Charumathi
சாருமதி.
அத்தியாயம் 10.
அந்த மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் முன் நீண்டிருந்த காரிடாரில் நின்று கொண்டும், உலாத்திக் கொண்டும், அங்கு கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுமாக இருந்த அத்தனை பேர்களின் கண்களும்,
அந்த அறையின் முன்னால் எறிந்து கொண்டிருந்த சிகப்பு விளக்கு அணைக்கப்படவும் பரபரப்பாகி, திறக்கப்படப்போகும் வாசல் கதவையே எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தன.
அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சிறிது நேரத்தில்...
"இல்லை... அது சின்னப் பொண்ணு. நாளைபின்ன அவ கல்யாணத்துக்குப் பிறகு, இதால அந்த பொண்ணு வாழ்க்கையில பிரச்சினை வந்துரக் கூடாதுன்னு தான் கொஞ்சம் யோசனையா இருக்கு" என்றவர் மகனின் பதிலுக்காக அவன் முகத்தையே உற்றுப் பார்க்க
அவனோ,"திங்க் பாஸிட்டீவ் ப்பா...அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது"என்று ஆரூடம் சொல்லியபடி
"ப்ளீஸ் பா... அவ கிட்ட வேண்டாம், அப்டி இப்டி ன்னு...
சாருமதி.
அத்தியாயம் 09
தனது அறையில் சோஃபாவில் உட்கார்ந்து, தன் முன்னால் கிடந்த சிறிய டேபிளில் காலை நீட்டியபடி சாய்ந்திருந்த கிருஷ்ணாவின் மூடியிருந்த விழிகளிலிருந்து இமைகளைத் தாண்டி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
எவ்வளவு நேரம் தான் அப்படி இருந்தானோ தெரியாது?,"பி பிரேவ் மேன்! நீயே இப்படி அழுதுட்டு இருந்தால், உடைந்து போய் இருக்கிற உன்னை பெத்தவங்களை யாரு பாத்துப்பா?"...
வியந்து போன அந்த அரசாங்க உயரதிகாரி," உங்களை மாதிரி கிராமத்துக்கு ஒரு ஆளு இருந்தாப் போதும் சார், சீக்கிரமே கிராமங்கள் தற்சார்பு அடைஞ்சிடும்."
"நானும் உங்களுடைய முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை செய்ய தயாராயிருக்கிறேன். அதனால எந்த உதவியா இருந்தாலும் தயங்காமல் எங்கிட்ட கேளுங்க" என்று பண்ணையாரிடம் சொல்லியேச் சென்றார்.
கலெக்டர் சென்றவுடன் மருத்துமனைக்காக பண்ணையாரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மருத்துவ...
சாருமதி.
அத்தியாயம் 08
இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாந்தோப்பில் நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. கூடவே நண்பன் தனஞ்செயன்.
மாந்தோப்பு என்றால் அடர்ந்து கிளைகள் பரப்பி நிற்கும் பெரிய பெரிய மரங்கள் நிற்கும் தோப்பல்ல. இப்போது தான் வளர்ந்து வரும் இளம் மரங்கள் நிறைந்திருக்கும் தோப்பு.
அங்கு நிற்கும் மரங்களுக்கு வயது ஐந்து மட்டுமே. கிருஷ்ணா...
'இல்லையே! என் நண்பர்களும் இவனைப் போல வசதியானவர்கள் தானே! ஆனால் அவர்கள் இவனைப் போல இல்லையே!' என்று அன்று நடந்ததை மறக்கமுடியாமல் இன்றும் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தவளை,
"சாரு! நம்ம ஹனி கண்ணை மூடி கனவு கண்டா, அதுல ஒரு நியாயம் உண்டு. ஆனால் நீ ஏன் கொசுவர்த்தி சுருள் சுத்துற?" என்று ஹேமா உலுக்க
"ஹாங்......
சாருமதி.
அத்தியாயம் 07.
"ரைட்டா..."
"ரைட்டு..."
"ரைட்டா..."
"ரைட்டு..."
"ரைட்டா..." என்று ராகமாகக் கேட்ட ஹேமாவின் கேள்விக்கு
"ராங்கு... ராங்கு... ராங்கு..." என்று ஆர்ப்பரித்தபடியே குதித்தாள் சாருமதியின் தங்கை கௌரி...
ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக போடப்பட்டிருந்த ஐந்து நீளமான செவ்வக வடிவ கட்டத்துக்குள் கண்களை மூடிக்கொண்டு, லேசாக அண்ணார்ந்து பார்த்தபடியே முன்னும் பின்னுமாக தன் காலை வைத்திருந்த ஹேமா, கௌரியின் குரலில் அப்படியே காலை வைத்துக்...
நிச்சயத்திற்கு போகாததற்கே ஒருபாட்டம் ஆடித்தீர்த்தாள் தேன்மொழி. கல்யாணத்திற்கு போகவில்லையோ? அவ்வளவு தான் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் சாருமதியை.
கல்யாணம் வார இறுதியில் அமைந்து விட்டதால் சாருமதிக்கும் வசதியாக போய்விட்டது.
சாயங்காலம் வகுப்புகள் முடிந்து அவசர அவசரமாக சாருமதியின் விடுதி அறைக்கு தோழிகள் மூவரும் வந்தனர்.
வந்ததும் தன் முகம் கழுவி, தலைமுடியைத் திருத்தி சாருமதி புறப்பட, ஹேமாவோ...
சாருமதி.
அத்தியாயம் 06
"ஒரு நாளாவது பீட்ஸா, பர்கர், நான், பனீர் மசாலா இப்படி ஏதாவது ஒன்னு பிரேக் பாஃஸ்டா குடுக்கலாம்ல. எப்போ பாரு இந்த இட்லி, சட்னி, காய்ந்து போன சப்பாத்தி, குருமா ன்னு குடுத்து கொல்லுறாய்ங்க."
"அதுலயும் இந்த இட்லி இருக்குப்பாரு இட்லி, இதைத் தூக்கி அந்த கேண்டீன் மாஸ்டர் தலையில எறிஞ்சா கண்டிப்பா அவர்...
சாருமதி.
அத்தியாயம் 05
"முடியாது... முடியாது...முடியாது... என்னால டாக்டருக்கெல்லாம் படிக்க முடியாது" தாயிடம் உறுதியாக மறுத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
தாயும் மகனும் மாடியிலிருக்கும் குடும்பத்தினர் மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய அந்த ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள்.
"அப்பா ஆசைப்படுறாங்கல்ல குட்டா! அதான் நல்லமார்க் வேற எடுத்துருக்கியே டாக்டருக்கு படிச்சாத் தான் என்னவாம்?"
"உன் வீட்டுக்காரருக்காகவெல்லாம் நான் படிக்க முடியாது ம்மா. எனக்கு புடிச்சாத் தான்...
"அதான் எப்படி?"
"அக்கா இப்போ எஜுகேஷன் லோன் எல்லாம் கிடைக்குது. அது உனக்கு தெரியுமா இல்லையா?"
"தெரியும் ரகு! ஆனால் அது கூட பேரண்ட்ஸ்ஸோட வருமானத்தோட அடிப்படையில் தானே குடுக்காங்களாம்.
என் கிளாஸ்மெட் ஒருத்தி சொன்னா"
"நமக்கு என்ன வருமானம் வருதுன்னு உனக்கே தெரியும் தானே. அப்புறம் எப்படி ரகு நமக்கு லோன் கிடைக்கும்" விஷயங்கள் எதுவும் சரிவரத் தெரியாத...
சாருமதி.
அத்தியாயம் 04.
சித்திரை வருடப் பிறப்பையொட்டி கனி காணும் நிகழ்ச்சியை வீட்டில் காலையிலேயே சிறப்பாக முடித்திருந்தார் வேதவல்லி.
முதல்நாள் இரவே பூஜையறையில் ஒரு கண்ணாடி முன் வெள்ளித் தாம்பாளத்தில், மங்கலப் பொருட்களோடும் முக்கனிகளோடும், ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை, மாதுளை, வெள்ளரிப்பழம், ஒரு எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு, பணம், நகைகள் எல்லாம் வைத்து அந்த கண்ணாடிக்கு ஒரு தங்க...
உடனே அவர் அதை ரகுராமிடம் சொல்ல சாருமதியும் ஒத்துக்கொண்டு தன் அன்னையின் ஒப்புதலோடு இதோ வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
காலையில் இருவரும் தங்கள் சைக்கிளில் ஒன்றாக மணிமுத்தாறு வந்து பஸ்பிடித்து திருநெல்வேலி போனார்களென்றால் வரும் போது அவரவர் வேலை முடிந்து வரும் நேரத்தைப் பொறுத்து வீடுவந்து சேர்வார்கள்.
வேலைக்கு வந்த சிறிது நாளிலேயே ராஜாத்தி அம்மாவுக்கு மட்டுமல்லாமல்...
ஒரு உப்புமாவிற்கே சந்தோஷப்படும் தங்கையின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தவளுக்கு 'தான் ஒரு நல்ல நிலைக்கு வந்து கண்டிப்பாக தன் தம்பி தங்கைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும்' என்ற எண்ணம் ஆழமாக விழுந்தது மனதில்.
அதன் பிறகு அக்காவின் அனுமதியோடு விளையாடச் சென்றுவிட்டாள் கௌரி.
சிறிது நேரத்திலேயே ரகுராமோடு, காயத்ரியும் வந்து விட கௌரிக்கு கொடுத்தது போலவே...
சாருமதி
அத்தியாயம் 03
ஹேய்.... என்ற உற்சாகக் குரலோடு தேர்வு அறைகளை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள் மாணவ மாணவிகள்.
ஒருசிலர் கையிலிருந்த வினாத்தாளை தூக்கியெறிந்து பட்டமாகப் பறக்கவிட இன்னும் ஒரு சிலரோ தங்கள் பேனாக்களில் இருந்த மையால் நண்பர்களின் சட்டைகளில் மாடர்ன் ஆர்ட் வரைந்தார்கள்.
வேறொன்றுமில்லை, இன்றோடு பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நிறைவுபெற்றன. இவ்வளவு நாளும் பொதுத்தேர்வு என்ற...
அவனது ஓங்கியக் கையை அவன் பின்னால் இருந்து பிடித்து தடுத்திருந்தாள் கிருஷ்ணாவின் அத்தை மகள் அர்ச்சனா.
அத்தை மகள் என்றால் பண்ணையாரின் உடன்பிறந்த தங்கையின் மகள். பண்ணையாரின் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள். இரண்டு பேருமே அவருக்கு இளையவர்கள் தான்.
ஆனால் அத்தைகளின் எல்லா பிள்ளைகளும் கிருஷ்ணாவிற்கு மூத்தவர்களாய் இருக்க, இவள் மட்டும் அவனைவிட ஒருவயது இளையவள்.
"ஏய்...
சாருமதி.
அத்தியாயம் 02.
நான்கு தலைமுறைகள் கண்டு கம்பீரமாக நிற்கும் அந்த மாளிகையின் மதிற்சுவர்கள் கோட்டை மதிர்சுவரைப்போல நெடிந்துயர்ந்திருக்க, அதன் அலங்காரகேட் இருபுறமும் நன்றாக திறந்து வைக்கப்பட்டிருந்தது.
மாளிகையின் வளாகத்துக்குள்ளேயே வலப்புறத்தில் கிழக்கு முகமாக அமைந்திருந்த கிருஷ்ணர் கோவில் அந்த மாளிகையில் வாழுபவர்களின் பாராம்பரியத்தை குறைவில்லாமல் எடுத்துக்கூறியது.
இன்று அந்த மாளிகை வாரிசின் பிறந்த நாளையொட்டி கோவில் பூமாலைகளால் அலங்கரிப்பட்டிருந்தது.
திறந்திருந்த...
தனஞ்செயனின் பெற்றோரும் பண்ணையார் மகனின் நட்பு தங்கள் மகனுக்கு கிடைத்திருப்பது பெரிய பாக்யம் என்ற மனநிலையில் இருக்க அவர்கள் இருவரின் நட்பில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரிலே முடித்திருக்க, ஆறாம் வகுப்பிற்கு வெளியூருக்கு தான் செல்ல வேண்டும் என்றதும் இதோ இன்று இந்த பிள்ளைகள் கூறியது போல மகனை "ஊட்டி கான்வென்டுக்கு...
சாருமதி.
அத்தியாயம் 01.
"குட்மார்னிங் டீச்சர்..." என்ற கோரஸான மாணவ மாணவிகளின் குரலுக்கு
"குட்மார்னிங்...சிட்டவுண்"
என்று சொல்லியவாறே தன் கையிலிருந்த விடைத்தாள் கட்டை மேஜை மீது வைத்தார் அந்த இயற்பியல் ஆசிரியை..
"எப்படி... எல்லாரும் லீவ்ல கொஞ்சமாவது படிச்சீங்ளா? இல்ல பரீட்சை முடிஞ்ச அன்னைக்கு வீட்ல கொண்டு போய் வச்ச பையை நேற்று தான் தூக்கிகிட்டு ஸ்கூலுக்கு வந்தீங்களா?" என்று கேட்டவாறே...