Iraiva Iraivi
எதுகையும் மோனையும்
என் கவிதனில்
கவலைக்கிட மாகின்றன...
உன்பெயரின் இனிமையினை
எந் நாதனில்
ஒருமுறை ருசித்த பிறகு....
பனிக்காலத்தின் தண்மை முடிந்து வெயில் காலத்தின் வெம்மை தொடங்கும் மாசி மாதத்தின், ஒரு அந்தி மாலை நேரம்... ஆதவனது கடைக்கண் பார்வை தீண்டியதில் வானமகள் தன் அங்கமெல்லாம் செவ்வண்ணம் பூசி செக்கச் சிவந்து நின்ற அந்த நேரத்தில், நிலவின் மகளான நம்...