Kalainthu Pogum Megame
“என்ன சீனி சொல்ற? வாசுவுக்கு என்ன? எல்லாரையும் என்ன சொல்ல சொல்ற? பொடி வச்சு பேசாதப்பா. வெளிப்படையா சொல்லு”, என்றார் ஒரு பெரியவர்.
“சொல்றேன் சித்தப்பா, நான் இப்ப இந்த விஷயம் பேசக் கூடாது தான். ஆனா எனக்கு வேற வழி தெரியலை. ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும்னு தான்...
இரவு ஒன்பது மணி.... ‘வாசுதேவன் வெட்ஸ் பிரேமா’ என்ற பெயர் பலகை நியான் விளக்குகளால் ஒளி பெற்று மின்னியது. விடிந்தால் திருமண முகூர்த்தம் என்பதால் வீட்டருகே இருந்த திருமண மண்டபத்தில் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. வாசு வீட்டிலும் சீரியல் விளக்குகள் மின்னின.
மகனுக்கு திருமணம் என்னும் போது பல வேலைகள் சீனிவாசனுக்கு குமிந்திருந்தன. ஆனால்...
அத்தியாயம் 11
கண்களில் கண்ணீர்
குளமானாலும் உதட்டில்
புன்னகை உறைந்தே
இருக்கும் காதலில்!!!
“என்ன என்ன சொல்ற? அதான் உங்க கதை தெரிஞ்சு போச்சே?. நீயும் அவளும் சேந்து தானே என்னோட தலைல மிளகாய் அறைச்சிருக்கீங்க?”, என்றான் வாசு.
“வாசு நான் சொல்ல வந்த விஷயமே வேற? காலைலே ஒரு நல்ல விசயத்துக்காக போன் பண்ணணும்னு நினைச்சேன். நீ பிசியா இருப்பேன்னு தான்...
அடுத்த நாள் காலையில் இருந்து பிரேமாவிடம் இருந்த கூச்சம் விடை பெற்றுச் சென்றிருந்தது. விடை பெற்றுச் செல்ல வைத்த பெருமை வாசுவைச் சேரும். அது அவனுக்கும் திருப்தியாக இருந்தது. இருவரும் நன்கு பேச ஆரம்பித்தார்கள்.
திருமணத்திற்கு வராதவர்கள் இன்று வீடு தேடி வந்து மணமக்களைப் பார்த்து விட்டு மொய் கொடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் வாசுவுக்கு...
“என்னை மன்னிச்சிரு வைதேகி. எனக்கு முதல்ல எதுவும் தெரியாது. பிரேமா காலேஜ்ல படிக்கும் போது ஒருத்தனை விரும்பி மோசம் போயிட்டா. அவ கற்பமான அப்புறம் தான் எனக்கு விஷயம் தெரியும். அவன் கிட்ட போய் நியாயம் கேட்டோம். ஆனா அவன் கேடு கெட்டவன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. நிறைய பொண்ணுங்க வாழ்க்கைல இப்படி தான்...
“உன்னை வாயை மூடுன்னு சொன்னேன். என் மருமக செத்து போகணும்னு ஏதாவது செய்வினை வச்சீங்களா டி ரெண்டு பேரும்?”
“ஐயோ மதினி, நாங்க இப்படி எல்லாம் செய்வோமா? அப்படிப் பட்ட பாவமான காரியம் எங்களுக்கு செய்யத் தெரியாது மதினி”
“ஏன் செய்ய மாட்டீங்க? அண்ணே அண்ணேன்னு என் புருஷன் சொத்தை எல்லாம் அமுக்குனீங்க? மாமா நோமான்னு இவ...
அதை சரி செய்ய அவனுக்கும் நேரம் தேவைப் பட்டது. அதனால் அடுத்து வந்த நாட்களில் அவளை சீண்டாமல் இருந்தான் வாசு.
ஒரு வழியாக அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது. “சரண்யா, ரொம்ப தேவையா இருக்குறதை மட்டும் எடுத்து வை. மத்தது எல்லாம் நாம அங்க போய் வாங்கிக்கலாம்”, என்றான் வாசு.
“சரி மாமா”, என்றவள் தேவையானதை மட்டும்...
அத்தியாயம் 7
உன்னைப் பார்த்த நொடியில்
இருந்து எந்தன் இதயம் கூட
சிறந்த ஓவியன் தான்
உன்னை வரைந்ததால்!!!
நிர்மலமான முகத்துடன் வெளியே வந்த சரண்யாவை அவ்வளவு ஆர்வமாக பார்த்தாள் வைதேகி. “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”, என்று அவள் சொல்வாள் என்று அவ்வளவு எதிர்பார்ப்பு வைதேகிக்கு இருந்தது.
“சரண்யா, வாசு எங்க?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“பின்னாடி வராங்க மாமா”
“என்ன சொன்னான்?”
“எனக்கு சம்மதமான்னு...
அத்தியாயம் 10
நான் காணத் துடிக்கும்
அழகான சோலை
தான் என்னவள்!!!
சரண்யா மேல் உள்ள அக்கறையில் போனை போட்டு விட்டான் தான். ஆனால் என்ன பேச என்று குழப்பம் வந்தது கதிரேசனுக்கு.
நேரடியாக எப்படி வாசுவின் தாய் மற்றும் தங்கையைப் பற்றி குறை சொல்வது என்று தெரியாமல் சரண்யாவை அங்கே அழைத்து செல் என்னும் விதமாய் பேசினான்.
தந்தை ஏற்கனவே இந்த...
அவனை நம்ப வைத்து அல்லவா கழுத்தை அருத்திருக்கிறார்கள். வேறு யாராவது இதைச் சொல்லியிருந்தால் “என்னுடைய மனைவியை பத்தி இப்படிச் சொல்லுவீங்களா?”, என்று கேட்டு அவர்கள் சங்கை அருத்திருப்பான். ஆனால் சொன்னது கோதையாயிற்றே.
கோதை பொய் சொல்ல மாட்டாள். ஒரு வேளை மகளின் வாழ்க்கைக்காக வாசு பிரேமாவை மறந்து சரண்யாவுடன் வாழ்வதற்காக பொய் சொல்லி இருக்கலாம் என்ற...
“அப்பா குளிச்சிட்டு வரேன் டா”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான்.
அவனுடைய வாழ்க்கைக்கு தேவையான இளப்பாறுதலைக் கொடுக்க கூடிய ஜீவநதி அவள்.
குளித்து முடித்து வந்தவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவள் முதலில் அவனை கவனிக்க வில்லை. அதன் பின்னர் தான் அவனைப் பார்த்தாள். இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையை தாங்க முடியாமல்...
அத்தியாயம் 12
பனித்துளி போன்ற கோபம்
சூரியான உன்னைக் கண்டதும்
விலகி விடுகிறது!!!
“அது தாண்டி எனக்கும் தெரியலை. இந்த மனுசனை இன்னும் காணும்? அவரோட தொங்கச்சி வீட்டுக்கு தான் போயிருப்பார். கழுதை கெட்டா குட்டிச்சுவர். கொஞ்ச நேரம் பாப்போம்”, என்றாள் வைதேகி.
குழந்தை வேறு சரண்யாவின் பரிசத்தை தேடி அழுது கொண்டிருந்தான். எவ்வளவு சமாதானப் படுத்தினாலும் அவன் அழுகை நிற்கவே...
“சரண்யா, கோதை என்ன மா ஆச்சு?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“என்ன நடக்கணும்? இன்னும் என்ன ஆகணும் அண்ணா?”
“கோதை என்ன மா என்னவோ போல பேசுற? சரண்யா தலைல வேற ரத்தமா இருக்கு”
“எங்க நெஞ்சுல இருந்தே ரத்தம் வடியுது. இந்த ரத்தம் பெருசா?”
“எனக்கு ஒண்ணுமே புரியலையே மா. யாராவது சொல்லுங்களேன்”
“நான் சொல்றேன்”, என்று ஆரம்பித்து வைதேகி...
அத்தியாயம் 6
சின்ன சின்ன ஊடல்களும்
அழகாக்குகின்றன நம்
இருவரின் காதலை!!!
அடுத்த நாள் காலையிலே சரண்யா வீட்டுக்கு வந்தார் சீனிவாசன்
“வாங்கண்ணா”, என்றாள் பூங்கோதை.
“கிளம்பிட்டியா கோதை? சரண்யாவை கூட்டிட்டு வா மா. நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்”, என்றார் சீனிவாசன்.
“சரிண்ணா”, என்று சொல்லி சரண்யாவை அழைக்கச் சென்ற கோதைக்கு ஒரே மகளின் திருமணம் இந்த நிலையிலா நடக்க வேண்டும் என்று இருந்தது.
அனைத்து...
அத்தியாயம் 1
நான் உன்னிடம்
சொல்லாத வார்த்தைகள்
அனைத்தும் கலைந்து
போன மேகங்களாகும்!!!
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் அமைந்திருந்த பூஞ்சோலை என்ற கிராமம். பெயருக்கு ஏற்றார் போல பூத்துக் குலுங்கும் சோலை தான் அந்த கிராமம். பல வகையான பழ மரங்களும், மூலிகை மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன.
விவசாயம் அங்கே செழித்திருந்தது. வயலில் வேலை செய்யும் போது அடிக்கடி வரும் குற்றாலச்...
“பேசாம கோதை பெரியம்மா வீட்ல சொல்லிறுவோம் பா. அவங்க கூப்பிட்டா வருவாங்க”
“நாட்டாமை சொன்னதைக் கேட்ட தானே? அவங்களும் கூப்பிட மாட்டாங்க. இவரும் போவாரான்னு தெரியலை”
“சொல்லிப் பாப்போம் பா. இல்லைன்னா நைட் நான் மாமா கூட இருக்கேன்”
“சரி நான் கோதை கிட்ட போய் சொல்லிட்டு வரேன். நீ வாசுக்கு ஒரு வார்த்தை நடந்ததைச் சொல்லிரு நிரஞ்சா”,...
அத்தியாயம் 13
கையில் குடை
இருந்தாலும் மழையில்
நனைய ஆசை கொண்டேன்
உன் விரல் கோர்த்து!!!
கன்னத்தில் கை வைத்த படியே “அம்மா இப்ப எதுக்கு என்னை அடிச்ச?”, என்று கேட்டாள் சரண்யா.
“கோதை, இப்ப அவளை எதுக்கு இப்படி அடிச்ச?”, என்று சீனிவாசனும் கேட்டார்.
“உங்க முன்னாடி இதை சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே. இவ்வளவு பட்ட அப்புறமும் வாசுவை பாக்க...
அத்தியாயம் 14
நிலவின் நிழலில் உறங்கும்
இன்பத்தை தருகிறது
உந்தன் நினைவுகள்!!!
“அதெல்லாம் முடியாது. ஆதி என் மகன். அவன் எனக்கு தான் சொந்தம். எனக்கு என் குழந்தை வேணும். ஊர்ல உள்ள பெரியவங்க எல்லாம் இனிமே அது உன் குழந்தை, நீ தான் அதை நல்லா பாத்துக்கணும்னு சொல்லி தானே என்னை மாமாவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க? அதனால...
அந்த தருணத்துக்காகவே காத்திருந்த சரண்யா அவசரமாக உள்ளே ஓடிச் சென்று குழந்தையை தூக்கி கொண்டாள்.
ஏற்கனவே குழந்தையின் உடை எல்லாம் எங்கே இருக்கிறது என்று தெரியுமாதலால் வேறு உடை அவனுக்கு மாட்டி விட ஆரம்பித்தாள்.
சரண்யாவின் அசைவுகள் அவன் காதுக்கு கேட்டாலும் அதைக் கண்டு கொள்ளாமல் கண்களை மூடி அமர்ந்து விட்டான் வாசு.
குழந்தைக்கு உடை மாற்றும் வரை...
“என்ன, அண்ணன் சத்தம் மாதிரி இருக்கு. திருப்பியும் ஏதாவது பிரச்சனையா?”, என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்த கோதையின் கண்களில் வாசுவும், வாசுவின் அருகில் மகனை கையில் வைத்துக் கொண்டு நின்ற சரண்யாவும் பட்டார்கள்.
தன்னுடைய மகளை கணவன் குழந்தையுடனும், முகம் முழுவதும் சந்தோசத்துடனும் பார்த்ததும் கோதையின் அகமும் முகமும் மலர்ந்தது.
“கல்யாணம் முடிஞ்சு முதல் முறையா...