Friday, March 29, 2024

    Geethamaagumo Pallavi

    ஓம் கூடல் குமரா போற்றி!! 18 ஆதீஸ்வரனின் இல்லக்கதவுகள் இரண்டும் ஆளுக்கொருபுறம் விலகி நின்று உற்சாக வரவேற்பளித்தது..! அம்பிகா வலப்புறமும், சிவகாமி இடப்புறமுமாய் உள்ளே அடியெடுத்து வைக்க.. அதற்கு காரணமானவளோ இருவருக்கும் இடையில் இன்முகமாய் நின்றிருந்தாள். “வாங்க சிவகாமி..” என புன்னகை தவறாது தன் சிநேகிதியை வரவேற்ற சுந்தரேஸ்வரன், தன் மருமகளையும் வரவேற்கத் தவறவில்லை. அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வீட்டினுள்...

    Geethamaagumo Pallavi 17

    ஓம் குருபரனே போற்றி!! 17 அனுவிடம் வந்து சேர்ந்த அலைகள் செய்தியை மட்டும் அவளிடம் சேர்த்துச் செல்லவில்லை, அதிர்வையும் தான் சேர்த்துச் சென்றன.   பின் சுயம் சுற்றம் உணர்ந்து அவள் உடையவனை தேடி ஓடி வந்து சேர, பாவையின் பதற்றம் கணத்தில் கணவனிடத்தில் பற்றிப் படர்ந்தது.  “என்னாச்சு அனும்மா?”  வார்த்தை வரவில்லை வஞ்சியவளுக்கு. “ஹா.. ஹாஸ்பிடல் போகணும்..!!” அவள் தன் நிலை உரைக்காமலே இவனால்...
    “இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான். “நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து ஓடி விளையாண்டு சண்டை போட்டு வளர முடியாம போனதை நினச்சு வருத்தம் ஒருபுறம். மறஞ்சிருந்து உன்னவே பார்த்துட்டு இருந்தேன். ஓடி...
    ஓம் கீர்த்தியனே போற்றி!! 16 அவன் ஒற்றைப் புன்னகை அத்தனை வசீகரம்.! அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பகற்கனவில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் பல்லவி. ஸ்வரனையே ரசித்துப் பார்த்திருந்தவள் பார்வை மெல்ல அவனருகில் நின்றிருக்கும் தன்புறம் செல்ல, உடனே உதட்டை நெளித்து சுளித்தாள். ‘கொஞ்சம் சிரிச்சிருக்கலாம் பல்லவி நீ.. அப்போவே சுரேகா சொன்னா ஒழுங்கா போஸ் கொடுன்னு. கேட்டியா..?...
    “நீ இப்போ எழலைன்னா அடுத்து நான் உன் கால்ல விழவேண்டி இருக்கும் பரவாயில்லையா..?” என்றதில் வேகமாய் எழுந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள். சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. அவன் எதோ யோசனையில் இருக்க.. அவனையே பார்த்திருந்தவள் அவனை இதற்குமேலும் கடந்ததை எண்ணி கலங்க விட வைக்கக்கூடாது என்று நினைத்தாள். அதற்கு என்ன செய்வதென்று யோசித்த மறுநொடி.. மின்னலென அவன் கன்னத்தில்...
    ஓம் கிரிமகள் புதல்வா போற்றி!! 15 ஆதீஸ்வரனின் அகத்தினில் அளவிற்கும் அடங்காத ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரித்தது.!  ஆனால் முகமோ பேரமைதியை சுமந்திருக்க.. அவன் முன் எழுந்து வந்து மண்டியிட்டு அமர்ந்த அனுபல்லவி, அவன் இருபக்கத் தொடை மீது தன்னிரு கைகளையும் ஊன்றியபடி அவன் முகம் கண்டாள்.  ஒற்றைத்துளி..! அவள் கைமேல் விழுந்த அவனது கண்ணீர் துளி அவளுக்கு அவன் நிலையை நன்கு உணர்த்தியது. அவன்...
    அவள் அமைதியாய் இருக்க, “கோபம்.. யோசிக்குற சக்தியையே நம்ம கிட்ட இருந்து பறிச்சிடுது. அது அந்த ஒருநொடி நிகழ்வு தான். தெரிஞ்சே யாரும் செய்யுறதில்ல. அந்த ஒருநொடி நம்ம கட்டுப்பாட்டை இழந்திடுறோம். ஆனா தெளிவானதும், நம்ம நடந்துகிட்ட விதத்தை நினைச்சு ஒவ்வொரு நொடியும் வருந்துவோம். உன்னை முதல் முறையா சந்திக்கும்போது நான் அடிச்சதும் அப்படித்தான். இன்னுமே...
    ஓம் கார்த்திகேயா போற்றி!! 14 அந்தி வான வண்ணப் பட்டுடுத்தி, அங்கத்தில் அழகிய ஆபரணங்கள் பூட்டி, அளவான ஒப்பனைகளோடு அலங்காரப் பூஷிதையாய் காட்சிகொடுத்தாள் சுரேகா. கல்யாணப் பெண்ணிற்கே உரிய கலையான முகத்தோடு, இன்னும் சற்று நேரத்தில் தன் சகலமும் ஆகப் போகிறவனின் கைப்பற்றி திருமணச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தாள்.  மணமக்கள் இருவரும் அன்யோன்யமாய் சடங்குகளில் ஈடுபட்டு, இனிமையாய் பேசி சிரித்து, அவர்களது...
    அவனுக்கான உண்மைகள் அத்தனை உவப்பானதாய் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதை போட்டு உடைக்க முடியாது தானே இத்தனை ஆண்டுகளாய் காத்திருக்கிறாள். இன்று மனதை தயார் படுத்திக்கொண்டு அவள் சொல்ல நினைக்கும் போது, அவன் கேட்கத் தயாராய் இல்லை.  அப்படியே நாட்கள் கடந்து தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க, சரண் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று...
    ஓம் கதிர்காமனே போற்றி!! 13 இரண்டு வாரம் கடந்திருக்க, சரண் சிவகாமியோடு இயல்பாய் பேசிப் பழக ஆரம்பித்திருந்தான். தன் பாட்டி தன் குடும்பம் என தன் மனதில் ஆழமாய் பதியவைத்தவன், இனி அவரைப் பார்த்துக்கொள்வதும் தன் பொறுப்பு என்று எண்ணினான். பார்க்கிறானே அவனும், அவன் இரவெல்லாம் கண்விழித்துப் படிக்கும்போது துணைக்கு அவனருகில் தூங்காது விழித்திருக்கிறார் சிவகாமி. அதிகாலையில் அவன்...
    அதில் அவள் உடனே அவனிடம் இருந்து விலகி அவன் முகம் காண, “சரி நேரம் ஆச்சு. நாளைக்கு ஆபிஸ் இருக்கில்ல. நீ தூங்கு” என்று நகரச் செல்ல, அவனை நகரவிடாது பிடித்தவள் “நான் உங்களுக்கு எப்படி பட்ட வைஃப் ஆதி..?” என்றாள். அன்றே இதற்கான பதிலைக் கூறிவிட்டான். இதென்ன மறுபடியும் கேட்கிறாள். அவள் சாதாரணமாய் கேட்பதுபோல் படவில்லை அவனுக்கு. “நான்...
    ஓம் ஔவைக்கு அருளினோய் போற்றி!! 12 கூடத்தில் இருந்து அறுசுவை உணவின் மணம் கமழ்ந்து வந்தது..!  விரிக்கப்பட்டிருந்த தலை வாழை இலையின் ஒரு ஓரத்தில், உப்பும் நார்த்தங்காய் ஊறுகாயும் இடம்பெற்றிருக்க.. இனிப்பு வகையில் பல்லவி கைப்பட தயாரித்த கருப்பட்டி லட்டோடு, சிவகாமி வைத்த காய்கறி அவியலோடு, சுந்தரேஸ்வரனின் சாம்பார் மணந்து கொண்டிருக்க, உளுந்து வடையும் பாசிப்பருப்பு பாயசமும் ஸ்வரன்...
    ஓம் ஓங்காரனே போற்றி!! 11 ஒன்பது மணி பத்து மணித்துளிகள்..!   கடிகாரம் காட்டிய நேரத்தில் குற்றவுணர்வு ஓங்க, ஒடுங்கிப்போய் நின்றிருந்தனர் ஸ்வரனும் பல்லவியும்.  சுந்தரேஸ்வரனை வீடு முழுக்கத் தேடிவிட்டனர். எங்கு சென்றார் என்று இதுவரையில் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. “என்னால தான் தாத்தா எங்கயோ போயிட்டாரு” என்று புலம்பிய பல்லவியிடம், “அனு..! நீ கொஞ்ச நேரம் பேசாம இரு. போதும் இவ்வளவு நேரம் பேசுனதே”...
    நம்ப முடியாமல் ஸ்வரனைப் பார்க்க.. அவனோ அழகாய் கண் சிமிட்டி புன்னகைத்தான்.  பின் பல்லவி சரணையே பார்க்க, அவனோ அவளைக் கண்ட மாத்திரம் நாற்புறமும் கயிற்றால் கட்டி இழுக்கப்பட இளஞ்சிறுத்தை போல் எந்தப் பக்கம் பாய்வதென்று தெரியாது சீறிக் கொண்டு நின்றிருந்தான். “சரண்..! நீ உள்ள போ ப்பா” என்று சுந்தரேஸ்வரன் கூற, பல்லவியை முறைத்துக் கொண்டே...
    அடுத்த நாளே என்னை சிவகாமி அம்மா வீட்டுல விட்டுட்டு போய்ட்டாங்க. அதுதான் அவங்களை நான் கடைசியா பார்த்தது ஆதி. அடுத்தநாள் அம்மா இந்த உலகத்துல இல்லை. சூசைட் பண்ணிக்கிட்டாங்க. இன்னிக்கு தான் அது. இந்த நாள் வராம இருந்திருக்கலாம் எங்க வாழ்க்கைல” என்றதும் தான் கலையில் இருந்து அவள் ஒதுமாதிரி இருந்தது நினைவில் வந்தது. கேட்கும்...
    ஓம் ஒளியெலாமானாய் போற்றி!! 10 தெருவில் போவோர் வருவோரெல்லாம் அவ்விடத்தில் நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றனர்.  பார்ப்பதற்கு தாஜ்மஹால் அல்ல.. டாஸ்மார்க் அது.! அதன் வாசலில் அன்றாடம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இன்றும் நடந்து கொண்டிருந்தது.  “யோவ்..! ஏன்யா இப்படி தினமும் குடிச்சிட்டு ரோட்டுல குப்புற விழுந்து கிடக்குற.. பொட்டப் புள்ளைய வீட்டுல வெச்சுட்டு புத்தியே வராதாயா உனக்கு..? உனக்கு...

    Geethamaagumo Pallavi 9

    ஓம் ஐந்தமுது உகந்தாய் போற்றி!! 9 புத்தம் புது பொழுது மெல்லப் புலர்ந்தது. பொழுதின் பொலிவு பல்லவியிடத்தில் பெயருக்கும் இல்லை.  இந்நாள் மட்டும் வராமல் இருக்கக் கூடாதா என்று வருடா வருடம் நினைக்கத் தவறுவதில்லை அவள்.  நாள்காட்டியில் இருந்து கிழித்தோ.. கைப்பேசியில் இருந்து மறைத்தோ வைப்பதால் ஒன்றும் மாறப் போவதில்லை. நடந்து முடிந்ததை இனி யாரும் மாற்றப் போவதுமில்லை.  நினைக்கக் கூடாது...

    Geethamaagumo Pallavi 8 2

    “ஆதி..! நான் எதாவது தப்பு பண்ணிருந்தா அயம் சாரி. எதுவா இருந்தாலும் என்கிட்டே டைரெக்டா சொல்லிருக்கலாம் தானே. அதுக்கு ஏன் சரியா பேசாம இருக்கீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்போவும் போல பேசுங்க ஆதி” எனத் திரும்ப லேசாய் அதிர்ந்தாள். அவன் எப்போது அங்கிருந்து சென்றான் எனத் தெரியவில்லை. தற்போது அவன் அங்கு இல்லை....

    Geethamaagumo Pallavi 8 1

    ஓம் ஏறு மயிலூர்ந்தாய் போற்றி!! 8 எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருக்க.. பல்லவிக்கு ஸ்வரனின் நினைவெல்லாம் இல்லவே இல்லை. அவளுக்காக காத்திருக்கும் கணவனின் நினைவு கூட தன் நெஞ்சில் நிலவிய கனத்தினால் வரவில்லை. அவளை சுமந்து வந்த பேருந்தில் அகத்தினில் கூடிய சுமையோடு தான் அவளது பயணம் தொடர்ந்தது. அப்பேருந்தின் ஓட்டுனரோ தன்னருகில் நின்றிருந்த பெண்ணை நொடிக்கு ஒருமுறை காண்பதும்...

    Geethamaagumo Pallavi 7 2

    ஸ்வரன் கூறியது போல தன் சாகசக்காரி காஸ்ட்யூமை கழற்றிவிட்டு, தான் சமைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பல்லவி சுந்தரேஸ்வரனைப் பார்க்க, அவரும் பிரமாதமாய் எதையோ சமைத்து எடுத்து வந்திருக்கிறாள் என நினைத்து மூடி வைத்திருந்த ஹாட்கேசையே பார்த்திருந்தார். “டன் டடைன்..” என வாயில் மியூசிக் போட்டபடி மூடியிருந்த தட்டை பல்லவி விலக்க, அதைக் கண்டு...
    error: Content is protected !!