Kanavu Kai Sernthathu
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 02
'காக்க காக்க கனகவேல் காக்க...
நோக்க நோக்க நொடியினில் நோக்க...
தாக்க தாக்க தடையற தாக்க...'
அந்த 'சாம்சங்' கைபேசியின் வழியே தங்களின் தெய்வீகக்குரலில் 'எம்பெருமானே! உன்னை நம்பும் எல்லா உயிர்களையும் எல்லா இடர்களிலிருந்தும் காத்தருள வேண்டும்' என்று சஷ்டி கவசம் மூலம் உருகி கொண்டிருந்தார்கள் சூலமங்கலம் சகோதரிகள்.
"பவி! பவிம்மா...எழுந்திருடா..." இந்த குரலுக்கு சொந்தக்காரி 'பவானி.'...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 07.
"மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்..." மெல்லிய குரலில் பாடலை ஹம் செய்தபடியே புன்னகை முகமாக மனைவியின் கைகளோடு தன் கைகளைக் கோர்த்தபடி ஊட்டி ரோஸ் கார்டனில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான் பரணிதரன்.
"ஹையோ! பெரிய மன்மதன்னு நினைப்புத்தான்" அவன் பாடியதைக் கேட்டு அழகாக நொடித்துக்கொண்டாள் பவானி.
"இல்லையா பின்ன..." கண்ணடித்தபடிக் கேட்டவனின்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 14.
மறுநாள் காலை வழக்கம் போல நந்தினி பள்ளிக்கு கிளம்பி நின்றாள். அதைக் கண்ட கோதை நாயகிக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மகள் பள்ளிக்கு இனி செல்லப் போவதில்லை என்று சொன்ன போது அதிர்ந்து தான் போனார். ஆனால் அவளை கண்டிப்பதற்கான சூழ்நிலை அப்போது இல்லாத காரணத்தினால் அமைதியாக இருந்தார்.
ஆனால் தன் மகனோ...
"இல்லை..." என்னும் விதமாக தலையாடியது பெண்ணுக்கு.
இப்போது தான் குமரனுக்கும் ஏதோ உறைக்க லேசாக முகத்தை உற்றுப்பார்க்க அது நந்தினி இல்லை நந்தினியின் சுடிதாரைப் போட்டுகொண்டு உட்கார்ந்திருந்த பவித்ரா என்று தெரிய ஏதோ தேள் கொட்டியவன் போல அவசரமாக கையை விலக்க பவித்ராவின் கைகளில் ஸ்கூட்டி நாட்டியமாடத் தொடங்கியது.
சட்டென்று வண்டியின் கட்டுப்பாட்டை தன்கைகளில் எடுத்தவன் அதை...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 09.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆதலால் எந்த பரபரப்புமின்றி மெதுவாக கண்விழித்தாள் பவானி. இரண்டு மாதகால திருமண வாழ்வில் முகம் பூரித்துப் போய்க் கிடந்தது.
தலையைத் திருப்பி பக்கத்தில் பார்க்க, அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் கணவன்.
நேற்று ஈரோடு எஸ்பி யாக இடமாறுதலாகி வந்திருக்கும் தன் நண்பன் சந்தீப் ஐ சந்தித்து விட்டு பரணிதரன் வரும்போதே இரவு...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 17.
பரணிதரன் வேலையை விட்டு விடுவதாகச் சொல்ல மதியழகனோடு சேர்ந்து எல்லாருமே அதிர்ச்சியாகத் தான் பார்த்தார்கள் பரணிதரனை.
மதியழகனோ மருமகளைப் பார்க்க, அவளின் முகபாவம் கணவனின் முடிவு ஏற்கனவே அவளுக்குத் தெரியும் என்று சொன்னது.
"என்னப்பா திடீருன்னு இப்படி ஒரு முடிவு?" மதியழகன் தான் கேட்டிருந்தார்.
"திடீர்னு இல்லப்பா...கொஞ்சநாளாவே எம்மனசுல இந்த எண்ணம் ஓடிட்டு தான் இருக்கு"...
நெருங்கிய சொந்தங்களும், உயிர் நட்புகளும் புடைசூழ, குறித்த மங்கல நேரத்தில் தன் உயிரானவளை அம்மன் சன்னிதானத்தில் வைத்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக மங்கல நாண் அணிவித்து தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் பரணிதரன்.
பின் சன்னிதானத்தை வலம்வந்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அந்த தாமரைப்பாதங்களில் மெட்டியும் அணிவித்தான் பரணி.
மெட்டி அணிவிக்கும் சம்பிரதாயத்தின் போது அவன்...
லாவகமாக வண்டியைச் சாலையில் செலுத்திக் கொண்டிருந்த பரணிதரன் திடீரென்று
"பவானி! என் கொள்கைகளைப் பார்த்தா உனக்கு எரிச்சலா இருக்குதா?" தன்மீது பட்டும் படாமலும் பின்னால் உட்கார்ந்து இருந்தவளிடம் கேட்டான் பரணிதரன்.
"ம்ஹும்... இந்த நல்ல மனுஷன் எனக்கே எனக்கானவர்னு ரொம்ப பெருமையாக இருக்கு" கணவனின் நேர்மையில் பெண் திளைத்திருந்தது அந்த குரலில் தெரிந்தது.
"தேங்ஸ் மா...என்னை புரிஞ்சுகிட்டதுக்கு" வாழ்க்கையில்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 11.
"சிட்அவுட்ல சிட்டுக் குருவி கூடு கட்டியிருக்கு பார்த்தியா கோத..."
பால் விற்பனை முடிந்து ஒரு பத்து மணிக்கு போல் வந்த மதியழகன், வீட்டுக்கு முன்பக்கத்தில் நின்ற மரங்களிலிருந்து விழுந்து கிடந்த இலைச்சருகுகளை பெருக்கிக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து கேட்டார்.
"ம்ம்...பார்த்தேன் ங்க...இப்ப இரண்டுமூனு நாளைக்கு முன்னாடி பாக்கும் போது கூட இல்லீங்களே! அதற்கிடையில்...
டேபிளில் ஓங்கி குத்தியவாறே எழுந்தே விட்டான் குமரன். ஆனால் அவன் தோழிகள் எந்த அசம்பாவிதமும் நடக்கவிடாமல் தங்களது நண்பனை இழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். அவர்களுக்கு பின்னாடியே நந்தினியும் பவித்ராவும் சந்தோஷை அழைத்து கொண்டு வெளியே வந்தனர்
"துஷ்டனைக் கண்டால் தூரவிலகுன்னு சொல்லியிருக்காங்களா இல்லையா குமரா! அதிலும் இவன் நம்மகிட்ட வம்பு வளக்கணும்னே வர்றான்னு...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 01
கோபிச்செட்டிப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமான அந்த பெரிய மைதானம் காலை ஒன்பது மணிக்கே பரபரப்பாக இருந்தது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வந்த மக்களின் கூட்டம் ஒருபக்கம், தங்களின் புது வாகனங்களை பதிவு செய்து பதிவு இலக்க எண்களை பெற்றுவிட வேண்டி முகத்தில் மலர்ச்சியோடு தங்களின்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 06.
வழக்கம் போல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள் பவானி. பழக்கம் இல்லாத ஏசியின் சில்லிப்பு உடல்துளைக்க கணவனோடு ஒன்றச்சொன்ன மனதை தட்டி அடக்கிய படி எழும்ப எத்தனிக்க
அவள் மீது உரிமையாகக் கிடந்த கணவனின் கரங்கள் மனைவி யின் உடலில் லேசாக அழுத்தம் கொடுத்து எழும்ப விடாமல் செய்தது.
கணவனின் செயலில் நேற்றிரவு நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு...
அதன் பிறகு நாளை ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதால் ஊட்டியின் ஸ்பெஷல் ஹோம் மேட் சாக்லேட்ஸ், டீ , வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்குத் தகுந்தார் போல பொருட்கள் என வாங்கி முடித்தவர்கள், இரவுணவையும் முடித்துவிட்டே காட்டேஜ் திரும்பியிருந்தார்கள்.
இருவரும் உடல்கழுவி படுக்கைக்கு வர ஆசையோடு தன்னவள் முகம் பார்த்தவனுக்கு அந்த பால்வண்ண முகத்தில் மூக்குத்தி...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 04
'பூ மாலையேத் தோள்சேரவா...
பூ மாலையேத் தோள்சேரவா...'
என்று அந்த அழைப்பு மணி அழகாகப் பாடி வீட்டினுள் இருந்த நபரை அழைத்தது....
'முதல்ல இந்த காலிங் பெல்லை மாத்தணும். நேரத்துக்கு ஒரு சினிமாப் பாட்டைப் பாடி மானத்தை வாங்குது' என்று மனதிற்குள் சலித்தவாரே வந்து கதவைத் திறந்தாள் பவானி.
கதவைத் திறந்தவள் சத்தியமாக அவள் முன்னால் நின்றவனை...
"சீக்கிரம் இறங்குனாத் தான் என்னவாம்?" என்று முணுமுணுத்தபடியே தோழியை ஒரு முறைமுறைத்தபடி முக்காலியில் ஏறியவளுக்கு கூட்டின் உள்பக்கம் தெளிவாக தெரியவில்லை. ஆதலால் முட்டையும் தெரியவில்லை.
காரணம் வேறொன்றுமில்லை... பவித்ரா நந்தினியை விட கொஞ்சம் வளர்த்தி கம்மி. நந்தினியே கொஞ்சம் உற்றுத் தான் பார்த்திருந்தாளென்றால் இவளுக்கு எப்படி தெரியும்?
"தெரியமாட்டேங்குது டி" என்று பவித்ரா கிசுகிசுக்க
"என்னமோ என்னை சீக்கிரம்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 03
தன் பூங்கரங்களால் தன்னவள் தன்னை தள்ளிவிட்டுச் சென்ற பின்னும் குறையாத மந்தகாசப் புன்னகையோடே நின்றிருந்தான் பரணிதரன்.
அவன் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த போது தான் பவானியின் குடும்பம் இங்கு குடிவந்தது. அவளை முதன்முதலாக பார்க்கும் போதே ' மெழுகு பொம்மை மாதிரி என்ன ஒரு அழகு!' என்று நினைத்திருக்கிறான் தான்.
'வெள்ளாவியில் வச்சித்தான்...
இப்போது வாசித்தல் அவளுக்கு சுவாசித்தல் போலாக,
இதோ சிவகாமியின் சபதம் நான்காவது பாகம் வாசித்து கொண்டிருக்கிறாள். அதையும் தனது பேறுகாலத்திற்கு முன்னால் வாசித்து முடித்துவிட வேண்டும் என்று ஆண்டு இறுதி தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் வீட்டின் இளையவர்களுடன் தானும் போட்டி போட்டு கொண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் பவானி.
ஓடும் தண்ணீரில் எப்படி பாசிபிடிக்க முடியாதோ, அதேப்போல பவானியின் உலகம்...
'மூன்று வருடங்களாக உனக்காக காத்திருக்கிறேன்' என்ற அவனின் வார்த்தையில் சரணடைந்தது அந்த பெண்மை.
கண்டிப்பாக தான் ஒருபதிலைச் சொல்லாவிட்டால் அவன் மனம் சமாதானம் அடையாது எனப் புரிந்து கொண்டவள்,
தயங்கியபடியே,"எனக்கு... எனக்கு... நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா பவித்ராவோட நிலை என்னன்னு ஒரே குழப்பமா இருந்தது. அதனாலத் தான் நான் கல்யாணமே வேணாம்னு ஃபிரெண்ட் ஊருக்கு போய்ட்டேன்." தவறை...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 05
அன்றோடு பெண்கள் இருவரும் இரவிபுரத்துக்கு வந்து சேர்ந்து இருபது நாட்கள் ஆகியிருந்தது. மாப்பிள்ளையின் அவசரத்திற்கு ஏற்றாற்போல் மணநாள் அமையாததால் நாளை தான் திருமணம்.
பரணிதரனின் குடும்ப கோயிலில் வைத்து திருமணம் அதன் பிறகு வீட்டில் வைத்து விருந்துபசாரம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து தங்களுக்கென கொடுக்கப்பட்டிருந்த அறையிலிருந்து...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 20 ( Pre final )
அந்த ஆழிமுத்தையே தன் கைகளில் அள்ளிக்கொண்டு வந்த பாவனையில் பவித்ராவை சுமந்து வந்தான் குமரன்.
அவன் கைகளில் அவளை கண்டபின்பு தான் கரையில் நின்றிருந்தவர்களின் மூச்சே நேரானது.
யார் செய்த புண்ணியமோ ஓங்கி அடித்த அந்த பெரிய அலையை தொடர்ந்து வந்த மற்றொரு பெரிய அலை உள்ளே இழுக்கப்பட்ட...