Tamil Novels
கணபதியே அருள்வாய்
நீ என்பது யாதெனில்
அத்தியாயம் ஒன்று :
சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
ராதையை.. பூங்கோதையை..
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
மெலிதான குரலில் மகனுக்கு பாடித் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.. அருமையான குரல் வளம்.. அது மகனைத் தானாக கண் மூட வைத்தது...
ஒரு வயது...
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
அவளின் தவிப்பு அருளுக்கு நன்கு புரிந்தது. அதே சமயம் அவள், இந்த பத்து நாட்களாக புக்கை.. கையில் கூடத் தொடவில்லை என்று, அறிந்தே இருந்தான். இன்னும் அவளின் பரீட்ச்சைக்கு.. மூன்று மாதமே உள்ள நிலையில்.. அவளை தன்னோடு அழைத்துச் சென்றால் படிப்பாளா? மாட்டாளா? என்ற கேள்வி அவன் முன் பூதகரமாக...
கணபதியே அருள்வாய்
காதலும் கற்று மற!
அத்தியாயம் ஒன்று :
எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச் செழுமையை எதிர்காலத்தில் குலைக்கும் விதமாக, ஊருக்குள் இருக்கும் நிலங்கள் எல்லாம் ஃபிளாட்டாக மாறிக் கொண்டு இருக்கின்றது. மொத்தத்தில் புதுமையும் பழமையும்...
“தெரியலை, மாமா ஒரு மாதிரி இருக்குன்னு போய் படுத்துக்கிட்டார்” என்று வசுமதி சொல்லவும்,
“ஏன், என்ன ஆச்சு?” என்றனர் இருவரும்.
நடந்தவைகளை சொல்ல “நேத்து தானே சொன்னோம் இவளுக்கு அறிவிருக்குதா இல்லையா” என்று எல்லோரும் நேரடியாக ஷோபனாவை திட்டினர்.
அதற்குள் நாகேந்திரன் சாரதாவோடு வந்திருந்தார், வந்தவரிடம் அகிலாண்டேஸ்வரி சண்டைக்கு கிளம்ப, திருவும் வெங்கடேஷும் அப்பாவிற்கு உடல் நிலை...
அத்தியாயம் பதினெட்டு :
அருகில் வந்தவன் “என்ன” என்றான்.
துளசி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “ஒன்னுமில்லையே” என்றாள் அவசரமாக.
சில நொடிகள் அவளை உற்று பார்க்க, துளசியின் தலை தானாகக் கவிழ்ந்தது.
பின்பு மீனாவின் புறம் திரும்பியவன் “சாப்பிட போகலாமா” என்றான்.
“மா வா” என்று துளசியின் கைபிடித்தாள் மீனா.
துளசி திருவின் முகம் பார்க்க, “போ” என்பது போல...
இவ்வளவு பேசும் போதும் நாகேதிரனும் தருணும் அங்கேயே தான் இருந்தனர். “அச்சோ, இந்த பெண் பேரிலா? வராமல் இருந்திருக்கலாமோ!” என்று தோன்றிய போதும் வராமல் இருந்திருக்க முடியாது என்று தெரியும்.
திரு இருவரின் தொழிலையே முடக்கி இருந்தான். “நீங்கள் என் பணத்தை திரும்ப கொடுக்காமல் செயல் பட முடியாது” என்பது போல,
சத்தம் மட்டும் தான் போடுவான்...
அத்தியாயம் ஒன்பது :
“என்னவாகிற்று எனக்கு?” என்று துளசி நினைக்காத நாளே இல்லை. ஆம்! அந்த நிமிடம் என்னவாகிற்று என்று தெரியவில்லை வீட்டை விட்டு வந்து விட்டாள். வந்து இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது.
வெங்கடேஷ் பின்னோடு வந்து அழைத்த போது கையினில் காசில்லாததால் “என்னை பஸ் வெச்சி விடுங்க” என்று மட்டும் சொல்ல,
“சரி வாங்க” என்று...
அத்தியாயம் பத்தொன்பது :
துளசியின் பிறந்த வீட்டினர் அன்று மாலை கிளம்பிவிட, இப்போது யாருமில்லை எப்போதும் போல வீட்டினர் மட்டுமே!
திரு அவர்கள் கிளம்பியதும் மில்லுக்கு சென்று விட்டான். புது உத்வேகமே அவனிடம்! அங்கு சென்று வேலைகளை பார்த்து அவன் வீடு வந்த போது, இரவு வெகு நேரமாகிவிட்டது.
துளசியை தவிர ஹாலில் யாருமில்லை.
திரு வந்ததும் உணவு எடுத்து...
அத்தியாயம் பன்னிரண்டு :
நன்கு உறங்கிவிட்டவளுக்கு அர்த்த ராத்திரியில் விழிப்பு வர, விழித்து பார்த்தவளுக்கு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த திரு தான் கண்களில் பட்டான்.
வேகமாக எழுந்து அமர, “எதுக்கு இப்படி வேகமா எழற, மெதுவா பார்த்து எழணும்” என்று அதட்டினான்.
“ம்ம்” என்பது போல தலையாட்டியவள், எழுந்து வெளியே சென்று மகளை பார்த்து வந்து மீண்டும் படுக்கையில்...
அத்தியாயம் ஆறு :
காலையில் துளசி விழித்த போது அவள் மீனாட்சியின் அருகில் படுத்திருந்தாள். அவளாக இங்கே வரவில்லை. அனேகமாக களைப்பில் உறங்கியிருக்கக் கூடும் என்று அனுமானித்தவள், அவன் தூக்கி இங்கே வந்து படுக்க வைத்திருப்பான் என்பதே அவளின் காலையை வண்ணமயமாக்கியது.
நேரம் ஏழு மணியை தொட்டு இருந்தது. இவ்வளவு நேரம் அவள் உறங்குவது என்பது அரிது....
அன்று நாள் முழுவதுமே வலி விட்டு விட்டு எடுக்க, காலையில் பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப் பட்டவள் மாலை வரை அங்கேயே தான் இருந்தாள். மீரா ரத்னா மதியம் போல வந்து விட்டனர்.
அகிலாண்டேஸ்வரிக்கு துளசியை அவளின் அம்மாவிடம் ஒப்படைத்த பிறகு தான் சற்று ஆசுவாசமாகியது.
“நான் அம்மாவை பார்க்கணும்” என்று மீனாக்ஷி வேறு படுத்தி எடுக்க,
அவளை...
திரு ரூமில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தான் , முகம் தலையணையில் முழுதாய் புதைந்து இருந்தது.
துளசி மெதுவாய் அவனை தொட அவனிடம் அசைவில்லை. விழித்து தான் இருக்கிறான் என்று தெரியும்.
“எழுந்துருங்க”
“என்னை கொஞ்சம் தனியா விடு, தூரப் போ, தொந்தரவு பண்ணாதே!” என்ற குரல் மட்டும் கேட்டது , சிறிது தலையை உயர்த்தி அதனை சொன்னவன் அவளின்...
Tamil Novel
வேகமாக சட்னி ஆட்டி, தோசைகளை வார்த்து டைனிங் டேபிளில் வைக்க, மேகநாதன் வந்தவர் உண்டு முடிக்க, பின்னே திருவும் வந்தவன் உண்டு முடிக்க,
பின்பு அடுப்பை அணைத்து, “இப்போ என்னவோ செஞ்சிக்கோ” என்று துளசி நகரப் போக,
‘உங்களுக்குக்கா” என்று தனம் கேட்க, “இல்லை பசிக்கலை” என்று சொல்லி நகர்ந்தாள்.
அதுவரையிலும் தனம் துளசியின் முகத்தை தான்...
அவன் அமர்ந்த ஓரிரு நிமிடங்களுக்கு எல்லாம் அவனின் சித்தப்பாக்கள் வந்து விட, கூட அவனின் அப்பா, வெங்கடேஷ், அம்மாவும் இருந்தனர். அவர்களிடம் இடம் வாங்குவதை பற்றி கூறினான்.
ஊரின் மிக முக்கிய இடத்தில இருப்பதால் அதுவும் தொகையும் மிக அதிகம் என்பதால் “வாங்கி என்ன செய்ய போற திரு அங்கே” என்ற கேள்வி எழ,
சமைத்துக்...
அத்தியாயம் எட்டு :
திருவின் முகத்தினில் ஒரு கோபமும் ஒரு இறுக்கமும் எப்போதும் தங்கி விட்டது. துளசியுமே முகத்தை தூக்கி வைத்து சுற்ற, அவர்களின் வீடே களையிழந்துவிட்டது. மேகநாதனிற்கும் சற்று உடல் நலம் குறைய, அது இன்னும் சூழலை கணப்படுத்தியது.
எப்போதும் போல வேலைகளை துளசி பார்த்துக் கொண்டாலும், செய்து கொண்டாலும் திருவிடம் ஒரு பாராமுகத்தை காண்பிக்க...
“எதுக்கு துளசி இவ்வளவு பிடிவாதம்” என்று அகிலாண்டேஸ்வரி பேச,
“அதுதானே எப்பவும் வாங்கற பேச்சு தானே, இப்போ மட்டும் புதுசா என்ன வீராப்பு!” என்று ஷோபனா வெளியே வந்து வாயை விட்டாள்.
“நீ உள்ள போ முதல்ல” என்று அகிலாண்டேஸ்வரி பொறுக்க முடியாமல் அதட்டினர்.
ஃபோன் பேசி வந்த திருவிடம் அவனின் முகம் பார்த்தாள். அவன் கோபமாக எங்கோ...
அத்தியாயம் இருபத்தி மூன்று :
வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது விக்ரமிற்கும் அன்னகிளிக்கும்.... எத்தனைகெத்தனை விக்ரம் பேசினானோ அத்தனைக்கத்தனைஅன்னகிளி அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக் கொள்வாள்......
“நான் பாட்டுக்கு லொட லொடன்னு பேசறதையெல்லாம் கேட்டுட்டு ஒரே வார்த்தையில எல்லாத்தையும் மாத்திடற நீ”, என்பான்.....
உண்மையும் அதுதான்...... விக்ரம் ப்ளானாக போட்டு தள்ளினாலும்... அன்னகிளி ஒரு சிறு கண்ணசைவில் அதிருப்தியை...
அத்தியாயம் ஐந்து :
ஆம்! திருவை இன்னும் அது துரத்துகின்றது. அவனின் கடந்த கால காதல். இப்போது நிச்சயம் அவனுக்கு காதல் இல்லை. ஆனால் குற்ற உணர்ச்சி அதிகம் இருக்கிறது.
மேகநாதனை பார்த்து திருவிற்கு தான் பயம். அவளுக்கு இல்லை, ஷெரினா, அவளின் பெயர். அவளுடைய குடும்பத்தில் அப்பா, அவள், தம்பி மட்டுமே!
மேகநாதன் மூன்று பேரையும்...
“வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில் இருந்தது கேலண்டர். நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்
“வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள்.
“என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!”
“கேட்கற மாதிரியா பேசறீங்க” என சலிக்க,
“ஏன்? ஏன் கேட்க முடியாது?” என்று எகிறினான்.
“ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிக்கா பேசுவாங்களா?”
“நீயும் நானும் பேசினா அது...
பதினோரு மணிவாக்கில் திரு வீட்டிற்கு அழைத்தான். அதுவரையிலும் அவனை அவனே அவனின் அலுவலக அறையில் அமர்ந்து திட்டிக் கொண்டிருந்தான்.
“ஒரு பொண்ணை இவ்வளவு டார்ச்சர் பண்ணுவியா நீ, அவளா இருக்கவும் இருக்குறா! வேறா யாரா இருந்தாலும் உன்னோட குப்பை கொட்ட முடியாது!” என்று. உறங்குகிறாள் என்று சொல்லப் பட, அவனால் அங்கே இருக்க முடியவில்லை. என்னவோ...