Saturday, April 20, 2024

    Avalae En Prabhaavam

    “அப்போ.. போய் அண்ணியை பார்த்துட்டு வா.. நான் உனக்கு வீடியோ கால் பண்றேன்..” “எதுக்கு..?  அதான் நீயும் அம்மாவும் அடிக்கடி வீடியோ கால் செஞ்சு பார்த்துட்டு தானே இருக்கீங்க..?” என்று ரவி நழுவ பார்த்தான்.  “ம்ம்.. எனக்கு உன் போன்ல பார்க்கணும் ஆசை.. கிளம்புண்ணா..” என்று விடாமல் கிளப்பி விட, ரவி மனதே இல்லாமல் கார் எடுக்க...

    Avalae En Prabhaavam 26 2

    “அவங்களால எழ முடியாது மித்ரா, நாம தான் தூக்கிட்டு போகணும்..” என்று வடிவேலுவை பார்க்க, அவரின் கண்களில் மரண பீதி தெரிந்தது. ஏனெனில் நம் வசந்தா  குஷ்பூ போல பூசிய உடல்வாகு..!!  “என்னது..? தூக்கிறதா..?” என்று அரண்டு போய் நின்றவரிடம்,  “ப்பா.. பிடிங்கப்பா.. அம்மாவை முதல்ல  படுக்க வைக்கணும்..” என்று மது அவரை தூக்க முனைய,  “வேண்டாம் மதுமா.....

    Avalae En Prabhaavam 26 1

    அவளே என் பிரபாவம் 26 “இங்க பாருங்க.. நம்ம வீட்டுக்கும் போக மாட்டேன்னு சொல்றீங்க.. எங்க வீட்லயும்  இருக்க முடியாது, வேறென்னதான் செய்ய..?” என்று மது கணவனை பார்த்து கேட்டாள்.  “அதான் நான் இப்போ தங்கிட்டிருக்கிற வீடு இருக்கில்லை, அங்க போகலாம்..” என்று ப்ரேம் சொன்னான்.  “போகலாம் தான், ஆனா அங்க எங்க அப்பா தங்கமுடியாதே..” என்று உதட்டை...

    Avalae En Prabhavam 25 2

    “கிளம்பு.. வீட்டுக்கு போலாம்..” என்று ப்ரேம் மனைவியை அழைக்க, வடிவேலுவும் மகளை கிளம்பு என்பது போலே பார்த்து கொண்டிருந்தார்.  “இன்னும் ஒரு மணி நேரம் தானே.. பார்த்திட்டே போறேன்..” என்று மது பொதுவாக சொன்னவள், வசந்தாவின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொள்ள, ப்ரேம் மனைவியின் முன் சென்று நின்றான்.  “கிளம்புன்னு சொல்றேன் இல்லை..” என்று அதட்டியவன், அவள்...

    Avalae En Prabhavam 25 1

    அவளே என் பிரபாவம் 25 “என்ன..? என்ன சொல்றீங்க..? இதோ கிளம்பிட்டோம்..” என்று வசந்தா பரபரப்புடன் போன் பேசி வைத்தவர், மகளின் ரூமிற்கு ஓடி வந்தார்.  “மருமகளுக்கு பிரசவ வலி வந்துடுச்சு போல, சுபா அக்கா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு இருக்காங்களாம்..” என்று மகளிடமும், கணவரிடமும் சொன்னவர்,  “நாம கிளம்பலாமா..?” என்று கணவரை கேட்க, அவர் படுக்கையில் இருந்து...

    Avalae En Prabhavam 24 2

    “மித்ரா.. எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் உண்டு, அதுல எது சரிங்கிறது அவங்க யோசிக்கிற கோணத்தை பொறுத்ததுதான், உன்னை பொறுத்தவரைக்கும் நான் என்னோட தன்மானத்தை, சுய மரியாதையை ப்ரூப் செய்ய தான் அப்படி செஞ்சேன்.. சரி.. ரொம்ப சரி.. ஏன் அதிலென்ன தப்பு..?” “ஒருத்தர் மத்தவங்களை பார்த்து இன்னாரோட உழைப்புல தான் நீன்னு சொன்னா அவங்களுக்குள்ள...

    Avalae En Prabhavam 24

    அவளே என் பிரபாவம் 24 “இன்னும் வேற ஏதாவது இருக்கா..? இல்லை இவ்வளவு தானா..?” என்ற ப்ரேமின் கேள்வியில் மது அவனை அதிர்ந்து பார்த்தாள்.  “என்ன..? என்ன இன்னும் இருக்கா..?” என்று மது கணவனை பார்த்து கேட்க, லேசாக சிரித்த அவன்,  “அதான் இவ்வளவு நேரம் என்னை ஏதேதோ கேட்டுட்டு இருந்தியே அதெல்லாம் தான் முடிஞ்சிருச்சா..? இல்லை இன்னும்...

    Avalae En Prabhavam 23 2

    “இது உங்க சம்மந்தி வீடு மட்டுமில்லை, உங்க தங்கச்சி வீடும் தான், காபியை குடிங்க, என் மருமகளுக்கு நாள் வேற நெருங்குது, அதுக்கு என்ன செய்யன்னு நாம பார்க்கணும் இல்லை..” என்று சண்முகத்தின் விலகலை நொடியில் உடைத்து அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பேசிய வசந்தாவை  சண்முகம் மனம் நிறைந்து பார்த்தார்.  “நீ உண்மையாவே...

    Avalae En Prabhavam 23 1

    அவளே என் பிரபாவம் 23 “என்ன மதுமா இப்படி கேட்கிற..? அது உன்னோட பணம் தாண்டா..” என்று வடிவேலு சற்று தடுமாற்றத்துடனே சொன்னார்.   “அந்த பணத்தை எதுவும் செய்ய எனக்கு உரிமை இல்லையா..? இல்லை உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையாப்பா..?” என்று மதுமித்ரா தொடர்ந்து கேட்க, பதறி போன  வடிவேலு,  “என்னடா இப்படி எல்லாம் பேசுற..? உன்மேல்...

    Avalae En Prabhaavam 22 2

    “என்ன ப்ரேம் நீங்க..? இத்தனை வருஷம் ஒர்க் செஞ்சு நம்ம கம்பெனியை பத்தி புரிஞ்சுக்கலையே..?” என்று கிண்டலாக  சொன்னார்.  “ஓஹ்.. என்ன புரிஞ்சுக்கணும், நான் போக முடியாதுன்னு சொன்ன என்மேல லீகல் ஆக்ஷன் எடுப்பீங்க அப்படிங்கறதையா..?” என்று நக்கலாக சிரித்தவன்,  “போனமுறையும்  என்னை நீங்க இப்படித்தான் மிரட்டுனீங்க இல்லை, ஆனா பாருங்க, உங்களுக்கு ஒன்னு தெரியல, நான்...

    Avalae En Prabhaavam 22 1

    அவளே என் பிரபாவம் 22 “என்ன..? என்ன சொல்றீங்க..?”  என்று திவ்யா நம்பாமல் தன் காதில் இருந்த போனை எடுத்து பார்த்துவிட்டு மறுபடியும் கேட்க,   “உங்க வீட்டுக்கு வெளியேதான் இருக்கேன், வா..” என்று ரவி அதையே திரும்ப அழுத்தமாக  மனைவியிடம் சொன்னான்.  “இதோ.. இதோ வரேன்..” என்று திவ்யா பரபரப்பாக சொல்லவும்,  “ஏய்.. வேகமா எல்லாம் வராத, பொறுமையாவே வா..”...

    Avalae En Prabhavam 21 2

    “என்ன ஆச்சு ப்ரேம்..?” என்று  சண்முகமும் அடுத்த சில நிமிடங்களில் ஓடி வந்திருந்தார்.  “கடையை திறப்பீங்களாம்ப்பா..” என்று மகன் சொல்லவும்,  “இல்லை ப்ரேம்.. அது சரிவராது..” என்று சண்முகம் மறுக்க, மது மறுபடியும் காரில் இருந்து கீழிறங்கிவிட்டவள்,  “ஏன் மாமா சரிவராது..? இது உங்க கடைதானே.. திறங்க..” என்றாள்.  “இல்லை மது வேண்டாம்..” என்று சண்முகம் மறுப்படியும் மறுக்க, மது...

    Avalae En Prabhavam 21 1

    அவளே என் பிரபாவம் 21 “என்ன மது இப்படி செஞ்சுட்ட..?”  என்று ரவியின் காரில்  மதுவுடன்  வந்த வசந்தா  மகளிடம் மெலிதான கோபத்துடன் கேட்டார்.  “ஏன்ம்மா..? அவ என்ன செஞ்சா..?” என்று காரை ஓட்டி கொண்டிருந்த ரவி முன் கண்ணடி வழியே அம்மாவை பார்த்து கேட்டான்.  “என்ன ரவி இப்படி கேட்கிற..? மாப்பிள்ளை இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக...

    Avalae En Prabhavam 20 1

    அவளே என் பிரபாவம் 20 “என் கையை விடு மித்ரா..” என்று மனைவி தன் கையை  பிடித்து அவளின் வயிற்றில் மேல் வைத்திருக்க, வார்த்தைகள் கரகரப்பாக வந்தது.  “நம்ம பேபி வரபோற விஷயம் உங்களுக்கு தெரியும்தானே..? பெரியம்மா சொன்னப்போ நீங்களும் அங்கதானே இருந்தீங்க..?” என்ற மதுவின் கேள்வியில்  ப்ரேம் கசங்கிய முகத்துடன் வேறு புறம் பார்த்தான்.  “சொல்லுங்க.. அவங்க...

    Avalae En Prabhavam 20 2

    “மதுமா.. மதுமா.. என்னடா..” என்று மகளை நெருங்க, அவரை தள்ளி விட்டவள்,  “நான் உண்மையாதான் சொல்றேன், என்னை விட்டு தள்ளி போங்க..” என்று வெடித்தவள், உள்ளே சென்றுவிட, வடிவேலு அசையாமல் நின்றுவிட்டார். “ப்பா.. எனக்கு உங்க எல்லோரோட  பேசணும்..” என்று வீட்டுக்கு வந்த ப்ரேம் மிக நிதானமாக சொல்ல, சண்முகத்திற்கும், வைஜெயந்திக்கும், திவ்யாவிற்கும் பயமே சூழ்ந்தது. அவன்...

    Avalae En Prabhavam 19

    அவளே என் பிரபாவம் 19 “என்னோட  வாழ்க்கையையே நான் முழுசா  உன்கிட்ட மட்டும் தான்  கொடுத்திருக்கேன், என்னை மேல ஏத்துறதும் நீதான்.. கீழ இறக்கறதும் நீயாதான் இருப்ப..” “அதை இன்னிக்கு ப்ரூப் செஞ்சுட்டா.. என்னை மொத்தமா கீழிறக்கிட்டா.. நடுசபையில் வச்சு என்னோட தன்மானம், சுயமரியாதையை மொத்தமா குழி தோண்டி புதைச்சிட்டா..  “அந்த மனுஷன் வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணு...

    Avalae En Prabhaavam 18 2

    “என் பொண்ணு என்ன இவங்க வீட்டு வேலைக்காரியா..?” என்று ப்ரேமை எரித்து பார்க்க, அவனோ முகம் சிவக்க அமர்ந்திருந்தான். அவனுக்கும் வைஜெயந்தி இப்படி செய்வது மிகுந்த ஆத்திரத்தை கொடுத்ததோடு வடிவேலுவின் பார்வை வேறு அவனை மேலும் சீண்டியது.  “ப்பா..” என்று ரவி ஏதோ கேட்டதற்கு கூட பதில் சொல்லாமல் மதுவையும், ப்ரேமையும் வைஜெயந்தியையுமே விடாமல் பார்த்து...

    Avalae En Prabhaavam 18 1

    அவளே என் பிரபாவம் 18 “இன்னும் கிளம்பலையா மது..?”  என்று வடிவேலு அன்றைய நாளில் பத்தாவது முறையாக போன் செய்து கேட்டு கொண்டிருக்க, சங்கடத்துடன் சிரித்த மதுமித்ரா,  “இதோ கிளம்பிடுவோம்ப்பா..”  என்றாள்.  “இதையேதான் காலையிலிருந்து  சொல்லிட்டே இருக்க, இன்னும் கிளம்பல..” என்று வடிவேலு மனத்தாங்கலாக சொன்னார்.  நாளை திவ்யாவின் வளைகாப்பு என்பதால் ப்ரேமும், மதுவும் ஊருக்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தனர்....

    Avalae En Prabhaavam 17 2

    “உனக்கு எத்தனை முறைதான் சொல்றது..? மது விஷயத்துல தேவையில்லாம பேசாதன்னு, கேட்கவே மாட்டா இல்லை, அப்போ இப்படிதான்..” என்று சாதாரணமாக சொன்ன கணவனை வெறித்தவள்,  “அதுக்காக உங்க அப்பா இப்படி எல்லாம் பேசுவாரா..?” என்று எகிறினாள்.  “பேசாம.. அவர் இடத்துல நீ இருந்தாலும் இப்படித்தான் உன் பொண்ணுக்காக பேசியிருப்ப..” என, திவ்யா பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.  “இங்க...

    Avalae En Prabhaavam 17 1

    அவளே என் பிரபாவம் 17 “இவங்க உன் ப்ரண்ட்தானே மித்ரா..?” என்று ராஜியை கை காட்டி  ப்ரேம் கேட்ட கேள்வியில் அதிர்ந்த மதுமித்ரா, பதில் சொல்ல முடியாமல் நின்றுவிட, அவளை கூர்மையாக பார்த்த ப்ரேம்,  “மித்ரா..” என்று அதட்டினான்.  “அது.. உங்களுக்கு எப்படி..?” என்று மது கணவனின் அதட்டலில்  திணறும் போதே,  “ராஜி மது ப்ரண்ட்ன்னு தான் உனக்கெப்படிடா தெரியும்..?”...
    error: Content is protected !!