Smrithiyin Manu
ஸ்மிரிதியின் மனு - 34_2
அன்று முழுவதும் அவள் யாருக்குமே முக்கியமில்லை என்று தன்னிரக்கத்தில் உழன்று கொண்டிருந்த மெஹக்கிற்கு அவன் நினைவில் அவள் இல்லை என்ற வார்த்தைகள் அவள் கோபத்தை கிளறி விட,“விடு டா என் கையை.” என்று மரியாதை இல்லாமல் மாறனைப் பேசினாள்.
அவனின் சாதாரண அழைப்பிற்கு அவனை இந்த அளவிற்கு அவள் அவமதிப்பாக பேச...
ஸ்மிரிதியின் மனு - 45_2
“ஆனா என்ன டி?”
“மனிஷ் வீட்டுக்கு வரான் டி..கல்யாணத்துக்குப் பிறகு ஸ்மிரிதி வீட்லே இருந்தாலும், இல்லாட்டாலும் அவன் சனி, ஞாயிறு வந்துகிட்டிருந்தான்..இப்பதான் மாறன் ஊருக்கு போன பிறகு, நான் பாக்கிங் ஆரம்பிச்ச பிறகு அவன் வர்றது குறைஞ்சிருக்கு..நாங்க ஷிஃப்ட் ஆன பிறகு அவன் திரும்ப சனி, ஞாயிறு வரலாம்..ஸ்மிரிதியும், அவனும் ரொம்ப...
ஸ்மிரிதியின் மனு - 10
“உன்னோட ஸ்பெஷல்னா உனக்கும் ரொம்ப பிடிக்கும்தானே..ஃபைன் லேட்ஸ் ஹவ்…ஆரன் ஜ் அண்ட் லைம் ஃபார் மீ.” என்று கார்மேகம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் அவர் மகளுடன் போர் களத்தில் இறங்கினான் மன்னன் மனு வளவன்.
அவன் தாக்குதலில் தடுமாற்றமடைந்த ஸ்மிரிதி அவளைச் சுதாரித்துக் கொள்ளுமுன்,
“மனு தம்பி..ஸ்மிரிதிமா தெரியாமப் பேசிட்டாங்க..தப்பா நினைச்சுக்காதீங்க.” என்று...
ஸ்மிரிதியின் மனு - 20_2
கபீர் இணைப்பைத் துண்டித்தவுடன் மனுவின் சந்தேகம் சரி என்று உறுதியானது. ஸ்மிரிதி இருக்கும் இடம் கபீருக்குக் கண்டிப்பாக தெரிந்திருந்திருக்கிறது அதை வெளியிடக்கூடாது என்பதால்தான் அவன் இணைப்பைத் துண்டித்தான் என்று புரிந்தது. உடனே அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான் மனு.
“ஸ்மிரிதி பற்றி தெரியணும்..மனு” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் கபீருக்கு பெரும் நிம்மதி...
ஸ்மிரிதியின் மனு - 45_1
அடுத்த வந்த நாட்களில் மாறன், மெஹக் இருவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க அவர்கள் இருவரையும் பற்றி மும்முரமாக யோசித்து கொண்டிருந்தாள் ஸ்மிரிதி. அன்று காலையில் உதய்பூரிலிலிருந்து திரும்பியவளிடம்,
“இன்னைக்கு வீட்டுக்கு கேட் வைக்க போறாங்க..பில்டர் போட்டதை எடுத்திட்டு பெரிசா வைக்கறாங்க.” என்று தகவல் கொடுத்தார் சிவகாமி.
அதை மௌனமாக கேட்டபடி அவன்...
ஸ்மிரிதியின் மனு - 44_1
மாறன் பொறுக்கியா? என்று அதிர்ந்த ஸ்மிரிதி,”என்ன ஆச்சு?”
“கண்டபடி பேசறான்.”
“என்ன பேசினான்.”
“கபீரோட, தல்ஜித்தோட டான்ஸ் ஆடினதைப் பற்றி அசிங்கமா பேசறான்.” என்றாள்.
“ஏன்?”
“அவனோட ஆடமாட்டேன்னு சொல்லிட்டு அவங்களோட ஆடினேன் அதனாலே.”
“எப்ப நடந்திச்சு இதெல்லாம்?” என்று கேட்ட ஸ்மிரிதிக்கு நிஜமாகவே தெரியவில்லை அவள் ரிசெப்ஷனில் நடந்த சம்பவம்.
“உன் ரிசெப்ஷன்லேதான்..அவன் எல்லாரோடையும் ஆடி முடிச்சிட்டு என்கிட்ட...
ஸ்மிரிதியின் மனு - 12
மனு அருகில் அமர்திருந்த சிவகாமியோ ஸ்தம்பித்து போயிருந்தார். ஸ்மிரிதியின் இந்தப் பரிமாணம் அவர் அறியாதது. ஆடம்பரமில்லாமல் அதே சமயம் அழகானப் புடவையில் அவள் ஆடியதும், பாடியதும் அவர் மனதை கொள்ளைக் கொண்டிருந்தது. அவள் எப்போது, எந்த வயதில், யாரிடம் இந்த மாதிரி பஞ்சாபி பாட்டைப் பாடவும் அதற்கேற்ப ஆடவும் கற்று...
ஸ்மிரிதியின் மனு - 13
“என்ன மா இது? குளிர்ல காலத்தில டிரஸ்ஸ ஈரம் செய்யறீங்க? என்று கேட்டான் மனு.
மனுவிற்குப் பதில் சொல்லாமல்,”திரேன்..ரோட்டி கொண்டு வா.” என்று சிவகாமி குரல் கொடுக்க,
கிட்சனிலிருந்து ஃபூல்காவுடன் வெளியே வந்தான் திரேன். அவன் கொண்டு வந்த தட்டிலிருந்தது இரண்டே இரண்டு ஃபூல்கா. அதை பெரியவர்கள் இருவரும் ஆளுக்குவொன்றாக எடுத்து கொள்ள,...
ஸ்மிரிதியின் மனு - 46
“ஸாரி..லேட்டாயிடுச்சு.” என்று சொன்ன மெஹக், முகத்தை சுற்றியிருந்த ஸ்டோலை விலக்கி அதை கழுத்தை சுற்றி போட்டு கொண்டாள். அதை சரி படுத்தி கொண்டிருந்த மெஹக்கின் கண்களில் பட்டான் மாறன். இருவரும் ஒருவரையொருவர் ஒரு நொடி நேரடியாக பார்த்து கொண்டனர். அந்த ஒரு நொடியில் அவளெதிரே டி ஷர்ட், ஜீன்ஸ், காடு...
ஸ்மிரிதியின் மனு - 40
அடுத்து வந்த நாட்களில் மாறனிடம் முகம் கொடுத்து பேசவில்லை சிவகாமி. அவரின் உதாசீனம் மாறனை பாதித்ததாகத் தெரியவில்லை. அவரை வம்பிற்கு இழுத்து சண்டையை போட நினைத்தவனிடமிருந்து விலகி இருந்தார். திடீரென்று அந்த வீட்டில் ஏற்பட்டிருந்த அமைதியை மௌனயுத்தம் என்று நாதன் உணரவில்லை. அந்த யுதத்திற்கானக் காரணத்தை அறிந்த இருவரும் அதில்...
ஸ்மிரிதியின் மனு - 11_2
“அம்மா, நான் உங்கள அழைச்சுகிட்டு வந்தேனாம்... இவள பார்க்கணுமுனு நீங்கதான் என்னைக் கட்டாயப்படுத்தி அழைச்சுகிட்டு வந்தீங்க..இன்னிக்காவது நேரத்துக்கு வீட்டுக்குப் போயி நான் தூங்கணும்.” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மையைப் போட்டு உடைத்தான். ஆனால் மனு அப்போது அறிந்திருக்கவில்லை அவன் எந்த நேரத்திற்கு வீட்டிற்குப் போனாலும் அன்றிரவு அவன் தூங்கப்...
ஸ்மிரிதியின் மனு - 19_2
“என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு வேணாம்..அதேபோல மனீஷ் பற்றியும் கவலைப்படாதீங்க..அவனை என்னோடத் தம்பியாதான் நான் பார்க்கறேன்..கீதிகாவுக்கு அவங்க வீட்டு ஆளுங்க இருக்காங்க அதனால உங்க கவலை அனாவசியமானது.” என்றாள் ஸ்மிரிதி.
“இல்ல..அனாவசியமில்ல..அவசியம்..நீங்க உங்க விருபப்படி கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்துயிருக்கீங்க அதனால இப்ப நான் என்னோட இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி சொல்ல...
ஸ்மிரிதியின் மனு - 1
கோயமுத்தூர்
“நினைவுகள்..வரமா? சாபமா?”
கோயமுத்தூர் உங்களை வரவேற்கிறது. விடியற்காலை வேளையில் அந்தப் பெயர் பலகையைப் பார்க்கையில் கண்கள் கண்ணீர் குளமாகின பிரேமாவிற்கு. அவருகே சோர்வில்லாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவர் மகளைப் பார்த்து,
“ஊருக்குள்ள நுழையப் போறோம்.” என்றார்.
“நவிகெஷன் போட்டிருக்கேன் மாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“தாங்கஸ்.” என்றார் பிரேமா.
“எதுக்கு?”
“என்னைக் கோயமுத்தூர் அழைச்சுகிட்டு வந்ததுக்கு.”
“நோ பிராப்ளம்..என்கிட்ட டயம்...
ஸ்மிரிதியின் மனு - 51
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்ட மனுவின் மனதில் பலவிதமான உணர்ச்சிகள் ஏழ அதே சமயம் ஸ்மிரிதியின் உணர்ச்சியற்ற முகம் அவனுக்குக் கவலையை அளித்தது. அவள் தாயின் இழப்பை அவனோடு பகிர்ந்து கொண்ட அவன் மனைவி இன்னும் அதை முழுமையாக உணரவில்லை என்ற அவன் எண்ணத்தை அவளின் அடுத்த செய்கை உறுதிப்படுத்தியது. அவன்...
ஸ்மிரிதியின் மனு - 53
மெஹக் கிளம்பி சென்ற சில மணி நேரத்தில் சிவகாமியின் அறையில் பரபரப்புடன் மனு நுழைய, அவனைத் தொடர்ந்து மூன்று பைகளுடன் நுழைந்தாள் ஸ்மிரிதி.
“என்ன மா ஆச்சு? ஏன் மயக்கம் போட்டீங்க? ஏன் எனக்கு உடனே ஃபோன் செய்யலே? மஞ்சு நாத்கிட்ட பேசின பிறகுதான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சுது.” என்று மனு...
ஸ்மிரிதியின் மனு - 9_1
அறையிலிருந்து மற்றவர்களுடன் வெளியே சென்ற ஸ்மிரிதி அறைக்குளிருந்த மனுவைப் பார்த்து,”நான் இவங்களோட கார்வரைக்கும் போயிட்டு வரேன்.” என்று சொன்ன விதம் மற்றவர்களுக்கு சாதாரணத் தகவலாகத் தெரிந்தது ஆனால் மனுவிற்கும் மட்டும் அதன் அர்த்தம் புரிந்தது.
“திரும்பி மேல வரும்போது என் பைக் சாவியோட வா.” என்று கட்டளையிட்டான் மனு.
“சரி” என்று பதில்...
ஸ்மிரிதியின் மனு - 4_2
“உங்கப்பாகிட்ட சொல்லு இதெல்லாம்.” என்றார் பிரேமா.
“அவருக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்ல…ஆனா உங்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன்..அம்மா, யாருமில்லாத அனாதைதான் இன்னிக்கு அவருக்குனு ஒரு இடம் பண்ணிகிட்டிருக்காரு..அவரோட எந்தச் செய்கையும் இனி விமர்சனம் செய்யாதீங்க.” என்று காலையிலிருந்து அன்பாக அவள் அம்மாவிற்கு புரிய வைக்க முயன்று தோற்று போன ஸ்மிரிதி...
ஸ்மிரிதியின் மனு - 16_2
பிரேமாவின் திடீர் கேள்வி புரியாமல், “அவங்க அம்மானுதான் சொன்னான்..ஷிவானியா? அது யாரு மா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அவனுக்கு ஷிவானினு யாரோ கிளோஸா இருக்கறதா சிவகாமி சொன்னா..அவளோட நிறைய நேரம் ஃபோன்ல பேசறானாம்..சிவகாமி..ஷிவானி பெயர் பொருத்தும் நல்லா இருக்குதுனு என்கிட்ட கோயமுத்தூரில சொல்லிகிட்டிருந்தா..அது என்னை உறுத்திகிட்டு இருந்திச்சு..இப்ப உன்கிட்ட சொல்லிட்டேன்.” என்றார்...
ஸ்மிரிதியின் மனு - 27
“வாவ்..தட்ஸ் எ ஸர்பரைஸ்..கன்கிராட்ஸ் மேம்.” என்றான் ஸ்மிரிதியைப் பார்த்து.
“தாங்க்ஸ்.” என்று ஒரு புன்சிரிப்புடன் கரனுக்குப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
“வாங்க.” என்று சொல்லி அவர்களைச் சந்திக்க அவன் வந்த கதவைத் திறந்து அதை ஒட்டியிருந்த மாடிப்படி வழியாக அவர்களை டெரெஸுக்கு அழைத்து சென்றான் கரன். அங்கே கண்ணை உறுத்தாத மிதமான விளக்கொளியில்...
ஸ்மிரிதியின் மனு - 36_2
அவள் கையில் காபியுடன் வரவேற்பறையில் ஸ்மிரிதி அமர்ந்து கொண்டவுடன் வாக்கிங் சென்றிருந்த நாதன் வீடு திரும்பினார்.
“அங்கிள்..மார்னிங் வாக்கா?” என்று ஸ்மிரிதி விசாரிக்க,
“ஆமாம் மா.” என்றார் நாதன்.
அன்றைய செய்தித்தாளுடன் அவளருகே அவர் அமர்ந்தவுடன், “காபி குடிக்கிறீங்களா?” என்று அவள் கையில் அவளுக்காக எடுத்து வந்த காபியைக் காட்டி அவரைக் கேட்டாள் ஸ்மிரிதி.
“நீ...