Nenjamellaam Kaathal
அத்தியாயம் – 14
கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த லச்சுமி அதிர்ந்து போனார். கிழிந்து போன துணியாக, கசக்கிப் போட்ட காகிதமாக, வாடிப் போன மலராக அனத்திக் கொண்டு கிடந்த மருமகளைக் கண்டவருக்கு தூக்கி வாரிப் போட்டது. வேகமாய் அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், உடல் அனலாய்த் தகித்ததில் கையை இழுத்துக் கொண்டார்.
“அச்சோ..... புள்ளைக்கு...
அத்தியாயம் – 13
“மீனுக்குட்டி.......”
கட்டிலில் அமர்ந்து துணி மடக்கிக் கொண்டிருந்தவள் பின்னில் அமர்ந்து காதின் அருகில் கிசுகிசுத்த கணவனின் குரலில் உடல் ரோமங்கள் சிலிர்த்து நிற்க கூச்சத்துடன் நெளிந்தாள்.
“ம்ம்ம்.....” என்றவளின் குரல் வாய்க்குள்ளேயே அடங்கிவிட்டது.
அவளது பின் கழுத்தில் அவனது உதடுகள் ஊர்வலம் போக படபடப்பும் கூச்சமும் போட்டி போடத் தாங்க முடியாமல் முகம் சிவந்தவள், சட்டென்று...
அத்தியாயம் – 15
அடுத்த நாள் காலையில் அடுக்களையில் காப்பி கலந்து கொண்டிருந்த லச்சுமி, குளித்து புத்தம் புது மலராக அடுக்களைக்கு வந்த மருமகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.
“அடி ஆத்தி.... நேத்து எழுந்திருக்க மாட்டாம முறிச்சுப் போட்ட மரங்கணக்காப் படுத்துக் கெடந்தவ..... இன்னைக்கு, இப்பப் பறிச்ச ரோசாவாட்டம் தெம்பா வந்து நிக்கற.... இது என்னட்டி..... மரிமாயமா இருக்கு......”...
அத்தியாயம் – 12
நாட்கள் அதன் பாட்டில் யாருக்கும் காத்திராமல் நகரத் துவங்கியது. மதியின் மனது தெரிந்த பின்னால் கயல் அவனைக் கண்டும் காணாமல் விலகிச் செல்ல அவளது விலகலின் காரணம் தெரியாமல் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தான் மதியழகன். அவள் காணாத போது அவளைக் கண்டு ரசிப்பவன், அவளது பாரா முகத்தின் காரணம் தெரியாமல் தவித்தான்.
எப்போதும்...
அத்தியாயம் – 2
“ஏட்டி லச்சுமி.... எதுக்குவே..... நீ இப்படி ஒப்பாரி வைக்கவ.... உம்புள்ள என்ன மொத தடவையா குடிச்சிட்டு வந்திருக்கான்...... தெனம் இப்படித்தாம்லே எங்கனாச்சும் குடிச்சிட்டு விழுந்து கெடக்கான்....” எரிச்சல் நிறைந்திருந்தது முத்துப்பாண்டியின் குரலில்.
அவரை முறைத்த லட்சுமி, “ஏன் சொல்ல மாட்டிய..... ஒண்ணே ஒண்ணு..... கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு புள்ளைய பெத்து வச்சிருக்கேன்.......
லச்சுமி கஞ்சியுடன் வர கண்ணைத் துடைத்துக் கொண்டவள், மெல்ல எழுந்திருக்க முயல, அசைய முடியாமல் உடம்பெல்லாம் பயங்கரமாய் வலித்தது. வலியில் முகத்தை சுளித்துக் கொண்டவளை தலையணையை சரிவாய் வைத்து அதில் சாய்ந்தவாறு அவளை அமர்த்திவிட்டு சிறிது கஞ்சியைக் குடிக்க வைத்தவர், ராமு வாங்கி வந்த மாத்திரையை அவளுக்குக் கொடுத்தார்.
மௌனமாய் எல்லாவற்றையும் செய்தவள், “அத்த..... நீங்க...
“இந்த சின்னவ, கருவாச்சி இருக்காளே....... அவ அப்படியே அவ அம்ம குடும்பத்த போல..... எதுக்கெடுத்தாலும் என்னா பேச்சு பேசுதா...... நாளைக்கு கண்ணாலம் கட்டிப் போற எடத்துல அவள எப்படி சமாளிக்கப் போறாகளோ..... நல்ல சண்டிவீரன் கணக்கா ஒருத்தன் வந்துதேன் அவள அடக்கணும் பார்த்திகிடுங்க......” என்று சொல்லிக் கொண்டே போனவர் அவர்களின் வித்தியாசமான பார்வையை உணர்ந்து,
“இந்தக்...
அத்தியாயம் – 6
“என்ன சொல்லுதிய.... அந்தக் குடிகாரப்பையன் நம்ம கயலுக்கு மாப்பிள்ளையா... பூவாட்டமா இருக்குற பொண்ணை அந்தப் பையனுக்கு எப்படிங்க கட்டி வைக்க முடியும்..... அதும் இல்லாம அவனைக் கண்டாலே இவளுக்கு ஆகாதே... அப்புறம் எப்படி கண்ணாலம் கட்டிக்க ஒத்துக்கறேன்னு சொல்லுதா.....” என்றார் ராசாத்தி அதிர்ச்சியுடன்.
“மாப்பிள்ள..... மலரு கண்ணாலம் முடிஞ்சதும் கயலை நம்ம மணிமாறனுக்கு...
அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்தவன், “ஆனா நீ...... நீயும் பணத்துக்காக தானே என்னக் கட்டியிருக்கே.... எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக மாறணும்.... உன்னோட வாழணும்னு நினைச்ச என்னை நீயும் ஏமாத்திட்டல்ல......” என்றவனின் கண்களின் சிவப்பு அவளை அச்சுறுத்தியது.
“அத்தான்..... தயவுசெய்து நான் சொல்லறதக் கேளுங்க..... என் அக்காவுக்காக மட்டும் உங்கள கண்ணாலம் பண்ண நான் நினைக்கலை..... எனக்காகவும்...
“என்ன சொல்லுதிய...... அது வெளைச்சல் குடுக்குற பூமியாச்சே.... அத எதுக்குங்க நாம குடுக்கணும்.....”
“எனக்கும் குடுக்கறதுக்கு பெருசா விருப்பம் இல்லட்டி..... அவுக நிர்பந்தம் பண்ணி கேக்குதாக.... உங்கிட்ட கேட்டுட்டு சொல்லுதேன்னு சொல்லிட்டேன்.....” என்றார் அவர்.
“ம்ம்..... மதி கிட்ட இதப் பத்தி பேசற நெலமைலயா இருக்கோம்...... அதெல்லாம் சரியா வராது.... நமக்கு இப்பக் குடுக்கனும்னு தேவையும் இல்ல........
அத்தியாயம் – 3
ஒரு ஆளுயரத்தில் நிமிர்ந்து கிழக்கில் சூரியனின் முகம் நோக்கி தலை திரிந்து நின்ற சூரியகாந்தி மொட்டுகளை ரசித்துக் கொண்டே செடிகளுக்கு நடுவில் இருந்த வழியில் நடந்தாள் கயல்விழி. அவளது உயரத்துக்கு நீண்டிருந்த செடிகள் அவளோடு நடப்பது போலவே இருந்தது.
ஆடவனைக் கண்டதும் நாணத்துடன் முகம் திருப்பிக் கொள்ளும் குமரிப்பெண்ணாய் சூரியகாந்தி மொட்டுக்கள் மலரத்...
“இல்ல அத்த..... அத்தான் இப்படிக் குடிச்சிட்டு சீரழிஞ்சு போறதுக்கும் அதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா..... எதுவா இருந்தாலும் சொல்லுங்க.... அப்பதானே அவரை நாம மாத்தி மாமாவோட பேச வைக்க முடியும்.....” என்றாள் அவள்.
“ம்ம்... நான் செய்யாத முயற்சியா..... ரெண்டு வருஷம் ஆச்சு.... இப்பவும் மதிக்கு அவுக மேல உள்ள கோபம் கொறையாம தான கெடக்கு.....”
“என்னதேன்...
அத்தியாயம் – 5
“அய்யய்யோ.... சம்மந்தி வூட்டுல அப்படியா சொல்லிட்டாக.... இப்போ என்னங்க பண்ணுவோம்......” கையைப் பிசைந்தார் ராசாத்தி.
“எனக்கும் ஒண்ணும் புரியல .... கல்யாணத்துக்கு முதநாளு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னா நம்ம பொண்ணை யாரு கட்டுவாங்க......” என்று கலக்கத்துடன் கூறினார் சுந்தரேசன்.
“மாப்பிள்ள.... கலங்காதீய.... ஏதாவது பண்ணுவோம்....” என்றார் மாணிக்கம்.
“அண்ணே..... சம்மந்திம்மா என்னதேன் சொன்னாக..... கொஞ்சம்...
அத்தியாயம் – 7
அங்கங்கே கட்டிலில் தொங்கிக் கொண்டிருந்த பூச்சரங்களின் மணமும், அழகான மெத்தை விரிப்பில் தூவி விடப்பட்டிருந்த மல்லிகை, ரோஜா மொட்டுகளின் மணமும் மேசையில் வைக்கப்படிருந்த பழம், பலகாரங்களுடன் புகைந்து மணத்துக் கொண்டிருந்த ஊதுபத்தியின் மணமும் அந்த அறையை ஒருவித மோன நிலையில் வைத்திருக்க அதையெல்லாம் ரசிக்க வேண்டிய மதியழகனோ ஏதோ தீவிர யோசனையில்...
“அச்சச்சோ.... எல்லாரும் சிரிக்குற அளவுக்கு அம்புட்டு நேரமா நான் கண்ண மூடி சாமி கும்பிட்டேன்....” என்று கூச்சதுடனே சென்றாள் கயல்.
அனைவர்க்கும் சாமிக்கு வைத்த பொங்கலை எடுத்து பிரசாதமாகக் கொடுத்தனர்.
அடுத்து ஒரு சின்ன கடாவை அழைத்துவர, பூசாரி கையில் கொடுவாளுடன் சாமியாடத் தொடங்கினார். கடாவிற்கு மாலை அணிவித்து, அதன் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்ததும் அனைவரும்...
அவளது அழுகைக் குரலைக் கேட்டு பக்கத்து ஆத்து மாமா ஓடிவர, பின்னாலேயே பத்து மாமியும் வேண்டா வெறுப்புடன் வந்தார்.
“என்ன சிந்து..... என்னாச்சு.....” என்று மாமா முன்னில் கேட்க,
“ஏன்னா.... நீங்க செத்த இந்தப் பக்கம் வாங்கோ...... பொம்மனாட்டி கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு.... நான் அவகிட்டப் பேசிக்கறேன்....” என்றார் பத்மா.
பத்மாவின் இந்தப் புதிய முகம் சிந்துவிற்கு...
அத்தியாயம் – 16
“வாடி... என் சீமசிறுக்கி.... இப்பத்தான் பொறந்த வூட்டுக்கு வாரதுக்கு உமக்கு வழி தெரிஞ்சுதோ.....” முன்னில் திண்ணையில் அமர்ந்து வெற்றிலையை மடித்துக் கொண்டிருந்த பேச்சிப் பாட்டி, பைக்கில் இருந்து இறங்கி உள்ளே வந்த கயலைக் கண்டதும் வரவேற்றார்.
பின்னிலேயே வந்த மதியழகனைக் கண்டு மூக்கின் மீது விரல் வைத்தவர், “அடி ஆத்தி..... இது யாரு........
அத்தியாயம் – 4
வீட்டுக்கு முன்னால் ஆட்கள் பந்தல் போட்டுக் கொண்டிருக்க வாசலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தி, அண்ணனும் அண்ணியும் வருவதைக் கண்டு முகம் மலர்ந்தார். “அண்ணே..... வாங்கண்ணே.... வாங்க....... மதனி......” முகமெல்லாம் புன்னகைக்க வரவேற்றார்.
“ராசாத்தி..... எப்படி இருக்கவ..... மருமகளுக எங்க.....” விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் மணிமாறனின் தந்தை மாணிக்கமும் அன்னை...
அத்தியாயம் – 9
அவசர அவசரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் சிந்துஜா. குங்கும நிற சல்வாரில் கருப்பு நிற துப்பட்டாவுடன் தளர்வாய் விரித்து விட்ட கூந்தல் காற்றில் பறக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே புகைப்படத்தைக் காட்டிலும் தேவதையாய் முன்னில் நின்று ஜொலித்தவளை எரித்து விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா.
“குட் மார்னிங்.....” என்று சிநேகமாய்...
அத்தியாயம் – 8
“அத்தான்..... இந்நேரத்துல எங்க கெளம்பிட்டிய.....” இரவு உணவு முடிந்து பாலை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த கயல்விழி, ராத்திரி பத்து மணிக்கு பேண்ட் ஷர்ட்டுடன் புறப்பட்டு நின்றிருந்த மதியழகனிடம் கேட்டாள்.
பதில் பேசாமல் சட்டையின் பட்டனைப் போட்டுக் கொண்டிருந்தவனை மீண்டும் கேட்டாள்.
“என்ன அத்தான்.... பதில் பேச மாட்டியளா.... எங்க போறீகன்னு எங்கிட்ட சொல்லக்...