Advertisement

அத்தியாயம் பதினான்கு :
ஆயிற்று திருமணமாகி ஒரு மாதம் ஆகிற்று, இவள் ரவியுடன் வசிக்க ஆரம்பித்து இருபது நாட்கள் ஆகிற்று. “இவன் என்ன மனிதனா? மெஷினா? ஒய்வு வேண்டாமா? என்ன இப்படி ராட்சசனாய் வேலை செய்கிறான்” என்று தான் தோன்றியது.
ஆம்! ஃபாக்டரியிலும் வேலை செய்தான், வீட்டிலும் வேலை செய்தான், “வேலைக்கு ஆள் வைக்கலாம்” என்ற போது,
“இது சின்ன வீடு, வேண்டாம், நமக்கு ப்ரைவசி இருக்காது, உனக்கென்ன நான் செய்யறேன்” என்று அவன் செய்ய..
இதோ பாத்திரம் கழுவுவது, காய் நறுக்கி கொடுப்பது, காஃபி போடுவது என்று டெவலப் ஆகியிருந்தாள் ஷர்மிளா. அவனோடு அலுவலகமும் செல்கிறாள்.
“வீட்டில உட்கார்ந்து என்ன செய்யற நீ, வா என்னோட” என்று அவளையும் அழைத்து சென்றான்.
அவனை விட அவனின் உழைப்பு மிகவும் பிடித்தது. சிறு விஷயமும் ரவியின் கண்களுக்கு தப்பாது. அப்படி ஒரு ஞாபகசக்தி. “கொஞ்சம் யோசிச்சா உங்களுக்கு போன ஜென்ம ஞாபகம் கூட வரும் போல” என்று கிண்டல் செய்வாள்.  
அலவலகம் செல்வதால் அவனின் திறமை முன்னேற்றம் எல்லாம் தெரிய, தன்னுடைய வாழ்க்கை துணை ஒரு தனித்துவமானவன் என்று புரிய சற்று கர்வம் வந்தது.
என்ன அவன் எட்டு மணிக்கு வருவான், இவளை ஐந்து மணிக்கு அனுப்பிவிடுவான்.
அம்மாடி! ஃபாக்டரி பிரமாண்டம் தான், எப்படி இது சாத்தியமாகிற்று என்று கேட்க, “நஷ்டத்துல ஓடிட்டு இருந்தது, ஏலத்துக்கு வந்தது, யாருக்கும் எடுத்து நடத்த முடியலை, இந்த ஏரியா ஆளுங்க கொஞ்சம் பிரச்சனை வேற குடுத்தாங்க. ஒரு ஸ்டடி பண்ணினேன், முடியும்னு தோணிச்சு, பணம் பத்தலை கைல இருந்த பணம் போட்டேன், கூட பேங்க் லோன் போட்டேன், உங்கப்பா தான் ஷ்யூரிட்டி போட்டார், வேலை செய்யறவன் தானே ஏன் வளரணும்னு நினைக்கலை, நம்பி போட்டார். அப்போவும் பத்தலை, அதனால அவரை பார்ட்னர் சேர்த்துட்டேன், ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி” என்றான் ஒரு அழகான புன்னகையுடன்.
ஆம்! அழகான புன்னகை தான் அப்படித்தான் ஷர்மிளாவின் கண்களுக்கு தெரிந்தது. பின்னே வஞ்சனையின்றி அவனை சைட் அடித்தாளே. திருமணதிற்கு முன்பு எப்படியோ, இப்போது திருமணம் ஆன பிறகு சேர்ந்து வசிக்க ஆரம்பித்த பிறகு, இவன் என் கணவன் என்பது மனதினில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ள, வேலைக்காரனாய் பார்த்தவன் வீட்டுக்கரானாய் மாறிவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
அவனின் நடை, உடை, பாவனை, பேச்சு, சொல், செயல், எல்லாம் ஆகர்ஷித்தது. இதுவரை அவனின் எதுவுமே அவளின் கவனத்தில் பெரிதாய் பதிந்ததுமில்லை, கவர்ந்ததுமில்லை. ஆனால் இப்போது எல்லாம் பதிந்தது, கவர்ந்தது.
அதனால் அவளை அறியாமல் கொஞ்சம், அறிந்து கொஞ்சம் என்று அவனை சைட் அடிக்க ஆரம்பித்து இருந்தாள். ஆனால் அது ரவிக்கு தெரியவேயில்லை.
பிசினெஸ் புத்திசாலித்தனம் வேற எதுலயும் இல்லை போலவே என்று ஷர்மியே நினைக்கும் படி ஆகிற்று. 
ஒரு முத்தமாவது குடுக்கறானா பக்கி, வேலை செய்ய பொறந்தவன் மாதிரி வேலையே செஞ்சிட்டு இருக்கான் இவன் என்று மனதிற்குள் திட்ட வேறு செய்தாள்.      
சொல்லப் போனால் ரவீந்திரன் கூட அவளை இப்படி சைட் அடிக்கவில்லை. இன்னும் அவனுக்கு அடிக்க வரவில்லை. இன்னும் அவனின் சிந்தனைகள் முழுக்க பிசினெஸ் பிசினெஸ் தான். அதற்கு இடையினில் மனைவி எப்போதாவது தான் அவனுடைய சிந்தனையை கலைத்தாள்.       
அது ஒரு ஞாயிறு மாலை, ரவி காலை ஃபாக்டரி சென்றவன், மதியம் வந்து ஒரு உறக்கம் போட்டு, சாவகாசமாய் எழுந்து பால் காய்ச்சி கொண்டிருக்க, அப்போது தான் ஷர்மிளா எழுந்து வந்தாள்,
அவனின் அரையடி ஷார்ட்ஷில் இருந்தான். மேலுடையும் இல்லை.
“என்ன இது போய் ட்ரெஸ் போடு” என்று ஷர்மி முறைக்க,
“என்னடா இது பெரிய கொடுமை, உன்னை யாரு அதுக்குள்ள எழுந்திரிக்க சொன்னா?” என்றான் எரிச்சலாக. இவளிடம் இதே தொல்லை என்பது போல.  
“மதியம் போட்டுட்டு தானே தூங்கின, இப்போ எதுக்கு கழட்டின?”
“முகம் கழுவும் போது ஈரமாகிடிச்சு”
“அப்போ வேற போடு, சும்மா எப்போ பார்த்தாலும் செக்ஸியா சுத்த வேண்டியது” என்று மாலையில் அவனை கடுப்படித்த படி சமையல் மேடையில் அமர்ந்தாள்.
“நீ சொன்னதுல இருந்து டீ ஷர்ட் இல்லாம இருந்ததில்லை, ஒரு மனுஷனுக்கு அவன் பெட்ரூம்ல கூட சுதந்திரமில்லை. என்னவோ நான் இன்னர்ஸோட சுத்தற மாதிரி இப்படி ஒரு எக்ஸ்ப்ரெஷன் கொடுக்கற. அதை உள்ள போட்டு இதை மேல போட்டிருக்கேன், திஸ் இஸ் கால்ட் அஸ் ட்ரௌசர், அதாவது கால் சராய் என்ன கொஞ்சம் அளவு கம்மி” என்று நீண்ட விளக்கம் கொடுத்து பாலில் கவனமானான்.
“கால் சராயோ, கை சராயோ, போடக் கூடாதுன்னா போடக் கூடாது” என்று அவள் பேச,
“ஏண்டி? ஏன்?” என்றான் இவனும் விடாமல்.
“ஏண்டின்னா, என்ன சொல்லுவேன்? செக்சின்னு சொல்லிட்டேன், இதுக்கு மேல என்ன சொல்லுவேன், போடா” என்றாள் அசால்டாக. 
இருவருக்குள்ளும் சகஜமான பேச்சு இருக்க, சண்டைகள் குறைவு தான். ஷர்மிளா வம்பு செய்தாலும் இவன் அமைதியாய் போய்விடுவான். ஷர்மிளாவிற்கு பேச்சு அதிகம் தானே. ரவியுடன் வாயடித்துக் கொண்டே தான் இருப்பாள். 
எதற்கு ஷர்மிளாவை திருமணம் செய்தானோ தெரியாது, இப்போது அவளை மிகவும் பிடித்தது. அவனின் பார்வையில் அவளுக்கான ரசனைகள் எட்டி பார்க்க துவங்கியது. அவளை திருமணதிற்கு பின் தான் ரசித்து பார்க்க ஆரம்பித்தான். நிச்சயம் அவளின் வீட்டினில் வேலை செய்த போதோ இல்லை அவளை திருமணதிற்கு கட்டாயப் படுத்திக் கொண்டிருந்த போதோ கிடையாது. 
இதோ ஷர்மிளா அவனை ஏகத்திற்கும் ஈர்க்க.. அவளை பார்த்தான்.
முகம் கழுவி அதனை துடைக்காமல் கூட வந்து அமர்ந்து கொண்டவள், அவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள். பாலை அணைத்தவன், அவளின் அருகில் வந்து, “பாரு முகம் கூட துடைக்கலை” என்று அவனின் தோளில் இருந்த துண்டில் துடைக்க செய்தான். அவளை மிக நெருங்கியும் நின்றான்.
நூழிலை உடல்கள் உரச ஆனால் உரசவில்லை..   
அது ஒரு படபடப்பை ஷர்மிளாவிற்கு கொடுக்க “எதுக்கு இவ்வளவு பக்கத்துல நிக்கற?” என்று கேட்டாள். உண்மையில் கேட்டால், ஆனால் ஹ ஹ காற்று தான் வந்தது.
“நான் என்ன செக்ஸியா இருக்கேன் சொல்லு” என்று அவளின் கன்னம் வருடினான். ஒரு மயக்கம் ஆரம்பிக்க,
“கண்ட்ரோல் ஷர்மி” என்று நினைத்தவள், “ஃபர்ஸ்ட் நைட்ல” என்று அவன் விட்டு சென்றதை சொல்ல ஆரம்பித்தாள்.
அவனோ சற்றும் பதட்டமோ கோபமோ கொள்ளாமல்,
“எனக்கு முதல் ராத்திரியே வேண்டாம், முதல் பகல் போதும், இல்லை முதல் மதியம் போதும், இல்லை முதல் மாலை கூட போதும்” என்று அதை சொல்லும் போது குரலை சற்று மென்மையாக்கி,
“இப்போ கூட ஒரு மாலை நேரம் தான்” என்றான்.
வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு போக மனது உந்தியது. அவளின் மாசு மறுவற்ற முகம், அழகான சிப்பி உதடுகள் “என்னுள் புதைந்து கொள்” என்று அவனை நோக்கி அழைப்பு விடுப்பது போல் அவனுக்கு தோற்றம்.
ஆனால் விரல்கள் வருடலை நிறுத்தவேயில்லை. ஒரு சின்ன பரு எட்டிப் பார்த்ததோ, அதில் சற்று அதிக நேரம் விரல்களை ஓட விட்டவன், மெதுவாய் அதை அவனின் இதழால் வருடினான். பின்பு அந்த பருவின் மேல் ஒரு ஈர பதத்தை உணர, தாளவே முடியவில்லை அவளால்.
“ஹம்மா” மயக்கத்தையும் மீறிய ஒரு உணர்வு, இன்னும் ஏதோ ஒன்று வேண்டும் என்ற ஆவேசம் பிரவாகமாய் பொங்க, உடலில் ஒரு ஒரு நடுக்கம் எடுத்துவிட, பயந்தே விட்டாள்,
அவளாய் அவனை அணைத்துக் கொள்வாளோ என்று.        
மிக மிக முயன்று அவனின் தீண்டல் என்னெனவோ செய்த போதும், எதுவும் செய்யாது போல “என்னவோ டைலாக் எல்லாம் விட்ட, பிடிக்காம ஆரம்பிக்க கூடாதுன்னு”
“ம்ம், சொல்லு, உனக்கு பிடிக்கலைன்னா தள்ளி போயிடறேன்” என்றவன், அப்படியே அவளை அலேக்காக தூக்கி படுக்கை அறை செல்ல,
அதற்குள் சுதாரித்திருந்தாள். “ஓய் என்ன இது?” என்று சிணுங்கினாள்,
“எப்போ பார்த்தாலும் என் ட்ரெஸ் சொல்ற தானே, உன்னை அந்த ட்ரெஸ்ல என் முன்ன இருக்க வைக்காம நான் விடப் போறதில்லை” என்றான்.
“அடி வாங்குவ”  
“எவ்வளவு வேணா அடிச்சிக்கோ” என்றவன்,
ஒரு லாங் ஸ்கர்ட் டாப்பில் இருந்தவளை படுக்கையில் விட்டவன், “சொல்லு, நான் என்ன செக்ஸி இருக்கேன்” என்று இடுப்பில் கை வைத்து நிற்க,
பிகு எல்லாம் செய்யாமல் உடனே விவரிக்க ஆரம்பித்தாள். “ம்ம் இந்த ஆர்ம்ஸ், அப்புறம் இந்த பிராட் ஷோல்டர்ஸ், உன்னோட மேன்லி செஸ்ட், உன்னோட சதையே இல்லாத ஒட்டியிருக்குற இந்த அப்டோமன், உன்னோட கச்சிதமாயிருக்குற உன் ஹிப், அளவா ஆரோக்யமாயிருக்குற உன் தைஸ், லாங் லெக்ஸ், என்று அவனின் புஜங்கள், தோள், மார்பு, வயிறு, இடுப்பு, தொடை கால்கள் என்று ஒன்று விடாமல் விவரித்தாள்.
அவளின் கண்கள் காட்டிய பாவனையில், ரசித்திருக்கிறாள் என்பது புரிய, அவளின் இருபுறமும் கை ஊன்றி அவள் மேல் படராமல் அவனுக்கு கீழே கொண்டு வந்தான்.
“ம்ம், நீ சொல்ற இடமெல்லாம் எனக்கு தெரியலை, தொட்டு காட்டு”
“ம்ம், அதெல்லாம் முடியாது” என்று முகம் திருப்பியவளை,
“எனக்கொன்னுமில்லை அந்த பார்ட்ஸ் எல்லாம் எதுன்னு உன்கிட்ட தொட்டு பார்த்து கன்பார்ம் பண்ணிக்குவேன்” என்றான்.
“என்னவோ பண்ணிக்கோ” என்றாள் எப்போதும் போல.
“ஒரு தடவை என்னை தொடேண்டி, கல்யாணமாகி ஒரு மாசம் ஆச்சு, நீ என்னை தொட்டு கூட பேசலை” என்றான்.
“வெளிச்சமாயிருக்கு” என்று அவள் முனக,
“முதல்ல நீ என்னை தொடு”
“ரொம்ப பேசின கடிச்சு தான் வைப்பேன்” என்றாள்,
“ம்ம் அதையாவது செய்”  
ஷர்மி கைககளால் முகத்தை அருகில் கொண்டு வா எனச் சொல்ல,
அவன் வரவும் கன்னத்தை கடிப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் சொன்னதை உதடுகளில் செய்ய, அவ்வளவு தான் இருவருக்குமே தெரிந்தது.
ஒரு சூறாவளி தான் அடித்து சென்றது.. ஷர்மிளாவிற்கு எந்த தயக்கமும் இல்லை, மாலை வெளிச்சத்தை சொன்னவளுக்கு பின்னே அந்த வெளிச்சம் கூட ஞாபகத்தில் இல்லை.
சொன்னது போல அவளை டூ பீஸ் உடைக்கு உடனே கொண்டு வர, அவனின் செய்கைகளும் அவனின் ரசனையும் அவளை கண் திறக்க விடவேயில்லை. அவளிடம் இப்போது பேச்சுக்களே இல்லை.
ஆனால் ரவி பேசிக் கொண்டே இருக்க, “ஷ், தியரி எடுக்காதே ப்ராக்டிகல் மட்டும் காண்பி” என்று அவள் முழு சம்மதமும் கொடுக்க,   
இரவும் கவிழ்ந்து விட்டது. இருவருக்குமே களைப்பென்பதே இல்லாத போதும் பசித்தது. அவள் குளியலறை சென்றதும், இவன் வேறொரு ரூமில் குளித்து உணவு ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருக்க, அவள் வரும் வழியாய் காணோம்.
“என்ன பண்ற ஷர்மி?” என்று கேட்டவனிடம்.
“ம்ம், ஒண்ணுமில்லை” என்று சொல்லி வந்தவள்,
“ம்ம், கொஞ்சம் வெக்கமா வந்தது, அதுதான் மெதுவா வந்தேன்” என்றாள் அவனின் ரசனையான பார்வையை எதிர்கொண்டு.
“என்னது வெட்கமா? அச்சோ, நீ என்னை இப்படி எல்லாம் பயமுறுத்தக் கூடாது” என்று சொன்ன போதும் சிவந்திருந்த அவளின் முகம் அப்படி ஒரு திருப்தியை கொடுக்க,
“ம்ம், இது ஏன் இவ்வளவு சிகப்பா ஆச்சு” என்று அவளின் கன்னம் வருட,
“ம்ம்” என்றபடி அவனின் மேல் தொய்ந்து விழுந்தவள் அவனை அணைத்துக் கொள்ள,
“இப்போவும் நான் என்னோட அரையடி ட்ரெஸ்ல தான் இருக்கேன்” என்று கிசுகிசுத்தான்.
பதிலில்லாமல் அவனை அணைத்து அப்படியே இருக்க, “உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தலையே” என்றவனிடம்
“பேசாதே” என்று சொல்லாமல் அவனின் வாய் மேல் கை வைத்தாள்.
அந்த பிஞ்சு விரல்களை உதடுகளால் வருடியவன், “நீ ரொம்ப சாஃப்ட் ஹேண்டில் பண்ணவே பயமா இருந்தது. ஒன்னும் தொந்தரவு இல்லையே”  என, வாய் மேல் வலிக்கும் படியாக அடி வைத்தாள்.
“ராட்சசி” என்று சலிப்பது போல அந்த விரல்களை மீண்டும் கொஞ்சியன்,
“ஷர்மி” என்றான் ஆழ்ந்த குரலில்.  
“என்ன?” என்பது போல முகம் மட்டும் நிமிர்த்தி பார்க்க,
“என்னை பத்தி சொல்லட்டுமா?” என்றான்.
சம்மதத்தை கண்களால் சொல்ல, “எதையும் மறைக்க மாட்டேன், எல்லாம் சொல்லுவேன்”
“சொல்லு” என்பதை சுகமாய் ரவியின் நெஞ்சில் சாய்ந்து அவனை இறுக்கி கொண்டாள்.
“எனக்கு ஏதாவது பெருசா பண்ணனும்னு ஆசை, படிப்பை முடிச்சவுடனே அப்பா கும்பகோணம்ல வேலை ஒன்னு பார்த்து குடுத்தார், அங்கே ஒன்னும் பெருசா சாதிக்க முடியாதுன்னு தோன, அப்பா கிட்ட வேண்டாம் எனக்கு சென்னை வேணும்னு சொன்னேன். உடனே அத்தை கிட்ட பேசி என்னை அனுப்பி வெச்சார்”
“ஆனா உங்க வீட்ல பெருசா ஒரு வரவேற்பு இல்லை, அதுவும் நீ என்னை பார்த்த பார்வை இன்னைக்கும் மறக்காது அவ்வளவு அலட்சியம், அதனால எனக்கு உன்னை பிடிக்கவே பிடிக்காது”
“அத்தை எனக்கு டிரைவர் வேலை கொடுத்து, பின்ன மாமா எங்க போறார், வர்றார், யாரோட பேசறார், எல்லாம் கேட்டாங்க, ரெண்டு நாள்லயே எனக்கு டார்ச்சரா இருக்க, உங்கப்பா கிட்ட அதை அப்படியே சொல்லி, நான் அந்த மாதிரி எதுவும் சொல்ல மாட்டேன், எனக்கு வேலை வேணும் சொன்னேன்”
“உடனே வேலை போட்டு கொடுத்திட்டார், அத்தை எது கேட்டாலும் மாமா ஒழுங்கா இருக்கார் தான் சொல்லுவேன்” என்றான்.
ஷர்மிக்கு “அப்போது அம்மா இருந்த போதேவா” என்று தோன்ற மனது கசப்பாய் உணர்ந்தது.
“அதை சொல்றது எனக்கு வேலை கிடையாது, அதை சொல்றதுக்காக அவங்க என்னை வேலைக்கு வெச்சாங்கன்னு நினைக்கும் போது என்னை என்ன நினைச்சிட்டாங்கங்கன்னு கோபம். ஆனா உண்மையா நான் சொல்லியிருந்தாலும் அவரை கட்டுக்குள்ள வைக்க முடியாது. அதுவரை விசாலி அத்தை சூப்பர் தான். உங்கப்பாவை ஃபுல் கண்ட்ரோல்ல வெச்சிருக்காங்க” 
“பின்ன ரெண்டு வருஷம், உங்கப்பா கிட்ட டீல் பேசினேன், தொழிலை டெவெலப் பண்ண அவருக்கு எழுபது, எனக்கு முப்பதுன்னு நான் சொன்ன லாபம் ரொம்ப அதிகமா இருந்ததால, என் திறமை நம்பி விட்டார் அவருக்கு அந்த லாபத்தை காட்டினேன்”
“அவரோட வாழ்க்கை முறை அப்படியே தான் இருந்தது. நடுவுல உங்கம்மா இறந்திட்டாங்க, பின்ன இந்த ஃபாக்டரி வாங்கி இதுல பிஸி ஆனேன்”
“உங்கம்மா போன பிறகு ஊர் சுத்த ஆரம்பிச்சார். எனக்கு தெரிஞ்சாலும் நான் இதை எப்படி தடுக்க முடியும். அவர் ஒன்னும் சின்ன பையன் கிடையாது. சொல்லாதேன்னு சொல்லிட்டு உங்கப்பா போனா நீ வந்து எங்கப்பா எங்கேன்னு நிற்ப, நான் எப்படி சொல்ல முடியும்?”
“ஆனா அவரோட ஒழுக்கமின்மைக்கு நான் எப்படி பொறுப்பாவேன், இந்த மாதிரி ஒரு விஷயமே அசிங்கம், அதை நான் உளவு பார்ப்பேனா”
“அப்பா இப்படி சுத்தறான், பசங்க பொறுப்பில்லாம செலவு பண்ணுதுங்கன்னு தான் தோணும், சில சமயம் எரிச்சல் ஆகும், நாம கஷ்டப் பட்டு சம்பாதிச்சா இவனுங்க என்ஜாய் பண்றானுங்கன்னு, அப்போ தான் சந்தோஷ் பர்த்டே பார்ட்டி வந்தது”
“ஒரு அழகான பொண்ணு வந்து என்கிட்டே பேசினா, திரும்ப அவ உன்கிட்ட பேசும் போது என்னை பத்தி பேச, நீ அவ கிட்ட உனக்கு போயும் போயும் இவன் தான் கிடைச்சானான்ற மாதிரி ஏதோ சொல்லி, வாழ்க்கை முழுசும் கல்யாணமாகாம இருந்தா கூட இவனை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்ன, என்னை அது ரொம்ப காயப்படுத்திச்சு, அப்போ நினைச்சேன், ஒன்னு நீ என்னை கல்யாணம் பண்ணனும் இல்லை நீ கல்யாணமாகாமயே இருந்துடணும்ன்னு”
“அப்படி நினைச்சப்போ தான் என்மேல அபாண்டமா ஒரு பழியை போட்ட அது இன்னும் என் வெறிய கிளப்ப, அதுக்கப்புறம் நான் நினைச்சதை செயல் படுத்தத் தீவிரமா இறங்கிட்டேன்”
“நான் வீட்டை விட்டு போனாலும் உனக்கு ஒரு மாப்பிள்ளை கூட அமையவிடலை” என்று உண்மையை சொல்லிவிட, அவளின் உடலில் ஒரு இறுக்கம் ஆனாலும் முகம் நிமிர்த்தவில்லை,
             
                                 
              

Advertisement