புயல் காற்றில் விளக்காகவே
மிஷால் உணவகத்தில் அவனுக்காக காத்திருந்த ருஹானா மேசையில் இருந்த சீரகப்பொடியை பார்த்தாள். நேற்றிரவு ஆர்யன் சாஸில் சீரகப்பொடி சேர்க்க சொன்னதும், இனிமையாக சேர்ந்து சமைத்ததும், அதே இரவில் அவன் கடுமையாக பேசியதும் நினைவில் வர முகம் வாடினாள்.
சந்தைக்கு சென்று திரும்பிய மிஷால் உள்ளே நுழையும்போது முதலில் பார்த்தது ருஹானாவின் இந்த முகத்தை தான்.
---------
“நான் படிச்சி...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 6
அர்ஸ்லான் மாளிகையின் வெளிகேட்டில் சாய்ந்திருந்த ருஹானாவின் தோற்றம் மிக பாவமாக.. பரிதாபமாக.. உருக்கமாக.. இருந்தது.. கண்கள் பஞ்சடைந்து, முகம் கன்றி சிவந்து.. விரிந்து பறந்த கூந்தல் தூசி படிந்து, அணிந்திருந்த உடை புழுதி படர்ந்து , மேலே போட்டிருந்த கருப்பு கம்பளிஷால் முற்களால் அங்கங்கே கிழிபட்டு... ஒரு...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 49
இவானை தேடிவந்த காவலர் எதிரே வெலவெலத்துப் போய் ருஹானா நிற்க, மீண்டும் அதே கேள்வியை அவர் கேட்க, தைரியத்தை திரட்டிக்கொண்ட ருஹானா “இங்க அப்படி எந்த குழந்தையும் இல்ல” என சொன்னாள்.
“நாங்களே உள்ளே போய் தேடி பார்த்துக்கறோம்” என காவல் அதிகாரி உள்ளே செல்ல முற்பட, ருஹானா அவர்...
“உன் எண்ணமும் இதயமும் இங்க இல்ல, ருஹானா! நேசிப்பவரிடமிருந்தும் அவரது குடும்பத்திலிருந்தும் விலகி இருந்தால், எல்லா இடங்களும் ஒருத்தருக்கு அந்நிய இடமா தான் தெரியும். உனக்கும் அப்படித்தான். அங்கே மிஸ்டர் ஆர்யனுக்கும் அப்படித்தான்!“
“அது உனக்கு எப்படி தெரியும், வாகிதா?“
“அவர் உன்னை இங்க இறக்கிவிடும்போது அவர் கால்கள் முன்னோக்கி போகவே இல்ல, அதை நீ பார்க்கலயா? அவரால...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 59
தன்வீரின் மேசையின் எதிரே இரு முக்காலிகளில் அமர்ந்து ருஹானாவும் ஆர்யனும் காத்திருந்தனர்.
தன்வீரும் அவன் உதவி அதிகாரியும் ஹுசைனிடம் வாக்குமூலம் வாங்க உள்ளே அழைத்து சென்றிருக்க, ருஹானா அமைதியற்று அங்கே எட்டி பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தை முகத்தை பார்த்தவாறு ஆர்யன் அவளிடம் உண்மையை சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
ஒருவாறு தைரியத்தை...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 122
“நிஜமாத்தான் சொல்றியா அக்கா?”
“ஆமா, சல்மா! நானே நேர்ல பார்த்தேனே! இறுதி யாத்திரையை பார்க்கறது மாதிரி கல்யாண போட்டோவை பார்த்தாங்க ரெண்டு பேரும்.”
குதூகலமான சல்மா “அந்த சூனியக்காரி என்ன செய்தா?” என ஆர்வமாக கேட்டாள்.
“பாவம், அவ என்ன செய்வா? வெளுத்து போய் சிலையா நின்னா. ஆனா ஆர்யன்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 3
அர்ஸ்லான் மாளிகை..
தன் அன்னையின் அறை கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த இவான் அறைக்கு வெளியே கேட்ட சத்தத்தில் வாசலை நோக்கினான்..
“என் கைய விடு.. விடு என்னை!” என்று அழுதபடியே தரையில் வந்து விழுந்தாள், ருஹானா… அவளை அறையினுள் நெட்டி தள்ளிய ஆர்யன் பின்னால் நின்றான்.. முகத்தை மூடிய...
“நஸ்ரியா கொடுத்த பரிசை பார்த்துட்டு இருந்தேன். நீங்க வந்ததை கவனிக்கல.”
“என்ன செய்திருக்கா? நானும் பார்க்கறேனே!” ஆர்யன் கையை நீட்டி கேட்க, ருஹானா மறுக்க முடியாமல் அதை அவனிடம் கொடுத்தாள். ஆல்பத்தை திறந்த ஆர்யன் ஒவ்வொரு படமாக ரசித்து பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் அவளையும் ஏறிட்டு பார்த்துக்கொண்டான், மென்முறுவலுடன்.
ஆர்யன் மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்ப்பதை ருஹானா...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 137
படம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஆர்யனால் அப்படி இருக்க முடியுமா? புன்னகையுடன் படத்தில் ஆழ்ந்திருந்த ருஹானாவை பார்த்தான். அந்தோ பரிதாபம்! அவள் இவன் பக்கம் பார்வையை திருப்பவில்லை.
எட்டி அவளுக்கு பிடித்த வால்நட் சாக்லேட்டை எடுத்தான். அதை பிரித்து பாதி உறையை மடித்து அவளிடம் நீட்டினான். “சாக்லேட் உருகிடப்போகுது!”...
கூட்டமாக இருந்த ஒரு உணவகத்தில் ஆர்யனும், ருஹானாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.
“நம்ம குடும்பத்தினர் கிட்டே இருந்தே எதுக்கு மறைக்கணும்? அது கஷ்டம் இல்லயா? அது அவங்களை ஏமாத்துற மாதிரி இருக்காதா?”
“எனக்கும் அவங்க கிட்டே இருந்து மறைக்க ஆசை இல்ல. ஆனா அவங்க மட்டும் மாளிகைல வசிக்கல. பணியாட்கள், பாதுகாவலர்கள், ஆபீஸ் ஸ்டாப்ஸ், மாளிகைக்கு வந்து போறவங்க.....
இன்னும் பொங்குகிற கண்ணீரை அவள் குனிந்து இருகைகளாலும் துடைக்க, அவள் நாடியை பிடித்து முகத்தை திருப்பி அவனை பார்க்க வைத்தான். “எனக்கு சத்தியம் செய். இனிமேல் நீ அழவே கூடாது” பிடித்த பிடியை விடாது அவளை நெருங்கி அவன் வாக்கு கேட்க, அவளும் இதயம் கசிந்து தலையசைத்தாள். இதற்கு மேல் அவளுக்கான அவன் காதலை...
அவன் சென்ற சிலநிமிடங்களில் அங்கே இருந்த இருவருக்குள் வாக்குவாதம் முற்றி அடிதடி ரகளையானது. அதைக் கண்ட அம்ஜத் அவன் அமைதியை இழந்துவிட்டான். “சண்டை போடாதீங்க!” என்று பலமுறை சொன்னபடியே அங்கிருந்து எழுந்து வேறு திசையில் நடந்தான்.
“என்னோட அமைதி தொலைந்தது! ஆர்யன்! ருஹானா! நான் போறேன்” என அவன் புலம்பியபடியே நடக்க, அவனின் குரல் நல்லவேளையாக...
“எனக்கு பைத்தியம் பிடிக்குது. உள்ள என்ன தான் நடக்குது?” என்று புலம்பிய சல்மா தலையில் அடித்துக்கொண்டாள். இருக்கையில் அமர்ந்தபடியே ஆடினாள். ஓவென கத்தினாள். வாயை இறுக்கமாக கைகளால் மூடிக்கொண்டாள்.
மருத்துவரின் கார் உள்ளே செல்ல கடகடவென சிரித்தாள். “டாக்டர் போறாரே.. இதோ தொடங்கிடுச்சி.. அவ சாகப் போறா.. சாகப் போறா...”
கண்களில் கண்ணீர் வடிய சிரித்தவள் முகம்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 33
காவல் நிலையத்திலிருந்து வந்த அழைப்பு ஆர்யனை பிணவறைக்கு அடையாளம் காட்ட வர சொல்ல, அவனுக்கு தலையில் இடி விழுந்தது. தொண்டை அடைத்தது. போன் காதிலிருந்து நழுவியது. “ஆர்யன், மிஸ்டர் ஆர்யன்” என்று போன் குரல் அழைக்க, திரும்ப போனை எடுத்து காதில் வைத்தவன், தொண்டையில் அடைத்ததை விழுங்கிக்கொண்டு “நான்...
“குறிப்பா உங்களுக்கு தேவைப்படறது சொல்லுங்க. உங்களுக்கு பிடித்த உணவு நான் சமைப்பேன். மசாலா பொருட்கள் முக்கியம்” என சொல்லி எழுத ஆரம்பித்தாள்.
அவள் எழுதும் அழகையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன், மை தீர்ந்த பேனாவை அவள் உதறுவதை பார்த்து வேறு பேனா எடுத்து நீட்டினான்.
“நமக்கு எதுவும் தேவை இல்ல. நாம ஒன்னா இருக்க போறோம்.” இன்பக்கனவில் ஆழ்ந்தபடி...
கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, திரும்பி பார்த்த ஆர்யன் பேருவகை கொண்டான். படுக்கையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்த ருஹானாவின் கையில் ஒட்டி தைக்கப்பட்ட சிவப்புநிற இதயத்தின் வடிவிலான தலையணையும் இருந்தது.
“நேரமாகிடுச்சே! நான் உங்க படுக்கையை தயார் செய்றேன்” என்று அவள் சொல்ல, உள்ளத்தின் பூரிப்பில் அவன் நகராது நின்றான்.
“நீ திரும்பி வந்திட்டே!”
“ஆமா, வந்துட்டேன்!”
ஆர்யனின் பார்வை...
இவான் ஓடிச்சென்று கட்டிலில் நடுவில் படுத்துக்கொண்டு “வாங்க!” என்று இருவரையும் அழைத்தான். ஆர்யன் இவானின் வலப்பக்கம் சென்று படுத்துக்கொண்டு அவளை பார்க்க, அவள் தயங்கியபடி இடப்பக்கம் சென்று படுத்தாள்.
விட்டத்தைத் பார்த்து சில நிமிடங்கள் மூவரும் மௌனமாக படுத்திருக்க, இருவரையும் திரும்பி பார்த்த இவான் “நீங்கள் இப்போ கணவன் மனைவி ஆகிட்டீங்க. நீங்க ரெண்டு பேரும் மிகவும்...
“நான் பொறாமையில் பேசினேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, அது தப்பு. ஒரு கல்யாணப் பொண்ணு எப்படி நடந்துக்குவாளோ அதைப் போல தான் நான் மத்தவங்க முன்னாடி நடந்துகிட்டேன். இல்லனா சந்தேகம் வரும் இல்லயா? அதனால நீங்க வேற எதும் நினைச்சிக்காதீங்க. எனக்கு கண்டிப்பா பொறாமை எல்லாம் இல்ல.”
“என்ன சித்தி? கண்ணாடியை பார்த்து நீங்களே பேசிக்கிறீங்க?” ருஹானாவின்...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 72
சங்கிலியிலிருந்து கூந்தலை விடுவித்தபின்னும் இருவரின் பார்வை வீச்சுகளும் விடுபடவில்லை.
ருஹானாவால் நெடுநேரம் ஆர்யனின் கண்களின் கூரியக் கணைகளை தாங்கமுடியாமல் தலை தாழ்த்த, அதன் பிறகே பச்சை கண்களின் காந்த ஈர்ப்பிலிருந்து விடுபட்டான் ஆர்யன்.
வந்த வேலை நினைவு வர “சோசியல் சர்வீஸ் பேப்பர்ஸ்ல நீ ஓய்வா இருக்கும்போது கையெழுத்து போட்டு வச்சிடு”...
சையத் உணவகம்.
எதிரே அமர்ந்திருந்த சையத்திடம் ஆர்யன் “அவ அவ்வளவு எளிதா போக முடியாது, சையத் பாபா. என் முதுகுக்கு பின்னால சதி செஞ்சி இவானை தூக்கிட்டு போனவ அதோட விளைவுகளை அனுபவிக்காம எங்கயும் தப்பிச்சி போக நான் விட மாட்டேன்” என கோபமாக பேசினான்.
“இங்க பார் மகனே! உன்னோட கோபத்தீ மத்தவங்களை மட்டும் இல்ல,...