Saturday, April 27, 2024

    Arumpani Final 2

    Arumpani Final 1

    Arumpani 37

    Arumpani 36

    Arumpani 35

    Arumpani

    Arumpani 34

    34 ஆத்திசூடி – நைவினை நணுகேல் பொருள் – பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே நீதிமன்ற வளாகம் அபராஜிதனால் நடந்து முடிந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்பெண் சித்திரலேகாவை அவன் சாதாரணமாய் எடைப் போட்டுவிட்டான். அன்று அவள் அவனை தவறாக பேசிய அன்று கூட அவள் ஏதோ மனரீதியாக பாதிக்கப் பட்டிருக்கிறாளோ அவள் வீட்டினரை அழைத்து பேசலாம் என்ற முடிவோடு தான்...

    Arumpani 33

    33 ஆத்திசூடி – காப்பது விரதம் பொருள் – தான் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் இந்திரசேனா தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். அகல்யா விஷயத்தில் மொத்த முடிவையும் அவளே எடுக்க முடியாது. அதை எடுக்க வேண்டியவள் அகல்யா மட்டுமே, அகிலேஷ் சொல்வது ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் அவனே முழு நேரமும் அகல்யாவுடன் இருந்துவிட முடியுமா. ஒன்று சம்மந்தப்பட்ட பெண்கள்...

    Arumpani 32

    32 ஆத்திசூடி – பழிப்பன பகரேல் பொருள் – பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை சொல்லாதே. அயர்ந்த உறக்கமில்லாது போனாலும் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து மெல்ல விழி திறந்து திறந்து மூடியவன் அறையில் இன்னமும் எரிந்து கொண்டிருந்த விளக்கை கண்டதும் அருகே திரும்பி பார்த்தான். இந்திரசேனா இன்னமும் வந்து படுத்திருக்கவில்லை. சட்டென்று எழுந்து அமர்ந்தவன் அருகே இருந்த தன்...

    Arumpani 31

    31 ஆத்திசூடி – நொய்ய உரையேல் பொருள் – அற்பமான வார்த்தைகளை பேசாதே. “இருங்க சார் நான் உள்ள போய் பேசிட்டு வந்திடறேன்” என்று வேகமாய் உள்ளே விரைந்தவன் சாவதானமாய் வெளியே வந்தான். அவனிடத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. “சார் கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்குன்னு சொன்னார்” என்று விழுங்கி விழுங்கி அவன் சொல்ல மாணிக்கவாசகத்தின் முகம்...

    Arumpani 30

    30 ஆத்திசூடி – நாடு ஒப்பனை செய் பொருள் – நாட்டில் (சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய். “வாப்பா மாணிக்கம் என்ன இந்த பக்கம் உன் காத்து வீசுது” “இன்னைக்கு இங்க ஒரு ஹியரிங் இருக்குப்பா சக்தி. ஆமா உனக்கு எப்படி போய்கிட்டு இருக்கு” “எங்கப்பா நமக்கெல்லாம் ஒரே சில்லறை கேசா தான் வருது. பெரிய பெரிய...

    Arumpani 29

    29 ஆத்திசூடி – சையெனத் திரியேல் பொருள் – பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே அபராஜிதன் காலையில் நேரமாகவே பள்ளிக் கிளம்பிச் சென்றிருந்தான். இரண்டு நாட்களாகவே அவன் இப்படித்தான் கிளம்பிவிடுவதால் இந்திரசேனாவும் பெரிதாய் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. பள்ளி ஆண்டு விழா வருவதாக ஒரு வாரம் முன்பே கூறியிருந்தான். ஆண்டு விழா அன்று இந்திரசேனா தன்னுடன் கட்டாயம் வர...

    Arumpani 28

    28 ஆத்திசூடி – கெளவை அகற்று பொருள் – வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு இந்திரசேனா சென்னையில் இருந்து கிளம்பும் போதே அவள் அன்னையிடமும் நாயகியிடமும் கேட்டுத்தான் கிளம்பியிருந்தாள் சிவகாசிக்கு. அப்பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன வாங்க வேண்டும் என்று ஒவ்வொன்றாய் கேட்டு வாங்கியும் இருந்தாள். தன் மாமனாரிடமும், அகல்யாவிடமும் கூட கேட்டிருந்தாள் என்னெல்லாம் செய்ய வேண்டும்...

    Arumpani 27

    27 ஆத்திசூடி – அறனை மறவேல் பொருள் – தருமத்தை எப்போழுதும் மனதில் நினைக்க வேண்டும் இந்திரசேனா கண் விழித்த போது அபராஜிதன் அவள் கைப்பிடித்து அமர்ந்திருந்த தோற்றம் தான் கண்ணில் விழுந்தது. தலை கனத்தது அவளுக்கு, ‘என்னாச்சு தலை வலிக்குது எனக்கு. இவர் இங்க என்ன பண்றாரு’ என்று யோசித்தவள் அதை அவனிடத்தில் கேட்கவும் செய்தாள். “என்னாச்சு எதுக்கு இப்படி...

    Arumpani 26

    26 ஆத்திசூடி – கொள்ளை விரும்பேல் பொருள் – பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே ஒரு வாரம் எப்படியோ பறந்திருந்தது. இந்திரசேனா அபராஜிதனிடம் பேசுவதையே முற்றிலும் தவிர்த்திருந்தாள். அவளால் அன்றைய நிகழ்வை மட்டும் மறக்கவே இயலவில்லை. அவன் தள்ளாட்டத்துடன் வந்ததும் அதன் பின்னே நிகழ்ந்தவைகளும் நிழலாய் கண் முன்னே ஓடியது. அபராஜிதன் வாயிலிலேயே தள்ளாடிக் கொண்டு நிற்க இந்திரசேனாவிற்கு வந்த ஆத்திரத்திற்கு...

    Arumpani 25

    25 ஆத்திசூடி – மண் பறித்து உண்ணேல் பொருள் – பிறர் நிலத்தை ஏமாற்றி அதன் மூலம் வாழாதே நீதிபதி அசோக்கின் வீட்டில் இருந்து வந்ததில் இருந்தே அபராஜிதன் அவளிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. வரும் வழியில் கூட இறுக்கமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனைப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. தைரியமான பெண் தான் ஆனாலும்...

    Arumpani 24

    24 ஆத்திசூடி – இணக்கம் அறிந்து இணங்கு பொருள் – ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்புக் கொள். “உன் சித்தப்பனுக்கு என்ன பைத்தியமா ஏன் நான் அந்த பணத்தை கட்ட மாட்டேனா. அவ்வளவு கூட என்னால செய்ய முடியாதாமா. நீ தான் அவருக்கு போன் பண்ணி சொன்னியா...

    Arumpani 23

    23 ஆத்திசூடி – நூல் பல கல் பொருள் – அறிவை வளர்க்கும் நூல்களைப் படி “டேய் அண்ணா என்னடா சொல்லாம கொள்ளாம வந்து நின்னு சர்பிரைஸ் கொடுக்கறே எனக்கு” என்றாள் இந்திரசேனா முகிலனை கண்ட உற்சாகத்தில். “ஏன் உன் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே சொல்லிட்டு தான் வரணுமா??” “நீ வர வேண்டாம்ன்னு யாரு சொன்னது... ஒரு வேளை நான் இந்த...

    Arumpani 22

    22 ஆத்திசூடி – ஊக்கமது கைவிடேல் பொருள் – முயற்சியை எப்போதும் கைவிடாதே நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கொன்று நடைப்பெற்றுக் கொண்டிருக்க கேசவன், மாணிக்கவாசகம் மற்றும் இந்திரசேனா மூவரும் அங்கு தானிருந்தனர். தீவிரமான விவாதம் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. மாணிக்கவாசகத்தின் மீது யாரோ சாய்வது போலிருக்க அவருக்கு புரிந்து போனது அது இந்திரசேனா என்று. யாரும் அறியாது அவள் தோளை தட்டினார்...

    Arumpani 21

    21 ஆத்திசூடி – நேர்பட ஒழுகு பொருள் – ஒழுக்கந் தவறாமல் நேர் வழியில் நட கரிகாலன் சிவகாசிக்கு சென்று ஒரு மாதம் ஓடிவிட்டது. வீட்டில் இருவர் மட்டுமே தான். ஆனால் இருவருக்குள்ளான பேச்சுவார்த்தை என்பது எப்போதும் பச்சைமிளகாயை கடிப்பது போன்று காரசாரமானதாகவே இருக்கும். அபராஜிதனை பொருத்த வரை அவனுக்கு தான் செய்வது சரியே என்ற எண்ணம் எப்போதும். அவன்...

    Arumpani 20

    20 ஆத்திசூடி – சேரிடமறிந்து சேர் பொருள் – நீ பழகுபவர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என ஆராய்ந்து பின்பு பழகு. “அப்போ நீங்க என்னை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க அப்படித்தானே” என்றாள். “அப்படியும் சொல்லிக்கலாம்” “அப்படின்னா என்ன அர்த்தம்??” என்றாள். “அதுவும் ஒரு காரணம் தான்” “சரி உங்களுக்கு கோபம் என் மேல தானே, நியாயமா என்னை மட்டும் தானே நீங்க...

    Arumpani 19

    19 ஆத்திசூடி – கெடுப்ப தொழி பொருள் – பிறருக்கு கேடு விளைவிக்கும் செயலை செய்யாதே இரவு தான் மாணிக்கவாசகம் வீட்டிற்கு வந்தார். அபராஜிதன் வீட்டிலிருந்த மற்ற அனைவரிடமும் நன்றாகவே  பேசினான். மாணிக்கவாசகம் அவனிடம் பேச என்னவென்றால் என்ன என்பது போல இருந்தது அவன் பேச்சு. அவரும் அவன் ஏதோ கவனிக்காது விட்டிருப்பான் என்று எண்ணி மீண்டும் ஏதோ பேச...

    Arumpani 18

    18 ஆத்திசூடி – துன்பத்திற்கு இடங்கோடேல் பொருள் – முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே. இந்திரசேனாவின் வீட்டிற்கு அவர்கள் வந்து சேர பதினோரு மணியாகி இருந்தது. அவர்கள் வண்டியின் சத்தம் கேட்கவும் நளினா வேகமாய் ஓடிவந்தாள். “என்ன அண்ணி எதுக்கு வேகமா ஓடி வர்றீங்க??” “வாசல்லவே நில்லுங்க அதைச் சொல்லத் தான் வந்தேன்” “ஏன்??” “ஆரத்தி எடுத்து...

    Arumpani 17

    17 ஆத்திசூடி – தொன்மை மறவேல் பொருள் – பழைமையை மறவாதிருக்க வேண்டும் “சாதனா” என்று அகத்தியன் அழைக்க “இதோ வர்றேங்க” என்று உள்ளிருந்து குரல் கொடுத்த சாதனா அடுப்பை அணைத்துவிட்டு வந்தார். “ஹ்ம்ம் சொல்லுங்க” என்றார் நெற்றியில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் துடைத்தவாறே. “உட்காரு” என்றவர் டேபிள் பேனை சுத்தவிட்டார். “என்ன திடீர்ன்னு என் மேல கரிசனம்” “எப்பவும் இருக்கறது தான்...

    Arumpani 16

    16 ஆத்திசூடி – தீவினை அகற்று பொருள் – பாவச் செயல்களை செய்யாமல் இரு. இந்திரசேனாவிற்கு ஒன்று மட்டும் மிக நன்றாக புரிந்தது அது அபராஜிதன் வேண்டுமென்றே அவளை காயப்படுத்துகிறான் என்று. அவளை மட்டம் தட்ட முயலுகிறான் என்று, அவனுக்கு பதில் சொல்ல வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கினாள். ‘உனக்கு பேச நல்லதொரு சந்தர்ப்பம் வரும் காத்திரு’...

    Arumpani 15

    15 ஆத்திசூடி – கேள்வி முயல் பொருள் – கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய். அபராஜிதன் சொன்னது தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் வேறு அவளுக்கு. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவள் “என்ன சொன்னீங்க??” என்றாள் அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு. “இனிமே நீ கோர்ட்டுக்கு போக வேண்டாம்” என்று ஒவ்வொரு வார்த்தையும்...
    error: Content is protected !!