Charumathi
வியந்து போன அந்த அரசாங்க உயரதிகாரி," உங்களை மாதிரி கிராமத்துக்கு ஒரு ஆளு இருந்தாப் போதும் சார், சீக்கிரமே கிராமங்கள் தற்சார்பு அடைஞ்சிடும்."
"நானும் உங்களுடைய முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை செய்ய தயாராயிருக்கிறேன். அதனால எந்த உதவியா இருந்தாலும் தயங்காமல் எங்கிட்ட கேளுங்க" என்று பண்ணையாரிடம் சொல்லியேச் சென்றார்.
கலெக்டர் சென்றவுடன் மருத்துமனைக்காக பண்ணையாரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மருத்துவ...
அவனது ஓங்கியக் கையை அவன் பின்னால் இருந்து பிடித்து தடுத்திருந்தாள் கிருஷ்ணாவின் அத்தை மகள் அர்ச்சனா.
அத்தை மகள் என்றால் பண்ணையாரின் உடன்பிறந்த தங்கையின் மகள். பண்ணையாரின் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெண்கள். இரண்டு பேருமே அவருக்கு இளையவர்கள் தான்.
ஆனால் அத்தைகளின் எல்லா பிள்ளைகளும் கிருஷ்ணாவிற்கு மூத்தவர்களாய் இருக்க, இவள் மட்டும் அவனைவிட ஒருவயது இளையவள்.
"ஏய்...
நேற்று நடந்த நிகழ்வுகளிலிருந்து வெளியே வந்தவன், எழுந்து தரையை நோக்கி தாழ்ந்திருந்த ஒரு கிளையை பிடித்து உலுக்க, சாரல் மழையில் நனைந்திருந்த மரம் தன் மீதிருந்த நீரை பன்னீராய் தெளித்தது கிருஷ்ணாவின் மீது.
தன் முகம் மலர்த்தி அதை பெற்றுக்கொண்டவனிடம் புத்துணர்ச்சி சற்றே மீண்டிருக்க, காலத்தின் கைகளில் தன் காதலை ஒப்படைத்து,
இதற்கு மேல் தானாக தன்...
அவளின் பதிலில் சுர்ரென்று கோபம் ஏற,"தயவு செய்து படுத்து தூங்கு இல்லன்னா கோபத்துல ஏதாவது சொல்லிடப்போறேன்" கட்டிலில் உட்கார்ந்திருந்தவளை பிடித்து தள்ளிவிட்டு விட்டு தானும் படுத்துக்கொண்டான் கிருஷ்ணா.
மறுபடியும் வாழ்க்கை செக்கு சுற்றும் மாடாக தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, விழிபிதுங்கி போனது அவனுக்கு.
மறுநாள் காலை, முடிவு செய்திருந்தபடி வெளியே கிளம்பியிருந்தார்கள். அவர்களோடு சித்தியும் அவரின்...
"இல்லை... அது சின்னப் பொண்ணு. நாளைபின்ன அவ கல்யாணத்துக்குப் பிறகு, இதால அந்த பொண்ணு வாழ்க்கையில பிரச்சினை வந்துரக் கூடாதுன்னு தான் கொஞ்சம் யோசனையா இருக்கு" என்றவர் மகனின் பதிலுக்காக அவன் முகத்தையே உற்றுப் பார்க்க
அவனோ,"திங்க் பாஸிட்டீவ் ப்பா...அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது"என்று ஆரூடம் சொல்லியபடி
"ப்ளீஸ் பா... அவ கிட்ட வேண்டாம், அப்டி இப்டி ன்னு...
தனஞ்செயனின் பெற்றோரும் பண்ணையார் மகனின் நட்பு தங்கள் மகனுக்கு கிடைத்திருப்பது பெரிய பாக்யம் என்ற மனநிலையில் இருக்க அவர்கள் இருவரின் நட்பில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரிலே முடித்திருக்க, ஆறாம் வகுப்பிற்கு வெளியூருக்கு தான் செல்ல வேண்டும் என்றதும் இதோ இன்று இந்த பிள்ளைகள் கூறியது போல மகனை "ஊட்டி கான்வென்டுக்கு...
சாருமதியும் அவனையே பின்பற்றினாள். அந்த பார்த்தசாரதியிடம் அவர்கள் வைத்த வேண்டுதலின் வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் வேண்டுதலென்னவோ ஒன்றாகத்தான் இருந்தது.
வணங்கி முடித்தவன் தன்நெற்றியிலும் அடையாளமிட்டு சாருமதியின் நெற்றியிலுமிட, அமைதியாக அனுமதித்தாள் அவனை.
தன் மனதின் மாற்றத்தை அந்த எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதானத்திலிருந்தே கைக்கொண்டாள் அந்த காரிகை.
மேலும் மாதம் ஒன்று கழிந்திருந்தது... அந்த புதுமணத் தம்பதியரின் வாழ்க்கை,...
'ஹையோ! இவன் பாத்துப் பாத்தே சாகடிக்குறான் என்னை? இதுல டாக்டர் நிர்மலா வேற, சின்னவரை இப்பல்லாம் அடிக்கடி ஹாஸ்பிடல் பக்கம் பாக்கமுடியுதுல்லன்னு சொல்லுறாங்க'
'இவங்க யதார்த்தமா சொல்லுறாங்களா? இல்லை எதையும் கவனிச்சிட்டு சொல்லுறாங்களான்னு தெரியலையே?'
'டேய்... நீ என்ன சொல்லணும்ணு நினைக்கிறியோ, அதை
சீக்கிரம் சொல்லித் தொலையேன்டா. நானும் நச்சுன்னு உன் நடுமண்டைல உறைக்குற மாதிரி பதிலைச் சொல்லி...
ரகுராமின் அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு காயத்ரியின் படிப்பு சம்மந்தப்பட்ட அனைத்து அப்டுடேட் விபரங்களையும் தந்து கொண்டிருந்தார்.
கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால் பாடங்கள் பாஸாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தவள்,
அந்த ராகேஷூடனான தெய்வீக காதலுக்கு பின் ஒவ்வொரு தடவையும் அவன் கிளாஸை கட் செய்து விட்டு வெளியே செல்ல கூப்பிடும் போதெல்லாம், தான் கல்லூரிக்கு மட்டம் போடும்...
உடனே அவர் அதை ரகுராமிடம் சொல்ல சாருமதியும் ஒத்துக்கொண்டு தன் அன்னையின் ஒப்புதலோடு இதோ வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
காலையில் இருவரும் தங்கள் சைக்கிளில் ஒன்றாக மணிமுத்தாறு வந்து பஸ்பிடித்து திருநெல்வேலி போனார்களென்றால் வரும் போது அவரவர் வேலை முடிந்து வரும் நேரத்தைப் பொறுத்து வீடுவந்து சேர்வார்கள்.
வேலைக்கு வந்த சிறிது நாளிலேயே ராஜாத்தி அம்மாவுக்கு மட்டுமல்லாமல்...
ஒரு உப்புமாவிற்கே சந்தோஷப்படும் தங்கையின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தவளுக்கு 'தான் ஒரு நல்ல நிலைக்கு வந்து கண்டிப்பாக தன் தம்பி தங்கைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும்' என்ற எண்ணம் ஆழமாக விழுந்தது மனதில்.
அதன் பிறகு அக்காவின் அனுமதியோடு விளையாடச் சென்றுவிட்டாள் கௌரி.
சிறிது நேரத்திலேயே ரகுராமோடு, காயத்ரியும் வந்து விட கௌரிக்கு கொடுத்தது போலவே...
'இல்லையே! என் நண்பர்களும் இவனைப் போல வசதியானவர்கள் தானே! ஆனால் அவர்கள் இவனைப் போல இல்லையே!' என்று அன்று நடந்ததை மறக்கமுடியாமல் இன்றும் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தவளை,
"சாரு! நம்ம ஹனி கண்ணை மூடி கனவு கண்டா, அதுல ஒரு நியாயம் உண்டு. ஆனால் நீ ஏன் கொசுவர்த்தி சுருள் சுத்துற?" என்று ஹேமா உலுக்க
"ஹாங்......
சாருமதி.
அத்தியாயம் 21 (Prefinal episode)
"நானும் பாத்துட்டு தான் இருக்கேன், வந்த நாள்ல இருந்து நீ இந்த மூனு இட்லிக்கு அதிகமா ஒரு இட்லி கூட சாப்பிடுறது இல்லை"
"இப்டி சாப்பாட்டை கொறிச்சா உடம்புல என்னது தான் ஒட்டும் சாரு..."
மகனும், மருமகளும் காலை உணவுண்ண உட்கார்ந்திருக்க, பரிமாறிக் கொண்டிருந்த வேதவல்லி அதட்டிக்கொண்டே சாருமதியின் தட்டில் இன்னும் இரண்டு...
இன்றுதான் தேங்காய் பறித்திருப்பார்கள் போலும்...
இரண்டு மூன்று இடத்தில் பறித்திருந்த தேங்காய்களை மலைபோல் குவித்து வைத்திருந்தார்கள்.
அவள் பார்வைவீச்சில் கிருஷ்ணா விழவில்லை. ஆனால் அவன் வண்டி விழ, அதன் பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவள் நின்றிருந்த திசைக்கு எதிர் திசையிலிருந்து வேட்டியை மடித்து கட்டியபடி வந்துகொண்டிருந்த கிருஷ்ணாவின் கண்களில் சாருமதி விழ,
அவளை அங்கே எதிர்பாராத...
"அதான் எப்படி?"
"அக்கா இப்போ எஜுகேஷன் லோன் எல்லாம் கிடைக்குது. அது உனக்கு தெரியுமா இல்லையா?"
"தெரியும் ரகு! ஆனால் அது கூட பேரண்ட்ஸ்ஸோட வருமானத்தோட அடிப்படையில் தானே குடுக்காங்களாம்.
என் கிளாஸ்மெட் ஒருத்தி சொன்னா"
"நமக்கு என்ன வருமானம் வருதுன்னு உனக்கே தெரியும் தானே. அப்புறம் எப்படி ரகு நமக்கு லோன் கிடைக்கும்" விஷயங்கள் எதுவும் சரிவரத் தெரியாத...
வாழ்க்கை பயணத்தில் ஒருவரோடு ஒருவர் இணைந்து பயணம் செய்யும் போது என்ன பேசவேண்டுமென்று ஒருவருக்கொருவர் யோசித்து யோசித்து பேசமுடியாதே.
அதேபோல சாதாரண பேச்சுக்களில் கூட குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால், அந்த வாழ்க்கையும் நரகம் தானே.
"உங்கம்மா நல்லா சமைப்பாங்க" இது கிருஷ்ணாவிடமிருந்து இயல்பாக வந்த வார்த்தை.
ஆனால் அதையே,"ஏன்? எங்கம்மா உங்க வீட்ல சமையல் வேலை பாத்தாங்கங்குறதை சொல்லிக்காட்டுறியா?"...
"அதனால நீங்க எதுவுமே பேசாமல் அமைதியா இருக்குறதா இருந்தா மட்டும் சொல்லுங்க, உங்களை கூட்டிட்டு போறேன். இல்லையா, நீங்க இங்க வீட்லயே இருங்க, நாங்க மட்டும் கல்யாணத்துக்கு போய்ட்டு வரோம்" கண்டிப்பாக சொல்லிவிட,
'பிடிக்காத பெண்ணாக இருந்தாலும் நடக்க இருப்பது தன் செல்லப் பேரனின் திருமணம். அதற்கு நானில்லாமலா?' என்று யோசித்தாரோ என்னவோ மகனோடு வந்து...
ஹோ... என்று ஆர்பரித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு போட்டியாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள் சாருமதியும் அவளுடைய தோழர்களும்.
கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் தங்கள் உயர்படிப்பின் இறுதிகட்டத்தில் இருக்க, திடீரென்று ரேணுகாவிற்கு ஒரு ஆசை.
வேறொன்றுமில்லை... "மதுரை மருத்துவக் கல்லூரியில் நம் ஐந்து பேரின் கால்படாத இடமே கிடையாது. அதே போல நான் இப்போது படிக்கிற கல்லூரியிலும் நம்முடைய ஐந்து...
சாருமதி.
அத்தியாயம் 07.
"ரைட்டா..."
"ரைட்டு..."
"ரைட்டா..."
"ரைட்டு..."
"ரைட்டா..." என்று ராகமாகக் கேட்ட ஹேமாவின் கேள்விக்கு
"ராங்கு... ராங்கு... ராங்கு..." என்று ஆர்ப்பரித்தபடியே குதித்தாள் சாருமதியின் தங்கை கௌரி...
ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக போடப்பட்டிருந்த ஐந்து நீளமான செவ்வக வடிவ கட்டத்துக்குள் கண்களை மூடிக்கொண்டு, லேசாக அண்ணார்ந்து பார்த்தபடியே முன்னும் பின்னுமாக தன் காலை வைத்திருந்த ஹேமா, கௌரியின் குரலில் அப்படியே காலை வைத்துக்...
சாருமதி.
அத்தியாயம் 02.
நான்கு தலைமுறைகள் கண்டு கம்பீரமாக நிற்கும் அந்த மாளிகையின் மதிற்சுவர்கள் கோட்டை மதிர்சுவரைப்போல நெடிந்துயர்ந்திருக்க, அதன் அலங்காரகேட் இருபுறமும் நன்றாக திறந்து வைக்கப்பட்டிருந்தது.
மாளிகையின் வளாகத்துக்குள்ளேயே வலப்புறத்தில் கிழக்கு முகமாக அமைந்திருந்த கிருஷ்ணர் கோவில் அந்த மாளிகையில் வாழுபவர்களின் பாராம்பரியத்தை குறைவில்லாமல் எடுத்துக்கூறியது.
இன்று அந்த மாளிகை வாரிசின் பிறந்த நாளையொட்டி கோவில் பூமாலைகளால் அலங்கரிப்பட்டிருந்தது.
திறந்திருந்த...