'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'
மங்களம், “அதையும் மீறி கல்யாணம் நடந்துட்டாலும்.. நாம சொல்லிட்டே இருந்தா, குழந்தை மனசில் ஒரு விரிசல் விழும்.. அதைப் பெருசாக்கி அவளை வெறுக்கிற மாதிரி செய்து, நம்ம கைக்குள்ள போட்டுட்டாப் போதும்” என்றார்
“ப்ச்.. கல்யாணமே முடிஞ்சிருச்சுனா, அதுக்கு அப்புறம் அவங்க எக்கேடோ கெட்டுப் போனா நமக்கு என்ன?”
“அது எப்படி என்னை மீறி அவங்க சந்தோஷமா...
‘சந்துமா’ என்று மனதினுள் சொல்லிப் பார்த்த குழந்தை, “சந்து-னு கூப்பிடவா?” என்று கேட்டான்.
“ஓ! கூப்பிடுங்களேன்”
அவள் வாங்கிக் கொடுத்த பொம்மையில் பெரிய பாண்டா கரடியை காட்டி, “இது நான்..” என்றவள், குட்டியை காட்டி, “இது யது கண்ணா” என்றாள்.
யாதவும் மழலை சிரிப்புடன், “இது சந்து.. இது யது” என்றான்.
“சூப்பர்” என்றவள், “யது கண்ணாக்கு ஐஸ்-கிரீம்...
அடுத்த நாள் காலையில் செந்தமிழினி கண் விழித்ததும் கண்டது, தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த அருள்மொழியைத் தான்.
உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்த படி, “டேய் அண்ணா!” என்றாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்தாலும் வருத்தமான குரலில், “சாரிடா..” என்று ஆரம்பிக்க, அவனது பேச்சை இடையிட்டு,
“காலையிலேயே வயலின் வாசிக்காதடா” என்றவள், “இது பாட்டெடு கொண்டாடு மொமென்ட்” என்றாள்.
எழுந்து சென்று, கைபேசியை ஒலி...
அறை வாயிலுக்கு முதுகு காட்டி தரையில் ஒற்றை காலில் முட்டி போட்டு அமர்ந்தபடி கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுச் சாமான்களை எடுத்துக் கொண்டிருந்த செந்தமிழினி, “யது கண்ணா எப்போதுமே விளையாடி முடிச்சிட்டு, டாய்ஸ் எடுத்து வச்சிரணும்.. வாங்க.. வந்து, எடுத்து வைக்க. அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்றாள்.
யாதவ் அவள் அருகே வரவில்லையே என்ற நினைப்புடன்...
அதே நேரத்தில், தனது அறையில் உறக்கம் இன்றிப் படுத்திருந்த அத்வைத் தன் மீது படுத்திருந்த தனது இரண்டரை வயது மகன் யாதவை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
கை அனிச்சை செயலாக, தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, பார்வையோ விட்டதை வெறித்தபடி இருந்தது.
யாதவ், “டாடா யது தூக்கம் வர்ல.. லைட் போடு.. விளையாது” என்றான் தனது மழலையில்.
சட்டென்று சுயம்...
மரகதம், “வீட்டில் ஏன் சொல்லலை?” என்று கேட்டார்.
“யதுவை நல்லபடியா பெத்துத் தரத்துக்கு அவ போட்ட கண்டிஷன் டைவர்ஸ் தான்.. அப்போ எனக்கு அவளோட காதலை பத்தி தெரியாததால, அவ மனசை மாத்திரலாம்னு நினைத்து சரி சொன்னேன்.. வீட்டில் யாருக்கும் தெரியாது.. அப்புறம் அவ காதலனோட உதவியில் வீட்டில் யாருக்கும் தெரியாம டைவர்ஸ் அப்ளை செய்து,...
கண்ணன் அத்வைத்திடம் கை குலுக்கியபடி, “கங்க்ராட்ஸ் சார்” என்றான்.
அத்வைத், “தேங்க்ஸ்” என்றதும்,
கண்ணன், “உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும் சார்” என்றான்.
செந்தமிழினி அவனை முறைக்க, அத்வைத் உதட்டோர மென்னகையுடன், “தேங்க்ஸ் அகேன்” என்றான்.
இப்பொழுது அவள் அத்வைத்தை முறைத்தாள்.
துருவ், “தப்பா சொல்றடா.. இந்த நல்லவனை கட்டிக்கிற இவளோட மன தைரியத்தை தான் பாராட்டனும்” என்றான்.
அத்வைத்தை பார்த்து...
கதவை திறந்து சரோஜினியிடம் இருந்து காபியை வாங்கிக் கொண்டு, “யது கண்ணாக்கு பால் கொடுங்க, தேனுமா” என்றவள், எதிரே இருந்த துருவிடம், “கொஞ்ச நேரம் பார்த்துக்கோ” என்றாள்.
பின் யாதவிடம் திரும்பி, “யது கண்ணா.. டாடா கிட்ட ஆபீஸ் வொர்க் பத்தி, முக்கியமாப் பேசப் போறேன்.. ஸோ, நீங்க சித்தா கூட போய் விளையாடுங்க.. ஓகே?”...
மங்களமோ யாரின் குரலுக்கும் அடங்காமல், “பார்த்தியா! இதுக்கு தான் சொல்றேன்.. அந்த வீட்டு பொண்ணுங்க ஆம்பளைங்களை முடிஞ்சு முந்தானையில் வச்சுப்பாளுக..” என்றார்.
துருவ், “அந்த திறமை எங்க அம்மாக்கு இருந்து இருந்தா, ஏன் இத்தனை வருஷம் கஷ்டப்படப் போறாங்க? தப்பே செய்யாத தன்னோட அண்ணன் அண்ணிக்காகப் பேச தெரியாத வாயில்லா பூச்சி அவங்க.. நீங்க சொன்ன...
மெல்லிய மென்னகையுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அத்வைத்தின் சிந்தனை முழுவதும், செந்தமிழினியே இருந்தாள்.
‘இன்னைக்கு தான் அந்தப் பொண்ணோட முகத்தை நேருக்கு நேர் முழுசா பார்க்கிறேன்.. ஆனா பழக்கப்பட்ட முகமா தோணுதே! ஒருவேளை, முன்னாடியே நாம எங்கேயாவது பார்த்து இருப்போமோ?’ என்று யோசித்தவன்,
‘கடந்த மூனு நாலு வருஷத்தில் ஒரு பொண்ணை நாம கவனித்துப் பார்க்கிறது நடக்கிற...
யாதவ் மேல் அவள் கொண்டுள்ள அன்பும் பாசமும் கலந்த உரிமையைக் கண்டு பெரிதும் ஆச்சரியம் கொண்டவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்தே அவள் எழுந்து சென்றது மூளையில் உரைக்க, அவன் என்ன செய்வது என்று திகைத்தான்.
துருவின், “என்னாச்சு?” என்ற கேள்வியை கவனிக்காதவள் அத்வைத்தை முறைத்த படி, வேகமாக மேசை மீது இருந்த...
அருள்மொழியை அழைத்த செந்தமிழினி அவன் அழைப்பை எடுத்ததும், “அண்ணனாடா நீ? அத்தான் விஷயத்தைத் தவிர வேற எதையாவது உன் கிட்ட மறைச்சு இருப்பேனா! அது கூட நீ நேரிடையா கேட்டு இருந்தா சொல்லி இருப்பேன்.. ஆனா நீ! நான் எவ்ளோ முறை கேட்டேன்! பெரிய அன்னை சொல் தட்டாத தவப்புதல்வன் இவரு..” என்று ஆரம்பித்து...
மதிய உணவு இடைவேளைக்கு சற்று நேரம் முன் செந்தமிழினி, “கண்ணா” என்று அழைத்தாள்.
அவளது குரலில் தெரிந்த சிறு தயக்கத்தை உணர்ந்து கொண்டவன், அதை வெளிக்காட்டாமல் இயல்பான குரலிலேயே, “என்ன?” என்று கேட்டான்.
“ஒரு ஹெல்ப்”
“என்ன! சில் பீர் ஒன்னு வாங்கித் தரணுமா?”
அவள் தயக்கம் நீங்கி சட்டென்று சிரித்தபடி, “இல்லை லூசு.” என்றாள்.
“ஓ! நிஜமாவே குவாட்டர்...
“அஞ்சு மாசம் கழிச்சு தான், அவ நாலு மாசம் ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சுது.. குழந்தையை அழிக்கப் போறேன்னு சண்டை போட்டா.. நான் முடியாதுனு ஒரே காலில் நின்னேன்.. அப்போ தான், எங்க பிரச்சனை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தது..
வீட்டுக்கு வரப் போற வாரிசை பத்தி மகிழ்வதா! எங்க வாழ்க்கை இப்படி போர்க்களமா இருக்குதேன்னு வருந்துவதானே அவங்களுக்குத்...
அன்று காலை தேநீர் இடைவேளையில் செந்தமிழினி லட்சுமியின் இடத்திற்குச் சென்ற போது, லட்சுமி வேலைப் பழுவைப் பற்றி மீண்டும் புலம்பவும்,
செந்தமிழினி, “இப்படி புலம்புறதுக்கு அவரிடமே போய் சொல்ல வேண்டியது தானே!” என்றாள்.
“அவரைப் பார்த்தாலே பேச்சு வர மாட்டிக்குதுடி.”
“நீயும் இந்தப் பத்து நாளா புலி வருது புலி வருதுனு எப்பெக்ட் கொடுக்கிற.. ஆனா, நான் அந்தப்...
அனைவரின் மனமும் சற்றே நெகிழ்ந்த நிலையில் இருக்க, பேரன் ஊட்டிவிட ஆறுமுகம் உண்டார்.
சில வாய் உணவை வாங்கிய பின் அவர், “போதும் சாமி.. நீங்க சாப்பிடுங்க” என்றார் கரகரத்த குரலில்.
குழந்தை தட்டை காட்டி, “சப்பாத்தி இல்லையே!” என்றான்.
“இதோ தாத்தா தரேன்” என்றவர் தனது தட்டில் இருந்து ஊட்ட,
அவன், “அம்மா யது பிக் பாய்..” என்று...
அன்று காலையில் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த செந்தமிழினியை பார்த்த மரகதம், “என்னடி இது! வெள்ளிக்கிழமை அதுவுமா ஒரு புடவையைக் கட்டினோம்னு இல்லாம, ஜீன்ஸ் பேண்ட் டிஷர்ட்னு வந்து நிக்கிற! முதல்ல போய் ட்ரெஸ் மாத்திட்டு வா.” என்றார்.
“இன்னைக்கு ஆபீஸ்ல, இதைத் தான் போட்டுட்டு வரச் சொல்லி இருக்கிறாங்கமா”
“யாரு காதுல பூ சுத்துற?”
“தலையில் வேணா...
செந்தமிழினி நிமிர்வுடன், “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்டாள்.
செந்தமிழினியின் நிமிர்வில் மேனகா சற்று அதிர்ந்து தான் போனாள். தான் யார் என்று தெரிந்ததும் செந்தமிழினி கலக்கமாகவோ கவலையாகவோ பார்ப்பாள், குறைந்தது அதிர்ச்சியாவது அடைவாள் என்று எண்ணி இருக்க, அவளது முதல் எண்ணத்தையே தகர்த்து இருந்தாள், நம் செந்தமிழினி.
செந்தமிழினியை அதிர வைக்க நினைத்த மேனகா...
வேணுகோபால் அமைதியாக இருக்க, மரகதம், “இவ தான் பின் விளைவுகளைப் புரியாம பேசுறானா, நீங்களும் சிரிக்கிறீங்க! அவங்களை விட்டு விலகி இருக்கிறதால் தானே நிம்மதியா இருக்கிறோம்.” என்றார்.
வேணுகோபால் அமைதியான வருத்தம் நிறைந்த குரலில், “நிம்மதியா இருக்கிறோம். ஆனா, முழு மனசோட சந்தோஷமா நிறைவா இருக்கிறோமா? என் தங்கச்சியை நினைத்து நான் வருந்துறதைப் பார்த்து, நீயும்...