுரைமாநகர் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கின. அதிமுக்கிய காட்சிகள் அரங்கேறும் நாளாக அந்நாள் மாறக்கூடுமென்று யூகித்த...
    மயிலிறகு – 16   சில வருடங்களுக்கு முன்புவரை அரிசியை புடைக்க உதவும், மூங்கில் பட்டைகொண்டு முடையப்பட்ட சொலவு (முறம்) போல, அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் அதனுடைய பெரிய தலையை தூக்கிய வண்ணம், படையும் அஞ்சும் படி, தனது நீண்ட நெளிந்த உடலை சுருட்டிக்கொண்டு பசுமாட்டிற்கு வெகு அருகில் படமெடுத்து நின்றுக்கொண்டு...
    மயிலிறகு – 15   பிருவங்கள் இரண்டும், யோசனயை பலமாக காட்ட...அவ்வறையை இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாய் அளந்த ஆதவன், தன் மனைவியின் சீலை தளவில் மண்ணெண்ணெய் வந்த மாயத்தை சிந்தித்துக்கொண்டு இருந்தான்.... அதற்கு காரணமும் இருந்தது... அவர்களது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பு கிடையாது... ஓரிரு அறிக்கை விளக்குகளில் மட்டுமே மண்ணெண்ணெய் பயன்படுத்துவர்... ஒன்று தோட்டத்தில் இருக்கிறது......
      மயிலிறகு – 14   இழையினி, ஆதவன் திகைத்த விழிகளுக்கு காரணம்.... அந்த பெரிய அகற்று விரிந்து படர்ந்திருந்த மாமரத்திற்கு கீழே மகிழன் மரத்தை சுற்றி சுற்றி  ஓட, இதழா கையில் ஒரு மரக்கிளையை ஒடித்துக்கொண்டு மகிழனை அடிக்க துரத்திக்கொண்டு இருந்தாள்....   அதை பார்த்து திகைத்த இழையினியும், ஆதவனும் அவ்விருவரும் இருந்த இடத்திற்கு ஓட்டமும் நடையுமாக சென்று அடைய,...
      மயிலிறகு – 13 கருமை சூழ்திருந்த அழகிய இரவு திடீர் என்று பகலைப்போல அடித்துக்கொண்டிருந்தது ஆதவனது அறை ஜன்னல் வழி.... திடீர் என்று ஏற்பட்ட வெளிச்சத்திற்கும், கூச்சலுக்கும் காரணம் தெரியாமல், வேகமாக அறையை விட்டு வெளியேறிய ஆதவனும், அவன் பின்னோடு சேர்ந்து அவசரமாக நடைப்போட்ட இழையினியும் பார்த்தது, ஒரு வைக்கோற்போர் தீ ஜுவாலைகளுடன் கொழுந்து விட்டு...
    மயிலிறகு – 12   ஆதவனுக்கு அந்த ஓரிரு நொடிகளில், பக்கவாட்டில் குனிந்து நிமிர்ந்த மனையாளின் கழுத்தில் ஊசல் போல முன்னும் பின்னும் ஆடியது, தான் அன்று அவள் கழுத்தில் தாலி என்று கூறி அணிவித்த தங்க சங்கலியோ என்ற எண்ணம் துளிர்க்க, ஒரு நொடியும் தாமதிக்காது, அவன் பார்வையை இழையினியின் பக்கம் திருப்ப, அதற்குள் இழையினியின்...
      மயிலிறகு - 11   "இல்ல அப்பா.... நாங்க இங்க தங்க முடியாது.... நான் எந்த வொர்க்கும் பிளான் பண்ணாம வந்தேன்... காளான் பாக்டரில வேலை இருக்கு.. இன்னைக்கு கிளம்பலனா, நிறைய லாஸ் ஆகிடும்.... " என்று மணமகனான ஆதவன் கூற, இத்தனை நேரம் ஏதேதோ கலக்கத்தில் இருந்த இழையினி இப்போது தந்தையை விட்டு பிரியவேண்டும் என்ற...
      மயிலிறகு - 10   மெல்லிய நூலாக மஞ்சள் நாண் இழையினியின் மார்போடு தவழ, அதோடு பின்னியப்படி பொன் கோர்க்கப்பட்ட மஞ்சள் தாலிக்கொடி படர்ந்து கிடந்தது.....குனிந்த தலையை நிமிர்த்தி, ஆதவனை விழிகளால் தேடியவள், அவனை காணாது சோர்ந்த விழிகளுடன் தந்தையை பார்க்க, அவர் நெஞ்சம் ஆனந்தத்தில் விம்மிக்கொண்டு இருந்தது.....அவர் கண்கள் சந்தோசத்தில் மின்ன, இழையினியை பார்த்த ராகவனது...
      மயிலிறகு– 9   ஆகாய நீலவண்ண சட்டையும், கருப்பு கால்சட்டையும் அணிந்து மிடுக்காக நின்றபடி, கையில் ஒரு காமெராவை வைத்து சரிப்பார்த்துக்கொண்டு இருந்தது, இழையினியின் குழம்பிய மனநிலைக்கு காரணமானவனே.... அவன் எதிரில் நின்ற மணப்பெண்னை பார்க்கவில்லை. ஆனால் இழையினி அவனை கண்டுக்கொண்டாள்....   ஆரியனுக்கும், இழையினிக்கும் நடுவில் நின்ற ஆதவன், சரியாக மணமகன் நின்ற திசையில் நிற்க, இழையினி ஆதவனை...
    மயிலிறகு– 8 கொழுந்து வெற்றில்லை, கருசிவப்பு நிறத்தை தோற்கடிக்கும் கொட்டை பாக்கும், ஒரு ரூபாய் அளவு பொன் காசுகள் வைத்த தாம்பூலம், இழையினியின் கண்முன்னே நிச்சய தாம்பூலமாக மாற்றப்பட, உறைந்த உறைபனியாய்  அமர்ந்திருந்தாள் அந்த பனிமலர்.   சிறு சிறு இதயங்களாக பச்சை நிறத்தை கொண்டிருந்த இலைகள்,   அடுக்கப்பட்டது தாம்பூலத்தில், வெற்றிலை என்னும் பெயரில்....     அச்சிறு சிறு இதயங்கள் இரு தாம்பூலத்தில் மாற்றப்பட அத்திருமணத்தை...
      மயிலிறகு – 7   நீண்ட குச்சியில் சுருட்டப்பட்டிருக்கும் சிறு இளஞ்சிவப்பு மேகம் போல் இருக்கும் அந்த காட்டு  மரத்தில் மலர்ந்த மஞ்சள் பூ, பார்ப்பதற்கு, நெருங்க காற்று போகும் வழி கூட இல்லாது பூத்திருந்தது.....அந்த மஞ்சள் நிற பூக்களின் கூட்டத்தை பார்க்கும் போது அடர்மஞ்சளிலும் பஞ்சுமிட்டாய் இருக்கிறதோ என்ற பிரம்மை ஏற்படும் பார்ப்பவர்களுக்கு... அத்தகைய மலர், அதன்...
    மயிலிறகு – 6   சங்கலியை அணிவித்தவன், சங்கலியை எடுத்து கையில் பிடித்தபடி, "இங்க பாருங்க... இது வெறும் செயின் மட்டும் தான்..." என்று குரலை தனித்து, இழையினிக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான்.....   அவர்களை விட்டு, சற்று பின்னால் சென்று இருந்த பார்த்த சாரதிக்கு, ஆதவன், இழையினிடம் பேசியது கேட்காமல், அவரிடம் ஆதவன் கூறியது மட்டுமே கேட்டிருந்தபடியால்,...
      மயிலிறகு – 5   முள்ளம்பன்றிகள், தனது முட்களை ஈட்டி போல் எரிந்து தாக்கும் சக்தி உடையது என்று பரவலாக பேசப்பட்டாலும், அது உண்மை கிடையாது.... அது எதிரிகளை நெருங்கி, தாக்கி, அப்போது எதிரிகள் மீது சிக்குண்ட முட்கள் மட்டுமே எதிரின் உடலில் அமிழ்ந்து விடும்.. அப்படி நடந்தால் நிச்சயம் காயப்பட்டவர்கள் உயிரோடு இருக்க இயலாது.....     இப்போது ஆதவன்...
    மயிலிறகு – 4   நிமிர்ந்து பார்க்க, அங்கு நின்றவனோ, நேற்று அந்த பெண்கள் கூட்டத்தோடு வந்த சுடலை என்ற வழிக்காட்டி என்று அறிந்துக்கொண்டு ஸ்நேகமாக புன்னகைத்தாள்.   "மேடம், இங்க என்ன பார்த்திட்டு இருக்கீங்க ...." என்று கேட்க இழையினியோ எழுந்து , "இல்ல அண்ணா... இவுங்க எப்படி மால் கட்டுறாங்கனு பார்த்திட்டு இருந்தேன்..." என்று கூறினாள்.   "மாலா  அப்படினா...
    error: Content is protected !!