nenjam niraiyuthae
அந்த மாதம் இறுதியில் சனி கிழமைக் காலை திருச்சிக்கு வந்து சேர்ந்தாள் ஸ்ரீபத்மா. வந்ததும் அப்படி ஒரு புத்துணர்ச்சி. சொந்த மண்ணினில் பயணம் ஒரு அலாதியான உணர்வு .
வீட்டில் உள்ளே அடி வைத்தாள் ஸ்ரீ
“ ஹேய் பேத்துக்குட்டிடிடி ...”
நிமிர்ந்து பார்த்த தேனுவிற்கு ஆச்சர்யம் , ஸ்ரீ இன்று வருவாள் என எதிர்பார்க்கவில்லை, ஸ்ரீ...
கிருபா கதற கதற ஐந்தாவது இட்லியை சாப்பிட வைத்தான் வாசு. மணி இவன் சுட்ட நான்கு மசால் தோசையால் மயங்கிவயவன் இன்னும் கூட தெளியவில்லை. அதற்கு மட்டுமா தெளியவில்லை, இவர் நேற்று இருந்த சைலன்ட் மோட் என்ன இன்று இருக்கும் வைப்ரேட் மோட் என்ன என வாசுவை தான் பார்த்திருந்தான் மணி.
ஆம், வாசு கிருபவையும்...
இரட்டை வால் குருவி தன் கூட்டை கவனமாக காக்குமாம். தன் கூட்டை பெரிய பறவை வந்து தாக்கினால் அதனுடன் கடுமையாக சண்டையிட்டு தன் கூட்டை காத்துக்கொள்ளுமாம். அதனால் அது வாழும் மரங்கள் தங்கள் கூட்டிற்கும் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என மற்ற அதனின் ஒத்த பறவைகள் அது வாழும் இடத்தின் அருகே வசிக்குமாம்.
வாசு அவனதும்...
எல்லோரும் கீழே உறங்க, ராகவும் வாசுவும் மட்டும் மொட்டை மாடியில் வானத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தனர். வாசு கீழே விரிப்பு விரித்துப் படுத்திருக்க, அவனின் கையின் மேல் படுத்திருந்தான் ராகவ். வாசுவை அங்கே இங்கே நகர விடவில்லை.
இத்தனை நாட்களாக வாசு, ராகவிடம் தனியாக சிக்காமல் கூட்டமாகவே திரிந்துக்கொண்டிருந்தான். ராகவ் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வாசுவை தனியாக...
“ பசுவும் கன்னும் உள்ள கூட்டிட்டு வாங்க. “
என வாசுவின் ஊர் கோவில் அர்ச்சகர் சொல்ல, வாசு அதே போல் புது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றான்.
வீட்டின் உள்ளே சுந்தரி ஆச்சி, சிவசு தாத்தா இருக்கையில் கழுத்தில் பூமாலையுடன் அமர்ந்திருக்க, கோதண்டம், சீதா, வாசு பூமாலை அணித்து எல்லாம் பூஜையும் செய்து முடித்திருந்தனர்.
புது வீட்டுக்குள்...
“ ராசா எந்திரி பா. சாப்பிடு. “ என ஆச்சி வாசுவை எழுப்பிக்கொண்டிருந்தார். பின் மதிய வேளை ஆகிருந்தது, வாசு அசந்து உறங்கி இருந்தான். ஆச்சி அழைத்ததும் மெல்ல எழுந்தவன் வேண்டாம் என தலையாட்டி விட்டு அவனது உணவகதிற்கு சென்று சாப்பிட்டு கொள்வதாக சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானான். ஆச்சி அவனை விடவே இல்லை.
“ ராசா,...
ஸ்ரீபத்மா அவள் வீட்டில் அவளது அறையில் மெத்தையின் மேல் மல்லாக்க படுத்து தீவரமாக யோசனையில் ஈடுபட்டிருந்தாள்.
“ இது வரைக்கும் யார்கிட்டயும் வம்புக்கு போகலயே. இப்போ மாம்ஸ்ஸோட காளைய அடகுரேனு வீனா வாய குடுத்துட்டோமா. பேசாம அடக்கி வாசிச்சிருக்கலாமோ.
இந்த வெப்பன் சப்லயர்கிட்ட ஐடியா கேட்டா எங்க ஃபேமிலி காளைக்கு எதிரா நாங்க ஐடியா சொல்ல மாட்டோம்னு...
திருக்கடையூர் வந்து சேர்ந்த பொழுது இரவு நேரம் ஆகியிருந்தது. மிக இனிமையான பயணம். நிறைய மாதங்கள் கழித்து குடும்பமும் நண்பர்களுமாய் இந்த பயணம் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. அனைவரும் நேராக தங்க பதிவு செய்திருந்த விடுதிக்கு சென்றுவிட்டனர். எல்லோரும் அங்கே சாப்பிட்டு தங்க, பெரியவர்கள் விரைவாக உறங்க சென்றாலும், சிரியவர்கள் அரட்டை அடிக்க,...
“வாசு...சின்ன ராசா...வா வந்து இந்த பூண்டு தோல நீக்கி தாயேன்.” என சுந்தரி ஆச்சி வாசுவை அழைத்து கொண்டிருந்தார். அவன் பின்கட்டில் தண்ணி தொட்டிக்குள் அமர்ந்து கழுவி கொண்டிருந்தான்.
“நான் வேலையா இருக்கேன் ஆச்சி, அம்மாட்ட சொல்லுங்க.” என வாசு பதிலுக்கு கத்திக்கொண்டிருந்தான். இவன் போடும் சத்தத்தை பார்த்து உள்ளே இருந்து எழுந்து வந்தார் ஆச்சி.
“இதுக்கு...
வாசு ஐந்து நிமிடமாக மொபைலில் அழைத்தும் ஸ்ரீ எடுக்கவில்லை. சிறிது நேரம் நின்று யோசித்தவன், பிறகு பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்து அவனுக்காக காத்திருந்த வேலைக்கு சென்று விட்டான்.
கொச்சின்,
“ டேய் சங்கு பிளீஸ் டா “
“ முடியாது.”
“ கொடு டா “
“ ராஜமாத இந்த டெடி யாரையோ ஆம்பள நாட்டுக்கட்டனு சேவ் செஞ்சு வச்சிருக்கு....
அவளின் மெல்லிய மையிட்ட விழிகளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தவாரே,
“ ஸ்ரீ, எனக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு விஷயம் நடந்துச்சு. “
“ ________”
“ ஒரு நாள் நான் மட்டும் தனியா என் ஹோட்டல்ல இருந்தப்போ ஒரு பொண்ணு வந்தா.
என்கிட்ட அந்த பொண்ணு அவளோட பிரோபோசல் சொன்னா. “
“_________”
“ அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு எனக்கும்...
வாசுவிடமும் கார்த்தியிமும் யாரையோ அறிமுக படுத்த வந்தாள். அப்போது அவளை பார்த்தவன் பார்த்தபடி நின்றிருந்தான் வாசுதேவன். அவனது சுவாசம் கூட உள்ளே சீராக இல்லை. சொல்ல முடியா உணர்வுகள் உள்ளே எழ, சுற்றி இருக்கும் சூழல் கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.
அங்கே எல்லாம் வாசு, கார்த்தி, கிருபா, மணி, ஸ்ரீதர், விமல், அஜய், இன்னும்...
ஸ்ரீபத்மாவைப் அன்று பார்த்து வந்ததிலிருந்து வாசுவிற்கு ஏதோ ஆகிவிட்டது. கொச்சின்னில் அவள் இருந்த போது அவளது விலகல் தெரிந்தாலும், எப்படியும் ஒரு நாள் அவளை பார்த்து விடுவோம் பேசிவிடுவோம் என தன்னை தானே இத்தனை நாட்களாய் தேற்றிக்கொண்டிருந்தான். ஆனால் இரண்டு நாள் முன் இவனை தள்ளி நிறுத்திய அவளது பேச்சு இவனை தூங்க விடவில்லை....
வாசு முதலில் என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்தவன், நிச்சயம் இதை ஸ்ரீயிடம் வாசு எதிர்பார்க்கவில்லை போலும், முதலில் சிறிதாக அதிர்ந்தாலும் பிறகு புரிந்து சிறு ஆச்சர்யத்துடன் விலகி நின்று புன்னகையுடன் பார்த்திருந்தான்.
பஸ் கிளம்பியதும், ஸ்ரீ ஷாலை முகத்தில் இருந்து அகற்றினாள், அந்த பூக்கூடை வைத்திருந்த பெண்ணும், அந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் இருவரும்...
பஸ் ஸ்டண்ட் வந்து இருவரும் இறங்கினர். வாசு இவளின் ஒரு பேக்கை பாவம் பார்த்து கையில் எடுத்தான்.
“ ஒன்னும்ம்ம் வேணாம். நானே பார்த்துக்குறேன். “ என இவள் இவன் மட்டும் கேட்கும் படி மெல்லமாக அழுத்தி சொல்ல, சரியெனத் தோளை குலுக்கி, அம்போ என அவளை பேக் தூக்க விட்டு, அங்கே நின்ற ஒரு...
நெஞ்சம் நிறையுதே 3
பசுமையான நெற்வயலுக்கு ஆரம்பதில் இருந்தது அந்த வீடு. அளவான வீடு தான், ஆனால் தூய்மையாக பராமரித்திருந்தனர். புதிதாக வெள்ளை அடித்திருந்தனர். வாழை தோரணம், மாவிலைத் தோரணம், வெளிவாயில் பூ அலங்காரம் எல்லாம் கட்டி, பந்தல் போட்டு மணமக்களை வரவேற்பிற்கு தயாராய் இருந்தது.
மாப்பிள்ளை வீட்டு நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் பந்தல் அருகே இருக்கை...
எப்படியோ இவன் சிவகாமியிடம் தான் பார்த்துக்கொள்வதாய் சொல்லவும் அவருக்கு இவர்கள் குடும்பத்தில் ஒருவர் அவளுடன் இருப்பதாய் ஒரு நிம்மதி. மொபைலை அவளிடம் கொடுக்கும் படி சொன்னவர், அவளுக்கு வாசுவிடம் பார்த்து மரியாதையாக நடக்கும் படி சொல்லிவிட்டு இன்னும் சில அட்வைசை அள்ளி தெளித்துவிட்டு வைத்துவிட்டார்.
வாசு சிவகாமியிடம் பேசியது தொடங்கி, அவன் புன்னகைத்தது, அது இன்னும்...
ஸ்ரீ, நேற்று இவன் கடைக்கு சென்றுவிட்டு அப்படியே ஆச்சி வீட்டிற்கு சென்று இரண்டு அடி வாங்கி அவர்கள் குடுத்த மருதாணியை கொண்டு வந்தாள்.
வீட்டிற்கு பார்சலோடு வந்ததும் எல்லாரும் சாப்பிட்டு, தேனுவும் ஸ்ரீயும் மேலே மாடியில் உட்கார்த்து மருதாணி வைத்து, அங்கேயே ஸ்ரீயின் அறையிலே படுத்து விட்டனர். வேண்டும் என்று தான் தேனுவை இவளுடனே படுக்க...
வாசு உணவகத்தின் வெளியே வந்து விட்டான். எழுந்து நின்று ஸ்ரீயை பார்த்தவன், அவன் மனம் கொஞ்சம் நிதானிக்க வேண்டி சட்டென்று வெளியே வந்துவிட்டான்.
அவன் வெளியே செல்லவும் ஸ்ரீயும் வெளியே செல்ல பார்த்தாள். ஆனால் வெளியே மக்கள் பஸ் நிறுத்ததிற்கு போக வர இருக்கவும், இவள் வாசுவின் பின்னே சென்று ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை....
ஆட்டோவில் ஏறிய ஸ்ரீ ஏழு பேக்கரி கடைக்கு சென்று பார்த்தாள். பொறுமையாக கேக், சாக்லேட் வகைகள் , மற்ற இனிப்பு வகைகள், அதன் அளவு, எடை, விலை, பாக்கிங்க் உட்பட பல விஷாங்களை கவனித்திருந்தாள்.
எல்லாம் முடிந்த அளவு போட்டோ எடுத்து, குறிப்புகள் எடுத்து எல்லாம் மொபிலில் சேமித்திருந்தாள். அத்தனை கடைகளுக்கும் ஏறி இறங்கி இருந்தாள்....