Monday, April 29, 2024

    Nee Theivam Thedum Silaiyo

    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 16 குகன், அண்ணனை அழைத்தான்.. மதிய நேரம். எப்போதும் எடுத்ததும் அண்ணா இல்லை, நீலா என விளிப்பான். இப்போது அப்படி ஒரு அழைப்பு இல்லை.. நீலகண்டன் போன் எடுத்ததும், குகன் “வீடு ஒன்னு இங்கே ஆபீஸ் கிட்ட இருக்கு.. செகண்ட் சேல்ஸ்.. பேஸ்மென்ட், ஃப்ரஸ்ட் ப்ளோர் என இரண்டு பிளாட். எங்களுக்கு...
    ரஞ்சனிக்கு, அதாவது ரஞ்சனி பெயரில் ஒரு கார் மெக்கானி ஷாப் இருக்கிறது.. அதையும் ரகுதான் கவனிக்கிறான். ஆனால், கணக்குகள்.. வரவு செலவு எல்லாம் ரஞ்சனி, கல்லூரி செல்ல தொடங்கியதும்.. அவள் பெயருக்கு மாற்றிவிட்டார் கண்ணன். எனவே, ரஞ்சனியின் செலவிற்கு, அதில் வரும் வருமானத்தை பயன்படுத்துகிறாள். எதற்கும் ரகுவை கேட்பதில்லை.. தனக்கு தேவையானதை தானே வாங்குவது என...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 15 ரஞ்சனி, டூ வ்வீலரில் கல்லூரி செல்ல தொடங்கினாள். மாதவனுக்கு அவ்வளவு கோவம், ‘எப்படி! அப்பா இல்லையென்றால்.. என்னிடம் அனுமதி பெற வேண்டாமா.. பயமில்லையா.. நான் இருக்கிறேன் என தெரியவில்லையா அவளுக்கு’ என யோசனைதான் அன்று முழுவதும். ஆனாலும் வேலை அவனை தொடர்ந்து யோசிக்க விடவில்லை. கட்சி அலுவலகம் கிளம்பிவிட்டான், மாதவன். அன்று இரவு...
    என்னவென சொல்லுவான் “ஒண்ணுமில்ல.. என்ன படிக்கிறீங்க” என்றான்.. மரியாதையாக. ரஞ்சனிக்கு, ‘அவனின் குரலே இப்படிதானா.. இல்லை, ஏதாவது பிரச்சனையா.. எதற்காக அழைத்தான்’ என யோசனை உள்ளே ஓடுகிறது. ஆனாலும், தன்னிடம் பேசுகிறான்.. என புதிதாக முளைத்த ஆசை துளிர்.. வெளியே பச்சை கொடி காட்ட.. இப்போது அவனின் கேள்வியில்.. என்ன பேசுவது என தெரியாமல் இருந்தத,...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 14 குகன், அண்ணன் சொல் தட்டாமல் வீடு சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தான் மதியம். அதற்குள் நீலகண்டன், தங்களின் குடும்பம், தங்களின் தொழில்.. என எல்லாம் பேசியிருந்தான் அர்ச்சனா குடும்பத்தாரிடம். அதை கொண்டு, அர்ச்சனாவின் வீட்டில் கலந்து பேசி.. ஒரு முடிவு எடுத்திருந்தனர். அதனால், பெரியவர்கள் நீலகண்டனிடம் பேசுவதற்காக வந்தனர்.. “இல்ல, குகனும்...
    குகன், அர்ச்சனாவை பற்றி சொல்லிக் கொண்டே வந்தான் ‘icuவில் இருக்காண்ணா, இப்போது ரூம்மிற்கு ஷிபிட் ஆகிடுவா.. நீ எப்போ வந்த..’ என பேசிக் கொண்டே வந்தான். எப்போதும் தம்பியின் பேச்சை ரசிப்பவன்.. இப்போது அமைதியாக வந்தான். இவர்கள் செல்லவும் அர்ச்சனாவை ரூமில் விடவும் சரியாக இருந்தது. எனவே, ஆண்கள் இருவரும் வெளியே நின்றனர். குகன், இப்போது யாருடனோ...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 13 நீலகண்டனின், நான்காவது அழைப்பில்தான் குகன் போனை எடுத்தான். அதுவரை நீலகண்டனின் மனம் வேண்டிக் கொண்டும்.. திட்டிக் கொண்டும்.. இருந்தது தம்பியை.  இன்னதுதான் பிரச்சனை என தெரிவதற்கு முன்னால் ஒரு குழப்பம் வரும்.. ‘என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற குழப்பம்..’ அது ஒரு திருகுவலி.. குடைந்து எடுக்கும் வலி அது.. அந்த வலியில்தான் ...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 12 இரண்டு நாட்கள் சென்றது.. அப்போதுதான், கடை அடைத்துவிட்டு.. கார்த்திக் உடன் சென்று உணவு உண்ண வந்திருந்தான், நீலகண்டன்.  என்னமோ இன்று தம்பியின் நினைவு அதிகமாக எழுந்தது அவனுள் கார்த்தியிடம் புலம்பல்கள் நீலகண்டனுக்கு, குகனை பற்றி. மனது உறுத்த தொடங்கியது.. நான்கு நாட்கள் பேசாமல் இருப்பான்.. ஐந்தாவது நாள்.. ஒன்று வந்து நிற்பான், இல்லை.....
    பிரசாந்த், மாதவனின் அருகில் வந்து அமர்ந்தான். ஏனோ தங்கைக்கு கோவமாக வந்தது, அவனை பார்க்கவே. ரஞ்சனிக்கு வீட்டில் இருக்கவே ஒருமாதிரி இருந்தது.. யாரும் தன்னை பெரிதாக கவனிப்பது இல்லை.. எப்போதும் அப்படிதான். ஆனால், மாதவன் எப்போதும் அப்படி இல்லை, வீட்டில் இருக்கும் நாளில், தன் தங்கையோடுதான் உண்ணுவான்.. அடிக்கடி மேலே அவளின் அறைக்கு வருவான்.....
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 11 நீலகண்டன் இரவு உறங்க நேரம் ஆனாலும்.. அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது அவனுக்கு. பரபரப்பாக குளித்து.. கிட்சேன் சென்றான். காலையில் எப்போதும் போல.. பாட்டு சத்தம் கேட்டது.. “பிட்டுக்கு மண் சுமந்து.. கங்கை தலை சுமந்து.. உமையை தன் இடம் சுமந்தவன்.. ஈசன்.. உமையை தன் இடம் சுமந்தவன்..” என எதோ பாட்டு அவன் காதில் விழுந்தது. இழுத்து ஒரு...
    ரஞ்சனிக்கு, பழக்கமான தெரிந்த முகங்கள் மிக குறைவு.. தந்தை, அண்ணன், வேலை செய்யும் ஒரு தம்பதி. தந்தை வாரத்தில் நான்கு நாட்கள் பெண்ணோடு கண்டிப்பாக இருப்பார். மற்ற நாட்களில்.. வெளியூர் சென்றாலும் போனில் பேசி பெண்ணை தொடர்பிலேயே வைத்திருப்பார். பார்த்து பார்த்து வளர்த்தார் ராதா.. பெண்ணை. அன்னை இறந்தது முதல்.. ரஞ்சனி தனியானாள். அவளை கவனிக்க...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 1௦ கண்ணன் வள்ளியின் பெற்றோர் கந்தசாமி பொன்னிதேவி. கண்ணனின் வாலிப வயதில் கந்தசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு.. இறந்தார். அது முதற்கொண்டு குடும்ப பொறுப்பும் கண்ணனுடையது என ஆகியது. நிலம் குத்தகை.. தந்தை இருந்தவரை விவசாயம்.. அதனை குத்தகை விட்டார், கண்ணன்.  கண்ணன் தொழில் கார் மெக்கானிக்.  எனவே சொந்த ஊரில் மெக்கானிக் ஷாப் ...
    அதியமான் கார்த்தி இருவரும் வந்தனர். அதியமானுக்கு, கார்த்திக் சொன்னதை கேட்டு.. அதிர்ச்சி.’ கண்ணன் அப்படி செய்தாரா.. அப்படி என்ன பிரச்சனை..’ என நூறுமுறை கேட்டார்.. தன் மகனை. பாவம் அவனுக்கு என்ன தெரியும்.. அவனும் பொறுமையாக பேசிக் கொண்டே அழைத்து வந்தான் கண்ணன் வீட்டிற்கு. இங்கே அளவான கூட்டம் உள்ளூரில் எல்லோரும் கூடி இருந்தனர்.. கட்சியின்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 9 நீலகண்டனுக்கு, அடுத்த அரைமணி நேரம் ஒன்றும் புரியவில்லை. இதை எப்படி எடுப்பது என புரியவேயில்லை.. அவனின் அறிவுக்கும், மனதில் தோன்றும் பிம்பங்களுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு நிகழ்வுதான், சற்று முன் நடந்தது. அதில் மாமா இறந்தது அவனை இன்னும் வந்தடையவேயில்லை. தமிழரசுதான், சுழன்றுக் கொண்டிருந்தார்.. “என்னாச்சு.. அவ்வளவுதானா” என ஏதேதோ மருத்துவர்களிடம் கேட்டுக்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 8 நீலகண்டன், காலையிலிருந்து ஒரு சுயஅசலில் இருந்தான். ‘ஏன் எனக்கு மனது அங்கே செல்ல வேண்டும்.. தம்பி அனுப்பிய விவரங்கள் ஏன் மனதில் பதிய மறுக்கிறது என குழப்பம் அவனுக்கு. கூடாது இது சரி கிடையாது.. என் வாழ்க்கை.. அதன் முடிவுகள் எல்லாம்,  நாளை தம்பியையும் கண்டிப்பாக பாதிக்கும்.. ஏதும் தப்பாகி...
    அந்த ஐந்து நிமிடத்தில் நாலு தரம் பார்த்திருப்பான் நீலகண்டன்.. எதோ க்ரே கலர் காட்டன் சுடிதார்.. லெகின்ஸ்.. நீண்ட பின்னல்.. கண்ணில் அஞ்சனம்.. ஜிமிக்கைகள் ஆட வண்டியை லேசாக பின்னால் இழுத்து.. அதில் வாகாக அமர்ந்து, எதோ முனுமுனுத்தபடி ஸெல்ப் ஸ்ட்ராட் செய்ய.. அதுவும் ஸ்டார்ட் ஆனது அழகாக. அப்போதுதான் அவனுக்கு ‘ஓ ப்ரே...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 7 நீலகண்டன் வெளியே வர.. ரகு நின்றிருந்தான்.  நீலகண்டன்  “பார்த்துக்கோங்க.. நான் கிளம்புகிறேன்..” என்றான் ஏதுமில்லா பாவனையில். ரகு “இருங்க.. சித்தப்பா என்ன சொன்னார்..” என்றான். நீலகண்டனுக்கு, அவர் தன்னிடம் பேசியதாக தெரியவேயில்லை எதோ புலம்பியதாக தெரிந்தது அவனிற்கு.. எனவே, ரகு, எதற்கு இப்படி கேட்க்கிறார் எனவும் தோன்ற.. “என்ன சொல்லுவார்.. வலி வேதனை.. அவ்வளவுதான்,...
    கண்ணன் அங்கே தனியே படுத்திருந்தார்.. உபகரணங்கள் நிறைய இருந்தது.. அவரை பார்க்கவே முதலில் அடையாளம் தெரியவில்லை.. அவர் முதலில் அடையாளம் தெரியுமளவு இல்லை.. இயல்பானவர்களை விட மெலிந்து உருகி ஒட்டி இருந்தார்.. இப்போது நேற்றிலிருந்து எதோ காய்ச்சல் அதனால் தனியாக இருக்கிறார். நம்மிலிருந்து தொற்று ஏதும் அவருக்கு பாதிக்காமல் இருக்க.. இந்த பாதுகாப்புகள். மெல்லிய...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 6 நீலகண்டன் அவனின் தாய் மாமா வீட்டிற்கு சென்றான். காலையில் கடையை திறந்து வைத்துவிட்டு கோகுலிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, தன்னிடம் அழைத்து பேசுபவரை.. போனில் அழைத்து வழிக் கேட்டுக் கொண்டு சென்றான். ‘பெரிதாக எந்த விரோதமும் கூடாது.. எதோ உடல்நலமில்லாதவர் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும்.’ என மனதில் முடிவோடு சென்றான். தன்னுடைய கடையிலிருந்து...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 5 நீலகண்டனுக்கு, அந்த அழைப்பு மணியோசையை கேட்டதும் தம்பிதான் வந்திருப்பான் என தோன்றியது. அந்த எண்ணத்தை பொய்யாக்காமல் நின்றிருந்தான் குகன்.  புல் ட்ரவல் ட்ரெஸ்சில் நின்றிருந்தான். கோட், ஹெல்மெட்.. ஷோல்டர் பாக்.. கை கிளொவ்ஸ் என டூ வ்வீலரில் வந்ததற்கான அனைத்து அம்சங்களோடும் நின்றிருந்தான் தம்பி. நீலகண்டனுக்கு கோவம்தான்.. ‘வண்டியில் வந்திருக்கிறான்’ எனவும். ஆனால்,...
    error: Content is protected !!