Anbulla Maanvizhiyae
41
‘செங்காந்தளே உனை அல்லவா
செல்லத் தென்றலே உன்னை ஏந்தவா
அழைத்தேன் உன்னை என்னோடு
இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள் என்னைத் தீண்டுமா
மிதந்தேன் காற்றில் காற்றாக
நடந்தேன் இரவில் நிழலாக
கண்ணே உன் கண்கள் என்னைக் காணுமா
ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ... ...
40
அவன் கண்ணீர் அவள் கையில் பட்டுத் தெறித்ததில், பதறிப் போனவள்,
“எ என்னங்க ஆச்சு?! எதுக்கு உங்க கண் கலங்குது?!” என்றாள் மையு பதட்டமாய்..
“ச்சே ச்சே! என்னடா மானும்மா நீ? நான் எதுக்குக் கண்கலங்கப் போறேன்?! நீ வச்ச திருநீர் கண்ணுல பட்டுடுச்சு போல!” என்று அவன் கண்களை துடைத்தபடி...
39
விடிந்தது முதல், எப்போங்க ரிசல்ட் வரும் என்று மையு நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டாள்.
ஆனால் அங்கு ரோசியோ, என்ன சொல்லுவது என்று புரியாமல், மித்ரனுக்கு அழைப்பு விடுக்கக் கூட மனமில்லாமல் தன் அறையில் அமர்ந்திருந்தாள்.
“என்னங்க, நீங்களாவது போன் செய்யுங்க!” என்று மையு சொல்ல,
“அவ பிசியா இருப்பா போலம்மா....
38
மித்ரனின் வீட்டில் தினம் தோறும் சந்தோஷம் கூடிக் கொண்டே இருக்க அந்த ஒரு மனதில் மட்டும் சந்தோஷத்தையும் மீறி அத்தனைக் கலக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது!
மித்ரன் அவளை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு அன்பையும், காதலையும், சந்தோஷத்தையும் மையுவிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன்...
“என்னம்மா மருமகளைப் பின்னாடியே போய் கண்காணிக்குற?!” என்று ராஜசேகர் வினவ,
“அட நீங்க வேறங்க! இந்தப் பையன்தான் ஏதோ சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு என் மருமகளை சாப்பிடக் கூடக் கூப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டான்!” என்று கவலையாய்ச் சொல்ல,
“ஓ அதான் விஷயமா!” என்று சிரித்தவர்,
“இருந்தாலும் உன் பையன் என்னைவிட பொண்டாட்டியை ரொம்ப லவ் பண்றான்மா....
37
மையு சொன்ன நல்ல செய்தியால் வீட்டில் இனிப்பு பலகாரம் என்று தங்கமலர் வீட்டையே விசேஷ நாள் போல் மாற்றிக் கொண்டிருக்க, தங்கள் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்ற மையுவிற்கு அப்போதுதான், இந்த நல்ல விஷயத்தைத் தன் வீட்டினரிடமும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது.
‘அம்மா என்ன நினைக்குமோ தெரியலை! ஆனா காயு...
36
சோர்வுடன் கண்மூடிப் படுத்திருந்த மனைவியைக் கண்டவனுக்கு அளவில்லா சந்தோஷமும், கூடவே கலக்கமும் எழ, நேராய் வண்டியைத் தனது தோழியின் மருத்துவமனைக்குச் செலுத்தினான்.
கண்மூடிச் சாய்ந்திருந்ததில் மையுவிற்கு அவன் எங்கு செல்கிறான் என்பது தெரியவில்லை. வண்டி நின்றதும்,
“மானும்மா!” என்று அவன் குரல் கொடுக்க,
“அதுக்குள்ள வீடு வந்துடுச்சா?” என்று கேட்ட மையு...
“அச்சச்சோ! என்னங்க இது?! இன்னும் சாரு அக்கா, ராதா அண்ணி குட்டீஸ் எல்லோருக்கும் எடுக்கணுமே?!” என்று அவள் கணக்குப் போட்டுவிட்டு விழிக்க,
“எல்லோருக்கும் எடுத்துக்கோ மானும்மா!” என்றான் மித்ரன்.
“ம்! என் சம்பளத்துலதானே எடுக்கணும்னு ஆசைப் பட்டேன்!” என்று தயங்கியவள்,
“அப்போ அடுத்த மாசம் பணம் வந்ததும் உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துவேன். சரியா?!”...
35
மித்ரன் கொடுத்த அளவிலாக் காதலும், அன்பும் மையுவைப் புதுப்பிறவி எடுத்தவளைப் போல் அத்தனை உற்சாகமாய் இயங்கச் செய்ய, அவளின் முயற்சியும் சேர்ந்து மையுவின் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றத்தைக் கொடுத்தது.
நாளடைவில், அவன் ஆசைப்படியே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தானே தனியாய் சில அடிகள் தூரம் எடுத்து வைத்து நடக்கும் அளவிற்கு...
“அடப்பாவி புருஷா!” என்று அவனை முறைத்த மையு,
“மானும்மா மானும்மன்னு கொஞ்ச வருவயில்ல! அப்ப இருக்குடா உனக்கு!” என்றுவிட்டு,
“என் செல்ல அம்மா இல்லை! நீ அந்தக் கரண்டியைக் குடுத்துட்டுப் போய் அமைதியா உட்காருவியாம். நான் முதல் போண்டாவை உனக்குக் கொடுப்பேனாம்!” என்று மையு ஐ வைக்க,
“ஏன்? உன் பரிசோதனைக்கு...
34
அவன் அன்பின் கிறக்கத்தில் தனைமறந்து அமர்ந்திருந்தவளை, ஏதோ படபடவென்ற சத்தம் மீட்டெடுக்க, கண்களைத் திறந்தவள் கண்டது, தோகையைப் படபடவென அடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த அழகிய மயிலைத்தான்.
“ஐ! மயிலுங்க!” என்று அவள் கூக்குரலிட, அவனும் திரும்பி அதைப் பார்க்க, திடீரென எங்கிருந்தோ, வேட்டுச் சத்தம்.
வேட்டுச் சத்தம் கேட்டதும், மயில்...
33
நெடுந்தூரப் பயணம். ஆனால் களைப்பே தெரியவில்லை அனைவருக்கும். ஆட்டம், பாட்டம், பேச்சு, சிரிப்பு, கேலி, ஓய்வு என்று பயணம் மிக இனிமையாக நிறைவடைந்ததில் அனைவருக்குமே அத்தனை மகிழ்ச்சி.
நடக்கவே முடியாது என்று நினைத்த இனிய நிகழ்வெல்லாம் தன் மகளின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு சாந்தி, முருகேசனின் மனம் மகிழ்ச்சியில் திக்கு...
32
“எங்க போனாரு இவரு?! இன்னும் காணோம்?!” என்று வெகு நேரமாய் அவனுக்காய் காத்திருந்தவள், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அவனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“நேரமாகிடுச்சுன்னு போனே பண்ணிட்டா. இதுக்கு மேல லேட் பண்ணா அவ்ளோதான்!” என்று எண்ணிக் கொண்டு, போனை அட்டென்ட் செய்தவன்,
“இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்டா” என்று...
“சமையல் ரொம்ப நல்லா இருக்கு! நான் இப்படி எல்லாம் சாப்பிட்டதே இல்லை தெரியுமா?! எங்க அம்மா சமைக்கிற சாம்பார் சோறு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு! அதுலயும் எங்க அம்மா பிரியாணின்னு ஒன்னு செய்வாங்களே! அது தக்காளி சாதத்துல தப்பித் தவறி ஏதோ ஒரு கோழி தெரியாம விழுந்து தற்கொலை செய்துகிட்ட...
31
“என்னங்க எங்க போனீங்க? அவ்ளோ அவசரமா என்னைப் படுக்க வைச்சுட்டு?!” என்று மையு தங்கள் அறைக்குள் நுழைந்தவனைப் பார்த்துக் கேட்க,
“ஒரு முக்கியமான கால்டா. அதான் அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன்” என,
“அதை இங்கயே பேசி இருக்கலாமேங்க” என்று அவள் கேட்க,
“நீ கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுப்பேன்னுதான்டா வெளியே...
3௦
மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே கண்விழித்தவன், குழந்தை போல் தன்னை அணைத்தபடி உறங்கும் தன் மைவிழியாளின் கண்களில் முத்தம் பதித்து,
“மானும்மா” என்று மெல்லத் தட்டி எழுப்ப,
“ம் தூக்கம் வருது” என முனகினாள் உறக்கத்திலேயே.
“மானும்மா.. ஹாஸ்பிட்டல் போகணும்ல” என்று அவன் சொன்னதும் படக்கென கண்கள் திறந்தவள்,
...
29
"உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்,
எனக்கொரு பாடம் கேட்டு கொண்டேன்.
பருவமென்பதே பாடமல்லவா,
பார்வையென்பதே பள்ளியல்லவா?
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது நிலவும் வந்தது!"
அவன் மார்பில் சாய்ந்தபடி நெடுநேரமாய் வருங்காலக் கனவுகளில் மூழ்கி இருந்தவளை,
“மானும்மா!” என்று அழைத்து மெல்லத் தட்டிவன்,
“நல்லா படுத்துக்கோடா. இப்படியே உட்கார்ந்திருந்தா வலி எடுக்கும்” என்று சொல்லி...
‘எல்லாம் என் தலையெழுத்து! இந்த மித்ரன் பையன் ஒருத்தன் மட்டும் இந்த வீட்ல இல்லைனா இவங்க எல்லோரையும் என் சுண்டு விரல்ல ஆட்டிப் படச்சிடுவேன்! ஆனா எங்க?!’ என்று நொந்து கொண்டவன்,
‘டேரர் பீசா இருந்த என்னை இப்படிக் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டீங்களே டா! இந்தப் பாவம் உங்களை எல்லாம் சும்மா...
திருமண வைபவம் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நடக்கவிருந்ததால், ஏற்கனவே பசுமையாய் இருந்த அழகிய தோட்டத்திற்கு நடுவே பூக்களால் ஆன மணப்பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. பச்சைப் பசேலென இருந்த புல்வெளியில் விருந்தினர் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஓங்கி வளர்ந்திருந்த மரங்களே நிழலைக் கொடுத்திருக்க தனியாய்ப் பந்தல் எதுவும் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்...
27
“நலம் நலம்தானே
நீ இருந்தால்,
சுகம் சுகம்தானே
நினைவிருந்தால்,
நலம் நலம்தானே
நீ இருந்தால்,
சுகம் சுகம்தானே
நினைவிருந்தால்,
இடை மெலிந்தது
இயற்கை அல்லவா,
நடை தளர்ந்தது
நாணம் அல்லவா,
வண்ணப் பூங்கொடி
பெண்மை அல்லவா,
வாட...