Friday, April 19, 2024

    Nenjamellaam Kaathal

    அத்தியாயம் – 18 டாக்டர் முத்துப் பாண்டியை பரிசோதித்துக் கொண்டிருக்க லச்சுமி கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தார். கயல்விழி தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவரை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். மதியழகனோ ஏதோ தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தான். முத்துப்பாண்டியின் தலையில் அடிபட்டு ரத்தம் நிறையப் போயிருந்தது. அவரது வலது கையிலும் எலும்பு முறிவு இருந்தது. அதற்கான சிகிச்சை...
    மனம் நிறைந்தவளின் மனம் மயக்கும் வார்த்தையைக் கேட்டு மதி மயங்கி நின்றவன், “மீனுக்குட்டி..... உனக்குள்ள துடிக்குற என் இதயத் துடிப்பை நான் கேட்டுப் பார்க்கட்டுமா....” என்றான் காதலுடன். அவனது உருக்கும் பார்வையில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவள், “ம்ம்....” என்றாள். அவளது நெஞ்சில் தன் செவியை வைத்துக் கேட்டவன் அவளது இதயத் துடிப்பில் அவனது பெயர் ஒலிக்கக்...
    அத்தியாயம் – 17 வெகு நாட்களாய் உபயோகிக்கப் படாமல் கிடந்த தனது லேப்டாப்பை தூசு தட்டி எடுத்து கட்டிலில் அமர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்த மதியழகன், அதில் மும்முரமாய் எதையோ இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான். பால் கிளாசுடன் அறைக்குள் நுழைந்த கயல்விழி, அதை அவனிடம் நீட்டினாள். “அத்தான்..... இந்தாங்க பால்.....” “ம்ம்... அங்க வை... மீனுக்குட்டி......”  “சூடாறிடும் அத்தான்..... குடிச்சிட்டு அதப்...
    அத்தியாயம் – 16 “வாடி... என் சீமசிறுக்கி.... இப்பத்தான் பொறந்த வூட்டுக்கு வாரதுக்கு உமக்கு வழி தெரிஞ்சுதோ.....” முன்னில் திண்ணையில் அமர்ந்து வெற்றிலையை மடித்துக் கொண்டிருந்த பேச்சிப் பாட்டி, பைக்கில் இருந்து இறங்கி உள்ளே வந்த கயலைக் கண்டதும் வரவேற்றார். பின்னிலேயே வந்த மதியழகனைக் கண்டு மூக்கின் மீது விரல் வைத்தவர், “அடி ஆத்தி..... இது யாரு........
    “ம்ம்... நீனு சொல்லுறதும் சரிதான் தாயி..... நல்லா வெளைச்சல் குடுக்கற மண்ணுல கட்டடத்தை கட்டினா சரியா வருமா..... அதிகப் பணம் கெடைக்குதுன்னு எல்லாரும் யோசிக்காம நெலத்த வித்துப் போடுறாக.....” என்று புலம்பினார் சுந்தரேசன். “அது மட்டும் இல்ல மாமா..... இதுல வேற பிரச்சனையும் இருக்கு.....” என்றான் மதியழகன். “என்ன பிரச்சன மாப்புள....... விவசாய நிலத்த விக்கறதே பிரச்சன...
    “ம்ம்..... அது சரி..... அத்தான்..... ஆனா நான் உங்களப் பிடிக்கும்னு சொன்னதே இல்லியே.....” “ம்ம்.... நீ வார்த்தைல சொல்லலேன்னா என்ன.... உன்னோட கண்ணுல எத்தனையோ தடவை உன் விருப்பத்த சொல்லிட்டியே.... கண்ணாலமாகி அடுத்த நாள் விருந்துக்குப் போகும்போது நீனு பொட்டு வைக்க மறந்துட்டேன்னு, நான் வைச்சுட்டுப் போக சொன்னதும், உன் கண்ணுல தெரிஞ்ச வலியுல, நீ...
    அத்தியாயம் – 15 அடுத்த நாள் காலையில் அடுக்களையில் காப்பி கலந்து கொண்டிருந்த லச்சுமி, குளித்து புத்தம் புது மலராக அடுக்களைக்கு வந்த மருமகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார். “அடி ஆத்தி.... நேத்து எழுந்திருக்க மாட்டாம முறிச்சுப் போட்ட மரங்கணக்காப் படுத்துக் கெடந்தவ..... இன்னைக்கு, இப்பப் பறிச்ச ரோசாவாட்டம் தெம்பா வந்து நிக்கற.... இது என்னட்டி..... மரிமாயமா இருக்கு......”...
    லச்சுமி கஞ்சியுடன் வர கண்ணைத் துடைத்துக் கொண்டவள், மெல்ல எழுந்திருக்க முயல, அசைய முடியாமல் உடம்பெல்லாம் பயங்கரமாய் வலித்தது. வலியில் முகத்தை சுளித்துக் கொண்டவளை தலையணையை சரிவாய் வைத்து அதில் சாய்ந்தவாறு அவளை அமர்த்திவிட்டு சிறிது கஞ்சியைக் குடிக்க வைத்தவர், ராமு வாங்கி வந்த மாத்திரையை அவளுக்குக் கொடுத்தார். மௌனமாய் எல்லாவற்றையும் செய்தவள், “அத்த..... நீங்க...
    அத்தியாயம் – 14 கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த லச்சுமி அதிர்ந்து போனார். கிழிந்து போன துணியாக, கசக்கிப் போட்ட காகிதமாக, வாடிப் போன மலராக அனத்திக் கொண்டு கிடந்த மருமகளைக் கண்டவருக்கு தூக்கி வாரிப் போட்டது. வேகமாய் அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், உடல் அனலாய்த் தகித்ததில் கையை இழுத்துக் கொண்டார். “அச்சோ..... புள்ளைக்கு...
    அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்தவன், “ஆனா நீ...... நீயும் பணத்துக்காக தானே என்னக் கட்டியிருக்கே.... எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக மாறணும்.... உன்னோட வாழணும்னு நினைச்ச என்னை நீயும் ஏமாத்திட்டல்ல......” என்றவனின் கண்களின் சிவப்பு அவளை அச்சுறுத்தியது. “அத்தான்..... தயவுசெய்து நான் சொல்லறதக் கேளுங்க..... என் அக்காவுக்காக மட்டும் உங்கள கண்ணாலம் பண்ண நான் நினைக்கலை..... எனக்காகவும்...
    அத்தியாயம் – 13 “மீனுக்குட்டி.......” கட்டிலில் அமர்ந்து துணி மடக்கிக் கொண்டிருந்தவள் பின்னில் அமர்ந்து காதின் அருகில் கிசுகிசுத்த கணவனின் குரலில் உடல் ரோமங்கள் சிலிர்த்து நிற்க கூச்சத்துடன் நெளிந்தாள். “ம்ம்ம்.....” என்றவளின் குரல் வாய்க்குள்ளேயே அடங்கிவிட்டது. அவளது பின் கழுத்தில் அவனது உதடுகள் ஊர்வலம் போக படபடப்பும் கூச்சமும் போட்டி போடத் தாங்க முடியாமல் முகம் சிவந்தவள், சட்டென்று...
    அத்தியாயம் – 12 நாட்கள் அதன் பாட்டில் யாருக்கும் காத்திராமல் நகரத் துவங்கியது. மதியின் மனது தெரிந்த பின்னால் கயல் அவனைக் கண்டும் காணாமல் விலகிச் செல்ல அவளது விலகலின் காரணம் தெரியாமல் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தான் மதியழகன். அவள் காணாத போது அவளைக் கண்டு ரசிப்பவன், அவளது பாரா முகத்தின் காரணம் தெரியாமல் தவித்தான். எப்போதும்...
    “அச்சச்சோ.... எல்லாரும் சிரிக்குற அளவுக்கு அம்புட்டு நேரமா நான் கண்ண மூடி சாமி கும்பிட்டேன்....” என்று கூச்சதுடனே சென்றாள் கயல். அனைவர்க்கும் சாமிக்கு வைத்த பொங்கலை எடுத்து பிரசாதமாகக் கொடுத்தனர். அடுத்து ஒரு சின்ன கடாவை அழைத்துவர, பூசாரி கையில் கொடுவாளுடன் சாமியாடத் தொடங்கினார். கடாவிற்கு மாலை அணிவித்து, அதன் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்ததும் அனைவரும்...
    அத்தியாயம் – 11 ஹோவெனப் பெரும் இரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது மழை. ஊர் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே இறங்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். முந்தின நாள் மாலையில் தொடங்கி அடுத்த நாள் மாலை ஆகியும் நிற்காமல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. மதியழகனும் வெளியே எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தான். முத்துப்பாண்டி அவரது அறையில் கணக்கு வழக்கைப்...
    “என்ன சொல்லுதிய...... அது வெளைச்சல் குடுக்குற பூமியாச்சே.... அத எதுக்குங்க நாம குடுக்கணும்.....” “எனக்கும் குடுக்கறதுக்கு பெருசா விருப்பம் இல்லட்டி..... அவுக நிர்பந்தம் பண்ணி கேக்குதாக.... உங்கிட்ட கேட்டுட்டு சொல்லுதேன்னு சொல்லிட்டேன்.....” என்றார் அவர். “ம்ம்..... மதி கிட்ட இதப் பத்தி பேசற நெலமைலயா இருக்கோம்...... அதெல்லாம் சரியா வராது.... நமக்கு இப்பக் குடுக்கனும்னு தேவையும் இல்ல........
    அத்தியாயம் – 10 இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. சிந்துஜாவிற்கு ஆக்சிடண்ட் ஆனது பற்றியும் அவள் இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் மதியழகன் அலுவலகத்தில் தெரியப்படுத்தி இருந்தான். மூன்று நாட்களாய் கஸ்டமர் மீட்டிங்கிற்கு சென்று கொண்டிருந்ததால் அவனுக்கு அலுவலகத்தில் இருக்கவே நேரம் இல்லை. அன்றும் அவன் ஒரு புதிய கஸ்டமரைக் காண்பதற்காய் வெளியே சென்றிருக்க அவனைக் காண அங்கு வந்தார்...
    அவளது அழுகைக் குரலைக் கேட்டு பக்கத்து ஆத்து மாமா ஓடிவர, பின்னாலேயே பத்து மாமியும் வேண்டா வெறுப்புடன் வந்தார். “என்ன சிந்து..... என்னாச்சு.....” என்று மாமா முன்னில் கேட்க, “ஏன்னா.... நீங்க செத்த இந்தப் பக்கம் வாங்கோ...... பொம்மனாட்டி கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு.... நான் அவகிட்டப் பேசிக்கறேன்....” என்றார் பத்மா. பத்மாவின் இந்தப் புதிய முகம் சிந்துவிற்கு...

    Nenjamellaam Kaathal 9 2

    அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. அவளது விரல்கள் அவளை அறியாமலே சிந்து, மதி..... என இருவரின் பெயரையும் சேர்த்து பேப்பரில் இதயம் வரைந்து எழுதிக் கொண்டிருந்தது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் ஆகியதும் அன்று முழுதும் அவனைக் காண முடியாத சங்கடத்துடன் எழுந்தவள் அவனது பார்வைக்காய் வைக்க வேண்டிய பேப்பர்களை ஒரு பைலில் வைத்து அவன்...

    Nenjamellaam Kaathal 9 1

    அத்தியாயம் – 9 அவசர அவசரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் சிந்துஜா. குங்கும நிற சல்வாரில் கருப்பு நிற துப்பட்டாவுடன் தளர்வாய் விரித்து விட்ட கூந்தல் காற்றில் பறக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே  புகைப்படத்தைக் காட்டிலும் தேவதையாய் முன்னில் நின்று ஜொலித்தவளை எரித்து விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா.  “குட் மார்னிங்.....” என்று சிநேகமாய்...

    Nenjamellaam Kaathal 8 2

    “இல்ல அத்த..... அத்தான் இப்படிக் குடிச்சிட்டு சீரழிஞ்சு போறதுக்கும் அதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா..... எதுவா இருந்தாலும் சொல்லுங்க.... அப்பதானே அவரை நாம மாத்தி மாமாவோட பேச வைக்க முடியும்.....” என்றாள் அவள். “ம்ம்... நான் செய்யாத முயற்சியா..... ரெண்டு வருஷம் ஆச்சு.... இப்பவும் மதிக்கு அவுக மேல உள்ள கோபம் கொறையாம தான கெடக்கு.....” “என்னதேன்...
    error: Content is protected !!