Nenjora Nilavae
நிலவு – 23 (1)
இரவு உணவிற்கு சரியாக எஸ்டேட் வந்து சேர்ந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு வெண்மதி கண்ணை மூடியது மட்டும் தெரியும். எப்பொழுது மாலை ஆனது என்று கூட தெரியாமல் நன்றாய் உறங்கிவிட்டாள்.
மாலை ஒரு இடத்தில் டீ குடிப்பதற்காக காரை நிறுத்தவும் தான் கண் விழிக்கவே செய்தாள். தலை வலி மண்டையை...
நிலவு – 22
திடீரென அப்படி சொல்லவும் யோசனையுடன் பார்த்தவள் அவனை முறைக்க,
“பேசவுமா கூடாது?...” என கள்ளப்புன்னகையுடன் கண்களை சிமிட்டி கேட்க சட்டென வெட்கம் பொங்க தலை கவிழ்ந்தவள்,
“ஹ்ம்ம் பேசலாமே. அதுக்கு முன்ன இந்த வாங்க போங்க வெண்ணிலா இதெல்லாம் விடுங்க...” என்றவளை இழுத்து தன் கால்களுக்குள் நிறுத்தி நகரவிடாது அணை போட்டவன் அவளின்...
“போலாம் முரளி. கண்டிப்பா...” என ஆனந்தனை பார்க்க அவரும் தலையசைத்தார். பேசிக்கொண்டே சாப்பிட முரளியின் செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தவனின் முகம் யோசனையில் சுருங்க,
“யாருன்னு பேசு முரளி...” ஆனந்தன் சொல்ல,
“விபீஷ்...” என்றான் மகன்.
“வேண்டாம்ப்பா. விட்டுடு. நிச்சயம் நின்னுபோனதை சொல்லி கிண்டல் பேசுவான்...” சுகன்யா சொல்ல,
“பயப்பட சொல்றீங்களாம்மா?...” என்றவன் அட்டன் செய்துவிட,
“எப்படி இருக்க முரளி? உனக்கு...
நிலவு – 21
“அவ தூங்கட்டும் கலை. யாரும் டிஸ்டர்ப் செய்யவேண்டாம். நாம அடுத்த ரூம்ல இருப்போம்...” என நடேசன் சொல்லவும் கலைவாணியின் மனமோ மகளைவிடு நகர்வேனா என்றது.
இந்த உண்மை தெரிந்ததில் இருந்து அவளின் முகமே மாறி இருக்க எப்படியாவது தங்களை புரியவைத்துவிடும் நோக்கில் பேச நினைத்துக்கொண்டிருக்க நடேசன் கிளம்ப சொல்லியதும் தவிப்புடன் வெண்மதியை பார்த்தார்.
அவள்...
“யாரு இவங்களா வாழ்த்துவாங்க? இந்நேரம் எப்படிடா இதுன்னு குமைஞ்சிட்டு இருப்பானுங்க. நல்ல மனசுன்னு ஒன்னு இருந்தா இத்தனை நல நம்மளை போட்டு அரையா அரைச்சிருப்பாங்களா? இல்ல நமக்கு ஆறுதலா பேசியிருப்பாங்களா? யார்க்கிட்ட எதை எதிர்பார்க்கனுமோ அதை தான் எதிர்பார்க்கனும். மனசார வாழ்த்த மனசுன்னு ஒன்னு வேணும்...”
ஆனந்தன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர் எந்தளவிற்கு காயப்பட்டிருக்கிறார்...
நிலவு – 20
அவனை கண்டு புன்னகைத்தவள் மனதில் இதமான சாரல். சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்வையால் உரசியபடி நிற்க வேன்மதிதான் இவன் ஆரம்பிக்க மாட்டான் என பேச்சை துவங்கினாள்.
“பேசனும், புரியனும்னு வந்தீங்க? இப்போ இவ்வளோ சைலன்ட்? ஆளுங்க இருந்தா தான் பேச்சு வருமோ?...” என கிண்டலாய் அவள் பேச இன்னுமொரு அழகான புன்னகை...
“எனக்கு ஓகேப்பா. நீங்க வர சொல்லுங்க. நேர்ல பார்த்து முடிவெடுக்கலாம்...” என்று சம்மதம் சொல்லிவிட்டாள்.
அவளுக்கு முரளியையும், சுகன்யாவையும் பார்த்த ஞாபகம் சுத்தமாக இல்லை. கலைவாணிக்கு கூட எங்கோ பார்த்த நினைவு தான். சரியாக ஞாபகம் வரவில்லை.
எந்தவித பாசாங்கும் இன்றி பட்டென தன் மனதில் பட்டதை சொல்லிவிட்டு ஈஸ்வரியிடம் பென்ட்ரைவ் நீட்ட அதை வாங்கிக்கொண்டவள் நடேசனிடம்...
நிலவு – 19
“முரளி நான் அப்பாக்கிட்ட பேச முடியாது. நீ தான் சொல்லனும்...” சுகன்யா அவனை கணவனின் முன் நிறுத்த முரளி அவரை என்ன இது என்பதை போல பார்த்தான்.
“இத்தனை நாள் நாங்க கெஞ்சினோம். நீ கேட்டியா?...”
“என்ன ரிவெஞ்சா?...”
“அப்படியும் சொல்லலாம். அப்படி இல்லைன்னும் சொல்லலாம்...” சுகன்யா சிரிக்க,
“ம்மா...”
“உனக்கு தெரியுமே முரளி. வெண்மதி போட்டோவை பார்த்து...
நிலவு – 18
ஒரு மாதம் கடந்திருந்தது முரளியின் திருமணம் நின்று. கேட்பவர்களிடம் பதில் சொல்லி மாளவில்லை.
அதை விட கொடுமையிலும் கொடுமை முரளியின் உடல் நிலை பற்றி பொதுவெளியில் கடை பரப்பப்பட்டது. ஆளாளுக்கு செல்லுமிடமெல்லாம் விவாதித்தனர். அனுதாபமாக விசாரிக்கவும் செய்தனர்.
முரளிக்கு முதலில் சலிப்பாக இருந்தாலும் ஒருகட்டத்தில் அதனை கடக்க பழகி இருந்தான். ஆனால் சுகன்யாவும், ஆனந்தனும்...
நிலவு – 17
படிப்பு முடிந்து ஒருவருடம் கடந்திருந்தது. கட்டிடத்துறையில் முதுகலைப் பட்டம் திறம்பட முடித்திருந்தவனின் திறமைகளும் கனவுகளும் வெறும் கனவாகவே போய்விடுமோ என்னும் அளவில் தான் இருந்தது அவன் சந்தித்த சவால்கள்.
ஆம், அவனுக்கு அவையெல்லாம் பெரும் சவால்களே. பணமிருப்பவர்களுக்கு மட்டுமே பட்டுக்கம்பளம் விரிக்கும் இந்த உலகம் சாதிக்கத்துடிக்கும் இவனை போன்றோரை மனம்விட்டு போகவே...
நிலவு – 16
வெண்மதியின் இந்த அழுகையை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. அதிலும் சத்தம் கூட எங்கே வெளியில் இருப்பவர்கள் வந்துவிடுவார்களோ என பயந்துபோனவன் அவளை தன்ன அணைப்பினுள்ளே வைத்துக்கொண்டே மெல்ல நகர்ந்து கதவை தாழ் போட்டுவிட்டு வெண்மதியை கட்டிலுக்கு அழைத்துவந்து அமரச்செய்தான்.
அவளின் கண்ணீரை துடைத்தவன் குடிக்க நீர் எடுத்து வந்து தர அவள் வாங்காமல் கரைய...
நிலவு – 15
என்றைக்குமில்லாமல் சீமாவின் மௌனம் இன்று ஏனோ கொஞ்சம் கொஞ்சமாய் சுட ஆரம்பித்தது.
சீமா தான் முரளி, வெண்மதியிடம் பேசியதை கேட்டுவிட்டதை பார்த்தாலும் எந்தவொரு குற்றவுணர்வும் இன்றி திமிருடன் தான் எழுந்து சென்றான்.
ஒருவேளை சீமா சட்டையை பிடித்து சண்டை பிடித்திருந்தால் கூட இத்தனை குறுகுறுப்பாய் இல்லாமல் போயிருக்குமோ என்னவோ? அவளானாள் காதிலும் வாங்கிக்கொண்டு...
“இனி உன்னை விடேன்” என்பதை செயலில் அவள் உணர்த்த அவளின் விரல்களை இவனும் பற்றிக்கொண்டான் இறுக்கமாய்.
“வெண்மதி நான்...”
“நான் இப்ப மிசஸ் வெண்மதி முரளிதரன். இந்த உரிமையா நீ வா போன்ற பேச்சு இருந்துச்சு தொலைச்சிடுவேன். காட் இட்...” என மிரட்ட,
“அது நேத்தில இருந்து தான். எனக்கு எப்பவுமே நீ பழைய வெண்மதி. நான் மீட்...
நிலவு – 14
விடியலில் கண்விழித்த முரளி தன்னருகே திரும்பி பார்த்தான். வெண்மதியின் முகத்தில் ஏதோ சில யோசனைகளுடன் ஆழ்ந்த உறக்கமின்றி சுழிந்த புருவங்களுடன் உறங்கிக்கொண்டிருந்தாள்.
“சம்திங் ராங். விபீஷ் தலையீடு இருக்குமோ?” என்ற சிந்தனையுடன் அவளை நெருங்கி படுத்தவன் விரல் கொண்டு முகன் வருட அவனின் மென்மையான தீண்டலிலேயே சட்டென கண்விழித்தாள் அவனின் நாயகி.
பெண்ணவள் விழி...
நிலவு – 11
கோவிலுக்கு கிளம்பி வந்து வெண்மதி அமர்ந்திருக்க கலைவாணி அவளை பார்ப்பதும் அனைத்தையும் எடுத்துவைப்பதுமாக இருந்தார்.
சுகன்யா முதல்நாளே சொல்லிவிட்டார், “கிளம்பி இருங்கள், வந்து அழைத்துக்கொள்கிறோம் என்று”. அதனால் வேகம் வேகமாய் எடுத்துவைத்துக்கொண்டிருந்தார்.
“மெதுவா வை கலை. அவங்க வர இன்னும் ரொம்ப நேரம் இருக்கு. ஏன் பரபரன்னு இருக்க?...” நடேசன் கூட கண்டித்தார்.
ஆனால் கலைவாணி...
நிலவு – 10
மாலை வீடு வந்து சேரும் வரை வெண்மதியின் நினைவில் விபீஷின் நினைவே இல்லை. அதன் பின்னரும் அதை நினைக்கவே இல்லை. சுத்தமாய் மறந்துபோனாள்.
முரளி கோவிலுக்கு வரவேண்டும் என்று சொல்லி மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்ததன் விளைவு அன்று முழுவதும் ஏதோ ஒரு ஞாபகத்தில் கழித்தவள் வீடு திரும்பிய பின்பும் நினைவின்றி தான்...
நிலவு – 9
“விபீஷ் போதும் இதுக்கும் மேல முரளி விஷயத்துல தலையிட்டு எத்தனை நாள் நிம்மதி இல்லாம இருக்க போற? உன்னாலயாவது நாங்க நிம்மதியாகனும்...” வசுந்தராவின் குரல் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“நடந்த எதையும் மாத்த முடியுமா? இல்லை அந்த வலியை முரளிக்கு குடுக்கறதால நமக்கு இழந்தது திரும்ப கிடைச்சிடுமா? சொல்ல போனா முரளி...
நிலவு – 8
மாலை வெண்மதி வீட்டிற்குள் நுழையும் பொழுது கலைவாணியும் வந்திருந்தார். அவரை ஒரு பார்வையுடன் கடந்து சென்றவள் முகம் கழுவி உடை மாற்றி வர கலைவாணிக்கு திக்கென்று இருந்தது.
“என்னங்க இவ இப்படி பார்த்துட்டு போறா. எனக்கு என்னவோ படபடன்னு இருக்கு. எதாச்சும் சொல்லிட்டானா அப்புறம் நான்...” என சொல்லிக்கொண்டிருக்க அவரின் கண்களில்...
“நான் நினைச்சேன்டா நீ கதறிட்டு எனக்கு போன் பண்ணுவன்னு. நினைச்ச மாதிரியே பண்ணிட்ட...” மறுமுனையில் விபீஷ் வன்மத்துடன் கொக்கறிக்க,
“தேங்க்ஸ் விபீஷ் என்னை நினைச்சுட்டே இருந்ததுக்கு. நான் என்னை காப்பாத்திக்க உங்களுக்கு போன் பண்ணலை. உங்களை காப்பாத்த தான் கால் பண்ணேன்...”
“வாட்? நீ என்னை காப்பாத்தறயா? நீ எப்படி காப்பாத்துவன்னு தான் எங்களுக்கு தெரியுமே. ஒரு...
நிலவு – 7
முரளி வந்துவிட்டு கிளம்பி சென்றதிலிருந்து ஒருவித மோனநிலையிலேயே சுற்றி வந்தாள் வெண்மதி.
தனக்கு வாழ்த்து சொல்லி சென்ற யாரிடமும் பேசகூட முனையவில்லை. அந்தளவிற்கு உறைந்த நிலையில் அதனை கடந்து வெளிவரமுடியாமல் தத்தளித்து நின்றாள்.
அனைவருக்கும் ஓட்ட வைத்ததை போன்ற புன்னகையை திருப்பி தந்து தலையாட்டலோடு நிற்க மற்றவர்களும் அவளை அதிகமாய் தொந்தரவு செய்யாமல் நகர்ந்தனர்.
அவர்களின்...