Ithaiya Kilaiyil Pooththavalae
மீண்டும் இருவரும் அழைப்பில் இணைந்த போது அவள் முகம் பதற்றத்தில் சிவந்து போயிருந்தது.
“நெனச்சேன், ஒன்னும் ஆகல பாரு” என கையை காண்பித்தான்.
“இனி சமைக்கறப்போ பேசிக்க வேணாம்” என்றாள்.
“அப்போ நான் சமைக்கவே இல்லை” என்றான் அவன்.
“பின்ன கடைல சாப்பிடுவீங்களா?”
“உன்னை பார்க்காம அந்த நாளை ஓட்டுறது விட கடை சாப்பாடு அவ்ளோ கொடுமை இல்லை”
“அப்படினா கவனமா சமைக்கணும்ல...
இதய கிளையில் பூத்தவளே -19
அத்தியாயம் -19
சுஹானா இல்லாமல் பார்த்திபன் மட்டுமே தனியாக திரும்பி வந்ததில் பெரியவர்களுக்கு வருத்தம்.
ஆஷுதோஷ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட விவரத்தையும் இப்போது கவலை பட ஏதுமில்லை என்பதையும் சொன்னான் பார்த்தி.
மகளுக்கு அழைத்து விசாரித்துக் கொண்டனர் பெரியவர்கள். அப்படியே சுஹானாவை அதிக நாட்கள் அங்கே நிறுத்தி வைத்துக் கொள்ளாதே என அறிவுரையும் சொன்னார்கள்.
பணிகளை...
“பரவாயில்லை தாத்தா, ஆச்சிக்கு துணைக்கு போறேன்” என பார்த்தி சொல்ல, தாத்தாவும் சரிதான் என விட்டு விட்டார்.
ஆஷுதோஷுக்கு உயர் இரத்த அழுத்தம், மகள் மருமகனை நேரில் காணவும்தான் காயத்ரி தைரியம் கொண்டார்.
அப்பாவை காண ஐ சி யூ உள்ளே சென்றாள் சுஹானா. மகளை காணவும் ஆஷுதோஷின் கண்கள் எல்லாம் நீரால் நிறைந்து விட, மூச்சை...
“பெர்ஃபெக்ட்!” என சொல்லி நோட்டை எடுத்து தள்ளி வைத்தான்.
“ஷ்ஷ்ஷ் பார்த்தி, இது பார்த்து எழுதிருக்கேன், பார்க்காம எழுத தெரியணும் எனக்கு” என்றவள் மீண்டும் நோட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.
“ஆச்சி…” பொய்யான அழுகையோடு அழைத்தான்.
“உங்களுக்கும் படிக்க எழுதன்னு ஏதாவது இருக்கும்தானே? கொஞ்ச நேரம் அதை பார்க்க கூடாதா?” எனக் கேட்டவள் தன் பெயரை எழுதி எழுதி...
இதய கிளையில் பூத்தவளே -18
அத்தியாயம் -18
சுஹானாவுக்கு நேரமாகவே விழிப்பு வந்து விட்டது. அயர்ந்து உறங்கும் கணவனை ஆசையாக பார்த்துக் கிடந்தவள், இப்படியே இருந்தால் எந்த வேலையும் நடக்காது என புரிந்து மென்மையாக அவனுக்கு முத்தமிட்டு எழுந்து கொண்டாள்.
தலைக்கு குளித்து ஷார்ட்ஸ், டி ஷர்ட் என அணிந்து கொண்டவள் சமையலறை சென்று விட்டாள்.
மதியத்திற்கு தேங்காய் சாதம்,...
முழங்கை கொண்டு அவனது விலாவில் குத்தியவள், “தள்ளி போங்க பார்த்தி” என்றாள்.
கட்டாயப் படுத்தி கரண்டியை வாணலியில் வைக்க செய்தவன் அவளை அப்படியே தூக்கி மேடையில் அமர வைத்து விட்டான். அவள் விட்ட வேலையை அவனே செய்ய ஆரம்பித்தான்.
“நானே செஞ்சிருப்பேன்” என்றாள்.
“சேவ் யுவர் எனர்ஜி சுஹா”
“ம்ஹூம்! எதுக்கு பார்த்தி?”
“கொஞ்ச நேரத்துல சொல்றேன்”
“என்ன சொன்னாலும் எனக்கு புரியாது”
“விளக்கமா...
“அவங்க ரெண்டு பேரும் சாதாரணமாவே அப்படித்தான் பேசிக்குவாங்க ஆச்சி. அவர் நல்லா திருந்திட்டார், இனி மாற மாட்டார், சீக்கிரம் ஏதாவது வேலைக்கும் ஏற்பாடு செஞ்சு தரணும்” என்றான் பார்த்தி.
தான் வேலை செய்யும் பள்ளியிலேயே செக்யூரிடி வேலைக்கு கேட்டு பார்க்கலாம் என அவள் சொல்ல, அவனும் சரி என்றான்.
அண்டை வீட்டார்களை எல்லாம் அழைத்திருக்கவில்லை வளர். மகனின்...
மதியம் தேர்வுப் பணிகள் பார்க்க சென்றால் மாலை புறப்பட தாமதமாகி விடும் என்பதால் அவனது பணியை வேறொருவருக்கு மாற்றம் செய்து கொடுத்து, விடுப்பு எடுத்துக் கொண்டு அவனும் கிளம்பி விட்டான்.
வீட்டில் கணவனை எதிர்பார்க்காதவள், “என்னாச்சு பார்த்தி? அங்கேயும் ஏதும் பார்ட்டி மீட்டிங்’கா?” என வியப்பாக கேட்டாள்.
பதில் தராதவனது முகம் கலக்கமாக இருக்கவும் அவனை நெருங்கி...
இதய கிளையில் பூத்தவளே -17
அத்தியாயம் -17
சுஹானாவுக்கு முன் எழுந்திருந்த பார்த்திபன் காலைக்கும் மதியத்திற்குமான உணவை செய்து முடிக்க, அவளும் எழுந்து வந்தாள்.
“ஏன் தனியா செய்றீங்க பார்த்தி, என்னை எழுப்பியிருக்கலாம்தானே?” எனக் கேட்டாள்.
புன்னகைக்க மட்டும் செய்தவன், “நைட் சாவி எங்கேருந்து கிடைச்சது?” என வினவினான்.
சோஃபா முன் இருந்த டீபாய் மேலேதான் வைத்திருந்திருக்கிறாள்.
“அதை மறந்து போற அளவுக்கு...
திருமணத்துக்கு முன் குருமூர்த்தியிடம் பார்த்தி ஆலோசனை செய்தது உண்மைதான், ஆனால் திருமணத்துக்கு பின் கணவன் மனைவி உறவுநிலை குறித்து எதுவும் அவரிடம் அவன் சொன்னது கிடையாது. அப்படி கேட்பது அநாகரீகம் என கருதி அவரும் அவனிடம் விசாரித்தது இல்லை.
மனைவியிடமும் அவர் இதை சொல்லியிருக்க தேவையில்லை, ஏதோ ஒரு நேரத்தில் எப்படியோ வாய் விட்டு விட்டார்....
கைப்பேசியை தள்ளி வைத்தவள் முழங்காலில் முகம் புதைத்துக் கொள்ள போக, “ஆச்சி…” என்ற பார்த்தியின் அழைப்பில் திரும்பி பார்த்தாள்.
எல்லாம் அவனும் கேட்டிருக்கிறான் என்பது அவனது முகத்தை பார்க்கவுமே அவளுக்கு புரிந்தது. அப்பா தன் கணவனை பேசியதில் அவளுக்கு ஏற்பட்டிருந்த வேதனை, அது அவனுக்கும் தெரிந்ததே என்பதில் இரட்டிப்பாகி விட்டது.
பார்த்திக்கு ஆஷுதோஷ் மீது கோவத்தை கடந்து...
இதய கிளையில் பூத்தவளே -16
அத்தியாயம் -16
பார்த்திபன் சுஹானா இருவரும் சென்னை வந்தடைந்து விட்டனர். அவரவர் பணிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவர்களுக்குள் நெருக்கம் கூடியிருந்தது.
காலையில் ஒன்றாக சேர்ந்து காபி பருகுவதும் பேருந்து நிறுத்தம் வரை அவளை அவன் வந்து விடுவதும் மாலையில் யார் முன்னால் வந்தாலும் அடுத்தவரின் வரவுக்காக காத்திருப்பதும்...
பார்த்தியின் கனவில் கடல் கன்னி உருவத்தில் சுஹானா நீந்திக் கொண்டிருக்க, அவளை கையில் பிடிக்க அவனும் நீந்தினான். கடல் குளமாக மாறியது, கடல் கன்னிக்கு நீச்சல் தெரியாமல் தத்தளிக்க ஆரம்பித்தாள். அவளைப் பிடித்து விட்ட பார்த்தி தன்னோடு அணைத்துக் கொண்டான்.
கடல் கன்னி மூர்ச்சையாகியிருக்க அவளுடன் கரையை நோக்கி நீந்த முற்பட்டான். கரையே தென் படாமல்,...
அதன் பின்தான் தெளிந்தான்.
“ஏன் பார்த்தி உங்களுக்கு ஒரு ரிப் கூட இருக்குதானே? எந்த இடம்?” என நிஜமாகவே சந்தேகம் கேட்டாள்.
தன் தோள் பகுதியை கையால் தொட்டு காண்பித்தவன், “இங்கதான் இருக்கும்” என்றான். அவளும் இயல்பாக அங்கே தொட, நேராக படுத்திருந்தவன் முகத்தை மட்டும் அவள் பக்கம் திருப்பினான்.
தோள் வளைவை அவள் அழுத்தி பார்க்க, “ஆச்சி…”...
இதய கிளையில் பூத்தவளே -15
அத்தியாயம் -15
மதிய உணவுக்கு பின் சுஹானாவுக்கு அடித்துப் போட்டது போல அப்படியொரு உறக்கம். பயந்து போன பாட்டிக்கு ‘குளத்தில் நன்றாக ஆடி குளித்ததில் உடல் தளர்ந்து போயிருக்க இப்படி உறங்குகிறாள்’ என சமாதானம் சொன்னான் பார்த்திபன்.
மாலையில் எழுந்த சுஹானா அதீத உற்சாகத்தோடு காணப் பட்டாள். மனைவிக்கு தான் முத்தமிட்ட நினைவு...
“நான்… அங்க… கரைல இருக்கேன்” என பட படப்பாக சொல்லி கரையேறி விட்டான்.
அப்படியே படியில் அமர்ந்து விட்டாள் சுஹானா. எந்த எண்ணத்தில் தன்னை நெருங்கினான் என்பது அப்பட்டமாக அவளுக்கு புரிந்தது. அவளுள்ளும் இனிய பட படப்பு.
ஈரம் சொட்ட சொட்ட கரையில் நின்றிருந்தவனோ கைகளால் தன் உடலை கட்டிக் கொண்டான். தன்னை கட்டுப்படுத்த இயலாமல் குளப்...
“எப்படி குளிப்பீங்க ஆச்சி?” எனக் கேட்டுக் கொண்டே அவளிடம் வந்து நின்றான் பார்த்தி.
“எப்படின்னா?”
“என்ன ட்ரெஸ் போட்டுட்டு குளிப்பீங்க?”
“ஹையோ ஆமாம்ல… ஷார்ட்ஸ் கூட எடுத்திட்டு வரலை பார்த்தி, உங்க ஷார்ட்ஸ் ஏதும் போட்டுக்கலாமா?” எனக் கேட்டு அவனை நெளிய வைத்தாள்.
“ஏதாவது சொல்லுங்க பார்த்தி!”
“குறுக்கு மாராப்பு கட்டிக்கிட்டு குளிங்க”
“என்ன பூ?”
“ஷ்ஷ்ஷ்… பழைய படத்துல பார்த்திருப்பீங்களே…”
“எந்த படம்?”
“சரிதான்! ஹ்ம்ம்…”...
இதய கிளையில் பூத்தவளே -14
அத்தியாயம் -14
பர பரப்பில்லாமல் இதமாக விடிந்தது காலை. சுஹானாவும் பார்த்திபனும் எழுந்து வரும் போது தாத்தா, பாட்டி இருவரும் பின்பக்கம் சரஸ்வதியுடன் சேர்ந்து அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தனர்.
நேற்று பகலில் அணிந்திருந்த சுடிதாருக்கு மாறியே வந்திருந்தாள் சுஹானா. மனைவிக்கு பிரஷ்’ஷில் பற்பசை வைத்து பார்த்தி நீட்ட, “அடே ரொம்ப ஓவர்டா,...
தோசைக்கு மொச்சைக்காய் குழம்பு வைத்துக்கொண்டு சாப்பிட்டான்.
“எங்களுக்கெல்லாம் சட்னி, உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா?” என வம்பு செய்தாள்.
“சில பேருக்கு நைட்ல மொச்சை சேராது ஆச்சி”
“டேஸ்ட் பண்ண கொஞ்சம் போல கொடுத்திருக்கலாம்ல?”
“அதுக்கென்ன இப்ப இன்னொரு தோசை குழம்பு வச்சு சாப்பிடுங்க”
“ஒரு வாய் கொடுங்க, போதும்” என அவள் சொல்ல, அவன் தயக்கமாக அவளை பார்த்தான்.
அவன் கையில் எடுத்து...
மதிய உணவெல்லாம் இவர்கள் வருவதற்கு முன்னரே தயார் செய்திருந்தார் சரஸ்வதி. வேஷ்டிக்கு மாறியிருந்த பார்த்தி வாழையிலைகள் பறித்து வந்தான்.
பெரியவர்களுக்கு முதலில் உணவு பரிமாறினான். சாப்பிட்டதும் அவர்கள் திண்ணைக்கு சென்று விட்டனர். அம்மா மற்றும் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட்டான் பார்த்தி.
மகனுக்காக தனியாக மொச்சைக்காய் போட்டு குழம்பு வைத்திருந்தார் சரஸ்வதி. எனக்கும் போடுங்கள் என கேட்டு வாங்கி...