Kalainthu Pogum Megame
அத்தியாயம் 14
நிலவின் நிழலில் உறங்கும்
இன்பத்தை தருகிறது
உந்தன் நினைவுகள்!!!
“அதெல்லாம் முடியாது. ஆதி என் மகன். அவன் எனக்கு தான் சொந்தம். எனக்கு என் குழந்தை வேணும். ஊர்ல உள்ள பெரியவங்க எல்லாம் இனிமே அது உன் குழந்தை, நீ தான் அதை நல்லா பாத்துக்கணும்னு சொல்லி தானே என்னை மாமாவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க? அதனால...
“என்னை மன்னிச்சிரு வைதேகி. எனக்கு முதல்ல எதுவும் தெரியாது. பிரேமா காலேஜ்ல படிக்கும் போது ஒருத்தனை விரும்பி மோசம் போயிட்டா. அவ கற்பமான அப்புறம் தான் எனக்கு விஷயம் தெரியும். அவன் கிட்ட போய் நியாயம் கேட்டோம். ஆனா அவன் கேடு கெட்டவன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. நிறைய பொண்ணுங்க வாழ்க்கைல இப்படி தான்...
அவனை நம்ப வைத்து அல்லவா கழுத்தை அருத்திருக்கிறார்கள். வேறு யாராவது இதைச் சொல்லியிருந்தால் “என்னுடைய மனைவியை பத்தி இப்படிச் சொல்லுவீங்களா?”, என்று கேட்டு அவர்கள் சங்கை அருத்திருப்பான். ஆனால் சொன்னது கோதையாயிற்றே.
கோதை பொய் சொல்ல மாட்டாள். ஒரு வேளை மகளின் வாழ்க்கைக்காக வாசு பிரேமாவை மறந்து சரண்யாவுடன் வாழ்வதற்காக பொய் சொல்லி இருக்கலாம் என்ற...
அத்தியாயம் 13
கையில் குடை
இருந்தாலும் மழையில்
நனைய ஆசை கொண்டேன்
உன் விரல் கோர்த்து!!!
கன்னத்தில் கை வைத்த படியே “அம்மா இப்ப எதுக்கு என்னை அடிச்ச?”, என்று கேட்டாள் சரண்யா.
“கோதை, இப்ப அவளை எதுக்கு இப்படி அடிச்ச?”, என்று சீனிவாசனும் கேட்டார்.
“உங்க முன்னாடி இதை சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே. இவ்வளவு பட்ட அப்புறமும் வாசுவை பாக்க...
“பேசாம கோதை பெரியம்மா வீட்ல சொல்லிறுவோம் பா. அவங்க கூப்பிட்டா வருவாங்க”
“நாட்டாமை சொன்னதைக் கேட்ட தானே? அவங்களும் கூப்பிட மாட்டாங்க. இவரும் போவாரான்னு தெரியலை”
“சொல்லிப் பாப்போம் பா. இல்லைன்னா நைட் நான் மாமா கூட இருக்கேன்”
“சரி நான் கோதை கிட்ட போய் சொல்லிட்டு வரேன். நீ வாசுக்கு ஒரு வார்த்தை நடந்ததைச் சொல்லிரு நிரஞ்சா”,...
அத்தியாயம் 12
பனித்துளி போன்ற கோபம்
சூரியான உன்னைக் கண்டதும்
விலகி விடுகிறது!!!
“அது தாண்டி எனக்கும் தெரியலை. இந்த மனுசனை இன்னும் காணும்? அவரோட தொங்கச்சி வீட்டுக்கு தான் போயிருப்பார். கழுதை கெட்டா குட்டிச்சுவர். கொஞ்ச நேரம் பாப்போம்”, என்றாள் வைதேகி.
குழந்தை வேறு சரண்யாவின் பரிசத்தை தேடி அழுது கொண்டிருந்தான். எவ்வளவு சமாதானப் படுத்தினாலும் அவன் அழுகை நிற்கவே...
“பிரேமா பத்தி ஏதோ சொன்னீங்க? அது உண்மையா? அந்த பொண்ணு தப்பான பொண்ணா?”, என்று வசந்தா கேட்டதும் மானசீகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டாள் கோதை.
கோபத்தில் பிரேமா பற்றி உளறியது வசந்தா சொன்னதும் தான் கோதைக்கு உரைத்தது. “ஐயையோ, கண்ணு மண்ணு தெரியாம உளறிட்டேனே?”, என்று தன்னையே கடிந்து கொண்டாள்.
“என்ன மதினி நான் கேட்டுட்டே...
அத்தியாயம் 11
கண்களில் கண்ணீர்
குளமானாலும் உதட்டில்
புன்னகை உறைந்தே
இருக்கும் காதலில்!!!
“என்ன என்ன சொல்ற? அதான் உங்க கதை தெரிஞ்சு போச்சே?. நீயும் அவளும் சேந்து தானே என்னோட தலைல மிளகாய் அறைச்சிருக்கீங்க?”, என்றான் வாசு.
“வாசு நான் சொல்ல வந்த விஷயமே வேற? காலைலே ஒரு நல்ல விசயத்துக்காக போன் பண்ணணும்னு நினைச்சேன். நீ பிசியா இருப்பேன்னு தான்...
“சரண்யா, கோதை என்ன மா ஆச்சு?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“என்ன நடக்கணும்? இன்னும் என்ன ஆகணும் அண்ணா?”
“கோதை என்ன மா என்னவோ போல பேசுற? சரண்யா தலைல வேற ரத்தமா இருக்கு”
“எங்க நெஞ்சுல இருந்தே ரத்தம் வடியுது. இந்த ரத்தம் பெருசா?”
“எனக்கு ஒண்ணுமே புரியலையே மா. யாராவது சொல்லுங்களேன்”
“நான் சொல்றேன்”, என்று ஆரம்பித்து வைதேகி...
அத்தியாயம் 10
நான் காணத் துடிக்கும்
அழகான சோலை
தான் என்னவள்!!!
சரண்யா மேல் உள்ள அக்கறையில் போனை போட்டு விட்டான் தான். ஆனால் என்ன பேச என்று குழப்பம் வந்தது கதிரேசனுக்கு.
நேரடியாக எப்படி வாசுவின் தாய் மற்றும் தங்கையைப் பற்றி குறை சொல்வது என்று தெரியாமல் சரண்யாவை அங்கே அழைத்து செல் என்னும் விதமாய் பேசினான்.
தந்தை ஏற்கனவே இந்த...
“என்ன டி இன்னும் தூங்கிட்டு இருக்க? பால் கரக்க நேரம் ஆச்சு? ஒழுங்கா எழுந்து வா. குழந்தை தூங்க தானே செய்றான். போ போ வீட்டு வேலை செய்ய ஆரம்பி. உன் ஆத்தா காரி நல்லது சொல்லி வளத்துருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும். நல்ல கும்பகர்னி மாதிரி என் பேரனை சாக்கு வச்சு தூங்கிட்டு இருக்க?”
“இனி...
அத்தியாயம் 9
சிதைந்து போய் இருக்கும்
என் இதயத்தை சாந்த படுத்தும்
காரிகை நீயாகினாய்!!
அன்று இரவு சமையல் வேலை செய்து கொண்டிருந்த சரண்யாவைப் பார்த்த சீனிவாசன் “என்ன மா நீ சமையல் செஞ்சிட்டு இருக்குற? சரசு எங்க?”, என்று கேட்டார். ‘
சப்பாத்தியை உருட்டிக் கொண்டே “அவங்க வரலை மாமா”, என்றாள் சரண்யா.
“எதுக்காம்? உடம்பு கிடம்பு சரியில்லையா?”
“அப்படி எல்லாம் இல்லை...
அவன் போவது அவளுக்கு வருத்தம் தான். ஆனால் அவளால் அவளுடைய வருத்தத்தையும் வெளியே காட்ட முடியாது, இப்போதைக்கு அவளால் எந்த உணர்வுகளையும் வெளியே காட்ட முடியாது. அது தான் அவளது தற்போதைய நிலை. அதனால் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.
“வறேன்னு போய் சொல்லு”, என்றான் வாசு.
“சரி மாமா”, என்று சொல்லி விட்டு திரும்பினாள்.
“சரண்யா”
“ஆன், என்ன...
அத்தியாயம் 8
காதலைக் கூட சொல்ல
முடியாமல் சிக்கித் தவிக்கிறது
பெண் மனம், நாணத்தால்!!!
அடுத்த நாள் காலை தன்னுடைய ஆதிக்கத்தை இப்புவியில் செலுத்தி அழகாக உதயமானான் ஆதவன். யாருக்கு என்ன ஆனாலும் இயற்கை மட்டும் தன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறது.
விடிவதற்கு முன்பே சரண்யா எழுந்து கொண்டாள். அருகில் படுத்திருந்த குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு தன்னுடைய வேலைகளை...
அந்த தருணத்துக்காகவே காத்திருந்த சரண்யா அவசரமாக உள்ளே ஓடிச் சென்று குழந்தையை தூக்கி கொண்டாள்.
ஏற்கனவே குழந்தையின் உடை எல்லாம் எங்கே இருக்கிறது என்று தெரியுமாதலால் வேறு உடை அவனுக்கு மாட்டி விட ஆரம்பித்தாள்.
சரண்யாவின் அசைவுகள் அவன் காதுக்கு கேட்டாலும் அதைக் கண்டு கொள்ளாமல் கண்களை மூடி அமர்ந்து விட்டான் வாசு.
குழந்தைக்கு உடை மாற்றும் வரை...
அத்தியாயம் 7
உன்னைப் பார்த்த நொடியில்
இருந்து எந்தன் இதயம் கூட
சிறந்த ஓவியன் தான்
உன்னை வரைந்ததால்!!!
நிர்மலமான முகத்துடன் வெளியே வந்த சரண்யாவை அவ்வளவு ஆர்வமாக பார்த்தாள் வைதேகி. “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”, என்று அவள் சொல்வாள் என்று அவ்வளவு எதிர்பார்ப்பு வைதேகிக்கு இருந்தது.
“சரண்யா, வாசு எங்க?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“பின்னாடி வராங்க மாமா”
“என்ன சொன்னான்?”
“எனக்கு சம்மதமான்னு...
“உன்னை வாயை மூடுன்னு சொன்னேன். என் மருமக செத்து போகணும்னு ஏதாவது செய்வினை வச்சீங்களா டி ரெண்டு பேரும்?”
“ஐயோ மதினி, நாங்க இப்படி எல்லாம் செய்வோமா? அப்படிப் பட்ட பாவமான காரியம் எங்களுக்கு செய்யத் தெரியாது மதினி”
“ஏன் செய்ய மாட்டீங்க? அண்ணே அண்ணேன்னு என் புருஷன் சொத்தை எல்லாம் அமுக்குனீங்க? மாமா நோமான்னு இவ...
அத்தியாயம் 6
சின்ன சின்ன ஊடல்களும்
அழகாக்குகின்றன நம்
இருவரின் காதலை!!!
அடுத்த நாள் காலையிலே சரண்யா வீட்டுக்கு வந்தார் சீனிவாசன்
“வாங்கண்ணா”, என்றாள் பூங்கோதை.
“கிளம்பிட்டியா கோதை? சரண்யாவை கூட்டிட்டு வா மா. நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்”, என்றார் சீனிவாசன்.
“சரிண்ணா”, என்று சொல்லி சரண்யாவை அழைக்கச் சென்ற கோதைக்கு ஒரே மகளின் திருமணம் இந்த நிலையிலா நடக்க வேண்டும் என்று இருந்தது.
அனைத்து...
“இதை எதுக்கு சொல்றேன்னா சந்தோஷமா வாழாத நானே என் புருஷனை மறக்காதப்ப சந்தோஷமா வாழ்ந்த வாசுவுக்கு எப்படி இருக்கும்? அவனோட முதல் பொண்டாட்டி நினைவு அவன் மனசை விட்டு நீங்குமா? நீங்க சொல்ற மாதிரி வாசு இவ கூட வாழ ஆரம்பிச்சாலும் அவனுக்கு பிரேமா நினைவு வரும். இவளுக்கு வாசு இன்னொருத்தி கூட வாழ்ந்தவன்...
அத்தியாயம் 5
இமை இரண்டும்
முத்தமிடும் போது
கண்களுக்குள் நான் சிறை
பிடிக்க படுகிறேன் உன்னால்!!!
கை கால்களை ஆட்டிக் கொண்டு மலர்க் குவியலைப் போல படுத்துக் கிடந்த தன்னுடைய மகனைப் பார்த்ததும் அவன் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் அகல்வதைப் போல உணர்ந்தான் வாசு.
மெதுவாக மகன் அருகே அமர்ந்து அவனுடைய பூங்கன்னத்தை வருட ஆரம்பித்தான். தன்னுடைய தகப்பனின் தொடுகையை உணர்ந்தானோ...