Kanavu Kai Sernthathu
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 02
'காக்க காக்க கனகவேல் காக்க...
நோக்க நோக்க நொடியினில் நோக்க...
தாக்க தாக்க தடையற தாக்க...'
அந்த 'சாம்சங்' கைபேசியின் வழியே தங்களின் தெய்வீகக்குரலில் 'எம்பெருமானே! உன்னை நம்பும் எல்லா உயிர்களையும் எல்லா இடர்களிலிருந்தும் காத்தருள வேண்டும்' என்று சஷ்டி கவசம் மூலம் உருகி கொண்டிருந்தார்கள் சூலமங்கலம் சகோதரிகள்.
"பவி! பவிம்மா...எழுந்திருடா..." இந்த குரலுக்கு சொந்தக்காரி 'பவானி.'...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 21 (இறுதி அத்தியாயம்)
கணவனை இன்று சாயங்காலம் சந்திக்கலாம் என்ற எண்ணம் தந்த உற்சாகத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பவானியின் மனதில்,
'இனி நந்தினிக்கு திருமணத்திற்கு வரன் பார்க்க வேண்டும் என்று பேச்சுவாக்கில் கோதை நாயகி சொன்னது ஞாபகம் வரவே, இன்று அதைப் பற்றியும் கணவனிடம் பேச வேண்டும்' என்ற எண்ணம் ஓடியது.
நந்தினியின்...
'மூன்று வருடங்களாக உனக்காக காத்திருக்கிறேன்' என்ற அவனின் வார்த்தையில் சரணடைந்தது அந்த பெண்மை.
கண்டிப்பாக தான் ஒருபதிலைச் சொல்லாவிட்டால் அவன் மனம் சமாதானம் அடையாது எனப் புரிந்து கொண்டவள்,
தயங்கியபடியே,"எனக்கு... எனக்கு... நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா பவித்ராவோட நிலை என்னன்னு ஒரே குழப்பமா இருந்தது. அதனாலத் தான் நான் கல்யாணமே வேணாம்னு ஃபிரெண்ட் ஊருக்கு போய்ட்டேன்." தவறை...
அதன் பிறகு நாளை ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதால் ஊட்டியின் ஸ்பெஷல் ஹோம் மேட் சாக்லேட்ஸ், டீ , வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்குத் தகுந்தார் போல பொருட்கள் என வாங்கி முடித்தவர்கள், இரவுணவையும் முடித்துவிட்டே காட்டேஜ் திரும்பியிருந்தார்கள்.
இருவரும் உடல்கழுவி படுக்கைக்கு வர ஆசையோடு தன்னவள் முகம் பார்த்தவனுக்கு அந்த பால்வண்ண முகத்தில் மூக்குத்தி...
நெருங்கிய சொந்தங்களும், உயிர் நட்புகளும் புடைசூழ, குறித்த மங்கல நேரத்தில் தன் உயிரானவளை அம்மன் சன்னிதானத்தில் வைத்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக மங்கல நாண் அணிவித்து தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் பரணிதரன்.
பின் சன்னிதானத்தை வலம்வந்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அந்த தாமரைப்பாதங்களில் மெட்டியும் அணிவித்தான் பரணி.
மெட்டி அணிவிக்கும் சம்பிரதாயத்தின் போது அவன்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 05
அன்றோடு பெண்கள் இருவரும் இரவிபுரத்துக்கு வந்து சேர்ந்து இருபது நாட்கள் ஆகியிருந்தது. மாப்பிள்ளையின் அவசரத்திற்கு ஏற்றாற்போல் மணநாள் அமையாததால் நாளை தான் திருமணம்.
பரணிதரனின் குடும்ப கோயிலில் வைத்து திருமணம் அதன் பிறகு வீட்டில் வைத்து விருந்துபசாரம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து தங்களுக்கென கொடுக்கப்பட்டிருந்த அறையிலிருந்து...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 03
தன் பூங்கரங்களால் தன்னவள் தன்னை தள்ளிவிட்டுச் சென்ற பின்னும் குறையாத மந்தகாசப் புன்னகையோடே நின்றிருந்தான் பரணிதரன்.
அவன் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த போது தான் பவானியின் குடும்பம் இங்கு குடிவந்தது. அவளை முதன்முதலாக பார்க்கும் போதே ' மெழுகு பொம்மை மாதிரி என்ன ஒரு அழகு!' என்று நினைத்திருக்கிறான் தான்.
'வெள்ளாவியில் வச்சித்தான்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 07.
"மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்..." மெல்லிய குரலில் பாடலை ஹம் செய்தபடியே புன்னகை முகமாக மனைவியின் கைகளோடு தன் கைகளைக் கோர்த்தபடி ஊட்டி ரோஸ் கார்டனில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான் பரணிதரன்.
"ஹையோ! பெரிய மன்மதன்னு நினைப்புத்தான்" அவன் பாடியதைக் கேட்டு அழகாக நொடித்துக்கொண்டாள் பவானி.
"இல்லையா பின்ன..." கண்ணடித்தபடிக் கேட்டவனின்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 04
'பூ மாலையேத் தோள்சேரவா...
பூ மாலையேத் தோள்சேரவா...'
என்று அந்த அழைப்பு மணி அழகாகப் பாடி வீட்டினுள் இருந்த நபரை அழைத்தது....
'முதல்ல இந்த காலிங் பெல்லை மாத்தணும். நேரத்துக்கு ஒரு சினிமாப் பாட்டைப் பாடி மானத்தை வாங்குது' என்று மனதிற்குள் சலித்தவாரே வந்து கதவைத் திறந்தாள் பவானி.
கதவைத் திறந்தவள் சத்தியமாக அவள் முன்னால் நின்றவனை...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 06.
வழக்கம் போல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள் பவானி. பழக்கம் இல்லாத ஏசியின் சில்லிப்பு உடல்துளைக்க கணவனோடு ஒன்றச்சொன்ன மனதை தட்டி அடக்கிய படி எழும்ப எத்தனிக்க
அவள் மீது உரிமையாகக் கிடந்த கணவனின் கரங்கள் மனைவி யின் உடலில் லேசாக அழுத்தம் கொடுத்து எழும்ப விடாமல் செய்தது.
கணவனின் செயலில் நேற்றிரவு நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு...
"ஏம்மா பவி! அவன் புத்தகம் உனக்கு எதுக்கு? அப்படியே தேவைன்னாலும் அவன்கிட்ட கேட்டுகிட்டு எடுத்துருக்கலாம்ல?" என்று பவித்ராவிடம் கோதை ஏதும் புரியாதவராய் விசாரிக்க
"இல்ல அத்தம்மா... குமரன் அன்னைக்கு அல்டரை எம்மேல ஏவி விட்டு என்னைத் துரத்த வச்சாங்கல்ல...நான் கூட அத்தம்மான்னு கத்துனேன்... நீங்க கூட ஓடிவந்து குமரனுக்கு பளார்னு ஒரு அறைவச்சீங்களே..."
இதோ இரண்டு மாதத்திற்கு...
"ஹேய்...கூல்...பவானி! எதுக்கு இப்போ பதறுற? சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மா... இதுக்கு போய் இப்படி பதறுற?" என்று கணவன் அவளை அமைதிப்படுத்த
"எதுல விளையாடுறதுன்னு இல்லையாங்க? அத்த என்னல்ல தப்பா எடுத்துப்பாங்க" என்றாள் சின்னதாகிப்போன குரலில்...
ஒரு ஏழு மணி வாக்கில் இரவு சமையலுக்கு கோதை நாயகி வேலைகளை ஆரம்பிக்க, ஹாலில் நந்தினியுடன் உட்கார்ந்து அவ்வப்போது ஏதோ...
"ஐயோ! அக்கா... இந்த அமுக்கிணி எங்கிட்ட ஒன்னுகூட சொல்லலைக்கா... நான் அசந்த நேரம் பாத்து எனக்குத் தெரியாமல் எல்லாம் செய்துருக்கு க்கா..." என்றாள் நந்தினி வேகவேகமாக.
"எனக்கென்னவோ நம்ப முடியலடியம்மா! நீயும் கூட்டுக்களவாணி தானோன்னு எனக்கு சந்தேகமா... இருக்கு!" என்ற திவ்யாவின் வார்த்தையில் நந்தினி பதற பவித்ராவோ அழகாகச் சிரித்தாள்.
"எரும...எரும...செய்யுறதையும் செய்துட்டு என்னையும் கோர்த்து விட்டுட்டு...
"நீ நாளைக்கு வர்றதா தானே ஃபோன் பண்ணும் போது சொன்ன ண்ணா?"
"உங்களுக்கெல்லாம் சின்னதா ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான் முன்னாடியே வந்துட்டேன் டா" தன் தங்கையின் கேள்விக்கு ஓரக்கண்ணால் பவித்ராவை பார்த்தபடியே பதில் கூறியவன் அண்ணன் மகளுக்காக கையை நீட்டினான்,
பின் ஞாபகம் வந்தவன் போல்,"இல்லடா... சித்தப்பா அல்டரை தொட்டுட்டேன். சோ குளிச்சிட்டே உன்னை தூங்குறேன்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 08.
ஊட்டியிலிருந்து திரும்பி வந்திருந்த பவானியும், பரணிதரனும் அப்போது தான் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். நேரம் மாலை ஐந்து மணி.
தங்களது பயணப்பைகளை ஹாலில் வைத்து நிமிர்ந்தவர்களின் கண்கள், அங்கு நின்ற கோதை நாயகி, திவ்யாவின் முகங்கள் காட்டிய அளவுக்கதிகமான மலர்ச்சியை குறித்துக்கொள்ளத் தவறவில்லை.
வீட்டினுள் நுழையும் போதே பவானியின் உள்ளுணர்வு ஏதோ உணர்த்த ஹாலில்...
"இல்லை..." என்னும் விதமாக தலையாடியது பெண்ணுக்கு.
இப்போது தான் குமரனுக்கும் ஏதோ உறைக்க லேசாக முகத்தை உற்றுப்பார்க்க அது நந்தினி இல்லை நந்தினியின் சுடிதாரைப் போட்டுகொண்டு உட்கார்ந்திருந்த பவித்ரா என்று தெரிய ஏதோ தேள் கொட்டியவன் போல அவசரமாக கையை விலக்க பவித்ராவின் கைகளில் ஸ்கூட்டி நாட்டியமாடத் தொடங்கியது.
சட்டென்று வண்டியின் கட்டுப்பாட்டை தன்கைகளில் எடுத்தவன் அதை...
"சீக்கிரம் இறங்குனாத் தான் என்னவாம்?" என்று முணுமுணுத்தபடியே தோழியை ஒரு முறைமுறைத்தபடி முக்காலியில் ஏறியவளுக்கு கூட்டின் உள்பக்கம் தெளிவாக தெரியவில்லை. ஆதலால் முட்டையும் தெரியவில்லை.
காரணம் வேறொன்றுமில்லை... பவித்ரா நந்தினியை விட கொஞ்சம் வளர்த்தி கம்மி. நந்தினியே கொஞ்சம் உற்றுத் தான் பார்த்திருந்தாளென்றால் இவளுக்கு எப்படி தெரியும்?
"தெரியமாட்டேங்குது டி" என்று பவித்ரா கிசுகிசுக்க
"என்னமோ என்னை சீக்கிரம்...
டேபிளில் ஓங்கி குத்தியவாறே எழுந்தே விட்டான் குமரன். ஆனால் அவன் தோழிகள் எந்த அசம்பாவிதமும் நடக்கவிடாமல் தங்களது நண்பனை இழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். அவர்களுக்கு பின்னாடியே நந்தினியும் பவித்ராவும் சந்தோஷை அழைத்து கொண்டு வெளியே வந்தனர்
"துஷ்டனைக் கண்டால் தூரவிலகுன்னு சொல்லியிருக்காங்களா இல்லையா குமரா! அதிலும் இவன் நம்மகிட்ட வம்பு வளக்கணும்னே வர்றான்னு...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 18.
குமரனின் எம் ஏ பொலிடிக்கல் சயின்ஸ் படிப்பு முடிவடையப்போகும் காலகட்டத்தில் இது என்ன வேண்டாத பிரச்சினை என்று வீட்டின் பெரியவர்கள் கலங்கிப்போய் இருக்க குமரன் கல்லூரியில் நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான்.
இப்போது படிக்கும் கல்லூரியிலேயேத் தான் குமரன் தன் பிஏ பொலிடிக்கல் சயின்ஸ்ஸையும் முடித்திருந்தான்.
ஒழுக்கமும் பணிவும் நிறைந்த புத்திசாலியான குமரனை பேராசிரியர்கள் அனைவருக்குமே...
வாகனம் வாங்கவேண்டும் என்று ஏற்கனவே மனைவியிடம் சொல்லியிருந்தான் தான். ஆனால் நேற்று நடந்த களேபரத்தில் இன்று வண்டி வருகிறது என்று அவனால் மனைவியிடம் சொல்லமுடியவில்லை.
தன்னருகே வந்து நின்ற மனைவியைப் பார்த்தான் நேற்றைவிட கொஞ்சம் முகம் தெளிந்தார் போல் தான் இருந்தது.
ஆனால் எல்லாரும் இருக்கும் போது தன்னிடம் காட்டும் இந்த நெருக்கம் அவனுக்கு புதிது. எப்போதுமே...