Puthumanam : Marumanam
அத்தியாயம் - 11_1
ராம கிருஷ்ணன் அங்கிளின் கோபத்தில் சுப்ரமணி ஸர் ஸரிலிருந்து சர்ரென்று சறுக்கி அவன், இவன் என்று ஆனாதைப் பார்த்து அதற்கு மேல் அவரிடம் முறையிட முற்படாமல் அவள் வாயை மூடிக் கொண்டாள் கௌரி. ஒரு வருடத்திற்கும் மேலாக அவள் வீட்டில் தனியாக இருந்தது அவள் அம்மாவின் பிரிவை இன்னும் ஆழமாக அவளை...
அத்தியாயம் - 37_1
அவள் மாமியாரை முறைத்துக் பார்த்துக் கொண்டிருந்த கௌரி, கோபத்தை துறந்து சிந்தனைவயப்பட்டாள். அப்போது தீபாவும் சூர்யாவும் அம்மா என்று அழைத்து அவளருகே வர, அவர்களை விலக்கி விட்டு, அவர்களிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவள் படுக்கையறைக்குச் சென்றாள். உடனே குழந்தைகளின் முகம் வாடிப் போக, அதைப் பார்த்து சாவித்திரி அம்மா வேதனையடைந்தார். ...
அத்தியாயம் - 29
சிவாவின் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருக்க அந்த அழைப்பை ஏற்க வேண்டுமா? என்று சிவாவும் கௌரியும் ஒரே போல் யோசித்துக் கொண்டிருந்தனர்.
சில நிமிடங்களுக்கு முன் பாத் ரூமில், பாத் ரோப் மட்டும் அணிந்து கொண்டிருக்கிறாள் என்ற கௌரியின் விளக்கத்தைக் கேட்டு, அதை உறுதி செய்து கொண்டவுடன் அவனுள் ஏற்பட்ட மாற்றத்தை கையாள முடியாமல்,...
அத்தியாயம் - 9
மாலினியின் கேள்விக்கு “ஆமாம்” என்று தலையசைத்தாள் கௌரி. உடனே,
“உள்ளே வா” என்று மாலினி அழைக்க, வாசலை விட்டு அகலாமல்,
“அக்கா, அம்மாவைக் கூப்பிடுங்க கா.” என்றாள்.
“நீ உள்ளே வா.” என்று கௌரியின் கையைப் பிடித்து அவளை வீட்டினுள் இழுத்து வாசல் கதவைச் சாத்தினாள் மாலினி.
இதுவரை அவள் கையைப்பிடித்து அவளை வீட்டிற்கு வெளியே தள்ளியவர்களை...
அத்தியாயம் - 27_2
இன்று காலை வரை, கல்யாணம் முடிந்த பின், அவர்கள் அனைவரும் மகேஷின் வீட்டிற்குச் செல்வதாக தான் பிளான். மகேஷின் குடும்பத்துடன் அங்கே சில மணி நேரங்கள் இருந்து விட்டு இவர்கள் நால்வர் மட்டும் இங்கே வர திட்டமிட்டு இருந்தனர். எந்த நேரத்திலும் பால், பழம் சடங்கு பற்றி பேச்சே எழவில்லை. அதனால்...
அத்தியாயம் - 24
நாள்தோறும் உதிக்கும் சூரியனை வைத்துப் பொழுதுகளை, வேளைகளைத் தேதிகளாகப் பிரித்து, இயற்கையின் செயல்பாட்டை நொடிதோறும் உணர்த்தும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை மாதம், நாள், கிழமை, நட்சத்திரம், திதி என்று வரிசைப்படுத்தி நம் நினைவு அடுக்குகளில் பதித்துக் கொள்கிறோம். அந்த நினைவுகளில் ஏதாவது ஒன்று தவறாகிப் போனால், பிறந்த நாளன்று பரிசிற்காகக் காத்திருந்து...
அத்தியாயம் - 25
கடல் அலைகள் கதிரவனோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த விடியற் காலை வேளையில், குழந்தைகள், பெரியவர்களின் சிரிப்பும் கூச்சலும் அலையோசையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தது. அத்தனை ஆரவாரத்திற்கு நடுவில், மேகலாவின் மடியில், அமைதியாகக் தூங்கிக் கொண்டிருந்தாள் அனன்யா.
அவர்கள் அனைவரும் கடற்கரைக்கு வந்து ஒரு மணி நேரமாகியிருந்தது. உறக்கம் கலையாமல் தூங்கிக் கொண்டிருந்த சின்ன குழந்தைகளை...
அத்தியாயம் - 10
மாலினி, விட்டல் பற்றி நினைத்துக் கொண்டிருந்த கௌரியை நிகழ்விற்குக் கொண்டு வந்தான் வரவேற்பறைக்குள் நுழைந்த அவினாஷ்.
”கௌரி, உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்.” என்றான்.
“அப்போ ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி இன்னொரு நாள் என்னை அழைச்சிட்டுப் போங்க.”
“மாட்டேன்..எத்தனை முறை வீட்டுக்கு வான்னு உன்னைக் கூப்பிட்டேன் நீ வரவேயில்லை..அம்மா கூப்பிட்ட உடனே வந்திட்ட.”
“இப்போ ரொம்ப பிஸியான...
அத்தியாயம் - 34
இப்போது சிவா வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது கௌரிக்கு. அந்த நினைப்பை மெய்ப்பிப்பது போல் அழைப்பு மணி ஒலித்தது.
வாசலில் நின்று கொண்டிருந்த சிவாவை மானிட்டரில் பார்த்து,”மாமா, வந்திட்டாங்க.” என்றான் விஜய்.
“நிஜமவா?” என்று கேட்டு சில நொடிகள் காத்திருந்த கௌரி, எதற்கு அழைப்பு மணி அடித்தான் என்று புரிந்தவுடன், அவனிடம் சாவி...
அத்தியாயம் - 15
அவினாஷின் முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சிவாவைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடி வந்த சித்தார்த்,”இந்தாங்க.” என்று அவன் கையிலிருந்த சின்ன பையைக் கௌரியிடம் கொடுத்தான். அதனுள்ளே பிரபலமான பேஸ்ட் ரி கடையின் பெட்டி இருந்தது. சிவாவின் குழந்தைகளுக்கு என்று புரிந்து கொண்ட கௌரி அதை பிரிஜில் வைக்கச் சென்றாள். அவள்...
அத்தியாயம் - 22
பல வருடங்களாக ஒரு பொருளை ஓர் இடத்தில் பார்த்துப் பழகிய கண்களுக்குத் திடீரென்று அதே இடத்தில் ஒரு புதுப் பொருளைப் பார்க்கும் போது ஆவல், ஆசை, பிரமை, பிடித்தமின்மை என்று பழைய பொருளுடன் இருந்த ஈடுபாட்டைப் பொறுத்து பலவிதமான உணர்ச்சிகள் எழும். திடீரென்று காயத்ரியின் இடத்தில் கௌரியைக் குழந்தைகள் ஏற்றுக் கொண்ட...
அத்தியாயம் - 18_2
மேகலா, ராம கிருஷ்ணனின் வீடு தனி வீடு. வீட்டிற்கு முன்புறம் சுற்றுச் சுவரை ஒட்டி வரிசையாக தென்னை மரங்கள் இருந்தன. அதைத் தாண்டி போர்டிக்கோ, சின்ன வரண்டா. கேட்டின் முன்னே ஸ்கூட்டியை கௌரி நிறுத்தியவுடன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அவினாஷ். அதற்குள் ஸ்கூட்டியிலிருந்து இறங்கி அதை உள்ளே...
அத்தியாயம் - 16
நேரம் காலம் பார்க்காமல், உயர்வு தாழ்வை பொருட்படுத்தாமல் அன்பையும் காதலையும் பலமுறை, பல விதங்களில் வெளிப்படுத்துவதால் தான் அது அழிவேயில்லாமல் காலம் காலமாய் இந்த அவணியில் பல பரிமாணங்களில் வலம் வருகிறது. அதிகமாக வெளிபடுத்தப் படாத காதலும் அன்பும் சந்தேகத்தை, சஞ்சலத்தைக் கிளப்புகிறது. அது பலமுறை வெளிப்படும் போது ஒவ்வொரு முறையும்...
அத்தியாயம் - 17
“ரியலி.” என்றாள் திரையில் தெரிந்த மாலினி.
அவினாஷும் நித்யாவும் சற்றுமுன் தான் கௌரியின் கல்யாண விஷயத்தை மாலினிக்குத் தெரியப்படுத்தியிருந்தனர். அதைக் கேட்டு அந்தப் புறம் திரையில் தெரிந்த நான்கு பேரில் மூன்று முகங்களில் சந்தோஷம். மாலினியின் முகத்தில் மட்டும் தீவிர சிந்தனை.
சிவாவிற்கு அடுத்து தீபா அமர்ந்திருக்க அவளருகே அமர்ந்திருந்த கௌரியின் மடியில் இருந்த...
அத்தியாயம் - 33_1
நான்காம் நாள் காலையில், குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லும் முன், சாமி அலமாரியில் புதிதாக மாட்டியிருந்த காயத் ரியின் படத்தை வணங்கி விட்டுச் சென்றனர். அதைப் பார்த்து, கௌரியை நினைத்து ஆச்சர்யமானது சாவித்திரி அம்மாவிற்கு.
“காயத் ரியோட ஃபோட்டோ எல்லாத்தையும் சிவா தம்பி அலமாரி உள்ளே வைச்சவுடனே நிம்மதியா இருந்திச்சு..குழந்தைங்க இரண்டு பேரும்...
அத்தியாயம் - 12
அவினாஷ் சொன்னது நிஜமானது. இருளைப் பிளந்து கொண்டு விடியல் வெளியே வந்த நானோ நொடி காட்சிகளுக்கு சாட்சியானவன், இதுபோல் இனியொரு தூங்கா இரவையும் விடியலையும் அவனால் கையாள முடியாது என்று உணர்ந்து, அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் மனதோடு ஒரு தீர்மானத்திற்கு வந்தான் சிவா. அதன் பின் அன்று காலை அவனே குழந்தைகளைப்...
அத்தியாயம் - 14
“மகேஷ் உங்க தம்பியா? கடைலே உங்க அப்பாவும் தம்பியும் பணம் போட்டிருக்காங்களா?” என்று அவள் ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு விவரங்கள் அறியமுற்பட்டாள் கௌரி.
“ஆமாம்.. என்னோட தம்பி..ஆரம்பித்தலே அப்பா கொஞ்சம் பணம் கொடுத்தார்..அதை அப்போவே திருப்பிக் கொடுத்திட்டேன்..தீபா பிறந்த பிறகு காயத்ரியோட நகையை வைச்சு கடையை மாத்தி அமைச்சு ஸ்டெஷனரி சாமான் விற்க...
அத்தியாயம் - 32
குழந்தைகள் இருவரையும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு பத்து நிமிடத்தில் வீடு திரும்பினான் சிவா. அவசரத்தில் அவனுடைய சாவியை எடுத்துச் செல்லாததால், அழைப்புமணியை அழுத்தி விட்டு வாசலில் காத்திருந்தான். அந்த நேரத்தில் கௌரி குளித்துக் கொண்டிருந்ததால் வாசல் கதவைத் திறக்க அவளால் வர முடியவில்லை. இன்றைக்கு தாமதமாக வேலைக்கு வந்திருந்ததால்,...
அத்தியாயம் - 31_1
வினாக்களும், விளக்கங்களும் தேவையில்லை என்ற நிலையை இருவரும் அடைந்திருந்ததால் சிவாவிற்கும் கௌரிக்கும் இடையே வாக்குவாதங்கள் அதிகமாக எழவில்லை. பெற்றோர் ஆனபின், வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷங்கள், சஞ்சலங்களுக்கு குழந்தைங்கள் தான் காரணமாகிறார்கள். இங்கே இருவரும் கணவன், மனைவி ஆகும் முன் அம்மா, அப்பாவாக உணர்ந்து செயல்பட ஆரம்பித்ததால், எந்தப் பிரச்சனையானலும், எங்கே சுற்றினாலும்,...
அத்தியாயம் - 11_2
“ஆமாம்..இரண்டு முறை போனேன்..பூட்டி இருந்திச்சு..கார், ஸ்கூட்டி, இரண்டும் பார்க்கிங்லே இல்லை..சுப்ரமணி ஸர் வீட்டுக்குப் போய் விசாரிச்சேன்..அவங்க மனைவி சொன்னாங்க இந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு மேகலாவோட மக வீட்டுக்குப் பூனாக்கு போகப் போறாண்ணு.” என்று சொன்னவன் குரலில் ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டு கொண்டான் அவினாஷ்.
“ஆமாம்..இனி பூனா தான்..அந்த வீட்டை வாடகைக்கு...