Madavaral In Thunai
15
சினமிகா இரவில் வந்த கனவில் வெகுவாய் குழம்பியிருந்தவள் உடன் படுத்திருந்த உதிரனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் தலைவைத்து படுத்துக் கொண்டாள். வெகு நேரமாய் உறக்கம் வாராது ஒரு வழியாய் உறங்கியிருந்தாள் அவள்.
காலையில் முதலில் கண் விழித்த உதிரன் தன்னை அவ்வளவு நெருக்கமாய் அணைத்து படுத்திருக்கும் மனைவியை தான் பார்த்தான்.
அன்றைய காலை அவனுக்கு இனிய...
14
“சிமிஅடுத்து என்ன பண்றதா உத்தேசம்??”
“தெரியலைங்க பார்ப்போம்”
“மேகாகிட்ட நீ இவ்வளவு கடுமை காமிச்சு இருக்க வேணாமோ??”
“நான் கடுமையா நடந்துக்கலைங்க”
“எனக்கு உன்னோட நிலை புரியுது. அவளோட நிலைமையை நினைச்சு தான் அப்படிச் சொன்னேன். நீ செஞ்சது நிச்சயம் தப்பு இல்லை. நம்மளை ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா அவங்க முன்னாடி நடமாடி அவங்களோட வெறுப்பை சம்பாதிக்கறதை விட விலகிப் போய்டலாம்ன்னு...
13
கடை வேலைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க உதிரனும் சினமிகாவும் அவ்வப்போது அதற்காக வெளியில் சென்று வந்தனர். பெரும்பாலும் உதிரனே தான் செல்வான்.
ரொம்பவும் முக்கியமாக இருந்தால் மட்டுமே சினமிகா உடன் செல்வாள். வீட்டில் இருக்கும் பொழுதுகள் அவளுக்கு வேலையே இல்லாதது போலவே இருந்தது.
சீதாதேவி எந்த வேலையும் அவளிடம் சொல்வதில்லை. அவளாகவே இதை செய்யவா அதை...
12
“அத்தை நான் காய் வெட்டித் தரட்டுமா??” என்றவளை முறைத்து பார்த்தார் சீதா.
“உன்கிட்ட எத்தனை தரம் சொல்றது இந்த சமையல் வேலையை என்கிட்ட இருந்து பிடிங்க பார்க்காதேன்னு” என்று கடுமையாகவே சொன்னார் சீதா.
“அது வந்து அத்தை நான் வேறென்ன செய்யட்டும். சமையல் நீங்களே செய்ங்க, நான் இந்த காய்கறி தானே நறுக்கித் தரவா”
“நீ எந்த வேலையும்...
“ஏய் என்ன??”
“என்ன??” என்றான் அவனும் விடாது.
“இது என் வீடு...”
“அதுக்கு...”
“என்னை நீ மிரட்டறியா??”
“அந்த சம்பவம் எப்போ நடந்துச்சு??”
“என்ன நக்கல் பண்றியா??”
“நீலா” என்று வந்தாள் சினமிகா.
“நீ எதுக்கு எங்களுக்கு நடுவுல வர்றே என்ன வேணும் உனக்கு??”
“உனக்கு என்ன வேணும் முதல்ல அதை சொல்லு”
“உன் புருஷனை பேசாம போகச்சொல்லு” என்று உதிரனிடம் பேசாது சினமிகாவிடம் சொன்னான் நீலவண்ணன்.
“சொல்லலைன்னா” என்று...
11
நல்ல உறக்கத்தில் இருந்தாள் சினமிகா. அவளை யாரோ எழுப்புவது போல தோன்ற கண் விழித்தவளை வரவேற்றது எப்பவும் போல பைரவரே.
அவர் ஏதோ அவளிடம் சொல்ல நினைப்பது போல தோன்றியது அவளுக்கு அவரின் கண்களையே உற்றுப்பார்த்தாள். அதில் என்ன இருந்தது என்று அவள் உணரும் முன்னமே யாரோ அவளை இழுத்தனர்.
சட்டென்று மலையில் இருந்து அவளை கீழே...
10
உதிரனுக்கு அவளின் பதில் மனதிற்குள் அப்படியொரு உணர்வை கொடுத்தது. சந்தோசமாகவே வலம் வந்தான் அவன்.
அவன் நண்பர்கள் சிலர் கோவையில் இருந்து வந்திருந்தனர். அவர்களை மனைவிக்கு அறிமுகம் செய்தான். வந்தவர்கள் கிளம்ப அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தவனுக்கு தூக்கமாக வந்தது.
காலையிலேயே முகூர்த்தம் முடிந்ததால் நேரம் இன்னும் மதியத்தை தொட்டிருக்கவில்லை. பன்னிரண்டு மணிக்கு இன்னும் பத்து நிமிடம்...
அனுசுயா அவளை உதிரனுக்கு அருகில் அமரவைத்து பின்னால் நின்றுக் கொள்ள சில பல நிமிடங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு உதிரனின் கையில் திருமாங்கல்யம் வந்திருந்தது.
அதை கையில் வாங்கியவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் யாரையோ தேடுவது கண்டு வினயா அருகே வந்தாள். “என்ன அண்ணா தேடுறே??”
“அம்மா எங்கே??”
“அவங்க இங்க தானே இருந்தாங்க” என்று பார்த்தாள்.
“முன்னாடி வரச்சொல்லு நான்...
9
சினமிகா சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அங்கிருந்த ஓர் பாறையில். கால்களிரண்டும் அப்படியொரு வலி கொடுத்தது நடந்து நடந்து.
மெதுவாய் அவள் அதை நீவிக்கொண்டு அந்த இருளில் அமர்ந்திருக்க வாலை ஆட்டிக்கொண்டு பைரவர் அவர் அருகில் வந்திருந்தார்.
எட்டி அவள் மடி மேல் இரு கால்களையும் வைத்தார் அவர். “என்னாச்சு??” என்று இவள் கேட்கவும் காலை கீழே இறக்கி...
8
சினமிகாவை அவள் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். காரில் வரும் போது முழுதும் அவன் நினைவே. கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு நாள் அவனை நேரில் பார்க்க நேர்ந்தது.
காரணம் வேறொன்றுமில்லை அது வேலன் உதிரன் சொன்னது போல ராஜபாளையத்திலும் சங்கரன்கோவிலிலும் அவர்கள் கடைக்கு பிரான்ச் ஓபன் செய்திருந்தார்.
அந்த இடம் எல்லாம் அவர் சொந்தத்திற்கு வாங்கியிருந்தார்....
7
“அண்ணி இதை வாங்கிக்கோங்க” என்றாள் உதிரனின் சித்தப்பா மகள் வினயா.
“இந்த புடவையை தான் நீங்க மண்டபத்துக்கு கட்டிட்டு வரணும்ன்னு பெரியம்மா சொல்லிவிட்டாங்க. இது நம்ம குடும்ப வழக்கமாம்” என்றாள் அவள்.
சினமிகா தன் தந்தையை பார்த்தாள். அவர் விழியசைக்க வினயாவிடம் இருந்து அத்தட்டை வாங்கிக் கொண்டாள்.
“இதுக்கு பிளவுஸ் உள்ளவே இருக்காம் அண்ணி. பெரியம்மா சொல்லச் சொன்னாங்க”
“நான்...
6
சினமிகா கடைக்கு வந்து இருபது நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது. கடைக்கு வருபவர்கள் எல்லாம் அவளை கேட்காமல் செல்வதில்லை. ஏன் உதிரனுக்குமே அவள் வாராமல் என்னவோ போலிருந்தது உண்மை தான்.
அன்று தன் கையால் அவனுக்கு பால்கோவா செய்துக் கொடுத்திருந்தவள் அவன் அம்மாவிற்கு ஒரு டப்பாவில் அடைத்து கொடுத்து விட்டிருந்தாள். சீதாவும் அதன் ருசியை ஆஹா ஓஹோவென்று...
5
“ஹலோ சார் இங்க என்ன பண்றீங்க??” என்ற சினமிகாவின் குரலில் பால்கோவா செய்வதை வேடிக்கை பார்க்க வந்த உதிரன் அவளை பார்த்து புன்னகை செய்தான்.
“சும்மா தாங்க பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன். ஆமா நீங்க என்ன பண்றீங்க இங்க?? பால்கோவா செய்ய போறீங்களா??”
“ஹ்ம்ம் ஆமா அதுக்கு தான் வந்தேன்...”
“நீங்க செஞ்ச பால்கோவா ரொம்ப ருசியா இருக்கும்ன்னு...
4
“சார்” என்று உதிரன் அழைக்க திரும்பி பார்த்தார் வேலன்.
“உங்ககிட்ட ஒரு சின்ன சஜஷன் சொல்லலாமா”
“சொல்லுங்க”
“இல்லை நான் வந்து அதிகப்பிரசங்கித்தனமா பேசுறேன்னு நினைக்காதீங்க சார். எனக்கு தோணினதை சொல்றேன்”
“நம்ம கடையில எல்லாம் அளவுவாரியா பிரிச்சு தான் பேக்கிங் பண்றோம்”
‘என்ன சொல்ல வர்றாரு’ என்று தான் பார்த்தார் வேலனும்.
“அதையும் விட சின்ன சைஸ் பேக்கிங் பண்ணலாம்ல சார்....
3
சினமிகாவின் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஊரறிய நிச்சயத்தை வைத்துக்கொள்ள பிரியப்பட்டார் வேலன்.
அவளின் திருமணம் மற்றவர்களுக்கு கேலிப்பொருளாக இருந்ததை அவரறிவார் தானே. அதன் பொருட்டு தான் அப்படியொரு நிகழ்வு வேண்டுமென்று மாப்பிள்ளை வீட்டினரிடம் சொல்லியிருந்தார்.
பெண் பார்க்கத் தான் மாப்பிள்ளை வீட்டினர் வந்திருக்கவில்லை. அவரின் சின்ன மகள், பிடிக்காது போனாலும் பெண்ணிற்கு தம்பியாய் தன்...
2
உதிரனின் நண்பனொருவன் திருவில்லிபுத்தூரில் இருக்கிறான். அவனிடம் முன்பே சொல்லி வைத்திருந்தான் வேலைக்கு.
அவனை பார்க்க தான் வந்திருந்தான். பஸ்ஸை விட்டு இறங்கியவனுக்குள் ஒரு எண்ணம் கோவிலுக்கு சென்றுவிட்டு பின் நண்பனை பார்க்கலாமே என்று.
கடவுளிடம் குறையை சொன்னால் அவன் செவி சாய்த்து நல்லருள் புரிய மாட்டானா என்ற அவா அவனுக்கு.
தூரத்தில் இருந்தே கோபுரத்தை பார்த்தான். மனதிற்குள் ஏதோவொரு...
அவள் எண்ணமே சரி என்பது போல் அவள் எங்கோ இடித்துக்கொள்ள இவள் தடவிப் பார்க்க அது குகையின் சுற்றுப்புற சுவர் என்பது புரிந்தது. அங்கும் இருள் மட்டுமே ஆட்சி செய்தது, ஆனால் தூரத்தில் எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி வந்துக் கொண்டிருந்தது.
அது எங்கிருந்து வருக்கிறது இவள் அறியாள் ஆனால் அதன் ஒளி இவர்கள் பாதைக்கு இப்போது...
1
திருவில்லிப்புத்தூர் அழகிய ஊர். தமிழக அரசின் சின்னமான கோபுரத்தின் அடையாளம். ஆண்டாள் அவதரித்த திருத்தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த புண்ணிய ஸ்தலம் என்ற பெருமை கொண்ட ஊர். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்படும் ஊர்.
புலர்ந்தும் புலராத காலைப்பொழுது நம் நாயகி வாசலை கூட்டி நீர் தெளித்து கோலமிட்டு முடித்திருந்தாள்.
அப்படியே பின்னால் சென்று தொழுவத்திற்கு...