Enai Therinthum Nee
அத்தியாயம் இரண்டு:
அப்போது அவளுக்கு பின் இருந்து ஒரு குரல் கேட்டது.
“ நீ மாறவேயில்ல அன்னலட்சுமி. எல்லாரையும் மிரட்றது, அடுத்தவங்கள பேசவிடாம பேசறது அப்படியே இருக்க “
அந்த குரலை கேட்டதும் வார்த்தை வராது அப்படியே கல்லாய் சமைந்தாள்.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் அவளை விட்டு சந்திரனை நோக்கி பேச ஆரம்பித்தார்.
“ சாரி...
அத்தியாயம் பதினொன்று:
விஸ்வநாதனிடம் பேசி விட்டாலும்கூட ஆனந்த்துடைய அப்பாவிற்க்கு ஒரு மாதிரியான தயக்கம் இருந்தது. ஆனந்த் இந்த விஷயத்தில் சற்று தீவிரமாக இருப்பதாக தோன்றியது
அதனால் தான் அவர் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார். மேலும் உஷாவோடு வரும் சொத்துக்கள் அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாதவை. அந்த ஒரு காரணமும் பெரிய காரணம் அவர்...
அத்தியாயம் ஒன்பது:
நீரஜா. அவனுடைய மனைவி. அவளுக்கு தான் கொடுக்கும் மரியாதை அவ்வளவு தானா. அவளுடன் அவன் இருந்தது இரண்டு நாட்களே, அதன்பின் அவன் சென்றுவிட்டான். பத்தே மாதங்கள் அவள் வாழ்க்கை முடிந்து விட்டது. எல்லோரும் சொல்வது போல், ஆண்பிள்ளைகளுக்கு என்னப்பா மனைவி இறந்தா அடுத்த நிமிடம் புது மாப்பிள்ளை என்பது போல் ஆகிவிட்டதா.
ஆனால் இவளை...
அத்தியாயம் இருபத்தி ஒன்று(2):
“நீ என்ன விளையாடுறியா. இது என்ன திருப்பூர்ல இருந்து கோவை வர்ற மாதிரி நினைச்சியா. அதெல்லாம் முடியாது”, என கிரி சொல்ல, அடம் செய்யும் குழந்தை முகத்தை திருப்புவது போல் முகத்தை அவனுக்கு வேறு புறமாக திருப்பி நின்று கொண்டாள்.
அவன் குழந்தைகள் அல்லவா, என்னவோ செய்யட்டும் என்று விட்டு செல்லவும் மனமில்லாமல்,...
அத்தியாயம் பதினாறு:
மனதில் குற்ற உணர்ச்சி அதிகரிக்க ஆரம்பித்தது. யோசனை யோசிக்காமல் அவனை ஆக்ரமித்தது. அவளை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து கணேஷை நோக்கி, “சந்தோஷமா.”, என்றான்.
“ரொம்ப.”, என்றான் அவன் எல்லாரும் அவளை பாராட்டுவதை பார்த்துகொண்டே.
எல்லோரும் டின்னருக்கு செல்லும் வரை பொறுத்திருந்து அருணிடம் அவளையும் கணேஷையும் வீட்டிற்கு அனுப்பிவிடுமாறு சொல்லி இவன் எங்கோ போக. அருண் என்ன...
அத்தியாயம் பத்தொன்பது:
விஸ்வநாதன் குழப்பத்துடன் உள்ளே சென்று சுபாவை அழைத்து விவரம் கேட்க, “வேலைல ஏதாவது டென்ஷனா உஷா சீக்கிரமா கிளம்பிட்டா”, என, “இல்லையேங்க சார்”, என்றார் அவர்.
“பின்ன ஏன் சீக்கிரம் கிளம்பிட்டா? பார்த்த உடம்பு சரியில்லாத மாதிரி தோணுது”, என்றார். சுபா அவரிடம் தயக்கத்துடன், “கிரி சார் டெய்லி பன்னிரெண்டு மணிக்கு போன்ல பேசுவாங்க,...
அத்தியாயம் இருபத்தி மூன்று (2):
மொட்டை அடித்து காது குத்தின பிறகு, பூஜையின் பொருட்டு நடராஜர் சன்னதியில் நிற்க. நிரஞ்சன் கார்த்திக் அவளிடம் தூக்கம் வர அழ ஆரம்பித்தான். அவள் ஹம் செய்து பாடினாள் தானே தூங்குவான்.
கடவுள் சன்னதியில் எப்படி ஹம் செய்வாள். பாட்டியோடு வரும் போதெல்லாம் இவள் பாடாமல் அவர் விட்டதேயில்லை. அந்த நினைவுகள்...
அத்தியாயம் எட்டு:
அவர்கள் மூவரும் ரூமை விட்டு வெளியேறுவதை பார்த்த சாம்பவி கிரி உள்ளே இருப்பதை பார்த்து உள்ளே சென்றார். அவனை நோக்கி, “ சாப்பிடலையா கிரி.”, என்றார்.
“ சாப்டுட்டேன் மா ” என்றான்.
“ எப்படியிருக்கா.”, என்றார் உஷாவை பார்த்தாவாறே.
“ கண்முழிச்சா, ஆனா என்னன்னு தெரியல. ஏதோ பழைய ஞாபகம் போல பாட்டிய கேட்டுட்டு தூங்கிட்டா.”,...
அத்தியாயம் நான்கு:
கிரி அவரிடம் சிறிது அச்சத்தோடு,” இங்க எல்லா சௌகரியமும் இருக்கா, இல்ல வேற எங்கையாவது ஷிப்ட் பண்ணனும்மா”, என்றான்.
“தேவையில்லை, எதுக்கும் நீங்க சீப் டாக்டர் கிட்ட பேசிக்கங்க” என்றார்.
அருணையும் நந்தினியும் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, கிரியும் விஸ்வநாதனும் டாக்டரை பார்க்கச் சென்றனர்.
அவர்களை பார்த்த உடனே டாக்டர்,” உங்க பேஷன்ட்...
அத்தியாயம் மூன்று:
வீடு வந்து சேர்ந்து ஐந்து நிமிடம் ஆகிவிட்டது யாரும் எதுவும் பேசவில்லை. மிகவும் சின்ன இடம் அது ஒரு ஹால், ஒரு சமையல் அறை, ஒரு சிறிய ரூம் மட்டுமே இருந்தது. நந்தினிக்கு ஏனோ அசந்தர்ப்பமாக உஷாவினுடைய அவளுடைய வீட்டில் இருந்த அறை ஞாபகத்திர்க்கு வந்தது. இந்த வீட்டை விட பெரிய...
அத்தியாயம் பதினான்கு:
“நான் ஒரு நிமிஷம் கூட எங்க அக்காவை எதுக்காகவும் தள்ளி வச்சு பார்க்க முடியாது. சாரி……………. யாருக்கு உரிமை அப்படின்றது நீங்க சொல்லற விதத்துல ஒரு வேளை சரியா கூட இருக்கலாம். ஆனா அவ பேர்ல இருக்கும் போது லீகளா அவ தானே உரிமையாளர். நீங்க அவளை இந்த மாதிரி எமோஷனளா பேசி...
அத்தியாயம் பதினைந்து(1):
நேரே வீட்டிற்கு தான் சென்றாள். அங்கே ஹாலில் சோபாவிலேயே சாம்பவி அழுதபடியே அமர்ந்திருந்தார். பக்கத்திலேயே நந்தினியும் அருணும் இருந்தனர்.
வேலை இருக்கிறது என்று சொல்லி விஸ்வநாதனை அங்கே இருக்க விடாமல் கிரி ஆஃபீஸ் இழுத்து கொண்டு போயிருந்தான்.
நந்தினியிடமும் அருணிடமும் தெளிவாக கூறியிருந்தான். ப்ரத்யுவிற்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த விஷயத்தில்...
அத்தியாயம் ஏழு:
பூஜை ஒரு வழியாக அமளி துமளிக்கு நடுவில் நடந்து முடிந்தது. பூஜை முடியும் தருணம் குழந்தைகளும் பசியால் சினுங்கத் துவங்க, பூஜை முடிந்தவுடனே சாம்பவி குழந்தையை அவருடைய அண்ணியிடம் குடுத்துவிட்டு, மற்றொரு குழந்தையை உஷாவிடமிருந்து தான் வாங்கி இருவரையும் குழந்தைகளின் கேர்டேகரிடம் விட்டு விட்டு எல்லோரையும் உணவருந்தச் சொல்ல சென்றனர்.
நந்தினி உஷாவை பார்க்க,...
அத்தியாயம் இருபத்தி மூன்று (1):
இவன் யோசனையில் ஆழ்ந்து விட, இவனை பார்த்த உஷா அவன் இங்கேயே இல்லை என்றுனர்ந்தவளாக, “என்னங்க!”, என்றாள். அப்போதும் அவன் நீரஜா இல்லாமல் போய்விட்டாள் என்ற நினைவில்லேயே இருந்தான். ஒருவேளை தான் முன்பே ப்ரத்யுவை சந்திக்க முயற்சி எடுத்திருந்தால்., நீரஜாவுடனான தன்னுடைய திருமணம் நடக்காமல் இருந்திருந்தால்., நீரஜா இறக்காமல் இருந்திருப்பாளோ!. ...
அத்தியாயம் இருபத்தி ஒன்று(1):
கிரி செய்வதறியாது அவளை அணைத்தவன், சொல்வதறியாது மௌனியானான். நிமிடங்கள் கடந்தன. அவளுடைய அழுகை நின்ற பாடில்லை. கிரியும் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை, அணைத்திருந்த கையை சிறிதும் தளர்த்தவுமில்லை. அவள் அழுகையெல்லாம் அன்றே அழுது முடித்து கொள்ளட்டும் என்று அமைதியாகவே இருந்தான். மனதில் இனம் புரியாத பயம் உதித்தது. இவளுக்கு...
அத்தியாயம் பதினேழு:
மிகவும் சோர்வாக உணர்ந்தாள். குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பது போல் தோன்ற முத்துவிடம்,“வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு போகலாம்………….”, என்றாள்.
கிரி முத்துவிடம் சொல்லியிருந்தான், அவள் போனாலும் எங்கே வந்தாளும் அவளை கூட்டி கொண்டு போவது அவனுடைய பொறுப்பு என்று. அதனால் முழு நேரமும் அவளுடனே இருந்தான்.
வீட்டிற்கு போன பிறகு தான் தெரிந்தது, அங்கே சாம்பவியின்...
அத்தியாயம் ஆறு :
ஒரு வழியாக உஷாவை கிளப்பினால்,……… அவளுடைய சித்தி அவர்களை மட்டும் போய் வருமாறு கூற,………. அவர்களையும் ஒருவாறு கிளப்பி வீடு போய் சேர்ந்தனர்.
உஷாவிர்க்கு வீட்டை பார்த்ததுமே கண்களில் மறுபடியும் கண்ணீர் தேங்கத் துவங்கியது. அதனை சமாளித்தபடி உள்ளே நுழைந்தாள். அது மிகவும் பெரிய ஹால். ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அளவு...
அத்தியாயம் ஐந்து:
அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தபோது இரவு மணி பதினொன்று. கிரியால் வண்டி ஒட்டக்கூட முடியவில்லை. அருண்தான் கார் ஒட்டி வந்தான். லன்டன்னில் இருந்தபோது குளிருக்காக , பிசினஸ் பார்ட்டிக்காக என்று ஆரம்பித்த பழக்கம், இப்போது அவனை சிறிது சிறிதாக உள்ளே இழுத்துக்கொண்டிருந்தது. அதுவும் இந்த ஒரு மாதமாக எல்லா நாட்களுமே குடித்துவிட்டு தான்...
அத்தியாயம் ஒன்று:
“பூங்காற்று தொட காலையில் கண் விழித்தேன்சூரியன் என் முகத்தில் பனியாய்சுட்டது “
என்று கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்தாள் அவள் . யாரோ “உஷா! உஷா!” என்று சத்தமாக கூப்பிட்டு கொண்டிருந்தனர் .
“யாரோ அல்ல அது சித்தி” .இன்னும் இங்கு நின்றுகொண்டடிருந்தால் திட்டு விழும் என்று அவசரமாக ஓடினாள் உஷா .
‘என்ன சித்தி’ என்றாள்.
“ஏம்மா...
அத்தியாயம் இருபத்திரண்டு(1):
இந்தியாவில் இவளை ரிசீவ் செய்ய வர்ஷா வந்திருந்தாள். அவள் சென்னை ஸ்டான்லி மெடிக்கல் கால்லேஜில் இருப்பதால் கிரி அவளிடம் சொல்லியிருந்தான், உஷாவை அழைத்து அவளை பத்திரமாக கோவைக்கு ஃப்ளைட் ஏற்றி விடுமாறு.
உஷாவிற்க்கு இது தெரியாது. இவள் கிளம்பிய பிறகு தான் அவளை அழைத்து சொல்லியிருந்தான். வர்ஷாவை பார்த்த அவள், “நீங்க எப்படி இங்க”,...