Charumathi
சாருமதி
அத்தியாயம் 2௦
பித்தனைப்போல பிதற்றிக் கொண்டிருந்தவனை, சுயநினைவுக்குக் கொண்டுவர, அதட்டிப்பேசியும் முடியாமல் போகவே எதைப்பற்றியும் யோசிக்காமல் இதழணைத்துவிட்டாள் சாருமதி.
அந்த மருத்துவ முத்தம் தன் வேலையைச் சரியாகச் செய்ய இயல்புக்கு திரும்பியவனுக்கு, மனைவியின் செயலில் உடலெங்கும் சந்தோஷ மின்சாரம் உச்சபட்ச அலைவரிசையில் தாக்குதல் நடத்த,
சற்றும் தாமதியாமல் அருகிலிருந்தவளின் இடையைப்பற்றி தன்பக்கமாக இழுத்தவன், தன்னவளின் இதழமுதம் மொத்தத்தையும் மிச்சமின்றி...
இவர்கள் கார் வந்து நின்ற சத்தத்தில் தோப்புக்குள்ளேயே குடியிருந்த கங்காணியார் தங்கப்பன் இவர்களை வரவேற்று,
"பெரியய்யா ஃபோன்ல எல்லா விபரமும் சொன்னாங்கய்யா. நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். முதல்ல சின்னம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போங்க அப்புறமா நாம பேசிக்கலாம்" என்றபடியே வீட்டுச்சாவியை கையில் கொடுத்தார்.
அவர் அருகே ஸ்னேகபாவத்தோடு இவர்களைப் பார்த்து சிரித்தபடி நின்ற சிறு பெண்களுக்கு...
சொல்லியபடியே மருத்துவமனைக்குரிய லெட்டர் பேடில் போலிடாக்டர் பூபாலனைப் பற்றிய புகாரை எழுதத் தொடங்கினாள் சாருமதி.
அவள் செயலில் உள்ளுக்குள் லேசாக நடுக்கம் ஓடினாலும், அந்த இளவயது பெண் மருத்துவரிடம் கெஞ்சுவதற்கு அவன் இளவயது இடம் கொடாததால்,
"நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ... அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கும் தெரியும்" என்று கெத்தாக சொல்லியபடியே, கூட்டி வந்த நபரைக்...
சாருமதி.
அத்தியாயம் 19.
"அத்தான்... என்னத்தான் இப்படி பண்ணிட்டீங்க?"
"எப்படி பண்ணிட்டேன்?"
"எங்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாமல் சாரு க்காவை கல்யாணம் பண்ணிட்டீங்க?"
"சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப?"
"சொல்லி...யிருந்தா... ஹாங்... சொல்லியிருந்தா என்னை கல்யாணம் பண்ணச் சொல்லி கேட்டுருப்பேன்ல!"
தன் மாமன் வீட்டு ஹாலில் மனைவி சாருமதியோடு சோஃபாவில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவுக்கு பக்கத்தில், சோஃபாவின் கைவைக்கும் திண்டில் அமர்ந்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தாள் சுப்ரியா....
சாருமதி
அத்தியாயம் 03
ஹேய்.... என்ற உற்சாகக் குரலோடு தேர்வு அறைகளை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள் மாணவ மாணவிகள்.
ஒருசிலர் கையிலிருந்த வினாத்தாளை தூக்கியெறிந்து பட்டமாகப் பறக்கவிட இன்னும் ஒரு சிலரோ தங்கள் பேனாக்களில் இருந்த மையால் நண்பர்களின் சட்டைகளில் மாடர்ன் ஆர்ட் வரைந்தார்கள்.
வேறொன்றுமில்லை, இன்றோடு பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நிறைவுபெற்றன. இவ்வளவு நாளும் பொதுத்தேர்வு என்ற...
சாருமதி.
அத்தியாயம் 15.
எங்கிருந்தோ, எதிலிருந்தோ தப்பிப்பவன் போல வேகமாக நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா.
பூப்பூவாக தூவிய சாரல் மழையாலும், அடித்த வாடைக் காற்றாலும் கூட அவனது மனதின் வெக்கையை தணிக்கமுடியவில்லை.
'அப்படியென்றால் என் தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாதா?' மனம் ஓயாமல் புலம்பிக்கொண்டிருந்தது.
'இன்னும் என்ன தான் வேண்டுமாம் அவளுக்கு? தவறுதான்... நான் செய்தது தவறுதான்... இல்லையென்று நான் சொல்லவில்லையே?'
'அந்த தவறுக்குத்...
சாருமதி.
அத்தியாயம் 16.
கிருஷ்ணாவின் வீட்டு ரோஜாதோட்டத்தில் பூக்களோடு பூக்களாக நின்று கொண்டிருந்தாள் சாருமதி
காலை இளஞ்சூரியனின் பொன்னிற கதிரொளிபட்டு, அவள் மேனி தழுவியிருந்த தங்கநிற மெல்லிய பட்டுப்புடவை தகதகக்க,
வானத்து தேவதை ஒன்று மலர்களைக் கண்டு மயங்கி கீழிறங்கி வந்து நின்றது போலிருந்தது அவள் தோற்றம்.
"மார்கழிப் பூவே...
மார்கழிப் பூவே...
உன் மடி மீது
ஓரிடம் வேண்டும்..." என்று
மெதுவாக முணுமுணுத்தபடியே, ரோஜாக்களின் இதழ்களிலிருந்த...
சாருமதி.
அத்தியாயம் 17.
நான்கு தலைமுறைகள் கண்ட அந்த மாளிகை, கூடியவிரைவில் ஐந்தாவது தலைமுறையும் கண்டுவிடுவேன் என்ற மகிழ்ச்சியில் அந்த வீட்டு இளவலின் திருமணத்திற்காக வாழை மரத்தோரணங்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு கம்பீரமாக நின்றது.
வீட்டினுள் அந்த பெரிய ஹாலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் உட்கார்ந்திருந்த சொந்தபந்தங்கள் தங்களுக்குள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து உட்கார்ந்து...
சாருமதி.
அத்தியாயம் 18.
"சாரு..."
"சாருமதி..."
ஏதோ கனவில் அழைத்தது போலிருந்தக் குரலில் சட்டென்று கண்விழித்தாள் சாருமதி.
தூக்கம் விழித்த கண்களுக்கு சுற்றுப்புறம் கலங்கலாகப் புலப்பட, நேற்று தனக்கு கிருஷ்ணாவுடன் திருமணம் ஆனதும், தான் இப்போது கிருஷ்ணாவின் வீட்டில் அவனின் அறையிலிருப்பதுவும் ஞாபகத்திற்கு வந்தது அவளுக்கு.
கூடவே, நேற்றிரவு கிருஷ்ணாவின் அறைக்கு அழைத்து வரும்போதே,"நாளைக்கு விடியகாலம் அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்ப வந்துடுவேன். கரடின்னு...
சாருமதி.
அத்தியாயம் 08
இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாந்தோப்பில் நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. கூடவே நண்பன் தனஞ்செயன்.
மாந்தோப்பு என்றால் அடர்ந்து கிளைகள் பரப்பி நிற்கும் பெரிய பெரிய மரங்கள் நிற்கும் தோப்பல்ல. இப்போது தான் வளர்ந்து வரும் இளம் மரங்கள் நிறைந்திருக்கும் தோப்பு.
அங்கு நிற்கும் மரங்களுக்கு வயது ஐந்து மட்டுமே. கிருஷ்ணா...
சாருமதி.
அத்தியாயம் 06
"ஒரு நாளாவது பீட்ஸா, பர்கர், நான், பனீர் மசாலா இப்படி ஏதாவது ஒன்னு பிரேக் பாஃஸ்டா குடுக்கலாம்ல. எப்போ பாரு இந்த இட்லி, சட்னி, காய்ந்து போன சப்பாத்தி, குருமா ன்னு குடுத்து கொல்லுறாய்ங்க."
"அதுலயும் இந்த இட்லி இருக்குப்பாரு இட்லி, இதைத் தூக்கி அந்த கேண்டீன் மாஸ்டர் தலையில எறிஞ்சா கண்டிப்பா அவர்...
சாருமதி.
அத்தியாயம் 12.
"அப்படித்தான்... மூச்சை கொஞ்சம் நல்லா இழுத்து வெளியே விடுங்க பாட்டி" சொல்லிக்கொண்டே அந்த முதிய பெண்மணியை தன் டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துக் கொண்டிருந்தாள் சாருமதி.
"ஒன்னுமில்லை... லேசா நெஞ்சுச்சளி இருக்கு பாட்டி! அதனாலத் தான் இந்த காய்ச்சல். ஒரு ஊசி போட்டு மூனு நாளைக்கு மாத்திரையும் தர்றேன், சாப்பிடுங்க சரியாகிடும்"
"அப்படியே ஒரு இரண்டு மூனு...
சாருமதி.
அத்தியாயம் 05
"முடியாது... முடியாது...முடியாது... என்னால டாக்டருக்கெல்லாம் படிக்க முடியாது" தாயிடம் உறுதியாக மறுத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
தாயும் மகனும் மாடியிலிருக்கும் குடும்பத்தினர் மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய அந்த ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள்.
"அப்பா ஆசைப்படுறாங்கல்ல குட்டா! அதான் நல்லமார்க் வேற எடுத்துருக்கியே டாக்டருக்கு படிச்சாத் தான் என்னவாம்?"
"உன் வீட்டுக்காரருக்காகவெல்லாம் நான் படிக்க முடியாது ம்மா. எனக்கு புடிச்சாத் தான்...
சாருமதி.
அத்தியாயம் 10.
அந்த மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் முன் நீண்டிருந்த காரிடாரில் நின்று கொண்டும், உலாத்திக் கொண்டும், அங்கு கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுமாக இருந்த அத்தனை பேர்களின் கண்களும்,
அந்த அறையின் முன்னால் எறிந்து கொண்டிருந்த சிகப்பு விளக்கு அணைக்கப்படவும் பரபரப்பாகி, திறக்கப்படப்போகும் வாசல் கதவையே எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தன.
அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சிறிது நேரத்தில்...
சாருமதி.
அத்தியாயம் 04.
சித்திரை வருடப் பிறப்பையொட்டி கனி காணும் நிகழ்ச்சியை வீட்டில் காலையிலேயே சிறப்பாக முடித்திருந்தார் வேதவல்லி.
முதல்நாள் இரவே பூஜையறையில் ஒரு கண்ணாடி முன் வெள்ளித் தாம்பாளத்தில், மங்கலப் பொருட்களோடும் முக்கனிகளோடும், ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை, மாதுளை, வெள்ளரிப்பழம், ஒரு எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு, பணம், நகைகள் எல்லாம் வைத்து அந்த கண்ணாடிக்கு ஒரு தங்க...
சாருமதி.
அத்தியாயம் 13.
கிருஷ்ணா சென்ற வெகு நேரத்திற்கு பிறகும் கூட கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் சாருமதி.
வெளியே அமைதியாக தெரிந்ததற்கு நேர்மாறாக அவள் உள்ளம் குழம்பி தவித்துக் கொண்டிருந்தது.
'என்றைக்காவது ஒருநாள் தன்னிடம் நேரடியாக கிருஷ்ணா பேசும் போது தன் உள்ளத்து குமுறல்களையெல்லாம் கொட்டி தீர்த்துவிட வேண்டும்' என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தாள் தான்...
ஆனால்... இப்போதோ,'உன் வார்த்தைகள்...
சாருமதி.
அத்தியாயம் 14.
அன்னை தன் கைபிடித்து இழுத்து தன்னருகே அமரவைத்து,"குட்டா! பேசாமல் அப்பாகிட்ட சொல்லி சாருவை பொண்ணு கேட்டு போவோமா?" என்று கேட்கவும் ஒரு நொடி முகம் மலர்ந்த தனையன்
"ப்ச்ச்... எப்படிமா? அவதான் என்னை பிடிக்கலைன்னு சொல்லுறாளே? பிடிக்கலைன்னு சொல்லுறவளைப் போய் எப்படி பொண்ணு கேட்குறது?" முகம் சுருக்கினான் மகன்.
"குட்டா! ஆனாலும் நீ இப்படி அநியாயத்துக்கு...
சாருமதி.
அத்தியாயம் 09
தனது அறையில் சோஃபாவில் உட்கார்ந்து, தன் முன்னால் கிடந்த சிறிய டேபிளில் காலை நீட்டியபடி சாய்ந்திருந்த கிருஷ்ணாவின் மூடியிருந்த விழிகளிலிருந்து இமைகளைத் தாண்டி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
எவ்வளவு நேரம் தான் அப்படி இருந்தானோ தெரியாது?,"பி பிரேவ் மேன்! நீயே இப்படி அழுதுட்டு இருந்தால், உடைந்து போய் இருக்கிற உன்னை பெத்தவங்களை யாரு பாத்துப்பா?"...
சாருமதி.
அத்தியாயம் 11.
கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்திருந்தார் வேதவல்லி.
பொருத்தப்பட்டிருந்த மாற்று சிறுநீரகம் அவர் உடம்போடு இணைந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதை நன்றாக உறுதி செய்த பின்னர் தான் வேதவல்லியை டிஸ்சார்ஜ் செய்திருந்தார்கள் மருத்துவர்கள்.
அதன் பிறகும் குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் வந்த மருத்துவ மறுபரிசோதனைகளையும் மதுரை வீட்டிலிருந்து முடித்துவிட்டே வந்திருந்தார்கள்.
சாருமதியும் முழு...