Puthumanam : Marumanam
அத்தியாயம் - 38_2
அன்று மாலை சாவித்திரி அம்மா கொடுத்த டீ, டிஃபன் இரண்டையும் மறுத்து விட்டார் ஜமுனா. வெங்கடாசலம் எத்தனை முறை கெஞ்சியும் ஜமுனா மசியவில்லை. இரவு உணவை இரண்டு முறை சாப்பிடுபவருக்கு டிஃபனைத் தியாகம் செய்ய மனம் வரவில்லை. அதனால் அவருக்குக் கொடுத்த டீ, டிஃபன் இரண்டையும் மறுக்காமல் சாப்பிட்டார் வெங்கடாசலம். மதியம்...
அத்தியாயம் - 38_1
மறு நாள், திங்கட்கிழமை, சிவா தாமதமாக எழுந்து கொண்டான். எப்போதும் போல் எழுந்து கொண்ட கௌரி, சாவித்திரி அம்மா வருவதற்கு முன் அவள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தாள். அவர் வந்தவுடன், சிவா இன்னும் எழுந்திருக்காததால், குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கூடத்திற்குத் தயார் செய்தாள். பேருந்து நிறுத்ததில் விட அவளுக்கு நேரமில்லாததால்,...
அத்தியாயம் - 23
அந்தப் பெட்டியுடன் வீட்டினுள் சென்ற கௌரியைப் பின் தொடர்ந்தான் சிவா. பெருக்கித் துடைத்து சுத்தமாக இருந்தது வரவேற்பறை. வரவேற்பறையின் சுவரையொட்டி அந்தப் பெட்டியை வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கௌரி.
வெகு நாள்களுக்குப் பின் சிவாவுடன் இந்தத் தனிமைச் சந்திப்பு என்று எண்ணியபடி சமையலறைக்குள் சென்றவள், முகம், கழுத்து, அவள் உடுத்தியிருந்த குர்த்தி ஈரமாவதைப்...
அத்தியாயம் - 32
குழந்தைகள் இருவரையும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு பத்து நிமிடத்தில் வீடு திரும்பினான் சிவா. அவசரத்தில் அவனுடைய சாவியை எடுத்துச் செல்லாததால், அழைப்புமணியை அழுத்தி விட்டு வாசலில் காத்திருந்தான். அந்த நேரத்தில் கௌரி குளித்துக் கொண்டிருந்ததால் வாசல் கதவைத் திறக்க அவளால் வர முடியவில்லை. இன்றைக்கு தாமதமாக வேலைக்கு வந்திருந்ததால்,...
அத்தியாயம் - 37_2
“எனக்குச் சிவா தம்பி நிறைய உதவி செய்திருக்கு கௌரி..இப்போவும் மனோகரைக் கூட வைச்சுக்கிட்டு அவனுக்கு வழி காமிச்சுக்கிட்டு இருக்கு..சின்னவளை இரண்டு வயசுலேர்ந்து நான் தான் வளர்க்கறேன்…எனக்கு ஆயுசும், ஆரோக்கியமும் போட்டிருந்தா, இரண்டு பேருக்கும் நல்லது, கெட்டது தெரியறவரைக்கும் அவங்களுக்குத் துணையா இருக்கணும்னு நினைச்சுப்பேன்..அப்பப்போ உடம்பு பிரச்சனை செய்யும் போது இதுங்க இரண்டு...
அத்தியாயம் - 22
பல வருடங்களாக ஒரு பொருளை ஓர் இடத்தில் பார்த்துப் பழகிய கண்களுக்குத் திடீரென்று அதே இடத்தில் ஒரு புதுப் பொருளைப் பார்க்கும் போது ஆவல், ஆசை, பிரமை, பிடித்தமின்மை என்று பழைய பொருளுடன் இருந்த ஈடுபாட்டைப் பொறுத்து பலவிதமான உணர்ச்சிகள் எழும். திடீரென்று காயத்ரியின் இடத்தில் கௌரியைக் குழந்தைகள் ஏற்றுக் கொண்ட...
அத்தியாயம் - 19
மறு நாள் காலை எட்டரை மணி போல் அவள் வீட்டில் இருந்தாள் மாலினி. அவள் நேரில் வருகை புரிவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் சிதார்த்துடன் வீட்டுப் பக்கத்திலிருந்த பூங்காவிற்குச் சென்றிருந்தார் ராம கிருஷ்ணன். முந்தைய இரவு சிவாவை முதலில் கௌரியின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கேயிருந்து சிவா அவன்...
அத்தியாயம் - 28
ஆசை, விருப்பம். கனவுகளின் அஸ்திவாரம். நியாயமானதாக இருக்கும் வரை வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக மாற்றக்கூடியது. பேராசையாக, பெருவிருப்பமாக மாறும் போது வாழ்க்கையைச் சிதைக்கிறது. அதற்குக் காரணம் மனிதர்களா? சூழ் நிலைகளா? இல்லை இரண்டுமா?
சிவாவின் இரண்டாவது மனைவியான கௌரியை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொண்ட விஜி, திடீரென்று அவளுடைய வாழ்க்கையைக் கௌரியுடன் ஒப்பிட்டுப்...
அத்தியாயம் - 6
கௌரி லக்ஷ்மி, சிவசங்கர் இருவரும் கௌரி சங்கர், கௌரியின் சங்கரானதை உணரவில்லை.
இவங்க எதுக்கு இப்போ ஆஸ்பத்திரி வராங்க? அவினாஷ் அண்ணன் கேட்டா என்ன பதில் சொல்றது? கமெரா போட்டுக் கொடுக்கறத்துக்கு இவங்க வருவாங்களா இல்லை ஆள் அனுப்புவாங்களா? அது விஷயமா வீட்டுக்கு வந்தா என்ன செய்யறது? அண்ணனுக்கு இது தெரிய வந்தா...
அத்தியாயம் - 27_1
வரவேற்பறையில் படுத்திருந்த ஜமுனாவும் உறங்கவில்லை. புதுக் கடை, புது வீடு என்று புதுசாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் கௌரி எதற்காக இரண்டு குழந்தைகளின் தகப்பனான சிவாவை மணக்க வேண்டுமென்று யோசனையில் இறங்கினார்.
அதே சமயம் சமையலறையில் யோசனையில் இருந்த சாவித்திரி அம்மா ஒரு முடிவுடன் வரவேற்பறைக்கு வந்தார். அங்கே கண் மூடிப் படுத்திருந்த ஜமுனாவி...
புதுமணம் : மறுமணம்
அத்தியாயம் - 1
“வயிறு வலிக்குது.” என்றது வலியுடன் ஒரு குரல்.
“இப்படி உட்காரு..கொஞ்சம் முன்னாடி வா..” என்று இரண்டாவது குரல் கட்டளையிட,
“விழுந்திடுவேன்.” என்றது முதல் குரல்.
“என்னைப் பிடிச்சுக்கோ.” என்றது இரண்டாவது குரல்.
சிறிது மௌனத்துக்குப் பிறகு,
“போயிட்டேன்.” என்றது சிறிது நிம்மதியுடன் முதல் குரல்.
“தண்ணீர் ஊத்தறேன்.” என்றது இரண்டாவது குரல். சில நொடிகள் கழித்து,
“ஜட்டி ஈரமாயிடுச்சு.”...
அத்தியாயம் - 11_2
“ஆமாம்..இரண்டு முறை போனேன்..பூட்டி இருந்திச்சு..கார், ஸ்கூட்டி, இரண்டும் பார்க்கிங்லே இல்லை..சுப்ரமணி ஸர் வீட்டுக்குப் போய் விசாரிச்சேன்..அவங்க மனைவி சொன்னாங்க இந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு மேகலாவோட மக வீட்டுக்குப் பூனாக்கு போகப் போறாண்ணு.” என்று சொன்னவன் குரலில் ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டு கொண்டான் அவினாஷ்.
“ஆமாம்..இனி பூனா தான்..அந்த வீட்டை வாடகைக்கு...
அத்தியாயம் - 18_2
மேகலா, ராம கிருஷ்ணனின் வீடு தனி வீடு. வீட்டிற்கு முன்புறம் சுற்றுச் சுவரை ஒட்டி வரிசையாக தென்னை மரங்கள் இருந்தன. அதைத் தாண்டி போர்டிக்கோ, சின்ன வரண்டா. கேட்டின் முன்னே ஸ்கூட்டியை கௌரி நிறுத்தியவுடன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அவினாஷ். அதற்குள் ஸ்கூட்டியிலிருந்து இறங்கி அதை உள்ளே...
அத்தியாயம் - 25
கடல் அலைகள் கதிரவனோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த விடியற் காலை வேளையில், குழந்தைகள், பெரியவர்களின் சிரிப்பும் கூச்சலும் அலையோசையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தது. அத்தனை ஆரவாரத்திற்கு நடுவில், மேகலாவின் மடியில், அமைதியாகக் தூங்கிக் கொண்டிருந்தாள் அனன்யா.
அவர்கள் அனைவரும் கடற்கரைக்கு வந்து ஒரு மணி நேரமாகியிருந்தது. உறக்கம் கலையாமல் தூங்கிக் கொண்டிருந்த சின்ன குழந்தைகளை...
அத்தியாயம் - 24
நாள்தோறும் உதிக்கும் சூரியனை வைத்துப் பொழுதுகளை, வேளைகளைத் தேதிகளாகப் பிரித்து, இயற்கையின் செயல்பாட்டை நொடிதோறும் உணர்த்தும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை மாதம், நாள், கிழமை, நட்சத்திரம், திதி என்று வரிசைப்படுத்தி நம் நினைவு அடுக்குகளில் பதித்துக் கொள்கிறோம். அந்த நினைவுகளில் ஏதாவது ஒன்று தவறாகிப் போனால், பிறந்த நாளன்று பரிசிற்காகக் காத்திருந்து...
அத்தியாயம் - 14
“மகேஷ் உங்க தம்பியா? கடைலே உங்க அப்பாவும் தம்பியும் பணம் போட்டிருக்காங்களா?” என்று அவள் ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு விவரங்கள் அறியமுற்பட்டாள் கௌரி.
“ஆமாம்.. என்னோட தம்பி..ஆரம்பித்தலே அப்பா கொஞ்சம் பணம் கொடுத்தார்..அதை அப்போவே திருப்பிக் கொடுத்திட்டேன்..தீபா பிறந்த பிறகு காயத்ரியோட நகையை வைச்சு கடையை மாத்தி அமைச்சு ஸ்டெஷனரி சாமான் விற்க...
அத்தியாயம் - 18_1
அவள் வீட்டிலிருந்து அனைவரும் சென்ற பின் ஏனோ கௌரியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அதை நிலைப்படுத்தும் முயற்சியில் அத்தனை வீட்டு வேலகளையும் பரபரவென செய்து முடித்தாள். ஆனால் அவள் மனதின் அலைபுறதல் நிறக்கவில்லை. நம்பிக்கையில்லையா என்று கேட்ட சிவாவினாலா? இல்லை விவரம் கேட்டுக் கொள்ளாத மாலினியாலா? இல்லை அழுதுக் கொண்டே...
அத்தியாயம் - 31_1
வினாக்களும், விளக்கங்களும் தேவையில்லை என்ற நிலையை இருவரும் அடைந்திருந்ததால் சிவாவிற்கும் கௌரிக்கும் இடையே வாக்குவாதங்கள் அதிகமாக எழவில்லை. பெற்றோர் ஆனபின், வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷங்கள், சஞ்சலங்களுக்கு குழந்தைங்கள் தான் காரணமாகிறார்கள். இங்கே இருவரும் கணவன், மனைவி ஆகும் முன் அம்மா, அப்பாவாக உணர்ந்து செயல்பட ஆரம்பித்ததால், எந்தப் பிரச்சனையானலும், எங்கே சுற்றினாலும்,...
அத்தியாயம் - 13
அன்று இரவும் சிவசங்கருக்குத் தூங்கா இரவாகிப் போனது. எப்படி அத்தனை பணத்திற்கு ஏற்பாடு செய்யப் போகிறோம்? யாரிடம் கேட்பது என்ற கவலையில் விடிந்த பின்னும் விழித்திருந்தான். அந்த எண்ணமே அவனுக்கு மனச் சோர்வை ஏற்படுத்த சாவித்திரியம்மாவிற்காக வாசல் கதவைத் திறந்து விட்டு வந்தவன் மறுபடியும் படுக்கையறையில் முடங்கிக் கொண்டான்.
குழந்தைகள் இருவரையும் எழுப்பி...
அத்தியாயம் - 26_2
முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ஜமுனாவும் அவர் திட்டத்தைச் செயல்படுத்தினார். அதன் விளைவாக ஜமுனா, சாவித்திரி அம்மா இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பும் பகையும் அதிகமானது. கடைசி பந்தியில் மனோகரும் சாவித்திரி அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த பொருள்களைச் சேகரித்து, அந்த இடத்தை முடிந்த அளவு சுத்தப்படுத்திக்...