Smrithiyin Manu
ஸ்மிரிதியின் மனு - 28_1
அன்றிரவு அவளுடைய வீட்டிற்கு திரும்பிய பின் கரனின் ஹோட்டலில் பீஜி, அவள், அவன் என்று அவர்கள் மூவரின் ஒற்றுமையைப் பற்றி மனு பேசியது ஸ்மிரிதியின் மனதை விட்டு அகல மறுத்தது. அதன் விளைவாக நெடு நாட்கள் கழித்து விடியற்காலை வேளையில் பீஜியுடன் ஃபோனில் பேசினாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் அழைப்பை அவர் உடனே...
ஸ்மிரிதியின் மனு - 35
மெஹக், மாறன் இருவரும் அவரவர் எண்ணங்களின் மூழ்கி இருந்த போது அடுத்து வர போகும் நிகழ்ச்சிகள் பற்றி அறிவிப்பு செய்தான் கபீர். அதில் முதல் நிகழ்ச்சியாக அவர்களின் பிரியமான சினேகிதி ஸ்மிரிதிகாக ஒரு சிறப்பு நடனம் என்று அறிவித்தான். அந்த அறிவிப்புக்குப் பின் மாறன் எழுந்து சென்று அவன் வாசிக்க...
ஸ்மிரிதியின் மனு - 60_2 (இறுதி பதிவு)
அவர்கள் கார் நெடுஞ்சாலையை அடைந்தபோது அத்தனை சிக்னலிலும் அவர்கள் ஆட்களை நிறுத்தியிருந்தான் விரேந்தர். அவர்களின் கார் பின்னே ஒவ்வொரு சிக்னலிலும் ஒரு கார் சேர்ந்து கொள்ள, அவர்கள் ஆஸ்பத்திரியை சென்றடைந்த போது ஒரு கார் ஒரே கார்களின் ஊர்வலமாக மாறியிருந்தது.
ஆஸ்பத்திரி வாசலில் டாக்டர்களுடன் மாறன் காத்திருந்தான். மனிஷை...
ஸ்மிரிதியின் மனு - 36_2
அவள் கையில் காபியுடன் வரவேற்பறையில் ஸ்மிரிதி அமர்ந்து கொண்டவுடன் வாக்கிங் சென்றிருந்த நாதன் வீடு திரும்பினார்.
“அங்கிள்..மார்னிங் வாக்கா?” என்று ஸ்மிரிதி விசாரிக்க,
“ஆமாம் மா.” என்றார் நாதன்.
அன்றைய செய்தித்தாளுடன் அவளருகே அவர் அமர்ந்தவுடன், “காபி குடிக்கிறீங்களா?” என்று அவள் கையில் அவளுக்காக எடுத்து வந்த காபியைக் காட்டி அவரைக் கேட்டாள் ஸ்மிரிதி.
“நீ...
ஸ்மிரிதியின் மனு - 46_2
மாறனுடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த மெஹக், தானாகவே அமைந்த அவர்களின் இந்த சந்திப்பில் சந்தோஷமடைந்தவள் அவனைப் பற்றி உணர்ந்த பின் ஏற்படும் இந்த முதல் சந்திப்பைச் சரியாக கையாள வேண்டுமென்று சஞ்சலமுமடைந்தாள். சந்தோஷம், சஞ்சலம், பரிதவிப்பு என்று அவளுக்குள் ஏற்பட்டு கொண்டிருந்த அதுவரை அவள் உணர்ந்திராத உணர்வுகளை ஆராய்ச்சி...
ஸ்மிரிதியின் மனு - 47
அவனுடைய சாவியை போட்டு கதவைத் திறந்து வீட்டிற்குள் வந்த மனுவின் கண்களில் பட்டார் டைனிங் டேபிளில் தலைவைத்து உறங்கி கொண்டிருந்த சிவகாமி.
அவரைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவன் ஷுவை கழட்டிவிட்டு, வாஷ் பேஸினில் கை கழுவும் போது விழித்துக் கொண்டவர்,
“என்ன டா இன்னைக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு?” என்றார்.
“அரைமணி நேரம் லேட்..ஸ்மிரிதி...
ஸ்மிரிதியின் மனு - 30_2
அடுத்த ஒரு மணி நேரம் அண்ணன், தம்பி இருவரும் அடித்து போட்டது போல் உறங்கி இளைப்பாற, அந்த வீட்டின் புது மருமகளோ மெஹக்கிற்கு ஃபோன் செய்தே களைப்படைந்திருந்தாள். மாலையில் நடக்க போகும் ரிஸெப்ஷனிற்கு வேண்டிய ஏற்பாட்டில் கபீர் பிஸியாக இருப்பான் என்பதால் அவனையோ, அவளுடைய ஹோட்டல் அறையில் இளைப்பாறி கொண்டிருந்த...
ஸ்மிரிதியின் மனு - எபிலாக்_3
சற்று தூரத்தில் நின்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த ரணதீரனிடம்,”உனக்கு வேற விளையாட்டு வைச்சிருக்கேன்.” என்று பிராமிஸ் செய்தான். பிரேமாவின் புடவை மீது அமர்ந்திருந்த பூமியின் அருகே அமர்ந்து, அவளின் நீண்ட தலைமுடியை விரல்களால் தூக்கி பிடித்து,”மூணு வயசுக்கு ரொம்ப நீட்டமா வளர்ந்திருக்கு.”என்று சொன்னவன், அவன் தலைமுடியை அதே போல்...
ஸ்மிரிதியின் மனு - 36_1
ஸ்மிரிதியின் பதிலில் லேசாக கலவரமடைந்தான் மனு. அவன் இந்தப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவன் அணுகுமுறையில் இருந்த பிழையை அவள் பதிலைக் கேட்ட பின்தான் உணர்ந்தான். அவளுடன் மறுபடியும் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது அவர்கள் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
வீட்டின் வெளிப்புறம் வண்ண சர விளக்குகளால்...
ஸ்மிரிதியின் மனு - 29
பாலாஜி மந்திரின் வெளிப் பிரகாரத்தில், பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தபடி, ஸ்மிரிதி, மனுவின் திருமண வைபவத்தைப் பார்த்து கொண்டிருந்தார் பீஜி. எப்போதும் அணியும் வெள்ளை சல்வார் கமீஸில் அமைதியாக, எளிமையாக அமர்ந்திருந்தவர் வட இந்தியாவின் பெரிய தொண்டு நிறுவத்தனின் ஸ்தாபகர் என்று அறிமுகப்படுத்தி வைத்தால்தான் தெரிய வரும். பஞ்சாபி பாகில் (punjabi...
ஸ்மிரிதியின் மனு - 37
“பிரண்ட்..சரியா சொன்னீங்க..இந்த விஷயத்திலே நீங்களும், நானும் ஒரே கட்சி..ஒவ்வொரு விஷயத்திலும் நாம ஒரே மாதிரி இருக்க முடியாது..விஷயத்தைப் பொறுத்து அதோட வீர்யத்தைப் பொறுத்து நான் என் திட்டத்தைச் செயல்படுத்துவேன்..நல்லது, கெட்டது, கஷ்டம், நஷ்டம், நண்பன், எதிரி, கணவன், மனைவி, அண்ணன், தம்பி, மாமியார், மாமனார் இந்த பாரபட்சமெல்லாம் எனக்கு தெரியாது..எனக்கு...
ஸ்மிரிதியின் மனு - 28_2
“மனிஷுக்கு தமிழ் புரியாதுன்னு அவனைப் பக்கத்திலே வைச்சுகிட்டு இவ்வளவு விவரமா பேசிக்கிட்டு இருக்கியா?”
“உன் ஸாலாவை உன் பொறுப்புலே வைச்சு நீயே அவனுக்குத் தமிழ் கத்து கொடு.”
“வாய்ப்புக் கிடைச்சா செய்வேன்..அவன் தீதியை அவளோட தாய்மொழிலே திட்ட சொல்லித் தருவேன்.” என்று சொன்ன மனு அறிந்திருக்கவில்லை அவனுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறதென்று,...
ஸ்மிரிதியின் மனு - 30_1
மனுவின் கருத்தை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஸ்மிரிதி, அவளுடைய கனவு, லட்சியம், குறிக்கோள் பற்றி யோசித்து அவன் முடிவுகளை எடுத்த அந்த நிமிடத்திலிருந்து அவளும் அவர்களுக்காகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறாளென்று அவனுக்கு அப்போது விளக்க விரும்பவில்லை.
அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்வதைப் பார்த்து கொண்டிருந்த பிரேமா “ஸ்மிரிதி..இங்க வா.” என்று அவளுக்கு அழைப்பு...
ஸ்மிரிதியின் மனு - 34_2
அன்று முழுவதும் அவள் யாருக்குமே முக்கியமில்லை என்று தன்னிரக்கத்தில் உழன்று கொண்டிருந்த மெஹக்கிற்கு அவன் நினைவில் அவள் இல்லை என்ற வார்த்தைகள் அவள் கோபத்தை கிளறி விட,“விடு டா என் கையை.” என்று மரியாதை இல்லாமல் மாறனைப் பேசினாள்.
அவனின் சாதாரண அழைப்பிற்கு அவனை இந்த அளவிற்கு அவள் அவமதிப்பாக பேச...
ஸ்மிரிதியின் மனு - 34_1
அவள் செய்கையினால் விளைந்த கணவனின் அதிர்ச்சியையும், அம்மாவின் திகைப்பையும் கவனிக்க தவறவில்லை ஸ்மிரிதி. அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவள் அந்த இரவு முடிவதற்குள் அவளே அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொண்டாள்.
கபீரின் குடும்பத்துடன் அமர்ந்தபடி வரவேற்பு நிகழ்ச்சியை அமைதியாக பார்த்து கொண்டிருந்த மெஹக்கின் மனம் ஓயாமல் ஓசை எழுப்பி...
ஸ்மிரிதியின் மனு - 43_2
அவன் நேரத்தை அவள் வீண்ணடிக்கிறாள் என்ற அவன் பதிலில் கோபமடைந்த மெஹக் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு மணி ஒலிக்க மெஹக் போய் கதவைத் திறந்தாள். அறை வாசலில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவளை தில்லியில் சந்தித்தவர், அவருடன் ஒரு புதியவர்.
“ப்ளீஸ் கம்.” என்று...
ஸ்மிரிதியின் மனு - 40
அடுத்து வந்த நாட்களில் மாறனிடம் முகம் கொடுத்து பேசவில்லை சிவகாமி. அவரின் உதாசீனம் மாறனை பாதித்ததாகத் தெரியவில்லை. அவரை வம்பிற்கு இழுத்து சண்டையை போட நினைத்தவனிடமிருந்து விலகி இருந்தார். திடீரென்று அந்த வீட்டில் ஏற்பட்டிருந்த அமைதியை மௌனயுத்தம் என்று நாதன் உணரவில்லை. அந்த யுதத்திற்கானக் காரணத்தை அறிந்த இருவரும் அதில்...
ஸ்மிரிதியின் மனு - 44_2
“மெஹக் அவளோட அஞ்சாவது வயசுலேர்ந்து சக்கரை கலந்த ஃபென்னி குடிச்சு பழகியிருக்கா..அவளைத் தூங்க வைக்க அவளோட அம்மா அந்த அறியாத வயசுலே அவளுக்கு ஏற்படுத்தின பழக்கம்..பத்து வயசுலே அவளே அதை கோக்கோட கலந்துகிட்டா..அவ ஸ்கூல் சேர்ந்ததுலேர்ந்து அவ காலேஜ் போக விரும்பினாலும் போக முடியாதுன்னு தெரியும்..அதனாலே படிப்புக்கு முக்கியத்துவமே கொடுக்கலே..
ஸ்கூலுக்குப்...
ஸ்மிரிதியின் மனு - 46
“ஸாரி..லேட்டாயிடுச்சு.” என்று சொன்ன மெஹக், முகத்தை சுற்றியிருந்த ஸ்டோலை விலக்கி அதை கழுத்தை சுற்றி போட்டு கொண்டாள். அதை சரி படுத்தி கொண்டிருந்த மெஹக்கின் கண்களில் பட்டான் மாறன். இருவரும் ஒருவரையொருவர் ஒரு நொடி நேரடியாக பார்த்து கொண்டனர். அந்த ஒரு நொடியில் அவளெதிரே டி ஷர்ட், ஜீன்ஸ், காடு...
ஸ்மிரிதியின் மனு - 42
அதற்கு அடுத்து வந்த நாட்களில் கணவனும், மனைவியும் மாறி மாறி வெளியூர் பயணம் மேற் கொண்டனர். திடீரென்று மனு எதற்காக மும்பை போகிறான் என்று யோசனையானர் நாதன். அதே சமயம் அவருடைய இளைய மகன் பெரும்பாலும், பகல் வேளையிலும் வீட்டிலிருப்பதைப் பார்த்து கவலையானார்.
மாறன் வீட்டிலிருக்க ஆரம்பித்தவுடன் சிவகாமி வெளியே...