Madavaral In Thunai
33
“அம்மா இவங்க யாருன்னு நீங்களே உங்க வாயால சொல்லுங்கம்மா” என்றான் உதிரன்.
“அவ என்ன சொல்றது நான் சொல்றேன்டா” என்றார் லதா.
“இவ என் கூட பிறந்து என் வாழ்க்கையை கெடுத்தவ”
“லதா” என்று கத்தினார் சீதா.
“சீய் நீ வாயை மூடு”
“அதைத்தான் நானும் சொல்றேன் நீ வாயை மூடு. நீ கெட்ட எண்ணம் பிடிச்சவன்னு தெரியும் ஆனா எந்தளவுக்குன்னு...
‘இவ என்ன சொல்ல வர்றா’ என்று அவர்கள் யோசிக்க “அத்தை இருக்க வரை இப்படித்தான் நடக்கும். நாம இப்படி தான் பூப்பறிச்சுட்டு உட்கார்ந்திருக்கணும்க்கா” என்றவள் குறிப்பை கொடுத்திருக்க மற்ற இருவரும் அதை தீவிரமாய் செயல்படுத்த முனைந்தனர்.
அன்று ஏகாதசி முத்துலட்சுமி ஒரு பொழுது மட்டுமே உணவருந்துவார். அவருக்கென்று தனியாகவே அன்று சமையல் நடக்கும். அதை பயன்படுத்திக்கொள்ள...
32
“இந்திரா எப்படியிருக்கே??” என்றாள் அவளை சில நாட்கள் கழித்து பார்த்த அவளின் தோழி.
“நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க??”
“ஹ்ம்ம் இருக்கேன்”
“ஆளு நல்லா பார்க்க பளபளன்னு ஆகிட்ட இந்திரா. காசு வந்தா அழகும் கூடிடும் போல...” என்று மற்றவளை புகழ்ந்து சொல்ல அதில் ஒரு மிடுக்கு வந்து அமர்ந்துக் கொண்டது இந்திராவினிடத்தில்.
“அப்படியா சொல்றே...”
“அப்படித்தான் இந்த ஊரே பேசிக்குது??”
“என்ன பேசுது??”
“உனக்கு...
31
திருமணத்திற்கு வந்திருந்த சந்திரா தங்கையின் பேச்சில் மனமுடைந்து சாப்பிடாமலே அங்கிருந்து கிளம்ப எங்கிருந்தோ வந்தார் முத்துலட்சுமி.
“என்னம்மா எங்கே கிளம்பிட்டே??”
“கல்யாணம் முடிஞ்சிருச்சுல்லம்மா அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். பாட்டி வீட்டில தனியா இருப்பாங்க, நான் போனா தான் அவங்களை கவனிக்க முடியும்”
“அவங்களையும் இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம்லம்மா”
“அவங்களுக்கு கண்ணு சரியா தெரியலை. அதான் விட்டுட்டு வந்தோம்மா...”
“சரி சரி நான்...
30
“என்ன ரெண்டு பேரும் அப்படியே திகைச்சு போய் நிக்கறீங்க பதில் சொல்லுங்க”
“டேய் மாமா பையா நீயாச்சும் சொல்லுடா??” என்றான் உதிரன் அபிஷேக்கை பார்த்து.
இப்போது அபிஷேக்கின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி. கடைசியில் தான் யார் என்பது வரையிலும் கூட இவன் கண்டுப்பிடித்துவிட்டானே என்று தான் பார்த்தான் அவன் மற்றவனை.
“சித்தீ...” என்று உதிரன் ராகமாக இழுக்க “வாயை...
29
“சொல்லு சிமி இதுக்கு என்ன அர்த்தம்??”
“எதுக்கு கேட்கறீங்க??”
“நீ பிஏ தமிழ் தானே பண்ணே?? உனக்கு கண்டிப்பா இதுக்கு அர்த்தம் தெரியும் சொல்லு சிமி... புள்ளி களவன்னா என்ன?? அதை திருப்பிப்போட்ட வலி கொடுக்கும்ன்னு சொல்றாங்க... இது வழியா இல்லை வலியா”
“இதை நானும் படிச்சு பார்த்தேன் ஆனா மாமா இதை எதுக்கு எழுதினாங்கன்னு எனக்கு புரியலை”
“களவன்னா...
28
“நாம எங்கயோ தப்பு பண்ணுறோம் என்னன்னு தான் புரியலைம்மா...”
“எனக்கும் அதே தான் யோசனையா இருக்கு... எல்லாமே இப்போ நம்ம கையை விட்டு போய்ட்டுகிட்டு இருக்க மாதிரி தோணுது...”
“பக்கத்துலவே வைச்சுட்டு ரொம்ப தேடுறோம்ன்னு நினைக்கிறேன். இனி நமக்கு அதிக நேரமில்லை அவங்க நம்மளை கண்டுப்பிடிக்கறதுக்குள்ள அங்க இருக்கற எல்லா டாக்குமெண்ட்ஸ் எடுக்கணும்”
“உதிரனோட அப்பன் ஏதேதோ வரைஞ்சு...
27
சினமிகா “அத்தை” என்று சொல்லவும் அவர்களின் அறைக்கதவை சீதா தட்டவும் சரியாக இருந்தது. “உதிரா கதவைத் திற” என்று படபடவென்று அவர் தட்ட சினமிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறை விளக்கை ஒளிரவிட்டு உதிரன் கதவை திறக்கச் சென்றான்.
வெளியில் நின்றிருந்த சீதாவிற்கு வியர்த்திருந்தது. எதையோ பார்த்து பயந்த தோற்றம் அவரிடத்தில். வேகமாக அறைக்குள் வந்து...
26
“சிமி நீ எழுந்துக்க வேணாம், பேசாம படு. கையில ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு” என்று அவளுக்கு சுட்டிக்காட்டினான் உதிரன்.
சினமிகாவின் முகம் முழுதும் வியர்த்திருந்தது. “என்னாச்சு என்ன பண்ணுது உனக்கு??” என்று கேட்க அவள் ஒன்றும் இல்லையென்பதாய் தலையாட்டினாள்.
சினமிகாவிற்கு கண்களை மூடவே பயமாக இருந்தது. அப்பெண்மணியின் முகம் கண்களை திறந்த போதும் கூட எதிரில் நிற்பது...
25
மேலே கேட்டே மனைவியின் குரலில் பதட்டம் கூட “சிமி” என்றழைத்தவாறே வேகமாய் படியேறினான் உதிரன். சக்திக்கு என்னவோ ஏதோவென்று இருந்த போதும் ஒன்றும் அதிகம் காட்டிக்கொள்ளாமல் அவரும் பின்னோடே சென்றார்.
சிவக்குமாரின் முகம் தான் பதட்டத்துடன் பயமும் கூடி முகம் வெளிறிப்போயிருந்தது. ஒருவித நடுக்கத்துடனே அவர் மேலே பார்த்துக்கொண்டே ஏறினார்.
உதிரன் முதல் ஆளாய் மேலேறி வந்திருந்தவன்...
24
“என்ன சொன்னாங்க அவங்க??” என்றார் தாய்.
“என்ன சொல்ல முடியும்மா, நம்ம சொல்றதை அவங்க கேட்டு தானே ஆகணும்” என்று மகன் கோணலாய் ஒரு சிரிப்பை சிந்தினான்.
“ஹ்ம்ம் நல்லது, இப்படியே எவ்வளவு நாளைக்கு தான் தேடிட்டே இருக்கறது. முதல்ல அந்த வீட்டை நம்ம கைக்கு கொண்டு வரணும். அதுக்கு நீ அவங்களுக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கணும்”
“இப்போவே...
23
உதிரனும் அவனின் சித்தப்பா சிவக்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நேரம் உள்ளறையில் ஏதோ கீழே விழுந்த சத்தம் கேட்க இருவருமே அங்கு விரைந்தனர்.
அந்த அறையில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த படம் தான் கீழே விழுந்திருந்தது. உதிரன் அருகே சென்று அந்த படத்தை கையில் எடுத்தவன் படத்தை முழுதாய் பார்க்க அதிலிருந்த அப்பெண்மணி ஆக்ரோஷமாய் பார்ப்பது போன்ற...
22
உதிரன் ஊஞ்சலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான். சமையலறையில் இருந்து வெளியில் வந்த அவன் மனைவி “என்னங்க பூரி இன்னொன்னு கொண்டு வரவா??”
“இதென்ன கேள்வி கொண்டுட்டு வா”
சினமிகா நான்கு பூரியை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தாள். கணவனின் தட்டில் ஒவ்வொன்றாய் எடுத்து வைக்க “அம்மா தாயே நீ பாட்டுக்கு அடுக்கிடாதா. ஏற்கனவே பத்து பூரி...
“அந்த வார்த்தை எல்லாம் அவருக்கு தான் பொருந்தும். நான் இதுக்கெல்லாம் வருத்தப்படலை. உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரவா” என்று அவள் சாதாரணமாய் கேட்க உதிரன் மெச்சுதலாய் பார்த்தான் சினமிகாவை.
“கொண்டு வா... ஒண்ணில்லை ரெண்டு. அவருக்கு மரியாதை தெரியாம இருக்கலாம் நமக்கு தெரியுமே”
“நீங்க சொல்லலைன்னாலும் நான் அதை தான் செஞ்சிருப்பேன்” என்றவள் உள்ளே சென்றாள்.
சினமிகாவிற்கு அவர்...
21
“ஹேய் வினயா உனக்கு இப்போ தான் இங்க வர்றதுக்கு நேரம் கிடைச்சதா??” என்று தன் கணவனின் சித்தப்பா மகள் வினயாவை சந்தோஷமாக வரவேற்றாள் சினமிகா.
“எங்கண்ணி உடனே வரமுடிஞ்சது. பைனல் இயர் எக்ஸாம்ஸ் எல்லாம் வந்திடுச்சு. அதெல்லாம் முடிச்சுட்டு அப்பாடா ஒரு வழியா காலேஜ் படிப்பை முடிச்சிட்டேன்னு இருக்கு. இப்போ தான் கொஞ்சம் ப்ரீ ஆனேன்,...
20
கடைக்கு மேலும் ஒரு ஆள் வேலைக்கு வந்திருக்க அவர்கள் அமர சரியான இருக்கை வேண்டும் மேஜை ஒன்று கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று சினமிகா கேட்டிருந்தாள்.
“மேல அப்பா ரூம்ல ரெண்டு டேபிள் இருக்கும், மர சேர் வேற சேர்ஸ் கூட இருக்கும் நினைக்கிறேன். கடை பையன் வந்தா அவனை வைச்சுக்கிட்டு அதை எடுத்து...
18
ஒரு வாரம் தன்னை போல சென்றிருந்தது. உதிரனுக்கு காலில் காயம் இப்போது நன்றாகவே ஆறியிருந்தது. சினமிகா தான் அவனை அங்கிங்கு நகரவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு கடையை மல்லிகா மற்றும் தன் மாமியாரின் பொறுப்பில்விட்டு அவள் சிரத்தையாய் தன் கணவனை தான் கவனித்தாள்.
“நீ இப்படி இருந்தா எனக்கு பேஷன்ட்ன்னு பீல்...
17
வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் உதிரனும் சினமிகாவும். உதிரனுக்கு உதவிய ஷியாம் மருத்துமனையில் இருந்து அப்படியே கிளம்பியிருந்தான்.
வேலன் அழைத்து வந்திருந்த காரில் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். சீதாவை பொறுத்தவரை மகன் செத்து பிழைத்து வந்ததாகத் தான் நினைத்தார். தமிழிடம் சொல்லி திருஷ்டி கழித்துவிட்டு உள்ளே அழைக்கச் சொன்னார்.
அவர் சொன்னது போலவே தமிழும் செய்ய உள்ளே வந்தனர்....
16
கடையில் பணிக்கு அமர்ந்தியிருந்த பெண் வேலனுக்கு அழைத்து அவள் கேட்ட விஷயத்தை சொல்லியிருக்க அவர் உடனே கிளம்பியிருந்தார்.
மனைவியை மட்டும் தனியே அழைத்தவர் “தமிழ் நான் சினா வீட்டுக்கு போறேன். அங்க போயிட்டு நான் போன் பண்றேன், நீ வர்ற மாதிரி இருந்தா சொல்றேன். நீ தயாரா இரு” என்றார்.
“என்னங்க என்னாச்சுங்க நீங்க பதட்டமா இருக்க...
“எதுக்கு இப்படி இழுக்கறீங்க?? அத்” என்றவள் அவர் நின்றிருந்த இடத்தை பார்த்திட “அப்போவே போய்ட்டாங்க. குட் மம்மி”
“இப்படி உட்காரு” என்றவன் அவளை தன் மடி மீது அமர்த்திக் கொண்டான்.
“வேணாம். அத்தை வருவாங்க”
“வரமாட்டாங்க நீயா உள்ள போற வரை அவங்க வெளிய வரமாட்டாங்க...”
“என் மானத்தை வாங்குறீங்க”
“பரவாயில்லை” என்றவன் “நிஜமாவே இது எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சு தான்...