Naan Enathu Manathu
கௌசிக்கு அந்த கல்யாணமே வேண்டாம் சிங்களாவே இருந்துடுவேன் என்ற வார்த்தைகளில் ஒரு ஆசுவாசம், ஆனாலும் அம்மாவை குறை கூறுகிறான் என்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. என்னை தானே திருமணம் செய்ய போகிறான் அம்மாவை ஏன் இழுக்க வேண்டும் என்று மனது முரண்டியது.
ஒரு வகையில் சந்தோஷ் உணர்ந்ததும் இது தானே! திருமணம் செய்த பிறகு அவளின்...
அத்தியாயம் பதினைந்து:
“எனக்கு தெரியாம வந்த ஒன்னு ரெண்டு மாப்பிள்ளையும் பெரிய சொத்தை”
“உங்கப்பா கிட்ட உன்னை பொண்ணு கேட்டேன், அவர் மதிக்கவேயில்லை, அது இன்னும் ஆத்திரம் கொடுத்துச்சு”
“எங்கம்மா கிட்ட பொண்ணு கேட்க சொன்னேன். உனக்கு அந்த தகுதியில்லை, வேலைக்கு போனவன் எல்லாம் ஆசைப் படக் கூடாது சொன்னாங்க. அது இன்னும் வெறி கிளப்பிச்சு”
“இதுல வர்ற மாப்பிள்ளைக்கு...
“இல்லை, உனக்கு தெரியாது ரவிக்கு கோபம் வந்தா பிசினெஸ் எல்லாம் டிஸ்டர்ப் பண்ணுவாங்க, நாம ஏழை ஆகிடுவோம்” என்று சொல்ல,
அம்மாடி இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்னை பற்றி என்று தோன்ற ரவீந்திரன் ஸ்தம்பித்து விட்டான்.
“அப்படி எல்லாம் பண்ண மாட்டார் பேபி. அப்படியே பண்ணினாலும் நம்ம பிசினெஸ் பண்ணனும்னு நினைச்சா தானே நாம ஏழை...
“எனக்கு சூடு சொரணையே இல்லையான்னு கேட்கற இல்லையா? உன்னை கல்யாணம் செய்யும் முன்ன ஏகத்துக்கும் இருந்தது. உன் வார்த்தை அந்த சூடு சொரணையை எனக்குள்ள ஏகத்துக்கும் கிளப்ப அதனால தான் இந்த கல்யாணமே. இல்லைன்னா அப்போவே இவ ஒரு ஆளுன்னு பேசறா இதுக்கு போய் எல்லாம் இவளை கல்யாணம் பண்ணுவியான்னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு...
ரவி வந்தவன் எல்லோரையும் வரவேற்று பின் ஒவ்வொருவரிடமும் பேசி, கௌசியிடம் வந்து நின்றவன், “எப்படி இருக்க கௌசி?” என்றான்.
“நல்லா இருக்கேன் அண்ணா..?” என்றாள்.
சந்தோஷ் விசாலி கேசவன் எல்லோரும் அங்கே தான்.
ஆம்!ஹயக்ரீவன் விசாலியிடம் மிக ஒற்றுதல். அவன் “நீங்க வாங்க விசாலிம்மா...” என்றிருக்க வந்திருந்தனர்.
இன்னும் யாரும் உண்ணவில்லை ரவிக்காகக் காத்திருக்க “வாங்க எல்லோரும் சாப்பிட்டு பேசலாம்...”...
“உன் பேபியை நான் இன்னும் பார்க்கலை. பட் கேட்டேன், நல்லா இருக்கா சொன்னாங்க. இப்போ ரூம்க்கு மாத்திடுவாங்கலாம்” என்றான்.
“பேக் எடுத்துட்டு வாங்க?” என்று சந்தோஷிடம் சொல்ல, அவன் செல்லவும்.
“என்ன பேக்?” என்றான் ரவி.
“ம்ம், ஏதாவது எடுத்துட்டு வந்தீங்களா அண்ணா?” என்றாள் கௌசி ரவியை பார்த்து.
“என்ன எடுத்துட்டு வரணும்?” என்றான் புரியாதவனாய்.
“என்ன எடுத்துட்டு வரணுமா,...
அத்தியாயம் பதினாறு :
இருவருக்கும் ஒருவருக்கொருவர் விஷயம் தெரியும் என்று தெரிந்த பின்பு வாழ்க்கை இயல்பாய் சென்றாலும், மனதில் ஒரு நெருடல் இருவருக்குமே. எங்கேயோ ஒரு இடத்தினில் ஒரு அபஸ்வரம், ஒரு அன்யோன்ய குறைவு.
இது தெரிந்தால் தன்னால் அவனுடன் கொஞ்சல் குலாவல்கள் என்று ஈடு பட முடியாது என்று தெரிந்து தான் அதனை தெரிந்த மாதிரி...
ஒரு முறை வா போ என்று பேசினாள், மறுமுறை வாங்க போங்க என்று பேசினாள். எதையுமே ரவி மனதில் கொள்ளவே இல்லை. ஷர்மி எப்படியோ அப்படியே தான் இருந்தாள். அதனை உணர்ந்தவனாக “சரி, டீல்” என்றவன் மெதுவாக அவளின் கன்னம் தட்டி “கிளம்பலாமா?” என்று கேட்டான்.
நேற்று அவன் “ஐ அம் நாட் ஓகே” என்றதனை...
அத்தியாயம் பதினெட்டு :
கண்கள் எரிந்தன, சிறிது நேரம் எனக்கு ஓய்வு கொடேன் என்று கெஞ்சியது. இடத்தை விட்டு எழுந்தவன் சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் அலுவலை பார்க்க அமர்ந்து விட்டான்.
ஒரு நாள் கடந்து விட்டது. இன்னும் வீடு செல்லவில்லை. இங்கேயே ஃபாக்டரியிலேயே இருந்து கொண்டான்.
எல்லாம் தப்பாய் செய்து விட்டதாய் ஒரு எண்ணம்....
பின் அண்ணனும் தங்கையும் தான், அப்போது தான் ஷர்மி சந்தோஷின் முகத்தை கவனித்து “ஏன் சந்தோஷ் ஒரு மாதிரியா இருக்க?” என்றாள்.
“ஒன்னுமில்லையே” என்றான்.
“இல்லை, ஏதோ இருக்கு” என்று அவனை தெரிந்தவளாக பேச,
“ஒன்னுமில்லை” என்றான் பிடிவாதமான குரலில்.
“ஏதாவது சொன்னாரா? ரவி வரட்டும்!” என்று கோபமாய் பேச,
“ப்ச், பேபி, முதல்ல இப்படி அவர் கூட சண்டை...
என்ன இருந்தாலும் அம்மா இல்லாத பிள்ளைகள், வீட்டின் பொறுப்பு என்னது என்று அப்படி கவனமாய் இருவரையும் பார்த்துக் கொள்வான். அவர்களின் வழக்கங்கள் எல்லாம் அத்துபடி.
என்ன தான் அவர்கள் உறவாய் நினைக்காவிட்டாலும் ரவியும் காண்பித்து கொள்ளாவிட்டாலும் உறவுகளோடு வளர்ந்தவனுக்கு, உறவுகளுக்காய் உழைப்பவனுக்கு அவர்கள் அத்தை பிள்ளைகள் தானே. வெளியில் காண்பித்து கொள்ளாவிட்டாலும் அந்த அக்கறை அதீதமாய்...
அத்தியாயம் பதினேழு :
கௌசல்யா உள்ளே வந்தவள் “அண்ணி சாரி, அம்மா அப்படி தான், நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று சொல்ல,
ஷர்மிளா அதற்கு ஒரு புன்னகை மட்டுமே கொடுத்தாள் சோர்ந்த புன்னகை, நிறைய அழுதிருப்பாள் என்று அவளின் கண்களை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
அவள் உணவை விழுங்க சிரமப் பட்டுக் கொண்டிருக்க, “கொஞ்சம் மோர் கொண்டு வரட்டுமா,...
அத்தியாயம் இருபத்தி நான்கு:
ரவீந்திரனின் பேச்சுக்களில் ஒரு மனக் கசப்பு வந்து அமர்ந்து கொண்டது. ஒஹ் என்னால் தான் எல்லாமா? இருந்து விட்டு போகட்டும் என்பது போல?
மனதை வெகுவாக நிலைப்படுத்த முயன்றாள். ஆனாலும் மனது பொங்கியது.
“அப்போ நான் நான் தான் தப்பா? இவனில்லையா?” என்று தோன்ற எல்லாவற்றையும் அடித்து உடைக்கும் ஆவேசம் கிளம்பியது. “ச்சே, ச்சே,...
ஷர்மிளாவை எதிர்பார்க்கவில்லை, எப்போது அவள் வருவாள், பேசுவாள் என்று தான் அத்தனை தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தான். அவளாய் தேடி வராமல் எதையும் நிறுத்துவதாய் இல்லை அவன். ஆனால் அந்த நிமிடம் எதிர்பார்க்கவில்லை.
இவனை இப்படி ஒரு உடையில் பார்த்ததும் முகத்தை திருப்ப..
முதலில் அதிர்ந்தவன், பின் சுவாதீனமாய் “உள்ளே வா” என்று சொல்லி அவனின் ரூமின் உள்...
அத்தியாயம் பன்னிரண்டு :
காலையில் எழுந்து அவன் கீழே வந்த போது குளித்து முடித்து புடவை கட்டி சமையலறையில் இருந்தாள். என்ன? எதுவும் செய்யவில்லை, வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள். அவன் வந்து அமைதியாய் அமர, தாத்தா அவனிடம் “எப்போடா வந்த” என,
“நைட் வந்தேன் தாத்தா” என்றான்.
இவனின் குரல் கேட்கவும் இவனுக்கு காஃபி கலந்து ஷர்மிளாவிடம் அவனின்...
“அம்மாடி, சத்தியமா உன்னோட எனக்கு முடியலை, இதுக்கெல்லாம் என்கிட்டே பதிலே கிடையாது. உன்னோட சந்தேகம் எல்லாம் நீயே வெச்சிக்கோ. என்னை கேட்கவே கேட்காதே” என்று சொல்லவும்,
“இல்லை, அது நான் உங்களுக்கு இந்த மாதிரி எதுவும் செய்யறதில்லை” என்று ஆரம்பித்தாள்...
இன்னுமே சிரித்தவன் “வேலைக்காரங்க எல்லாம் இப்படி செய்வாங்களா என்ன? ஆணோ பெண்ணோ பிடிச்சவங்களுக்கு செய்வாங்க, நான்...
அத்தியாயம் முப்பது :
ஷர்மிளாவிற்கு உறக்கத்தில் இருந்து விழிப்பு வந்து விட, பக்கம் படுத்திருந்த ரவீந்திரனை பார்த்தாள், நல்ல உறக்கத்தில் இருந்தான். நிறை மாத கர்ப்பிணி இப்போது அவள். சற்று வலிப்பது போல இருக்க, மெதுவாக சத்தம் செய்யாமல் எழுந்த ஷர்மிளா பாத்ரூம் சென்று அங்கிருந்த சுவிச்சை போட அந்த சத்தத்தில் விழித்துக் கொண்டான்.
அடுத்த நொடி...
அத்தியாயம் இருபத்தி ஏழு :
கௌசி மனது கலவரமாய் உணர்ந்தது போல, எல்லாம் கலவரமாய் தான் நடந்தது.
நடந்த விஷயங்களில் ரவியின் கோபம் அளவுக்கு மீற, கோபத்தில் சந்தோஷின் மேல் கை ஓங்கிவிட, உணர்ந்த ஷர்மி இடையில் வர, அவனின் கன்னத்திற்கு சென்ற கை இவளின் தலையில் அடித்தது.
வீடே ஸ்தம்பிக்க, ரவி எல்லோரையும் விட ஸ்தம்பித்து விட்டான்.
விஷயம்...
அத்தியாயம் பத்து :
இதோ கும்பகோணத்தின் ஒரு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் மண்டபத்தில், உறவுகள் சூழ ரவீந்திரன் ஷர்மிளாவின் திருமணம் நடந்து கொண்டிருந்தது.
கேசவனும் விசாலியுமே தாரை வார்த்துக் கொடுத்தனர். சந்தோஷ் தெளிவாய் சொல்லியிருந்தான், “அவங்க தான் நிற்பாங்க, நீ எந்த கலாட்டாவும் பண்ணக் கூடாது”. இதோ விசாலியின் குடும்பம் மொத்தமும் அங்கிருக்க கேசவனின் பக்கமும்...
ரவி கீழே சென்று உணவு எடுத்து வந்து, ஷர்மி உண்ட பின் அவளுக்கு தலைக்கு ஐஸ் வைத்து, பால் அருந்தக் கொடுத்தான். அத்தனை முறை மேலேயும் கீழேயும் நடந்தான். வீடே வேடிக்கை பார்த்தது.
“எதுவும் ஹெல்ப் வேணுமான்னா?” என்று தங்கைகள் கேட்க,
“இல்லை, நான் பார்த்துக்கறேன்!” என்று விட்டான்.
ரவி கோபம் போல எல்லாம் சொல்லவில்லை, ஒரு உற்சாகத்தோடே...