Charumathi
சாருமதி
அத்தியாயம் 2௦
பித்தனைப்போல பிதற்றிக் கொண்டிருந்தவனை, சுயநினைவுக்குக் கொண்டுவர, அதட்டிப்பேசியும் முடியாமல் போகவே எதைப்பற்றியும் யோசிக்காமல் இதழணைத்துவிட்டாள் சாருமதி.
அந்த மருத்துவ முத்தம் தன் வேலையைச் சரியாகச் செய்ய இயல்புக்கு திரும்பியவனுக்கு, மனைவியின் செயலில் உடலெங்கும் சந்தோஷ மின்சாரம் உச்சபட்ச அலைவரிசையில் தாக்குதல் நடத்த,
சற்றும் தாமதியாமல் அருகிலிருந்தவளின் இடையைப்பற்றி தன்பக்கமாக இழுத்தவன், தன்னவளின் இதழமுதம் மொத்தத்தையும் மிச்சமின்றி...
"நான் என்னைக்கு உம்மேல நம்பிக்கை இல்லைன்னு சொன்னேன் கிருஷ்ணா?" என்றாள் மெதுவாக.
கேட்டபின் தான், தன் கேள்வியில் இருந்த அபத்தம் அவளுக்குப் புரிய, சட்டென்று பல்லால் நாக்கை கடித்து ஒரு அப்பாவி சிரிப்பை சிரித்துவைக்க,
"அடடா... மேடத்துக்கு எம்மேல டன் டன்னா நம்பிக்கை இருந்ததுனால தான், நான் ரூமுக்குள்ள வரும்போது நீங்க தூங்காமயிருந்தா, அப்படியே தூக்கி முழுங்கிடுவேன்னு...
சாருமதி.
அத்தியாயம் 19.
"அத்தான்... என்னத்தான் இப்படி பண்ணிட்டீங்க?"
"எப்படி பண்ணிட்டேன்?"
"எங்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாமல் சாரு க்காவை கல்யாணம் பண்ணிட்டீங்க?"
"சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப?"
"சொல்லி...யிருந்தா... ஹாங்... சொல்லியிருந்தா என்னை கல்யாணம் பண்ணச் சொல்லி கேட்டுருப்பேன்ல!"
தன் மாமன் வீட்டு ஹாலில் மனைவி சாருமதியோடு சோஃபாவில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவுக்கு பக்கத்தில், சோஃபாவின் கைவைக்கும் திண்டில் அமர்ந்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தாள் சுப்ரியா....
அவளின் பதிலில் சுர்ரென்று கோபம் ஏற,"தயவு செய்து படுத்து தூங்கு இல்லன்னா கோபத்துல ஏதாவது சொல்லிடப்போறேன்" கட்டிலில் உட்கார்ந்திருந்தவளை பிடித்து தள்ளிவிட்டு விட்டு தானும் படுத்துக்கொண்டான் கிருஷ்ணா.
மறுபடியும் வாழ்க்கை செக்கு சுற்றும் மாடாக தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, விழிபிதுங்கி போனது அவனுக்கு.
மறுநாள் காலை, முடிவு செய்திருந்தபடி வெளியே கிளம்பியிருந்தார்கள். அவர்களோடு சித்தியும் அவரின்...
சாருமதி.
அத்தியாயம் 18.
"சாரு..."
"சாருமதி..."
ஏதோ கனவில் அழைத்தது போலிருந்தக் குரலில் சட்டென்று கண்விழித்தாள் சாருமதி.
தூக்கம் விழித்த கண்களுக்கு சுற்றுப்புறம் கலங்கலாகப் புலப்பட, நேற்று தனக்கு கிருஷ்ணாவுடன் திருமணம் ஆனதும், தான் இப்போது கிருஷ்ணாவின் வீட்டில் அவனின் அறையிலிருப்பதுவும் ஞாபகத்திற்கு வந்தது அவளுக்கு.
கூடவே, நேற்றிரவு கிருஷ்ணாவின் அறைக்கு அழைத்து வரும்போதே,"நாளைக்கு விடியகாலம் அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்ப வந்துடுவேன். கரடின்னு...
சாருமதியும் அவனையே பின்பற்றினாள். அந்த பார்த்தசாரதியிடம் அவர்கள் வைத்த வேண்டுதலின் வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் வேண்டுதலென்னவோ ஒன்றாகத்தான் இருந்தது.
வணங்கி முடித்தவன் தன்நெற்றியிலும் அடையாளமிட்டு சாருமதியின் நெற்றியிலுமிட, அமைதியாக அனுமதித்தாள் அவனை.
தன் மனதின் மாற்றத்தை அந்த எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதானத்திலிருந்தே கைக்கொண்டாள் அந்த காரிகை.
மேலும் மாதம் ஒன்று கழிந்திருந்தது... அந்த புதுமணத் தம்பதியரின் வாழ்க்கை,...
"அதனால நீங்க எதுவுமே பேசாமல் அமைதியா இருக்குறதா இருந்தா மட்டும் சொல்லுங்க, உங்களை கூட்டிட்டு போறேன். இல்லையா, நீங்க இங்க வீட்லயே இருங்க, நாங்க மட்டும் கல்யாணத்துக்கு போய்ட்டு வரோம்" கண்டிப்பாக சொல்லிவிட,
'பிடிக்காத பெண்ணாக இருந்தாலும் நடக்க இருப்பது தன் செல்லப் பேரனின் திருமணம். அதற்கு நானில்லாமலா?' என்று யோசித்தாரோ என்னவோ மகனோடு வந்து...
சாருமதி.
அத்தியாயம் 17.
நான்கு தலைமுறைகள் கண்ட அந்த மாளிகை, கூடியவிரைவில் ஐந்தாவது தலைமுறையும் கண்டுவிடுவேன் என்ற மகிழ்ச்சியில் அந்த வீட்டு இளவலின் திருமணத்திற்காக வாழை மரத்தோரணங்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு கம்பீரமாக நின்றது.
வீட்டினுள் அந்த பெரிய ஹாலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் உட்கார்ந்திருந்த சொந்தபந்தங்கள் தங்களுக்குள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து உட்கார்ந்து...
இன்றுதான் தேங்காய் பறித்திருப்பார்கள் போலும்...
இரண்டு மூன்று இடத்தில் பறித்திருந்த தேங்காய்களை மலைபோல் குவித்து வைத்திருந்தார்கள்.
அவள் பார்வைவீச்சில் கிருஷ்ணா விழவில்லை. ஆனால் அவன் வண்டி விழ, அதன் பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவள் நின்றிருந்த திசைக்கு எதிர் திசையிலிருந்து வேட்டியை மடித்து கட்டியபடி வந்துகொண்டிருந்த கிருஷ்ணாவின் கண்களில் சாருமதி விழ,
அவளை அங்கே எதிர்பாராத...
சாருமதி.
அத்தியாயம் 16.
கிருஷ்ணாவின் வீட்டு ரோஜாதோட்டத்தில் பூக்களோடு பூக்களாக நின்று கொண்டிருந்தாள் சாருமதி
காலை இளஞ்சூரியனின் பொன்னிற கதிரொளிபட்டு, அவள் மேனி தழுவியிருந்த தங்கநிற மெல்லிய பட்டுப்புடவை தகதகக்க,
வானத்து தேவதை ஒன்று மலர்களைக் கண்டு மயங்கி கீழிறங்கி வந்து நின்றது போலிருந்தது அவள் தோற்றம்.
"மார்கழிப் பூவே...
மார்கழிப் பூவே...
உன் மடி மீது
ஓரிடம் வேண்டும்..." என்று
மெதுவாக முணுமுணுத்தபடியே, ரோஜாக்களின் இதழ்களிலிருந்த...
சாருமதி.
அத்தியாயம் 15.
எங்கிருந்தோ, எதிலிருந்தோ தப்பிப்பவன் போல வேகமாக நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா.
பூப்பூவாக தூவிய சாரல் மழையாலும், அடித்த வாடைக் காற்றாலும் கூட அவனது மனதின் வெக்கையை தணிக்கமுடியவில்லை.
'அப்படியென்றால் என் தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாதா?' மனம் ஓயாமல் புலம்பிக்கொண்டிருந்தது.
'இன்னும் என்ன தான் வேண்டுமாம் அவளுக்கு? தவறுதான்... நான் செய்தது தவறுதான்... இல்லையென்று நான் சொல்லவில்லையே?'
'அந்த தவறுக்குத்...
நேற்று நடந்த நிகழ்வுகளிலிருந்து வெளியே வந்தவன், எழுந்து தரையை நோக்கி தாழ்ந்திருந்த ஒரு கிளையை பிடித்து உலுக்க, சாரல் மழையில் நனைந்திருந்த மரம் தன் மீதிருந்த நீரை பன்னீராய் தெளித்தது கிருஷ்ணாவின் மீது.
தன் முகம் மலர்த்தி அதை பெற்றுக்கொண்டவனிடம் புத்துணர்ச்சி சற்றே மீண்டிருக்க, காலத்தின் கைகளில் தன் காதலை ஒப்படைத்து,
இதற்கு மேல் தானாக தன்...
ரகுராமின் அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு காயத்ரியின் படிப்பு சம்மந்தப்பட்ட அனைத்து அப்டுடேட் விபரங்களையும் தந்து கொண்டிருந்தார்.
கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால் பாடங்கள் பாஸாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தவள்,
அந்த ராகேஷூடனான தெய்வீக காதலுக்கு பின் ஒவ்வொரு தடவையும் அவன் கிளாஸை கட் செய்து விட்டு வெளியே செல்ல கூப்பிடும் போதெல்லாம், தான் கல்லூரிக்கு மட்டம் போடும்...
சாருமதி.
அத்தியாயம் 14.
அன்னை தன் கைபிடித்து இழுத்து தன்னருகே அமரவைத்து,"குட்டா! பேசாமல் அப்பாகிட்ட சொல்லி சாருவை பொண்ணு கேட்டு போவோமா?" என்று கேட்கவும் ஒரு நொடி முகம் மலர்ந்த தனையன்
"ப்ச்ச்... எப்படிமா? அவதான் என்னை பிடிக்கலைன்னு சொல்லுறாளே? பிடிக்கலைன்னு சொல்லுறவளைப் போய் எப்படி பொண்ணு கேட்குறது?" முகம் சுருக்கினான் மகன்.
"குட்டா! ஆனாலும் நீ இப்படி அநியாயத்துக்கு...
சொல்லியபடியே மருத்துவமனைக்குரிய லெட்டர் பேடில் போலிடாக்டர் பூபாலனைப் பற்றிய புகாரை எழுதத் தொடங்கினாள் சாருமதி.
அவள் செயலில் உள்ளுக்குள் லேசாக நடுக்கம் ஓடினாலும், அந்த இளவயது பெண் மருத்துவரிடம் கெஞ்சுவதற்கு அவன் இளவயது இடம் கொடாததால்,
"நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ... அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கும் தெரியும்" என்று கெத்தாக சொல்லியபடியே, கூட்டி வந்த நபரைக்...
சாருமதி.
அத்தியாயம் 13.
கிருஷ்ணா சென்ற வெகு நேரத்திற்கு பிறகும் கூட கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் சாருமதி.
வெளியே அமைதியாக தெரிந்ததற்கு நேர்மாறாக அவள் உள்ளம் குழம்பி தவித்துக் கொண்டிருந்தது.
'என்றைக்காவது ஒருநாள் தன்னிடம் நேரடியாக கிருஷ்ணா பேசும் போது தன் உள்ளத்து குமுறல்களையெல்லாம் கொட்டி தீர்த்துவிட வேண்டும்' என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தாள் தான்...
ஆனால்... இப்போதோ,'உன் வார்த்தைகள்...
'ஹையோ! இவன் பாத்துப் பாத்தே சாகடிக்குறான் என்னை? இதுல டாக்டர் நிர்மலா வேற, சின்னவரை இப்பல்லாம் அடிக்கடி ஹாஸ்பிடல் பக்கம் பாக்கமுடியுதுல்லன்னு சொல்லுறாங்க'
'இவங்க யதார்த்தமா சொல்லுறாங்களா? இல்லை எதையும் கவனிச்சிட்டு சொல்லுறாங்களான்னு தெரியலையே?'
'டேய்... நீ என்ன சொல்லணும்ணு நினைக்கிறியோ, அதை
சீக்கிரம் சொல்லித் தொலையேன்டா. நானும் நச்சுன்னு உன் நடுமண்டைல உறைக்குற மாதிரி பதிலைச் சொல்லி...
சாருமதி.
அத்தியாயம் 12.
"அப்படித்தான்... மூச்சை கொஞ்சம் நல்லா இழுத்து வெளியே விடுங்க பாட்டி" சொல்லிக்கொண்டே அந்த முதிய பெண்மணியை தன் டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துக் கொண்டிருந்தாள் சாருமதி.
"ஒன்னுமில்லை... லேசா நெஞ்சுச்சளி இருக்கு பாட்டி! அதனாலத் தான் இந்த காய்ச்சல். ஒரு ஊசி போட்டு மூனு நாளைக்கு மாத்திரையும் தர்றேன், சாப்பிடுங்க சரியாகிடும்"
"அப்படியே ஒரு இரண்டு மூனு...
ஹோ... என்று ஆர்பரித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள் சாருமதியும் அவளுடைய தோழர்களும்.
கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் தங்கள் உயர்படிப்பின் இறுதிகட்டத்தில் இருக்க, திடீரென்று ரேணுகாவிற்கு ஒரு ஆசை.
வேறொன்றுமில்லை... "மதுரை மருத்துவக் கல்லூரியில் நம் ஐந்து பேரின் கால்படாத இடமே கிடையாது. அதே போல நான் இப்போது படிக்கிற கல்லூரியிலும் நம்முடைய ஐந்து...
சாருமதி.
அத்தியாயம் 11.
கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்திருந்தார் வேதவல்லி.
பொருத்தப்பட்டிருந்த மாற்று சிறுநீரகம் அவர் உடம்போடு இணைந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதை நன்றாக உறுதி செய்த பின்னர் தான் வேதவல்லியை டிஸ்சார்ஜ் செய்திருந்தார்கள் மருத்துவர்கள்.
அதன் பிறகும் குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் வந்த மருத்துவ மறுபரிசோதனைகளையும் மதுரை வீட்டிலிருந்து முடித்துவிட்டே வந்திருந்தார்கள்.
சாருமதியும் முழு...