Thursday, April 25, 2024

    ENK FINAL 2

    EKN FINAL

    Enthan Kaathal Neethaanae

    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 23 மதிய உணவை உண்டுவிட்டுக் கற்பகம் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக்கொள்ள, மணமக்கள் எந்த நேரத்திலும் வருவார்கள் என்பதால் வெண்ணிலா வீட்டை ஒதுங்க வைத்து கூட்டி முடித்தவள், தானும் முகம் கழுவி வேறு புடவை மாற்றித் தயாரானாள்.  கற்பகம் இதெல்லாம் பார்த்தபடி தான் படுத்துக் கொண்டு இருந்தார்.  “இப்பத்தானே சாப்பிட்ட கொஞ்ச நேரம் ரெஸ்ட்...
    கைப்பேசியை லாக் போட்டு வைத்திருந்தாள். இதைப் பாருடா என ஜெய் யஸ்வந்திடம் கொடுத்து விட்டு, கட்டிலில் ராதிகாவின் அருகே உட்கார்ந்தவன், ராதிகாவை எழுப்ப... அவள் எரிச்சலில் உச் என்றாள்.  “செல்லை லாக் பண்ணாதேன்னு சொல்லி இருக்கேன் தானே.... பாஸ்வோர்ட் என்ன?” எனக் கேட்க,  உறக்க கலக்கத்திலும் அவள் ஆள்காட்டி விரலை நீட்ட, யஸ்வந்த் வந்து அவள் ரேகையைக்...
    யுவராஜ் வெளியில் நின்று போன் பேச, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வீட்டை ஆராய்ந்த கற்பகம், “உண்மையிலேயே உன் நாத்தனாருக்கு என்பது சவரன் போட்டீங்களா?” எனக் கேட்க, பிறகு பொய்யா சொல்வார்கள் என்பது போல வெண்ணிலா முறைத்துப் பார்க்க,  “அவ்வளவு பணம் இங்க இருக்கா என்ன? உன் நகை நீ போட்டிருக்கிறது போக மிச்சம் எங்க?” என்றார்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 22  மறுநாள் அதிகாலையே வெண்ணிலா எழுந்துகொள்ள, அவள் எழும் போதே ஜெய்யும் எழுந்து விட்டான்.  “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான.” என்ற கணவனின் கேள்வி காதில் விழாதது போல அவளது வேலைகளைப் பார்த்தவள், குளித்துவிட்டு கீழே சென்றுவிட்டாள்.  சிறிது நேரம் சென்று ஜெய் சென்றபோது, “ரெண்டு அத்தையும் கூடிட்டு போங்க மாமா....
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 21  அகல்யா வீட்டினர் சம்மதம் சொன்னதும், புகழ் வீட்டினர் நேரம் எடுத்துக்கொள்ளவே இல்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்தனர்.  அகல்யாவை வெண்ணிலா தன் அறையில் வைத்து அலங்காரம் செய்தாள். அதோடு தன்னுடைய நகைகளை வேறு அணிவித்திருக்க, அந்நேரம் அறைக்கு வந்த ஜெய்யிடம் எப்படி இருக்கிறது எனக் காட்டி பெருமையாகக் கேட்க,  ஏற இறங்க தங்கையைப்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 20 தோட்டத்தில் நின்ற காரை வர சொல்லி பெண்கள் அதில் ஏறினர். காமாக்ஷி வரவில்லை என்றுவிட, மற்றவர்கள் தோட்டத்திற்குக் கிளம்பினார்கள். ராதிகா அவளும் வரவில்லை என, அன்று யாரும் அவளை வருந்தி அழைக்கும் மனநிலையில் இல்லை.  அகல்யா வெண்ணிலா யாருமே அவளை அழைக்கவில்லை. வரவில்லையா போ என்பது போல இருந்தனர்.  தன் அம்மாவை எல்லோரின்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 19  அன்று மாலையே மகேஸ்வரி திரும்ப வேண்டும் என்பதால், காலையே கிளம்பி வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் தான் இருந்தனர். ஆனால் ஜெய் மட்டும் இல்லை. தெரிந்த கதை தானே என வெண்ணிலா மனதில் நினைத்துக் கொண்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.  வெண்ணிலாவை பார்க்க அன்று விமலாவும்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 18  திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஜெய் வெண்ணிலாவை அவள் வீட்டில் சென்று விட்டுவிட்டு உடனே திரும்பி இருந்தான்.  திருமணம் திண்டுக்கல்லில் என்பதால் திருமணத்திற்கு முன்தினம் மதியம் போலக் காரில் கிளம்பி சென்றனர்.  ஏற்கனவே கற்பகமும் அவரின் மகள்களும் முன்தினமே திருமணத்திற்குச் சென்றிருந்தனர். ஜெய் வரவில்லை என்பது இன்னமும் வெண்ணிலாவுக்கு வருத்தமே.  மண்டபத்திற்குச் சென்று அவர்களுக்கு...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 17 ஜெய் சொன்னது போல அந்த வாரம் சனிக்கிழமை பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்த இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றான். ஜெயராமனும் சந்திரனும் வரவில்லை என்றுவிட, அமுதாவும் காமாட்சியும் மட்டும் வருதாக இருந்தனர்.  “சாப்பாடு கட்டி எடுத்திட்டு போவோமா?” என அமுதா கேட்க, “ஒரு நாளாவது சமைக்காம இருங்க. அதெல்லாம் உங்க பையன் வெளிய...
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 16  சிறிது நேரம் சென்று ஜெய் அறைக்கு வந்து பார்த்த போது, வெண்ணிலா படுத்திருந்தாலும் உறங்காமல் தான் இருந்தாள்.  கதவை சாற்றி விட்டு மனைவியைச் சமாதானம் செய்யும் எண்ணத்தில், அவள் அருகில் படுத்து, “சாரி, அடிக்கணும்னு அடிக்கலை கோபத்துல அடிச்சிட்டேன்.” என அவன் அவளது கன்னத்தைத் தொட, பட்டென்று அவன் கையைத் தட்டி...
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 15  ஜெய் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிப் போலத்தான் வந்தான். வந்தவன் வேலை இருக்கிறது என அதிகாலையே வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டான். மதியம் உண்டுவிட்டுக் கிளம்பலாம் என்றால் கேட்கவில்லை.  அதிகாலையில் எழுந்தது, அதிலும் உடனே பேருந்து பயணம் என்பதால்... வெண்ணிலாவுக்கு உறக்கம் வர... இந்தமுறை அவளாகவே கணவனின் மடியில் தலை...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 14  ஜெய் இருந்த கோபத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பான். ஆனால் அவன் முன்பு வெண்ணிலா நின்ற தோற்றம் அவனைக் கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்னவோ உண்மை.  “நான் இந்த வீட்ல எதுவுமே பேசக் கூடாதா? பேசினா வீட்டை விட்டு போன்னு சொல்வீங்களா?”  “சரி போறேன். ஆனா அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் போறேன்.”  “அண்ணன்காரன் கல்யாணம் பண்ணதும்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 13  சனிக்கிழமை காலை உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு வெண்ணிலாவின் பிறந்த வீட்டிற்குக் கிளம்பினர். பொளாச்சியில் இருந்து பஸ்சில் தான் சென்றனர். அங்கே கரூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்று சேரும்போது மதியம் ஆகி இருந்தது.  மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் பெற்றோர் இருக்க... “என்ன இப்படிக் கருத்து மெலிஞ்சு போய்...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 12  இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி வரை வந்து, அங்கு அவனுக்குத் தெரிந்தவர் இடத்தில் வண்டியை விட்டுவிட்டு, இருவரும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினர்.  பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இருவரும் உறங்கி விட்டனர். இரவு நேரம் சென்று உறங்கியது, அதிகாலை எழுந்து அவசரமாக எடுத்து வைத்து கிளம்பியது என இருவருக்கும் போதுமான...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 11  மாலை மற்றவர்கள் வந்த நேரத்திற்கு ஜெய்யும் வீடு வந்து சேர்ந்திருக்க... அன்றும் மழை பெய்தது. அமுதா மழை நேரத்திற்குக் கொறிக்க வேர்கடலை அவித்துக் கொண்டு வந்து ஹாலில் வைக்க... எல்லோரும் பேசியபடி கடலையை உடைத்து சாப்பிட்டனர்.  இரவு உணவுக்குப் பிறகு, “உன் அத்தை இன்னைக்குப் போன் பண்ணி அம்மாகிட்ட பேசி இருக்கா....
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 10  பொள்ளாச்சியில் வேளாண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பணியில் தான் ஜெய் ஆனந்தனுக்கு வேலை. மண்ணை ஆராய்ந்து அதில் என்ன சத்து இருக்கிறது, அதில் என்ன விதைத்தால்... விளையும் என மண்ணை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் அவன் வேலை.  இடம் இருக்கிறது என எல்லா இடத்திலேயும் நினைத்ததை விதைத்து விட முடியாது. மண்ணின் தன்மைக்கு...
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 9  அன்று எல்லோருமே மிகவும் களைத்துப் போனதால்... இரவு உணவு உண்டதுமே, “எல்லாம் போய்ப் படுங்க. காலையில பேசலாம்.” என்றார் அமுதா.  அகல்யாவும் ராதிகாவும் கீழே இருக்கும் இரண்டு படுக்கை அறைகளில் ஒன்றில் தான் உறங்குவார்கள். அவர்கள் இருவரும் அறைக்குள் சென்றதும், வெண்ணிலாவிடம் பால் எடுத்துக் கொண்டு அறைக்குச் செல்லும்படி அமுதா சொல்ல,...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 8  காலை உணவு முடித்து, ஜெய் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க, கற்பகத்தின் இரண்டு மகள்களும் இன்னும் அருகில் இருந்த சில உறவினர்களும் காலை உணவுக்கு வந்துவிட... அவர்கள் உண்ணட்டும் என ஜெய் எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.  காலை உணவை மகேஸ்வரியும் விமலாவுமே சமைத்திருந்தனர். பூரி வடையோடு கொஞ்சம் இட்லியும் செய்து...
    எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 7  எவ்வளவு நிதானமாகக் கிளம்ப முடியுமோ அவ்வளவு நிதானமாக, ஜெய் குளித்துக் கிளம்ப, அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே மாலை ஏழு மணி ஆகிவிட்டது.  மணமக்கள் வருவதற்காக இனோவாவை இங்கே விட்டு விட்டே யுவராஜ் சென்றிருந்தான். புதுமணத் தம்பதிகளுடன் வெண்ணிலாவின் சின்ன அத்தை வசுமதி, அவரது கணவர் மற்றும் மகேஸ்வரியின் தங்கை...
    எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 6  அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஜெய்யை அவன் தந்தை அழைக்க, எங்கே என்று பார்த்தால்... அவர் அறையில் இருந்தார். உடன் அமுதாவும்.  அப்பா அறைக்குள் அழைத்துப் பேசுகிறார் என்றால்... நன்றாகத் திட்ட போகிறார் என்று அர்த்தம். காப்பாற்ற வேறு வீட்டில் யாரும் இல்லை.  சந்திரன் அவர்கள் உரக் கடைக்குச் சென்றிருக்க, தங்கைகள் இருவரும் கல்லூரிக்கு...
    error: Content is protected !!