Madavaral In Thunai
அனுசுயா அவளை உதிரனுக்கு அருகில் அமரவைத்து பின்னால் நின்றுக் கொள்ள சில பல நிமிடங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு உதிரனின் கையில் திருமாங்கல்யம் வந்திருந்தது.
அதை கையில் வாங்கியவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் யாரையோ தேடுவது கண்டு வினயா அருகே வந்தாள். “என்ன அண்ணா தேடுறே??”
“அம்மா எங்கே??”
“அவங்க இங்க தானே இருந்தாங்க” என்று பார்த்தாள்.
“முன்னாடி வரச்சொல்லு நான்...
21
“ஹேய் வினயா உனக்கு இப்போ தான் இங்க வர்றதுக்கு நேரம் கிடைச்சதா??” என்று தன் கணவனின் சித்தப்பா மகள் வினயாவை சந்தோஷமாக வரவேற்றாள் சினமிகா.
“எங்கண்ணி உடனே வரமுடிஞ்சது. பைனல் இயர் எக்ஸாம்ஸ் எல்லாம் வந்திடுச்சு. அதெல்லாம் முடிச்சுட்டு அப்பாடா ஒரு வழியா காலேஜ் படிப்பை முடிச்சிட்டேன்னு இருக்கு. இப்போ தான் கொஞ்சம் ப்ரீ ஆனேன்,...
17
வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் உதிரனும் சினமிகாவும். உதிரனுக்கு உதவிய ஷியாம் மருத்துமனையில் இருந்து அப்படியே கிளம்பியிருந்தான்.
வேலன் அழைத்து வந்திருந்த காரில் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். சீதாவை பொறுத்தவரை மகன் செத்து பிழைத்து வந்ததாகத் தான் நினைத்தார். தமிழிடம் சொல்லி திருஷ்டி கழித்துவிட்டு உள்ளே அழைக்கச் சொன்னார்.
அவர் சொன்னது போலவே தமிழும் செய்ய உள்ளே வந்தனர்....
20
கடைக்கு மேலும் ஒரு ஆள் வேலைக்கு வந்திருக்க அவர்கள் அமர சரியான இருக்கை வேண்டும் மேஜை ஒன்று கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று சினமிகா கேட்டிருந்தாள்.
“மேல அப்பா ரூம்ல ரெண்டு டேபிள் இருக்கும், மர சேர் வேற சேர்ஸ் கூட இருக்கும் நினைக்கிறேன். கடை பையன் வந்தா அவனை வைச்சுக்கிட்டு அதை எடுத்து...
27
சினமிகா “அத்தை” என்று சொல்லவும் அவர்களின் அறைக்கதவை சீதா தட்டவும் சரியாக இருந்தது. “உதிரா கதவைத் திற” என்று படபடவென்று அவர் தட்ட சினமிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறை விளக்கை ஒளிரவிட்டு உதிரன் கதவை திறக்கச் சென்றான்.
வெளியில் நின்றிருந்த சீதாவிற்கு வியர்த்திருந்தது. எதையோ பார்த்து பயந்த தோற்றம் அவரிடத்தில். வேகமாக அறைக்குள் வந்து...
32
“இந்திரா எப்படியிருக்கே??” என்றாள் அவளை சில நாட்கள் கழித்து பார்த்த அவளின் தோழி.
“நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க??”
“ஹ்ம்ம் இருக்கேன்”
“ஆளு நல்லா பார்க்க பளபளன்னு ஆகிட்ட இந்திரா. காசு வந்தா அழகும் கூடிடும் போல...” என்று மற்றவளை புகழ்ந்து சொல்ல அதில் ஒரு மிடுக்கு வந்து அமர்ந்துக் கொண்டது இந்திராவினிடத்தில்.
“அப்படியா சொல்றே...”
“அப்படித்தான் இந்த ஊரே பேசிக்குது??”
“என்ன பேசுது??”
“உனக்கு...
“அந்த வார்த்தை எல்லாம் அவருக்கு தான் பொருந்தும். நான் இதுக்கெல்லாம் வருத்தப்படலை. உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரவா” என்று அவள் சாதாரணமாய் கேட்க உதிரன் மெச்சுதலாய் பார்த்தான் சினமிகாவை.
“கொண்டு வா... ஒண்ணில்லை ரெண்டு. அவருக்கு மரியாதை தெரியாம இருக்கலாம் நமக்கு தெரியுமே”
“நீங்க சொல்லலைன்னாலும் நான் அதை தான் செஞ்சிருப்பேன்” என்றவள் உள்ளே சென்றாள்.
சினமிகாவிற்கு அவர்...
34
“வாங்க சார் உள்ளே, நேத்து போன் பண்ணது நீங்க தானே”
“ஆமா சார் எல்லாத்தையும் கொண்டு வந்திட்டேன். என்னோட பிரஸ் மீடியா எல்லாரும் வந்திருக்காங்க”
“ஹா... அவங்க எதுக்கு சார்?? நீங்க உங்களுக்கு எந்த விளம்பரமும் பிடிக்காதுன்னு நேத்து சொன்னீங்க”
“இப்பவும் அதான் சொல்றேன் எனக்கு எந்த விளம்பரமும் பிடிக்காது. ஆனா இங்க ஒப்படைக்கப் போறது சின்ன பொருள்...
18
ஒரு வாரம் தன்னை போல சென்றிருந்தது. உதிரனுக்கு காலில் காயம் இப்போது நன்றாகவே ஆறியிருந்தது. சினமிகா தான் அவனை அங்கிங்கு நகரவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு கடையை மல்லிகா மற்றும் தன் மாமியாரின் பொறுப்பில்விட்டு அவள் சிரத்தையாய் தன் கணவனை தான் கவனித்தாள்.
“நீ இப்படி இருந்தா எனக்கு பேஷன்ட்ன்னு பீல்...
பெரும் வலியுடன் தன் பேரனை கைப்பற்றி அழைத்து வீட்டுக்கு வந்திருந்தவர் வழி வழியாய் வந்த நகைகளையும் பொருட்களையும் பாதுக்காக்கும் பொக்கிஷத்தை யாரும் அறியா நிலவறையில் வைத்து பூட்டினார்.
அதன் மற்றொரு வழியைப் பற்றிய இரகசிய குறிப்பை தன் பேரனுக்கு மட்டும் சொல்லிவிட்டு தன் குடும்பம் அழிய காரணமாயிருந்த மற்றவர்களுக்கு சாபமிட்டு தன் உயிரை தீக்கிரையாக்கிக் கொண்டார்...
9
சினமிகா சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அங்கிருந்த ஓர் பாறையில். கால்களிரண்டும் அப்படியொரு வலி கொடுத்தது நடந்து நடந்து.
மெதுவாய் அவள் அதை நீவிக்கொண்டு அந்த இருளில் அமர்ந்திருக்க வாலை ஆட்டிக்கொண்டு பைரவர் அவர் அருகில் வந்திருந்தார்.
எட்டி அவள் மடி மேல் இரு கால்களையும் வைத்தார் அவர். “என்னாச்சு??” என்று இவள் கேட்கவும் காலை கீழே இறக்கி...
35
அசந்து உறங்கிக் கொண்டிருந்த உதிரனை யாரோ தட்டி எழுப்பியது போன்று தோன்ற அதிர்வோடு கண்களை திறந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் பார்க்க சினமிகா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
உதிரன் எழுந்து அமர்ந்து தண்ணீர் குடிக்க மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க கையை நீட்ட அவன் கையை தட்டினார் சட்டென்று அவன் முன் தோன்றிய பைரவர்.
திடிரென்று...
29
“சொல்லு சிமி இதுக்கு என்ன அர்த்தம்??”
“எதுக்கு கேட்கறீங்க??”
“நீ பிஏ தமிழ் தானே பண்ணே?? உனக்கு கண்டிப்பா இதுக்கு அர்த்தம் தெரியும் சொல்லு சிமி... புள்ளி களவன்னா என்ன?? அதை திருப்பிப்போட்ட வலி கொடுக்கும்ன்னு சொல்றாங்க... இது வழியா இல்லை வலியா”
“இதை நானும் படிச்சு பார்த்தேன் ஆனா மாமா இதை எதுக்கு எழுதினாங்கன்னு எனக்கு புரியலை”
“களவன்னா...
30
“என்ன ரெண்டு பேரும் அப்படியே திகைச்சு போய் நிக்கறீங்க பதில் சொல்லுங்க”
“டேய் மாமா பையா நீயாச்சும் சொல்லுடா??” என்றான் உதிரன் அபிஷேக்கை பார்த்து.
இப்போது அபிஷேக்கின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி. கடைசியில் தான் யார் என்பது வரையிலும் கூட இவன் கண்டுப்பிடித்துவிட்டானே என்று தான் பார்த்தான் அவன் மற்றவனை.
“சித்தீ...” என்று உதிரன் ராகமாக இழுக்க “வாயை...
14
“சிமிஅடுத்து என்ன பண்றதா உத்தேசம்??”
“தெரியலைங்க பார்ப்போம்”
“மேகாகிட்ட நீ இவ்வளவு கடுமை காமிச்சு இருக்க வேணாமோ??”
“நான் கடுமையா நடந்துக்கலைங்க”
“எனக்கு உன்னோட நிலை புரியுது. அவளோட நிலைமையை நினைச்சு தான் அப்படிச் சொன்னேன். நீ செஞ்சது நிச்சயம் தப்பு இல்லை. நம்மளை ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா அவங்க முன்னாடி நடமாடி அவங்களோட வெறுப்பை சம்பாதிக்கறதை விட விலகிப் போய்டலாம்ன்னு...
அவள் எண்ணமே சரி என்பது போல் அவள் எங்கோ இடித்துக்கொள்ள இவள் தடவிப் பார்க்க அது குகையின் சுற்றுப்புற சுவர் என்பது புரிந்தது. அங்கும் இருள் மட்டுமே ஆட்சி செய்தது, ஆனால் தூரத்தில் எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி வந்துக் கொண்டிருந்தது.
அது எங்கிருந்து வருக்கிறது இவள் அறியாள் ஆனால் அதன் ஒளி இவர்கள் பாதைக்கு இப்போது...
2
உதிரனின் நண்பனொருவன் திருவில்லிபுத்தூரில் இருக்கிறான். அவனிடம் முன்பே சொல்லி வைத்திருந்தான் வேலைக்கு.
அவனை பார்க்க தான் வந்திருந்தான். பஸ்ஸை விட்டு இறங்கியவனுக்குள் ஒரு எண்ணம் கோவிலுக்கு சென்றுவிட்டு பின் நண்பனை பார்க்கலாமே என்று.
கடவுளிடம் குறையை சொன்னால் அவன் செவி சாய்த்து நல்லருள் புரிய மாட்டானா என்ற அவா அவனுக்கு.
தூரத்தில் இருந்தே கோபுரத்தை பார்த்தான். மனதிற்குள் ஏதோவொரு...
13
கடை வேலைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க உதிரனும் சினமிகாவும் அவ்வப்போது அதற்காக வெளியில் சென்று வந்தனர். பெரும்பாலும் உதிரனே தான் செல்வான்.
ரொம்பவும் முக்கியமாக இருந்தால் மட்டுமே சினமிகா உடன் செல்வாள். வீட்டில் இருக்கும் பொழுதுகள் அவளுக்கு வேலையே இல்லாதது போலவே இருந்தது.
சீதாதேவி எந்த வேலையும் அவளிடம் சொல்வதில்லை. அவளாகவே இதை செய்யவா அதை...
11
நல்ல உறக்கத்தில் இருந்தாள் சினமிகா. அவளை யாரோ எழுப்புவது போல தோன்ற கண் விழித்தவளை வரவேற்றது எப்பவும் போல பைரவரே.
அவர் ஏதோ அவளிடம் சொல்ல நினைப்பது போல தோன்றியது அவளுக்கு அவரின் கண்களையே உற்றுப்பார்த்தாள். அதில் என்ன இருந்தது என்று அவள் உணரும் முன்னமே யாரோ அவளை இழுத்தனர்.
சட்டென்று மலையில் இருந்து அவளை கீழே...
“என் வாழ்க்கையில இப்படியெல்லாம் ஒரு டிராஜிடி நடக்கும்ன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை சிமி. எல்லாரையும் மாதிரியும் ஒரு சாதாரண வாழ்க்கை தான் வாழ ஆசைப்பட்டேன்”
“இப்பவும் நாம அப்படித்தானே இருக்கோம்”
“நாம இப்ப மட்டுமில்லை எப்பவும் அப்படித்தான் இருப்போம். பணம் வந்திடுச்சுன்னு நமக்கு என்னைக்குமே கர்வமோ, அகங்காரமோ, திமிரோ, மண்டைக்கனம் வரவேக் கூடாதுன்னு நான் கடவுளை வேண்டிக்கறேன்”
“நிச்சயமா...