Advertisement

“ ஹலோ அண்ணி. “
“ ஹாய் வெப்பன் சப்லயர். நான் உங்க கட முன்னாடி தான் இருக்கேன். எங்க உங்கள ஆள காணோம். ”
“ தோ வரேன் அண்ணி. “
ஸ்டோர் ஹவுஸ்ஸிலிருந்து வெளியே வந்தான்.
“ வாங்க அண்ணி. எப்படி இருக்கிங்க. “
“ நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க. மணி எப்படி இருக்காங்க.“
“ எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணி. “
“ தேங்க் யு வெப்பன் சப்லயர். நீங்க அன்னைக்கு எனக்காக களத்துல இறங்கி வேல பார்த்திங்க. தேங்க் யு சோ மச். “
“ அந்த சம்பவத்த ஏன் அண்ணி ஞாபகம் படுத்துரிங்க. உங்களுக்கு ஹெல்ப் பண்ணபோய், எங்கள காளைகிட்ட ஒர்க் பண்ண அனுப்பிட்டார் அண்ணா.
அது கரெக்ட்டா குறி பார்த்து என்னையே அட்டாக் பண்ணுச்சு, மணிய தரைலயே அது நீச்சல் அடிக்க விட்டுடுச்சு.
நாங்க எப்படியோ தப்பிச்சோம். முதல இந்த அண்ணான டிவோர்ஸ் பண்ணுங்க அண்ணி ‌“
“ ஹா…ஹா…அடி ரொம்ப பலமோ. “
“ ஏன் அண்ணி…ஏன் இப்படி…அப்போ இன்னும் எதிர்பாக்குரிங்க போல. “
“ ஃப்யூச்சர்ல உங்களுக்கு நிறைய டாஸ்க் தரலாம்னு யோசிசேன் வெப்பன் சப்லயர். இதுக்கே இப்படி சொல்றீங்களே. “ என பாவமாக முகத்தை வைத்தாள் ஸ்ரீ.
“ என்னதுதுது…ஃப்யூச்சர்ல டாஸ்க்கா…நானெல்லாம் உயிரோட நடமாடுறது உங்களுக்கு புடிக்கலையா. “
“ பொறும பொறும…நீங்களே இப்படி கோச்சிக்கலாமா. என்ன ஸ்பெஷல் நம்ப தோட்டதுல காளை வாங்கிருக்கிங்க. “  உண்மையிலே அப்பாவியாய் கேட்டாள் ஸ்ரீ.
“ உங்க டாஸ்க் முடிஞ்ச அடுத்த ரெண்டாவது நாளே அண்ணா வாங்கிட்டார்.
 காளை, ரெண்டு கன்னுகுட்டியோட ரெண்டு கறவனு எல்லாம் அண்ணா வாங்கிட்டார்.
முதல அண்ணா ஃப்ரெண்ட் ஒருத்தர் பண்ணை வச்சிருக்கார் அவர் கிட்ட அண்ணா உரம் தயாரிக்க தேவையானது எல்லாம் வாங்குவார்.  
நம்ப தோட்டத்துக்கு தேவையான உரம் தயாரிக்க நம்ப கிட்டவே கால்நட இருந்தா நல்லா இருக்கும்னு புதுசா வாங்கிட்டார் அண்ணி . உங்களுக்கு தெரியாத அண்ணி. “ கிருபாவும் எதர்தமாகவே கேட்டான்.
“ இல்ல வெப்பன் சப்லயர். எனக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னு உங்க அண்ணா சொல்லல போல. இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன்ல, நான் பார்தூக்குறேன். “ என புன்னகையுடன் சமாளித்தாள். இதுவும் நல்லா விஷயம் தான், ஆனால் ஏன் வாசு  இந்த விஷயத்தை கூட சொல்லவில்லை, நம்மிடம் பகிரவில்லை என ஒரு எண்ணம். அதை ஓதுக்கியவள்,
“ இந்தாங்க வெப்பன் சப்லயர் கேக் அண்ட் சாக்லேட். “ என ஒரு கவரை நீட்ட,
“ எதுக்கு அண்ணி இதெல்லாம். “ என கிருபா தயங்கினான்.
“ அட நீங்க தான நம்ப எல்லாம் ஒரே ஃபேமிலினு சொன்னிங்க. அப்போ வாங்கிக்கணும்.
இது எல்லாம் நானே செஞ்சேன். டேஸ்ட் பண்ணி எப்படி இருக்குனு அப்புறம் சொல்லுங்க.
எங்க மணி காணோம். அவருக்கும் இதுல இருக்கு, குடுத்துடுங்க. ”
“ அப்போ எங்கள வச்சு இத டெஸ்ட் பண்ணிறிங்க. “ என கிருபா சிரிக்க,
“ இப்படி பொசுக்கு பொசுக்குனு உண்மையா எல்லாம் வெளியே சொல்ல கூடாது . ஓகே “ என பாவனையாய் சொன்னாள். “
“ உத்தரவு அண்ணியாரே. “ என கிருபா புன்னகைக்க, ஸ்ரீபத்மா கிளம்பி விட்டாள்.
    சிவசு தாத்தா வீட்டிற்கு சென்று பார்த்தாள். எல்லாரும் இருந்தனர் வாசு உட்பட. கூடவே வாசுவின் வாணி அத்தையும் இருந்தார். வீட்டில் பெரிய ஆண்கள் அனைவரும் அவரவர் அறையில் உறக்கத்தில்.
பெண்கள் எல்லாரும் ஹாலில் உட்கார்ந்தும் படுத்தும் பேசிக்கொண்டு இருந்தனர். இவள் சென்றதும் அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, பின் பகுதில் உள்ள ஏதோ பூ பறிக்க செல்வதாக சொல்லிவிட்டு சென்றாள்.
வாசு குளித்துக்கொண்டு இருப்பான் போல, சத்தம் கேட்டது. இவள் சென்று அங்கே தொட்டியின் மேல் அமர்ந்துக்கொண்டாள். அங்கேயே அமர்ந்து தாவணியின் முந்தானையை சுற்றிக்கொண்டு சுற்றி பார்த்துகொண்டிருந்தாள். சுற்றி நிறைய இடம் இருந்தது. நிறைய செடி, கொடிகள், பின்னே வீட்டு காய் தோட்டம், பார்க்க பச்சை பசேல் என அழகாய் இருந்து. ஒரு அமைதியான சூழல். அதை தாண்டி பரந்த இடம், அங்கே எதுவும் பயிர் இல்லை போலும். அதை அப்படியே போட்டு வைத்திருந்தனர்.
குளியல் அறை திறக்கும் சத்தம் கேட்க, இவள் வெளியே வரும் வாசுவை தான் பார்த்தாள். நன்றாக குளித்து முடித்து வேட்டியுடன் வந்தான். வாசு இப்போது தான் இவளை பார்த்தான்.
‘ ராங்கி வந்துட்டாளா…நம்ப அம்மாவோட ஹஸ்பண்ட் எங்கயாவது இருக்கறா. ‘ என முதலில் இவளை பார்த்தும் அலர்ட் ஆனவன், பிறகு கோதண்டதை தேட,
“ பெரிய மாமா உள்ள தூங்கிட்டார். “ இவள் அமர்ந்தவரே பதில் சொல்ல,
“ ஷ்ஷ்ஷ் ஸ்ரீ …மெதுவா பேசு…” என வாசு அதட்டினான்.
‘ பார்ரா ‘ என்பது போல் அவனை பார்த்தாள். வாசு அவளை முறைத்துவிட்டு, அவன் அருகில் கயிற்று கட்டிலில் கிடந்த துண்டை எடுத்து கண்ணாடியை பார்த்து தலைதுவட்டி கொண்டிருந்தான். கண்ணாடி வழியே அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு இளம் ஊதாவும் நிற தாவணி அடர் ஊதா பட்டுப்பாவாடை.
அமர்ந்தாவாக்கில் அவனை பின்னால் இருந்து சாதாரணமாக தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.  அவனுக்கு கண்ணாடியில் இவனை அவள் விடாமல் சைட் அடிப்பதாக தோன்றியதோ என்னவோ உடனே திரும்பி அவசரமாக கொடியில் இருந்த துண்டை எடுத்து அவன் வெற்று மார்பில் போர்தினான். ஸ்ரீயை முறைத்து அவனது மீசையை முறுக்கினான். பிறகு முறைத்தவாரே தலையை துவடினான்.
முதலில் ஸ்ரீபத்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சில வினாடிகள் கழித்து தான் புரிந்தது. ‘அடேய் இதெல்லாம் ஓவர் டா ’ முதலில் கோபம் காட்டிய அவள் கண்கள், பிறகு அப்படியே உதட்டுடன் சேர்த்து மெல்லியே அழுத்தமான புன்னகைக்கு மாற, அவனை தான் விடாமல் பார்த்திருந்தாள்.
வாசு அவள் கண்கள் காட்டிய எல்லாவற்றையும் பார்த்தவன், யாராவது பின் வாயில் வழியே வருகிறார்களா என பார்த்துக்கொண்டே, இவள் அருகில் வந்தான்.
” என்ன பார்வ. ஒழுங்கா உள்ள போ. “
” அப்படி தான் பார்ப்பேன். பின்ன நான் பாட்டுக்கு சும்மா உங்கள பார்த்த, என்னமோ நான் அப்படிய உங்கள சைட் அடிக்கிற மாதிரி துண்டு எடுத்து போத்துரிங்க.
என்னாஆஆ அலப்பர…
பெரிய இவரு நினப்பு. வேட்டியில மூனு எடுத்துல ஓட்ட . அத கூட கவனிக்காம, என்ன வந்து பேசிக்கிட்டு. ” என இவள் சொல்லிய பிறகு தான் அவனுக்கு இன்னும் அவஸ்தையாய் போய் விட்டது. எங்காவது ஓடி மறையவா முடியும்.
அவள் கண்கள் அவன் படும் பாட்டை ரசிக்க,
” ஏய் அப்படி பார்க்காத ஸ்ரீ. ஒழுங்கா உள்ள போய்டு. இல்ல அப்படியே தண்ணிக்குள்ள தள்ளிடுவேன். ” என இவன் மெதுவாக மிரட்டினான்.
” நீங்க என்ன என்னைய தள்ளுறது. நானே குதிக்கிறேன் ” என இவள் அதன் திட்டின் மேல அப்படியே ஒரு காலை எடுத்து தொட்டிக்குள் விட்டாள் .
அவள் உள்ளே அவள் குதிக்காதவாரு அவளை பற்றியவன்,
” ராங்கி உசுர வாங்காத. இறங்கு முதல. “
” சரி அப்போ ஒரு பாட்டு பாடுங்க, அப்படியே டான்ஸ் ஆடுங்க, நான் இறங்குறேன். ” என இவள் குதூகலமாய் கேட்க,
சுற்றி முற்றி பார்த்தவன், வேட்டியை மடித்துக்கட்டி, அவளை பார்த்து, ” நீ குதிக்க வேணாம்…நானே தள்ளி விடுறேன். ” என உண்மையிலே அவள் பிடித்திருந்த கையை எடுத்து அவளை தள்ள வர,
சுதரித்தவள் அவன் தள்ளும் முன் அவளே தொப்பென அதில் விழுந்தாள். இவன் அவளை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விட்டான்.
அது நல்ல பெரிய தொட்டி, தண்ணீர் நிறைய பிடிக்கும். நீர் அடர்த்தி நிறைய, இவளுக்கு நீச்சல் தெரியும், அதில் தான் இவளும் தேனுவும் சேர்ந்து நீச்சல் கற்றனர், அதனால் தான் பயமே இல்லாமல் அதில் இறங்க தயாராய் இருந்தாள் ஸ்ரீபத்மா.    
” யோவ் ,மாமஸ்… என்னாயே தள்ளி விட வந்த தான …உனக்கு இருக்கு. ” என கருவியபடி நீர் சொட்ட எழுந்தவள், அவனை தேட, ‘ பைய புள்ள எஸ் ஆயிட்டானே. ‘  என நீந்தி திட்டை தாண்டி வெளியேற, அதற்குள் ஒரு டி-ஷர்டில், வேறு ஒரு நல்ல வேட்டியில் வந்தவன், அவளை பார்த்து புன்னகையுடன் அவன் துண்டை எடுத்து விடு விடு வென ஹாலுக்கு செல்ல, அவன் பின்னே இவளும் நீர் சொட்ட சொட்ட சென்றாள்.
அவன் எங்கே செல்கிறான் என முதலில் கவனிக்காதவள், அங்கே நடு ஹாலில் போய் சேர்ந்தாள்.
ஆச்சி இவளை இந்த கோலத்தில் பார்த்தவர் அடித்து பிடித்து எழுந்தார்.
” என்னா கண்ணு…இப்படி வந்து நீக்குற. “
முதலில் விழித்தவள், பிறகு அவசரமாக யோசித்து,
” ஒன்னும் இல்ல ஆச்சி…. மருதாணி பறிக்க போனேன், அப்போ நம்ப கொடியில இருக்க துண்டு ஒன்னு பறந்து தொட்டில விழுந்துடுச்சு, அத எடுக்க போனேன், எக்கி எடுத்தேன்னா…அப்படியே விழுந்துட்டேன். ” என இவள் கதை அளக்க, வாசு மட்டும் யாரும் அறியா வண்ணம் அவன் வாயை பெரிதாக திறந்து வலது கையை வைத்து மூடி மூடி திறந்தான், ‘ பொய் கோழி ‘ என வாயசைவு வேறு.
ஆச்சி அவாசரமாக அவளை அவர் அறைக்கு அழைத்து சென்றவர் தலை துவட்ட துண்டும், தேனுவின் ஒரு தாவணியை கொடுக்க, அங்கே தாத்தா தூங்குவதால், மேலே அறை சென்று மாற்றுவதாக கூறி விட்டு மேல வந்தாள் ஸ்ரீபத்மா.
மேலே ஒரே அறை தான், நீளமான அறை, முதலில் தேனுவினது, இப்போது அவ்வப்போது மட்டும் வாசு உபயோகிப்பது. அங்கு சென்று உடை மாற்றியவள், தலை துவட்டியவாரே அங்கே சுற்றி பார்க்க, அங்கே வாசுவின் சில சட்டைகள், ஷார்ட்ஸ், இன்னும் அவனது சில பொருள்கள், பிறகு லேப்டாப், மொபைல், பிறகு ஏதோ ஃபைல் என்று இருக்க, எல்லாம் ஒரு ஒழுங்குடன் இருந்தன.
ஸ்ரீபத்மா கூட அவளது அறையை இப்படி பரமரித்தது இல்லை. அவள் துணி எல்லாம் ஆங்காங்கே இருக்கும். உபயோகிக்கும் பொருகள், வளையல், தோடு, செயின், துப்பட்டா எல்லாம் கை வைக்கும் இடத்தில் எல்லாம் அப்படியே வைத்துவிடுவாள். சிவகாமி தான் இவளுக்கு சொல்லிக்கொண்டே எல்லாம் எடுத்து வைப்பார்.
ஆனால் வாசு அந்த அறையை அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தான். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருந்தது. தேனு இருந்த போது கூட இந்த அறை இப்படி இல்லை, ஆனால் கிராதகன் இப்படி வைத்திருக்கிறானே என ஸ்ரீக்கு முதலில் ஆசையாக ஆச்சர்யர்மாய் இருந்தது  ஆனால் பிறகு பயமாயும் இருந்தது.
‘ பக்கிபய எப்படி வச்சிருக்கன். இவனை கண்டிப்பா எங்காவது செஞ்சு தான் வாங்கிட்டு வந்துருபாங்க. கல்யாணம் அப்புறம நாமும் இப்படி தான் வச்சிகணுமா.
இது என்ன பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை. ‘ என யோசித்து சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.     
அப்படி பார்க்கும் போது, ஒரு ஃபைல் தட்டுப்பட, அதனை பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறான் என பார்த்ததும் தெரிந்தது. வேறொருவர் பொருளை அவர் விருப்பம் இல்லாமல் தொட மாட்டாள் ஸ்ரீபத்மா, அது வாசுவே ஆனாலும் சரி, அவள் அப்படி தான்.
ஆனால் இன்று இதை பார்த்ததும் பேங்க் பெயர் போடப்பட்டிருந்தது. அதுவும் இவள் அண்ணன் வேலை பார்க்கும் வங்கி பெயர், கூடவே இவளது அண்ணன் பெயரும் மேல இருந்தது. அதனால் ஒரு ஆர்வத்தில் எடுத்தாள்.
‘ இது அண்ணனுதா, அண்ணா கிட்ட தான் குடுக்க வச்சிருக்கானோ. சரி நம்ப மாமஸ் கிட்ட கேட்டு கொடுத்திடலாம். ’ என எடுத்தாள்,
‘ அப்படி என்ன அண்ணன் வேல பாக்குற ஃபைல் இங்க குடுத்து வச்சிருக்கான். இப்படி எல்லாம் பண்ண மாட்டானே ‘ புருவம் சுருங்க அது என்ன என திறந்தாள் ஸ்ரீபத்மா.
முதல் பக்கத்தை பார்த்தாள், புரிந்தது. அடுத்த பக்கத்தை திருப்பினாள் ஒரு மகிழ்ச்சி. ஆனால் மூன்றாம் பக்கம்…          

Advertisement