Wednesday, April 24, 2024

    Ithaiyak Koottil Aval

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 18 இத்தனை நாள் மனைவியிடம் விஷயத்தைச் சொல்லாமல் இருக்கிற குற்ற உணர்வில், வீட்டில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், இப்போது எல்லாம் சொல்லிவிட்ட நிம்மதியில் மனைவி மகளோடு நேரம் செலவழிக்க எண்ணி, வெற்றி அன்று வீட்டிலேயே இருந்து விட்டான்.  ஆதிரை மகளைக் குளிப்பாட்டி தூக்கி வந்தவள், ஈர உடலை துடைத்து விட்டு உடைமாற்ற, மகள்...
    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 17  வெற்றிதான் குழப்பத்தில் இருந்தானே தவிர, ஆதிரை தெளிவாக இருந்தாள். இத்தனை வருட தாம்பத்தியத்தில், அவள் கணவன் என்ன செய்வான் செய்ய மாட்டான் என்று கூடவா அவளுக்குத் தெரியாது.  உடை மாற்றித் தொட்டிலில் இருந்த மகளை ஒருமுறை பார்த்தவள், விளக்கணைத்து வெற்றியின் அருகே நெருங்கி படுத்து அவனை அணைத்துக்கொள்ள, வெற்றியும் அவளை இதமாக...

    Ithaiyak Koottil Aval 16

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 16  வெற்றி அன்றிரவும் தாமதமாக வந்தவன், பேருக்கு உண்டு விட்டு, அறைக்குள் சென்று, விளக்கை போடாமலே... அலமாரியில் இருந்து மாற்றுடை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்று மாற்றிவிட்டு வந்து, கட்டிலுக்கு அடியில் இருந்து மெத்தையை இழுத்து போட்டு படுத்துக் கொண்டான்.  அவன் படுத்த அடுத்த நொடி, அறைக்குள் வெளிச்சம் பரவ, அவனைப்...

    Ithaiyak Koottil Aval 15

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 15  விடியற்காலையில் ஆதிரைக்கு விழிப்பு வர.... பக்கத்தில் மகள் படுத்திருப்பாள் என்ற எண்ணத்தில் அவள் கைகளால் தடவி பார்க்க, மகள் அங்கே இல்லை என்றதும், எழுந்து உட்கார்ந்தவள் நேரத்தைப் பார்க்க விடியற்காலை நாலு மணி.  இரவு படுத்தது தான் தெரியும். இவ்வளவு நேரமா உறங்கி விட்டோம் என நினைத்தவள், பிறகே கீழே படுத்திருந்த...

    Ithaiyak Koottil Aval 14

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 14  நிச்சயம் அன்று மண்டபத்தில் நடந்த விஷயம் எதையும் வெற்றி அறிந்திருக்கவில்லை. மறுநாள் இரவு அவன் அழைத்த போதுதான், ஆதிரை மனோஜ் பேசியதைப் பற்றிச் சொன்னாள்.  “நீயேன் டி அவனுக்கு எல்லாம் விளக்கம் சொன்ன. அவனோட நினைப்பு எதுவா இருந்தா நமக்கு என்ன?”  “அவன் உங்களைப் பத்தி பேசுவான், நான் கேட்டுட்டு இருப்பேனா... போடா...

    Ithaiyak Koottil Aval 13

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 13 “அம்மா...” என அருண் வந்து கதவை தட்ட, அவசரமாக மனைவியின் இதழில் முத்தமிட்ட வெற்றி விலகி கட்டிலில் படுக்க, ஆதிரை சென்று கதவை திறந்தாள்.  “நான் ஆச்சியோட மண்டபத்துக்குப் போறேன். டிரஸ் கொடுங்க.” என்ற மகனுக்கு முகம் கழுவி உடைமாற்ற, வெற்றி எழுந்து கட்டிலில் சாய்ந்து கொண்டான். கணவனின் கையில் இனிப்பைக்...

    Ithaiyak Koottil Aval 12

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 12 மதிய உணவிற்கு வந்துவிட்டு மாலை வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்த விக்ரம், வெற்றி வருவதைப் பார்த்ததும், “வா வெற்றி, என்ன அதிசயமா இருக்கு.” என்றவன், “வனிதா, வெற்றி வந்திருக்கான், அவனுக்கும் சேர்த்து டீ கொண்டு வா...” என்றான்.  “வாங்க அண்ணா நல்லா இருக்கீங்களா, ஆதிரை அக்கா இல்லாம மெலிஞ்சு போயிட்டீங்க.” என...

    Ithaiyak Koottil Aval 11

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 11  மறுநாள் காலை ஆதிரையின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இருப்பதாக வந்து மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல... அப்போது அறையில் வெற்றியும் ஆதிரையும் மட்டுமே இருந்தனர்.  கட்டிலில் படுத்திருந்த ஆதிரை வெற்றியைப் பார்த்து, “கண்டிப்பா பண்ணிக்கணுமா?” எனக் கேட்க,  “என்னைக் கேட்கிற உனக்கு இஷ்ட்டம் இல்லையா?” என்றான்.  “இன்னும் ஒன்னு மட்டும் பெத்துக்கலாமே?”  “அடியே, அடங்க மாட்டியா...

    Ithaiyak Koottil Aval 10

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 10  வீட்டிற்கு வந்ததும் ஆதிரை வெற்றியை பிடி பிடியெனப் பிடித்துக் கொண்டாள்.  “நீங்க என்ன உங்க ப்ரண்டுக்கு சப்போர்ட்டா?”  “அவன் பொண்டாட்டி ஒழுங்கா இல்லைனா அவனும் என்ன தான்டி பண்ணுவான்?”  “அப்ப நான் சரியில்லைனா நீங்களும் வேற ஒன்ன பார்த்துபீங்க, அப்படியா?”  “வேற ஒன்னு பார்க்கிறாங்க. உனக்கே நாலு அறை விட்டு வழிக்குக் கொண்டு வர மாட்டேன்.”  “அடிப்பியா...

    Ithaiyak Koottil Aval 9

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 9  ஆனந்தி முதலில் வனிதாவிற்காக வருவது போலத் தெரிந்தாலும், பிறகு தன்னை உயர்த்திக் காட்ட தோழியையே மட்டம் தட்ட முனைந்தாள். அதுவும் விக்ரம் மற்றும் வீட்டினரின் முன்பு.  “என்ன இவ்வளவு நேரம் ஆச்சு, நீ இன்னும் சமைக்கலையா? என்னதான் அப்படிப் பண்ணுவியோ? சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவியா?”  “இது பண்ண இவ்வளவு நேரமா?”  “என்கிட்டே எல்லாம் இந்த...

    Ithaiyak Koottil Aval 8

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 8  தெய்வாவும், மூர்த்தியும் முன்பாவது எதாவது ஒன்னிரண்டு வார்த்தைகள் வனிதாவிடம் பேசுவார்கள். இப்போது சுத்தமாகப் பேசுவது இல்லை. அவளைப் பார்ப்பதையே தவிர்த்து ஒதுங்கி போனார்கள்.  வனிதாவுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. இப்படி எதாவது அதிரடியாகச் செய்தால் தான் இவர்களை மிரட்டி வைக்க முடியும் எனத் திமிராகவே இருந்தாள்.  மதிய உணவுக்கு வந்த மகனிடம், “ஆதிரை...

    Ithaiyak Koottil Aval 7

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 7  விக்ரம் காலையில் கிளம்பிக்கொண்டிருக்க, அந்த நேரம் வனிதா அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.  “என்னங்க ஆதிரை அக்கா மில்லுக்கா வரப்போறாங்க.”  “ம்ம்.. ஆமாம்.”  “நானும் வீட்ல சும்மாத்தானே இருக்கேன். நானும் வரட்டுமா...”  “ஆதிரை அங்க பொழுது போக்க வரலை.... கணக்கு வழக்கு பார்க்க வர்றா... நீ அங்க வந்து என்ன பண்ணுவ? முதல்ல உனக்கு என்ன தெரியும்?”  “ம்ம்......

    Ithaiyak Koottil Aval 6

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 6  பிப்ரவரி பத்தாம் தேதி ஆதிரையின் பிறந்தநாள். அதை அடிக்கடி கணவனுக்கு நினைவு படுத்திக் கொண்டும் இருந்தாள். ஆனால் வெற்றி அலட்டிக்கொள்ளாமல் யாருக்கோ பிறந்தநாள் என்பது போல இருந்தான்.  முன்தினத்தில் இருந்தே கணவன் கேக் வாங்கி வருவானா, புடவையா அல்லது சுடிதாரா என ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே இருந்தாள். ஆனால் பிறந்தநாள் அன்று...

    Ithaiyak Koottil Aval 5

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 5 விக்ரம் இரவு வெகு நேரம் கழித்துதான் வந்திருந்தான். அதனால் காலையில் எழுந்து கொள்ளவும் நேரம் ஆகி இருக்க, வனிதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். சுஜி எதாவது கேட்டாலும் கோபப்பட்டாள். மனைவியின் எரிச்சல் எதனால் என விக்ரம் அறியாதவன் அல்ல...அவள் மனதில் இருக்கும் ஆசைகள் புரியாமலும் இல்லை.  நேத்து ஏன் சண்டை...

    Ithaiyak Koottil Aval 4

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 4 பதினோரு மணி பேருந்து என்பதால்... நிதானமாகக் கிளம்ப முடிந்தது. பிரயாணத்திற்குத் தோதாக ஆதிரை சுடிதார் அணிந்திருந்தாள். வீட்டை ஒதுங்க வைத்து, வீட்டு காவலுக்கு ஆள் வைத்து எனக் கிளம்பும் வரை வேலை சரியாக இருந்தது. வேலைக்கு நடுவே இரவு உணவையும் முடித்தனர்.  விக்ரம் குடும்பம் வீட்டில் இருந்து காரில் கிளம்பி வழியில்...

    Ithaiyak Koottil Aval 3

      இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 3  “உங்க பிரண்டை நான் ஒன்னும் வேலை பண்ண விடாம பிடிச்சு வைக்கலை... ஒழுங்கா வேலை பண்றாரா இல்லையான்னு தான் பார்க்க வந்தேன்.” ஆதிரை சொல்ல,  “ஓ... வேவு பார்க்க வந்தியா? பேசாம நீ நம்ம மில்லுக்கு வந்திடு... எனக்கும் வெற்றிக்கும் வேலையாவது குறையும்.” என்றான் விக்ரம்.  ஆதிரை வெற்றியை பார்க்க, “அடுத்த வருஷத்தில...

    Ithaiyak Koottil Aval 2 1

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 2  நேரம் நள்ளிரவையும் தாண்டி இருந்தது. சற்று முன் நிகழ்ந்த நீண்ட கூடலில் கலைத்துப் போயிருந்தாலும், கணவனும் மனைவியும் உடனே உறக்கத்திற்குச் செல்லவில்லை.  வெற்றி கட்டிலில் உட்கார்ந்து இருக்க, குளியல் அறைக்குள் இருந்து வந்த மனைவியின் முகம் மற்றும் கழுத்தில் இருந்த சிவப்புத் தடங்களைப் பார்த்தவன், அதை மெதுவாக வருடி வலிக்குதா டி...

    Ithaiyak Koottil Aval 2 2

    பதினோரு மணிக்கு உள்ளே சென்று ஒரு அடுப்பில் உலை வைத்தால்... மறு அடுப்பில் குழம்பிற்குப் பாத்திரத்தை வைத்துவிட்டுத்தான், காயே நறுக்க ஆரம்பிப்பாள். சமையல் மேடையில் நின்று கொண்டே காய் நறுக்கி, ஒரு மணி நேரத்திற்குள் சமையல் முடித்து வெளியே வந்துவிடுவாள்.  இவ இப்படிச் செய்யுறா, அப்படிச் செய்யுறா என்ற ஜோதியின் எந்தப் பேச்சும் எடுபடவில்லை. ஆதிரையின்...

    Ithaiyak Koottil Aval 1

    இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 1  அண்ணாமலையான எம்பெருமான் ஜோதி வடிவாகக் காட்சி தரும் திருவண்ணாமலை. மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில், பசுஞ்சாணத்தில் மஞ்சள் கலந்த நீரில் ஏற்கனவே வாசல் தெளித்து இருக்க, கோலம் போடும் பணியை ஆதிரை கையில் எடுத்துக் கொண்டாள்.  புள்ளி வைத்து அழகாகக் கம்பி கோலம் இழுத்து, அதற்கும் பொருத்தமாக வண்ணமிட்டு நிமிர்ந்தவள், தான்...
    error: Content is protected !!