nenjam niraiyuthae
“ இந்தா கோவில் வந்துடுச்சு. ஏ பாப்பா எந்திரி “ என சுந்தரி ஆச்சி தேனுவை எழுப்பி கொண்டிருந்தார். தேனு நன்றாக சீதா மேல் சாய்ந்து உட்கார்ந்த வாரே உறங்கியிருக்க, இப்போது தான் எழுந்தாள்.
அது ஒரு சிறிய கிராமம், அதன் நடுவே கோவில், அருகில் ஒரு வெட்டார வெளியும் அதன் தொடர்ச்சியாக சிறிய காடு...
திங்கள் காலை ஒன்பது மணிக்கு சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சி, கோதண்டம் மாமா , சீதா அத்தை, கார்த்தி, தேனு, சுந்தரம், சிவகாமி, ஸ்ரீ பத்மா, கிருபா, மணி என அனைவரும் வாசுவின் வேன்னில் வாசுவின் குலதெய்வ கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆம், ஒரு எதிர்பாரா பயணம். உடனே முடிவான பயணம். நேற்று தான் வாங்கியிருக்கிறான்...
“ ஹலோ அண்ணி. “
“ ஹாய் வெப்பன் சப்லயர். நான் உங்க கட முன்னாடி தான் இருக்கேன். எங்க உங்கள ஆள காணோம். ”
“ தோ வரேன் அண்ணி. “
ஸ்டோர் ஹவுஸ்ஸிலிருந்து வெளியே வந்தான்.
“ வாங்க அண்ணி. எப்படி இருக்கிங்க. “
“ நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க. மணி எப்படி இருக்காங்க.“
“...
அந்த மாதம் இறுதியில் சனி கிழமைக் காலை திருச்சிக்கு வந்து சேர்ந்தாள் ஸ்ரீபத்மா. வந்ததும் அப்படி ஒரு புத்துணர்ச்சி. சொந்த மண்ணினில் பயணம் ஒரு அலாதியான உணர்வு .
வீட்டில் உள்ளே அடி வைத்தாள் ஸ்ரீ
“ ஹேய் பேத்துக்குட்டிடிடி ...”
நிமிர்ந்து பார்த்த தேனுவிற்கு ஆச்சர்யம் , ஸ்ரீ இன்று வருவாள் என எதிர்பார்க்கவில்லை, ஸ்ரீ...
ஸ்ரீபத்மா, வாசுவிடம் பேசி ஒரு வாரம் மேல் ஆயிற்று . வாசு அவளிடம் ஒரு யோசைனையை முன் வைத்திருந்தான் . அவன் சொல்வதை தேர்ந்தெடுப்பதா அல்லது வேண்டாமா என முழு யோசனை .
இந்த ஒரு வாரம் இவளும் வாசுவிற்கு அழைக்கவில்லை, அவனும் இவளை அழைக்கவில்லை , முழு தேர்வையும் அவளிடம் விட்டுவிட்டான்.
அன்று,
“ சொல்லுங்க மாமா....
அங்கே உடற் பயிற்சி செய்துக்கொண்டிருந்த ஒரு பெண் இவளின் முகத்தை பார்த்து, இவள் அருகில் வந்தார். அது நல்ல விஸ்திரமான மாடி, இத்தனைக்கும் ஸ்ரீ தொலைவில் நின்று தான் பேசினாள், அவள் பேச்சு கூட இவர்களுக்கு கேட்டு இருக்காது. ஆனால் இவளின் முக பாவனையை பார்த்து தானாக வந்து அருகில் அமர்ந்தார்.
“ என்னங்க காலையிலேயே...
வாசு ஐந்து நிமிடமாக மொபைலில் அழைத்தும் ஸ்ரீ எடுக்கவில்லை. சிறிது நேரம் நின்று யோசித்தவன், பிறகு பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்து அவனுக்காக காத்திருந்த வேலைக்கு சென்று விட்டான்.
கொச்சின்,
“ டேய் சங்கு பிளீஸ் டா “
“ முடியாது.”
“ கொடு டா “
“ ராஜமாத இந்த டெடி யாரையோ ஆம்பள நாட்டுக்கட்டனு சேவ் செஞ்சு வச்சிருக்கு....
கொச்சின் செல்லும் ஃப்ளைட்டில் கொட்ட கொட்ட விழித்தமர்ந்து இனிமேல் என்ன செய்வது என யோசித்து விழித்திருந்தாள் ஸ்ரீபத்மா. இன்று வீட்டில் சுந்தரம் சொன்ன விஷயத்திற்கு இவளால் சரி என்பதை தாண்டி எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அப்படி தான் பேசியிருந்தார் சுந்தரம்.
“ என்ன பத்து, அப்பா சொன்னது மனசுல வச்சிக்க. வாசு கூட கார்ல...
வாசு முதலில் என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்தவன், நிச்சயம் இதை ஸ்ரீயிடம் வாசு எதிர்பார்க்கவில்லை போலும், முதலில் சிறிதாக அதிர்ந்தாலும் பிறகு புரிந்து சிறு ஆச்சர்யத்துடன் விலகி நின்று புன்னகையுடன் பார்த்திருந்தான்.
பஸ் கிளம்பியதும், ஸ்ரீ ஷாலை முகத்தில் இருந்து அகற்றினாள், அந்த பூக்கூடை வைத்திருந்த பெண்ணும், அந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் இருவரும்...
பஸ் ஸ்டண்ட் வந்து இருவரும் இறங்கினர். வாசு இவளின் ஒரு பேக்கை பாவம் பார்த்து கையில் எடுத்தான்.
“ ஒன்னும்ம்ம் வேணாம். நானே பார்த்துக்குறேன். “ என இவள் இவன் மட்டும் கேட்கும் படி மெல்லமாக அழுத்தி சொல்ல, சரியெனத் தோளை குலுக்கி, அம்போ என அவளை பேக் தூக்க விட்டு, அங்கே நின்ற ஒரு...
ஆட்டோவில் ஏறிய ஸ்ரீ ஏழு பேக்கரி கடைக்கு சென்று பார்த்தாள். பொறுமையாக கேக், சாக்லேட் வகைகள் , மற்ற இனிப்பு வகைகள், அதன் அளவு, எடை, விலை, பாக்கிங்க் உட்பட பல விஷாங்களை கவனித்திருந்தாள்.
எல்லாம் முடிந்த அளவு போட்டோ எடுத்து, குறிப்புகள் எடுத்து எல்லாம் மொபிலில் சேமித்திருந்தாள். அத்தனை கடைகளுக்கும் ஏறி இறங்கி இருந்தாள்....
எப்படியோ இவன் சிவகாமியிடம் தான் பார்த்துக்கொள்வதாய் சொல்லவும் அவருக்கு இவர்கள் குடும்பத்தில் ஒருவர் அவளுடன் இருப்பதாய் ஒரு நிம்மதி. மொபைலை அவளிடம் கொடுக்கும் படி சொன்னவர், அவளுக்கு வாசுவிடம் பார்த்து மரியாதையாக நடக்கும் படி சொல்லிவிட்டு இன்னும் சில அட்வைசை அள்ளி தெளித்துவிட்டு வைத்துவிட்டார்.
வாசு சிவகாமியிடம் பேசியது தொடங்கி, அவன் புன்னகைத்தது, அது இன்னும்...
“ என்ன பண்ணிட்டு இருக்க நீ ?” ஸ்ரீயை பார்த்து வேண்டும் என்றே சண்டை கோழியாய் காண்பித்து கொண்டு அடிக்குரலில் கேட்டான்.
“ நான் டவுன் வரைக்கும் போய்ட்டு இருக்கேன் மாமா. “ என வெளியே பயத்தையே காட்டாது சாதாரணமாக சொன்னாள் ஸ்ரீ.
“ எதுக்கு ? “ கூர்மையாக கேட்டான், இன்று இவனும் அங்கே தான...
ஸ்ரீ, நேற்று இவன் கடைக்கு சென்றுவிட்டு அப்படியே ஆச்சி வீட்டிற்கு சென்று இரண்டு அடி வாங்கி அவர்கள் குடுத்த மருதாணியை கொண்டு வந்தாள்.
வீட்டிற்கு பார்சலோடு வந்ததும் எல்லாரும் சாப்பிட்டு, தேனுவும் ஸ்ரீயும் மேலே மாடியில் உட்கார்த்து மருதாணி வைத்து, அங்கேயே ஸ்ரீயின் அறையிலே படுத்து விட்டனர். வேண்டும் என்று தான் தேனுவை இவளுடனே படுக்க...
திங்கள் காலை 11.30 மணி. வாசுவின் வீடு. சிவசு தாத்தா டிவியில் மாயாபஜார் படத்தில் மூழ்கி இருந்தார. சோபாவில் உட்கார முடியாவில் அவரால்.
“ சுண்டலி அங்க பாரேன். என்னா பாட்டு பாரேன். இப்போ தட்டெலாம் தான வரும் பாரேன். “ என சிறு குழந்தையாக குதூகலித்து கொண்டிருந்தார்.
“ ஒன்னா டிவி இல்ல சின்ன ராசா...
‘ ஹப்பா டா கட திறந்து இருக்கு ‘ குதூகலமானாள். ஆட்கள் வேறு குடும்பமாய் உள்ளே போய் வந்து கொண்டிருந்தனர்.
‘ இந்த மாம்ஸ் பைக் வேற வெளியே நிக்குதே. அப்போ நம்ப சிங்கம் உள்ள இருக்கா , நம்ப வேணா போய் அதோட பிடரிய புடுச்சு கொஞ்சம் விளையாடி பார்க்கலாமா.
நோ...நோ...அந்த வேலையே அப்புறம் பார்த்துக்கலாம்....
அன்று ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணி, வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு படுத்திருந்தனர். சுந்தரம் சிவகாமியும் முன்னே உள்ள அறையில் படுத்திருந்தனர்.
வீட்டின் பிற்பகுதியில் கீழே புதிதாக இரண்டு கட்டியிருந்த அறைகளில் ஒன்றில் கார்த்தி அவன் வேலை சமந்தமான விஷயங்களை ஏதோ சரி பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு அறையில் தேனு படுத்து அரை உறக்கத்தில் இருந்தாள்.
அவளுக்கு இது...
வாசு ஒரு நிமிடம் ஸ்ரீயின் குறும்பு புன்னகையை பார்த்தவன், உடனே பின்கட்டை நோக்கி சென்று விட்டான்.
‘என்ன இவ நம்பள இப்டி பாக்குறா. வீட்ல எல்லாரையும் வச்சிட்டு பாக்குறா, எப்படி சமாளிக்கறது.
தவறி கூட நம்ப இப்போ அவ கிட்ட எதுவும் சொல்ல கூடாது. ‘ என யோசித்து கொண்டிருந்தவனை ஆச்சியின் குரல் அழைத்தது. இவன் உள்ளே...
ஸ்ரீ ஆவளே உருவாய் அவன் மொபிலை பார்க்க , மொபைல் கொஞ்சம் லேட் பிக் அப் போல, சற்று நேரம் காக்க வைத்தே
Raan Kie
சத்தமில்லாமல் ஒளிர்ந்தது.
இவளுக்கு புரியவில்லை, நம் எண்ணா அல்லது வேறு யாராவத என இவளின் மொபிலை காதில் வைத்து பார்க்க, இவளின் அழைப்பு என உறுதியானது.
ஆனால் இவளுக்கு புரியவில்லை.
ஸ்ரீயின் கண்கள் சுருங்க...
ஸ்ரீபத்மா திருச்சி வந்துவிட்டாள். தேனுவிற்கு இப்போது மூன்று மாதங்கள் ஆகியிருந்ததால், தேனுவிற்கு கொச்சினிலிருந்து அவளுக்கு நிறைய வாங்கி வந்திருந்தாள்.
தேனுவிற்கு ஒரு ஆள் உயர டெடி பியர், கர்பகாலத்தில் உபயோகிக்கும் பெரிய அளவு தொள தொள லாங் ஃப்ராக் மூன்று, தேனு பள்ளிக்கு செல்வதால் ஹேண்ட் பேக், கால்களுக்கு மிருதுவாக இருக்கும் காலணிகள் என வாங்கி...