Madavaral In Thunai
“ஏய் என்ன??”
“என்ன??” என்றான் அவனும் விடாது.
“இது என் வீடு...”
“அதுக்கு...”
“என்னை நீ மிரட்டறியா??”
“அந்த சம்பவம் எப்போ நடந்துச்சு??”
“என்ன நக்கல் பண்றியா??”
“நீலா” என்று வந்தாள் சினமிகா.
“நீ எதுக்கு எங்களுக்கு நடுவுல வர்றே என்ன வேணும் உனக்கு??”
“உனக்கு என்ன வேணும் முதல்ல அதை சொல்லு”
“உன் புருஷனை பேசாம போகச்சொல்லு” என்று உதிரனிடம் பேசாது சினமிகாவிடம் சொன்னான் நீலவண்ணன்.
“சொல்லலைன்னா” என்று...
அனுசுயா அவளை உதிரனுக்கு அருகில் அமரவைத்து பின்னால் நின்றுக் கொள்ள சில பல நிமிடங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு உதிரனின் கையில் திருமாங்கல்யம் வந்திருந்தது.
அதை கையில் வாங்கியவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் யாரையோ தேடுவது கண்டு வினயா அருகே வந்தாள். “என்ன அண்ணா தேடுறே??”
“அம்மா எங்கே??”
“அவங்க இங்க தானே இருந்தாங்க” என்று பார்த்தாள்.
“முன்னாடி வரச்சொல்லு நான்...
4
“சார்” என்று உதிரன் அழைக்க திரும்பி பார்த்தார் வேலன்.
“உங்ககிட்ட ஒரு சின்ன சஜஷன் சொல்லலாமா”
“சொல்லுங்க”
“இல்லை நான் வந்து அதிகப்பிரசங்கித்தனமா பேசுறேன்னு நினைக்காதீங்க சார். எனக்கு தோணினதை சொல்றேன்”
“நம்ம கடையில எல்லாம் அளவுவாரியா பிரிச்சு தான் பேக்கிங் பண்றோம்”
‘என்ன சொல்ல வர்றாரு’ என்று தான் பார்த்தார் வேலனும்.
“அதையும் விட சின்ன சைஸ் பேக்கிங் பண்ணலாம்ல சார்....
3
சினமிகாவின் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஊரறிய நிச்சயத்தை வைத்துக்கொள்ள பிரியப்பட்டார் வேலன்.
அவளின் திருமணம் மற்றவர்களுக்கு கேலிப்பொருளாக இருந்ததை அவரறிவார் தானே. அதன் பொருட்டு தான் அப்படியொரு நிகழ்வு வேண்டுமென்று மாப்பிள்ளை வீட்டினரிடம் சொல்லியிருந்தார்.
பெண் பார்க்கத் தான் மாப்பிள்ளை வீட்டினர் வந்திருக்கவில்லை. அவரின் சின்ன மகள், பிடிக்காது போனாலும் பெண்ணிற்கு தம்பியாய் தன்...
6
சினமிகா கடைக்கு வந்து இருபது நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது. கடைக்கு வருபவர்கள் எல்லாம் அவளை கேட்காமல் செல்வதில்லை. ஏன் உதிரனுக்குமே அவள் வாராமல் என்னவோ போலிருந்தது உண்மை தான்.
அன்று தன் கையால் அவனுக்கு பால்கோவா செய்துக் கொடுத்திருந்தவள் அவன் அம்மாவிற்கு ஒரு டப்பாவில் அடைத்து கொடுத்து விட்டிருந்தாள். சீதாவும் அதன் ருசியை ஆஹா ஓஹோவென்று...
10
உதிரனுக்கு அவளின் பதில் மனதிற்குள் அப்படியொரு உணர்வை கொடுத்தது. சந்தோசமாகவே வலம் வந்தான் அவன்.
அவன் நண்பர்கள் சிலர் கோவையில் இருந்து வந்திருந்தனர். அவர்களை மனைவிக்கு அறிமுகம் செய்தான். வந்தவர்கள் கிளம்ப அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தவனுக்கு தூக்கமாக வந்தது.
காலையிலேயே முகூர்த்தம் முடிந்ததால் நேரம் இன்னும் மதியத்தை தொட்டிருக்கவில்லை. பன்னிரண்டு மணிக்கு இன்னும் பத்து நிமிடம்...
8
சினமிகாவை அவள் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். காரில் வரும் போது முழுதும் அவன் நினைவே. கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு நாள் அவனை நேரில் பார்க்க நேர்ந்தது.
காரணம் வேறொன்றுமில்லை அது வேலன் உதிரன் சொன்னது போல ராஜபாளையத்திலும் சங்கரன்கோவிலிலும் அவர்கள் கடைக்கு பிரான்ச் ஓபன் செய்திருந்தார்.
அந்த இடம் எல்லாம் அவர் சொந்தத்திற்கு வாங்கியிருந்தார்....
5
“ஹலோ சார் இங்க என்ன பண்றீங்க??” என்ற சினமிகாவின் குரலில் பால்கோவா செய்வதை வேடிக்கை பார்க்க வந்த உதிரன் அவளை பார்த்து புன்னகை செய்தான்.
“சும்மா தாங்க பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன். ஆமா நீங்க என்ன பண்றீங்க இங்க?? பால்கோவா செய்ய போறீங்களா??”
“ஹ்ம்ம் ஆமா அதுக்கு தான் வந்தேன்...”
“நீங்க செஞ்ச பால்கோவா ரொம்ப ருசியா இருக்கும்ன்னு...
11
நல்ல உறக்கத்தில் இருந்தாள் சினமிகா. அவளை யாரோ எழுப்புவது போல தோன்ற கண் விழித்தவளை வரவேற்றது எப்பவும் போல பைரவரே.
அவர் ஏதோ அவளிடம் சொல்ல நினைப்பது போல தோன்றியது அவளுக்கு அவரின் கண்களையே உற்றுப்பார்த்தாள். அதில் என்ன இருந்தது என்று அவள் உணரும் முன்னமே யாரோ அவளை இழுத்தனர்.
சட்டென்று மலையில் இருந்து அவளை கீழே...
“எதுக்கு இப்படி இழுக்கறீங்க?? அத்” என்றவள் அவர் நின்றிருந்த இடத்தை பார்த்திட “அப்போவே போய்ட்டாங்க. குட் மம்மி”
“இப்படி உட்காரு” என்றவன் அவளை தன் மடி மீது அமர்த்திக் கொண்டான்.
“வேணாம். அத்தை வருவாங்க”
“வரமாட்டாங்க நீயா உள்ள போற வரை அவங்க வெளிய வரமாட்டாங்க...”
“என் மானத்தை வாங்குறீங்க”
“பரவாயில்லை” என்றவன் “நிஜமாவே இது எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சு தான்...
பெரும் வலியுடன் தன் பேரனை கைப்பற்றி அழைத்து வீட்டுக்கு வந்திருந்தவர் வழி வழியாய் வந்த நகைகளையும் பொருட்களையும் பாதுக்காக்கும் பொக்கிஷத்தை யாரும் அறியா நிலவறையில் வைத்து பூட்டினார்.
அதன் மற்றொரு வழியைப் பற்றிய இரகசிய குறிப்பை தன் பேரனுக்கு மட்டும் சொல்லிவிட்டு தன் குடும்பம் அழிய காரணமாயிருந்த மற்றவர்களுக்கு சாபமிட்டு தன் உயிரை தீக்கிரையாக்கிக் கொண்டார்...
9
சினமிகா சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அங்கிருந்த ஓர் பாறையில். கால்களிரண்டும் அப்படியொரு வலி கொடுத்தது நடந்து நடந்து.
மெதுவாய் அவள் அதை நீவிக்கொண்டு அந்த இருளில் அமர்ந்திருக்க வாலை ஆட்டிக்கொண்டு பைரவர் அவர் அருகில் வந்திருந்தார்.
எட்டி அவள் மடி மேல் இரு கால்களையும் வைத்தார் அவர். “என்னாச்சு??” என்று இவள் கேட்கவும் காலை கீழே இறக்கி...
7
“அண்ணி இதை வாங்கிக்கோங்க” என்றாள் உதிரனின் சித்தப்பா மகள் வினயா.
“இந்த புடவையை தான் நீங்க மண்டபத்துக்கு கட்டிட்டு வரணும்ன்னு பெரியம்மா சொல்லிவிட்டாங்க. இது நம்ம குடும்ப வழக்கமாம்” என்றாள் அவள்.
சினமிகா தன் தந்தையை பார்த்தாள். அவர் விழியசைக்க வினயாவிடம் இருந்து அத்தட்டை வாங்கிக் கொண்டாள்.
“இதுக்கு பிளவுஸ் உள்ளவே இருக்காம் அண்ணி. பெரியம்மா சொல்லச் சொன்னாங்க”
“நான்...
12
“அத்தை நான் காய் வெட்டித் தரட்டுமா??” என்றவளை முறைத்து பார்த்தார் சீதா.
“உன்கிட்ட எத்தனை தரம் சொல்றது இந்த சமையல் வேலையை என்கிட்ட இருந்து பிடிங்க பார்க்காதேன்னு” என்று கடுமையாகவே சொன்னார் சீதா.
“அது வந்து அத்தை நான் வேறென்ன செய்யட்டும். சமையல் நீங்களே செய்ங்க, நான் இந்த காய்கறி தானே நறுக்கித் தரவா”
“நீ எந்த வேலையும்...
31
திருமணத்திற்கு வந்திருந்த சந்திரா தங்கையின் பேச்சில் மனமுடைந்து சாப்பிடாமலே அங்கிருந்து கிளம்ப எங்கிருந்தோ வந்தார் முத்துலட்சுமி.
“என்னம்மா எங்கே கிளம்பிட்டே??”
“கல்யாணம் முடிஞ்சிருச்சுல்லம்மா அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். பாட்டி வீட்டில தனியா இருப்பாங்க, நான் போனா தான் அவங்களை கவனிக்க முடியும்”
“அவங்களையும் இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம்லம்மா”
“அவங்களுக்கு கண்ணு சரியா தெரியலை. அதான் விட்டுட்டு வந்தோம்மா...”
“சரி சரி நான்...
32
“இந்திரா எப்படியிருக்கே??” என்றாள் அவளை சில நாட்கள் கழித்து பார்த்த அவளின் தோழி.
“நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க??”
“ஹ்ம்ம் இருக்கேன்”
“ஆளு நல்லா பார்க்க பளபளன்னு ஆகிட்ட இந்திரா. காசு வந்தா அழகும் கூடிடும் போல...” என்று மற்றவளை புகழ்ந்து சொல்ல அதில் ஒரு மிடுக்கு வந்து அமர்ந்துக் கொண்டது இந்திராவினிடத்தில்.
“அப்படியா சொல்றே...”
“அப்படித்தான் இந்த ஊரே பேசிக்குது??”
“என்ன பேசுது??”
“உனக்கு...
29
“சொல்லு சிமி இதுக்கு என்ன அர்த்தம்??”
“எதுக்கு கேட்கறீங்க??”
“நீ பிஏ தமிழ் தானே பண்ணே?? உனக்கு கண்டிப்பா இதுக்கு அர்த்தம் தெரியும் சொல்லு சிமி... புள்ளி களவன்னா என்ன?? அதை திருப்பிப்போட்ட வலி கொடுக்கும்ன்னு சொல்றாங்க... இது வழியா இல்லை வலியா”
“இதை நானும் படிச்சு பார்த்தேன் ஆனா மாமா இதை எதுக்கு எழுதினாங்கன்னு எனக்கு புரியலை”
“களவன்னா...
14
“சிமிஅடுத்து என்ன பண்றதா உத்தேசம்??”
“தெரியலைங்க பார்ப்போம்”
“மேகாகிட்ட நீ இவ்வளவு கடுமை காமிச்சு இருக்க வேணாமோ??”
“நான் கடுமையா நடந்துக்கலைங்க”
“எனக்கு உன்னோட நிலை புரியுது. அவளோட நிலைமையை நினைச்சு தான் அப்படிச் சொன்னேன். நீ செஞ்சது நிச்சயம் தப்பு இல்லை. நம்மளை ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா அவங்க முன்னாடி நடமாடி அவங்களோட வெறுப்பை சம்பாதிக்கறதை விட விலகிப் போய்டலாம்ன்னு...
18
ஒரு வாரம் தன்னை போல சென்றிருந்தது. உதிரனுக்கு காலில் காயம் இப்போது நன்றாகவே ஆறியிருந்தது. சினமிகா தான் அவனை அங்கிங்கு நகரவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு கடையை மல்லிகா மற்றும் தன் மாமியாரின் பொறுப்பில்விட்டு அவள் சிரத்தையாய் தன் கணவனை தான் கவனித்தாள்.
“நீ இப்படி இருந்தா எனக்கு பேஷன்ட்ன்னு பீல்...
17
வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் உதிரனும் சினமிகாவும். உதிரனுக்கு உதவிய ஷியாம் மருத்துமனையில் இருந்து அப்படியே கிளம்பியிருந்தான்.
வேலன் அழைத்து வந்திருந்த காரில் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். சீதாவை பொறுத்தவரை மகன் செத்து பிழைத்து வந்ததாகத் தான் நினைத்தார். தமிழிடம் சொல்லி திருஷ்டி கழித்துவிட்டு உள்ளே அழைக்கச் சொன்னார்.
அவர் சொன்னது போலவே தமிழும் செய்ய உள்ளே வந்தனர்....