Tuesday, April 23, 2024

    Ennavan 35

    Ennavan 36

    Ennavan 34

    Ennavan 33

    Ennavan 32

    Ennavan

    Ennavan 31

    பகுதி - 31 திரும்பிப் படுத்தவள் தன்னைச் சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்திருக்க அவன் அமைதியாய் இருந்தது அவளை சந்தேகப்படுத்தியது. உடனே திரும்பினால் தான் வலிந்து போனதாய் ஆகிவிடும் மேலும் தன் கோபத்திற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றெண்ணி அமைதியாய் படித்திருக்க அவன் கரம் தன் வெற்றிடையில் படரவும் தலையணையை இறுக பற்றிக் கொண்டாள். இதயம்...

    Ennavan 30

    பகுதி - 30 “இப்பொழுது எதற்கு ஆதியையும் குழப்பி விட்டுள்ளாய்? அவனாவது தெளிவாக இருந்தான்.” என்று ஆதி சென்ற பின் ரேகாவிடம் வினவினார் கோபால். “நான் என்ன குழப்பினேன்? எதார்த்தத்தை கூறினேன்.” என்று அதற்கு அசால்ட்டாக பதில் தந்தார் ரேகா. “நீ இப்பொழுது நடிக்காதே... எனக்கு தெரியாதா உன்னை பற்றி. நீ வேண்டுமென்றே தான் அவனை இப்படி குழப்பி...

    Ennavan 29

    பகுதி - 29 “அவர் எங்கே அண்ணா?” என்று கேட்டபடியே முரளி முன் வந்து நின்றாள் அனு. “அவன் ப்ராஜெக்ட்டில் மாட்டிக் கொண்டான். முக்கியமான வேலை அதனால் தான் நான் வந்தேன். வா உன்னை வீட்டில் ட்ராப் செய்கிறேன்.” என்று அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, மனமே இல்லாமல் முரளியுடன் வீடு வந்து சேர்ந்தாள். ஆதியை பற்றி வெகு...

    Ennavan 28

    பகுதி - 28 “அத்தை…” தான் அழைப்பது ரேகாவிற்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதை உணர்ந்து மீண்டும் அழைத்தாள். “உனக்கு என்ன வேண்டும்?” என்று ரேகா மொட்டையாக கேட்க அனுவிற்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன… என்ன கேட்கிறீர்கள் அத்தை? எனக்கு புரியவில்லை.” என்று பவ்யமாக வெளிவந்தது அனுவின் கேள்வி. “என்னால் மரியாதையை விட்டெல்லாம் உன்னை என் வீட்டு மருமகளாய் ஏற்க...

    Ennavan 27

    பகுதி - 27 “ஏன்டா… உனக்கே இது ஓவராக இல்லை. சிஸ்டெரை அப்படி பார்க்க முடியவில்லை என்றால் ஏன் அங்கு விட்டு வந்து இங்கு புலம்புகிறாய்?” என்றது யாருமல்ல முரளியே. ஆதி குறுக்கும் நெடுக்கும் நடந்து அறையை அளந்து கொண்டிருப்பதை பார்த்து தான் அவன் இப்படிக் கேட்டது. “எனக்கும் ஒன்றும் புரியவில்லைடா… என்னுடைய காதல் தரும் அருகாமை...

    Ennavan 26

    பகுதி - 26 “சார்ஜ் போட சொன்னால் என்ன அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான் குளித்து முடித்து அவள் அருகில் வந்து. “உங்களுக்கு அழைப்பு வந்தது.” என்றவள் கடகடவென நிலா கூறிய அத்தனையும் ஒப்புவித்தாள். “நல்லதாகப் போயிற்று. இனி நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றுக் கூறி அவளை பின்னிருந்து அணைத்தான். “ம்… எப்படியோ அக்கா சரியாகிவிட்டார்கள்.” என்று...

    Ennavan 25

    பகுதி - 25 “என்ன புத்தகமெல்லாம் வாங்கியாயிற்றா?” என்று இரவு உணவை பரிமாறிக்கொண்டே இருவரையும் கேட்டாள் அனு. கயல் ஒன்றும் புரியாமல், “என்ன புத்தகம் அக்கா?” என்றாள். ஏதோ யோசனையில் சாப்பிட்டு கொண்டிருந்தருந்த ஆதி அதை கவனியாமல் சுதாரிக்கும் முன் அனு பேச்சை வளர்த்தாள். “நீ ஏதோ புத்தகம் வாங்க வேண்டும் என்றவல்லவா இவர் சொன்னார். அதற்குத் தானே...

    Ennavan 24

    பகுதி - 24 “அவளை பற்றி என்ன இருக்கிறது?” என ஆதி விழிக்க முரளி தனக்கு தெரிந்ததை சொல்ல முடிவெடுத்தான். “அவள் ஒரு பையனை விரும்புகிறாள்!...” என்றான் ஆதியின் கண்களை நேராய் பார்த்து. அதை கேட்டு அதிர்ந்தவன், “உளராதடா… அது சின்ன பொண்ணு, ஸ்கூல் தான் படிக்கிறது. நீ ஏதோ தப்பாக புரிந்திருக்கிறாய்.” என்றான் ஆதி பதறியடித்து. “நான் ஏன்டா...

    Ennavan 23

    பகுதி - 23 அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள், “என்ன சொல்கிறீர்கள்? நிஜமாகாவா?”  “ஆம்… இனி நிலா நம் வாழ்வுக்குள் வர மாட்டாள். ஆனால் அது தற்காலிகம் தான்…” என்றான் சற்று தயக்கத்துடன். “என்னை கீழே இறக்கி விடுங்கள்.” என்று அவன் தோள்களை குலுக்க ‘முடியாது’ என்று தலை அசைத்தான். “அப்பொழுது கதவையாவது மூட விடுங்கள்.” என்று சிணுங்க அவளை இறக்கிவிட்டான்....

    Ennavan 22

    பகுதி - 22 தன் பெயரை முதன்முதலாய் அவள் குரலில் கேட்டதும் தன் கோபமெல்லாம் எங்கோ பறந்தோடிய உணர்வு. ‘ம்ம்…’ என்று கண்களை திறவாமல் முணுகியவனை பார்த்தவளுக்கு வெற்றிப் புன்னகை அரும்பியது. “என் மேல் கோபமா?” என்று மீண்டும் அவன் காதுகளில் அவள் முணுக அதற்கும் ம்… போட்டான். போடுவதை தவிர வேறெதுவும் செய்யும் நிலையில் அவன் இல்லை என்றே...

    Ennavan 21

    பகுதி - 21 “என்ன...?” என்று ஆதியும், கோபாலும் சேர்ந்து அதிர  ரேகா இருவரையும் முறைத்தார். “நிலா இதெல்லாம் தவறு. வேண்டுமென்றால் அங்கு வந்து இரு, இங்கு எதற்கு?” என்றார் கோபால் முன்னெச்சரிக்கையாக. “அத்தான் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நானும்  இருப்பேன். இனியும் நீங்கள் என்னை ஏமாற்றமுடியாது.” என்றாள் நிலா தீர்க்கமாக. “உமா… என்ன இதை எல்லாம் நீ...

    Ennavan 20

    பகுதி - 20 உள்ளே கால் எடுத்து வைத்த நொடி பாப் மற்றும் பலூன் ஒன்று அவர்கள் இருவரின் மேல் வெடித்தது. அதில் பயந்த அனு கண்களை மூடி அவன் தோளில் முகம் புதைக்க அதில் சற்று பின் நோக்கி நகர்ந்தனர். “வெல்கம் Mr. & Mrs. ஆதித்யா”  என்று சத்தமாக கத்தும் சத்தம் கேட்டு முகம்...

    Ennavan 19

    பகுதி - 19 “ஷிட்… ஷோ கேன்சல் ஆகிவிட்டது.” என்று ஆதி கடுப்பாக அனு முகம் கூம்பிவிட்டது. அவனின் முகபாவனையை கவனித்து தன்னை சமன்படுத்தியவள், சமாளிப்பாக அவனை ஏறிட்டாள், “பரவாயில்லை வேறு எங்காவது போகலாம்…” “இல்லைடா… உன்னை ஆசையாய் கூப்பிட்டு வந்து விட்டு இப்போது பார்…” தன் ஆசை பொய்த்தது மட்டுமில்லாமல் அனுவின் எதிர்பார்ப்பும் இப்படி சப்பென்று ஆகிவிட்டதே...

    Ennavan 18

    பகுதி - 18 “ஓ… அப்பொழுது… முரளி அண்ணா இதைச் சொல்லத் தான் அன்று உங்களை அழைத்தாரா?” எனவும் அவன் தலை தன்னால் ஆடியது. இரண்டு நிமிடம் மௌனம் காத்தவள் மனம் நிலாவிற்காக வருந்தியது. “பாவம் அவர்கள்… இவ்வளவு நாள் உங்களை விரும்பி இருப்பார்கள். ப்ச்...பெற்றோர்கள் செய்த தவறால் பாதிக்கப்பட்டது என்னவோ நிலா அக்கா தான். அவர்...

    Ennavan 17

     பகுதி - 17 “என்ன சொல்கிறான் உங்கள் மகன்?” என்று வினவினார் ரேகா முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டு.  “அவன் வர மாட்டான்…” என்று கோபால் சொல்லி முடிப்பதற்குள் ரேகா குறுக்கிட்டார், “அதானே பார்த்தேன்... அவன் பெண்டாட்டி தான் அவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாளே. போதாகுறைக்கு நீங்களும் நேற்றிலிருந்து அவள் புராணம் பாடுகிறீர்கள்.” தன் பேச்சை யாரும்...

    Ennavan 16

    பகுதி - 16 தன் பார்வையில் கயல் பட்டதும் வேகமாக தன் பாவனையை மாற்றியவள் அவன் மீது ஒரு பார்வை வீசிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்து இடையை கட்டிக்கொண்டாள், “தாமதமாக வந்ததற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? இன்றாவது இங்கேயே தங்குகிறீர்களே… அதுவே போதும் எனக்கு.” என்றவளை நம்பாமல் குனிந்து பார்த்தவன் இது கனவா இல்லை...

    Ennavan 15

    பகுதி - 15 அழைப்பு மணி ஒலி கேட்டு விழித்த கயல் தன் தமக்கை உறங்குவதை கண்டு அவளை எழுப்ப மனம் இன்றி தானே கதவை திறக்க அங்கு சோர்வாக நின்றிருந்தான் ஆதி. “மாமா…” என்று அவனுக்கு வழி விட அவன் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தன் அறையில் புகுந்து தன் மேலாடை துறந்து கட்டிலில் தலை...

    Ennavan 14

    பகுதி - 14 “என்ன?” என்று முகம் சுளித்தவன், “போனுக்காகவா இவ்வளவு அழுகை?” என்று லேசாய் முறுவலித்து அவள் கன்னம் ஏந்தி உப்பு நீரை துடைத்தான், “சரி ஏன் உடைத்தாய்?” என்று வினவ மீண்டும் அவள் கண்கள் உவப்பு நீரை இறக்க தயாராகியது.  “இதற்கெல்லாம் ஏன்டி இவ்வளவு அழுகிறாய்?” என்று சலித்தவன் கோபம் கொள்வதற்குள் முந்திக்கொண்டாள், “எனக்கு...

    Ennavan 13

    பகுதி - 13 “என்னடி வாய் ரொம்ப நீளுகிறது? உன் தந்தையை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய். உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லைடி. ஒழுங்கு மரியாதையாய் வீட்டிற்கு வரும் வழியைப் பார்.” என்று மறைமுக மிரட்டல் விடுத்தார் அவள் அத்தை. “என் வீட்டில் தான் நான் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவரை...

    Ennavan 12

    பகுதி - 12 “அக்கா இன்னும் மாமா வரவில்லையா? கொஞ்சமாவது சாப்பிடு அக்கா மணி பத்தாகிறது பார்.” என்று தன் அறையிலிருந்து வெளிவந்து மனம்தாளாமல் கயல் கேட்க அனுவோ, “ப்ச்… எனக்கு இப்போது வேண்டாம். அவர் வரட்டும், நான் அவருடன் சாப்பிட்டுக் கொள்கிறேன்.” என்று விட்டேற்றியாய் பதிலளித்தாள் தன் பார்வையை வாயிலிலிருந்து பிரிக்காது. சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய்...
    error: Content is protected !!